search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மின்விளக்கு"

    • பாம்பன் பாலத்தில் பழுதான மின்விளக்குகளை மாற்ற வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
    • இதனால் பாம்பன் பாலத்தில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன.

    ராமேசுவரம்

    பாம்பன் கடலில் 100 அடி உயரத்தில் கப்பல்கள் வந்து செல்லும் வகையில் பாலம் அமைக்கப் பட்டுள்ளது. இந்த பாலம் வழியாக அரசு வாகனங்கள், லாரிகள், சுற்றுலா பஸ், கார், வேன், உணவுப் பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் என நாள் தோறும் ஆயிரக் கணக்கான வாகனங்கள் ராமேசுவரத்திற்கு சென்று வருகின்றன.

    ராமேசுவரம் புன்னிய தலமாக உள்ளதால் நாடு முழுவதும் இருந்து பக்தர்கள், சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகின்றனர். இதனால் இரவு நேரங்களிலும் பாம்பன் பாலத்திலும் போக்குவரத்து அதிகமாக உள்ளது. பலரும் பாலத்தில் இறங்கி நின்று கடலை ரசிக்கின்றனர். மேலும் புகைப்படம் எடுத்து கொள்கின்றனர்.

    இந்த நிலையில் தேசிய நெடுஞ்சாலை துறையால் பராமரிக்கப்பட்டு வரும் இந்த பாலத்தில் ரூ. பல கோடி மதிப்பிட்டில் புனர மைப்பு பணிகள் நடை பெற்று வருகிறது. நீண்ட தொலைவில் வரும் போதே பாலத்தில் அழகை சிறப்பாக காணும் வகையில் 350-க்கும் மேற்பட்ட எல்.இ.டி மின் விளக்குகள் பொருத்தப் பட்டுள்ளது.இதற்கு பல லட்சம் செலவிடப்பட்டுள் ளது.

    ஆனால் பல விளக்கு கள் சரிவர எரியாமல் உள்ளது. குறிப்பாக பாலம் ஏறும் மற்றும் இறங்கும் இடங்களில் உள்ள 100 க்கும் மேற்பட்ட விளக்குகள் முழுமையாக சரியாக எரியாமல் உள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். இதனால் பாம்பன் பாலத்தில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன.

    இந்த நிலையில் பக்தர்கள், பயணிகள், வாகன ஓட்டிகளின் நலனை கருதி பாம்பன் பாலத்தில் இரவு நேரங்களில் அனைத்து விளக்குகளும் எரியும் வகையில், பழுதடைந்த மற்றும் சரிவர எரியாத விளக்குகளை சீரமைத்து மாற்றியும் தர வேண்டும் என்றும், இரவு நேரத்தில் பாலத்தின் அனைத்து பகுதிகளிலும் போதுமான வெளிச்சம் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் பொது மக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

    • அழகிகுளம், சாமந்தான் குளம் உள்பட பல்வேறு குளங்கள் தூர்வாரப்பட்டுள்ளது.
    • குளத்தின் இருபுறமும் நடைபாதை அமைத்து மின் விளக்கு, நாற்காலிகள் போடப்படும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாநகராட்சி வார்டு 10-ல் வடவாற்ற ங்கரை பகுதியில் சூரியக் குளம் உள்ளது.

    மாநகரில் முக்கியமான குளமாக விளங்கி வந்தது. ஆனால் கடந்த 35 ஆண்டுகளாக இந்த குளத்தில் தண்ணீர் இல்லாமல் வறண்டு காணப்பட்டது.

    இந்த நிலையில் மாநகராட்சியில் ஏற்கனவே அழகி குளம் உள்பட பல்வேறு குளங்கள் தண்ணீர் நிரப்பப்பட்டு நடைபா தைகள் அமைக்கப்பட்டு அங்கு பல்வேறு வசதிகளுடன் புதுப்பொலிவுடன் காட்சியளித்து வருகின்றன.

    அந்த வகையில் சூரிய குளத்தையும் மாற்ற வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி மேயர் சண்.ராமநாதன் அந்த குளத்தை ஆய்வு செய்து வடவாறில் இருந்து குழாய் மூலம் தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுத்தார். மேலும் அவர் குளத்தில் தண்ணீர் நிரப்பி அந்த பணியை தொடங்கி வைத்தார்.

    இது குறித்து அவர் கூறும் போது:-

    தஞ்சை மாநகராட்சியில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் நடந்து வருகின்றன. அழகிகுளம், சாமந்தான் குளம் உள்பட பல்வேறு குளங்கள் தூர்வாரப்பட்டு நவீன முறையில் புதுப்பொலிவுடன் மாற்றப்பட்டுள்ளது. இதே போல் இன்னும் பல்வேறு குளங்கள் சீரமைக்கப்பட உள்ளன.

    அந்த வகையில் வடவாற்றங்கறை சூரிய குளத்தில் தண்ணீர் நிரப்பப்பட்டுள்ளது. 35 ஆண்டுகளுக்கு பிறகு இந்த குளத்தில் தண்ணீர் நிரப்பப்பட்டுள்ளது.

    அடுத்த கட்டமாக குளத்தின் இருபுறமும் நடைபாதை அமைத்து மின் விளக்கு, நாற்காலிகள் போடப்படும். இன்னும் பல்வேறு வசதிகள் இந்த சூரிய குளத்தில் அமைக்கப்படும்.

    இதற்காக ரூ.80 லட்சத்திற்கு திட்ட மதிப்பீடு தயார் செய்து அனுப்பப்பட்டுள்ளன. நிதி வந்தவுடன் பணிகள் தொடங்கி விடும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி செயற்பொ றியாளர் ( பொறுப்பு ) ராஜசேகரன், உதவி பொறியாளர்கள் கார்த்திக், ஆனந்தி, மண்டல குழு தலைவர்கள் மேத்தா, புண்ணியமூர்த்தி, ரம்யா சரவணன், கவுன்சிலர் செந்தமிழ் செல்வன், தி.மு.க.பகுதி செயலாளர் கார்த்திகேயன், மாநகரப் பிரதிநிதி பத்மநாதன், அறிவு, கண்ணன், மூவேந்தர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சுதந்திர தினத்தை முன்னிட்டு தேவகோட்டை தியாகிகள் பூங்கா மற்றும் நகராட்சி அலுவலகம் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது.
    • போலீஸ் நிலையமும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பஸ் நிலையம் அருகே, நகராட்சி அலுவலகம் எதிரே 1936-ம் ஆண்டு அப்போதைய மாநில கவர்னரால் பூங்கா திறக்கப்பட்டது. 1942 ஆகஸ்ட் மாதத்தில் நீதிமன்றம் முன்பாக ஆகஸ்ட் புரட்சி நடைபெற்றது. அப்போது ஆங்கிலேயர்கள் 75 பேரை சுட்டுக் கொன்றனர். மேலும் 112 நபர்கள் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது. இதனை நினைவு கூறும் வகையில் 1947-ம் ஆண்டு பூங்காவில் தியாகிகள் நினைவு சின்னம் அமைக்கப்பட்டது.

    ஜாலியன் வாலாபாக் அடுத்து சுதந்திர போராட்டத்திற்காக அதிக நபர்கள் உயிர் நீத்த இடம் தேவகோட்டை தியாகிகள் பூங்கா என்பது குறிப்பிடத்தக்கது. தேவகோட்டை மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் அதிக அளவில் சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வாரிசு குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.சுதந்திர தினத்தை முன்னிட்டு தற்போது தியாகிகள் பூங்கா, நகராட்சி அலுவலகம் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு உள்ளது. இதேபோல் நகர் போலீஸ் நிலையமும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

    • உறவினர் வீட்டில் மின்விளக்கு எரியாமல் இருந்தது.
    • எதிர்பாராத விதமாக சதீஷ் மீது மின்சாரம் பாய்ந்தது.

    மயிலாடுதுறை:

    கொள்ளிடம் அருகே எருக்கூர் கிராமம் மேலத்தெருவை சேர்ந்தவர் ராமசாமி மகன் சதீஷ் (வயது 28).

    எலக்ட்ரீசியன். இந்த நிலையில் சம்பவத்தன்று சதீஷ் தனது பெரியப்பா நாராயணன் என்பவரது வீட்டில் மின்விளக்கு எரியாமல் இருந்ததால், அவரது வீட்டிற்கு சென்று மின் வயரை சரி செய்து கொண்டிருந்தார்.

    அப்போது எதிர்பாராத விதமாக சதீஷ் மீது மின்சாரம் பாய்ந்தது.

    இதில் அவர் வீட்டிற்குள்லேயே சுருண்டு விழுந்து இறந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த கொள்ளிடம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சதீஷ் உடலை கைப்பற்றி சீர்காழி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சதீசுக்கு மனுஷா (23) என்ற மனைவியும், ஒரு பெண் குழந்தையும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • உயர் கோபுர மின்விளக்கு அமைத்து விபத்தை தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • மதுரை- தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையை கடந்து செல்கின்றனர்.

    பாலையம்பட்டி

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே பாலையம்பட்டியில் இருந்து கட்டங்குடி, பொய்யாங் குளம் உள்ளிட்ட ஊர்களுக்கு செல்பவா்கள் மதுரை- தூத்துக்குடி தேசிய நெடுஞ்சா லையை கடந்து செல்கின்றனர்.

    இந்த சாலையை கடந்து தான் வட்டார போக்குவரத்து அலுவலகம், அரசு ஐ.டி.ஐ, ஆசிரியர் பயிற்சி கல்லூரிக்கு செல்ல வேண்டும். தினமும் ஆயிரக் கணக்கான பொதுமக்கள், விவசாயிகள், மாணவர்கள் இந்த சாலையை கடந்து செல்கின்றனர்.

    போக்குவரத்துக்கு முக்கியத்துவம் வாய்ந்த இந்த சாலையில் விபத்தை தடுப்பதற்காக எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக் கையும் எடுக்கப்படவில்லை.

    போதிய மின்விளக்கு வசதிகளும் இல்லை. இதனால் சில சமயங்களில் விபத்து ஏற்படுகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், பாலையம்பட்டியில் இருந்து கட்டங்குடி, பொய்யாங் குளம் உள்ளிட்ட ஊர்களுக்கு செல்பவா்கள் மதுரை- தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையை கடந்து செல்கின்றனர்.

    இந்த சாலை வழியாக தினமும் எண்ணற்ற வாகனங்கள் சென்று வருகின்றன.

    பொதுமக்களின் பாது காப்பு கருதி நான்கு வழிச்சாலை சந்திப்பில் உயர்கோபுர மின் விளக்குகள் பொருத்தி விபத்து ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றனர்.

    • விஜய்வசந்த் எம்.பி. திறந்து வைத்தார்
    • கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

    கன்னியாகுமரி :

    வேர்கிளம்பி பேரூராட்சிக்குட்பட்ட முண்டவிளை பகுதியில் உயர்கோபுர மின்விளக்கு அமைத்து தர வேண்டும் என்று அந்த பகுதியை சேர்ந்தவர்கள் அகில இந்திய காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர் ரெத்தினகுமாரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.

    மனுவை ஏற்று அவர், விஜய்வசந்த் எம்.பி.யிடம் வழங்கி முண்டவிளை பகுதியில் உயர்கோபுர மின்விளக்கு அமைத்து தர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். அவரின் கோரிக்கை மனுவை பரிசீலித்து எம்.பி. நிதியிலிருத்து ரூ.9 லட்சத்து 36 ஆயிரம் மதிப்பீட்டில் உயர்கோபுர சோலார் மின்விளக்கு அமைக்கப்பட்டது.

    பின்னர் இதன் திறப்பு விழா நடந்தது. விழாவில் விஜய் வசந்த் எம்.பி. கலந்து கொண்டு உயர் கோபுர சோலார் மின்விளக்கை திறந்து வைத்தார்.

    நிகழ்ச்சிக்கு பேரூராட்சி தலைவர் சுஜிர்ஜெபசிங்குமார் தலைமை தாங்கினார். துணை தலைவர் துரைராஜ் மனுவேல், காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினர் ரெத்தினகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நெல்லை பொதுப்பணி மின்கோட்டம் செயற்பொறியாளர் சிவகாமி, உதவி செயற்பொறியாளர்கள் ராஜலெட்சுமி, பத்மபியூலா, குமரி மேற்கு மாவட்ட தலைவர் பினுலால்சிங், பொருளாளர் ஐஜிபி. லாரன்ஸ், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு தலைவர் ஏசுராஜா, மாவட்ட செயலாளர்கள் ஜான் இக்னோசியஸ், ஆற்றூர்குமார், கண்ணனூர் ஊராட்சி மன்ற கவுன்சிலர் ஜோண், வட்டார தலைவர் ஜெபா, வட்டார சிறுபான்மை பிரிவு தலைவர் ஜாண்வெர்ஜின், பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் சென்றில் லதா சுஜிர், லலிதா, மேரி அனிதா, சுகிதா, சுந்தர்சிங், லாசர், சோபிதராஜ், ஜெயந்தி மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

    • அனைத்து வார்டுகளிலும் தட்டுப்பாடின்றி குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • இரட்டை பிள்ளையார் கோவில் அருகில் மின்விளக்கு வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவில் பேரூராட்சியில் பேரூராட்சி மன்ற கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைவர் பூங்கொடி அலெக்சாண்டர் தலைமை தாங்கினார்.

    துணைத் தலைவர் அன்புச் செழியன், செயல் அலுவலர் அசோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இளநிலை உதவியாளர் பாமா மன்ற தீர்மானங்களை படித்தார். தொடர்ந்து பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பின்னர் உறுப்பினர்களி டையே நடைபெற்ற விவாதம் பின்வருமாறு:-

    ராஜ கார்த்திக் (அதிமுக):-

    வைத்தீஸ்வரன் கோவில் கீழ கோபுர வாசல் அருகில் குப்பை கொட்டுவதை தடை செய்ய வேண்டும். இரட்டைப் பிள்ளையார் கோவில் அருகில் மின்விளக்கு வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்றார்.

    வித்யாதேவி சுரேஷ் (இந்திய கம்யூனிஸ்ட்) :-

    எனது பகுதியில் உள்ள குளத்தில் படித்துறை அமைத்து தர வேண்டும்.

    பிரியங்கா (அதிமுக) :-

    எனது பகுதியில் மயான சாலைகள் மிகவும் மோசமாக உள்ளது. இந்த சாலையை சீரமைத்து தர வேண்டும். கூடுதலாக குடிநீர் வசதி அமைத்து தர வேண்டும். புதிதாக ரேஷன் கடையை கட்டி தர வேண்டும் என்றார்.

    சியாமளாதேவி (திமுக) :-

    கோடை காலமாக இருப்பதால் எனது வார்டு பகுதிகளில் கூடுதலாக குடிநீர் வசதி அமைத்து தர வேண்டும் சேதமடைந்த சாலையை சீரமைத்து தர வேண்டும்.

    கென்னடி (திமுக):-

    வரும் காலம் கோடை காலமாக இருப்பதால் அனைத்து வாடுகளிலும் தட்டுப்பாடு இன்றி குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

    துணைத் தலைவர் :-

    2.0 திட்டத்தின் கீழ் அனைத்து குடும்பத்தினருக்கும் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    வைத்தீஸ்வரன் கோவில் பகுதியில் முகூர்த்த அடிக்கடி ஏற்படும் போக்குவரத்து தடை யை தவிர்க்கும் வகையில் மாற்றாக ஒரு வழிப்பாதை அமைப்பதற்கு இடம் வழங்கிய தருமபுரம் ஆதீனத்திற்கு நன்றி தெரிவித்து பேசினார்.

    தலைவர்:-

    உறுப்பின ர்களின் அனைத்து கோரிக்கைகளும் நிதி நிலைக்கேற்ப சரி செய்யப்படும்.

    குறிப்பாக குடிநீர், தெரு விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முன்னுரிமை அடிப்படையில் உடனுக்கு டன் நிறைவேற்றப்படும்.

    வைத்தீஸ்வரன் கோவில் பேரூராட்சி பகுதியில் பல்வேறு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள அரசிடம் கூடுதல் நிதி பெற்று பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது இதற்கு மன்ற உறுப்பினர்கள் முழு ஆதரவு தர வேண்டும் என்றார்.

    • 750 மீட்டர் தூரத்திற்கு தார்ச்சாலை, 75 மின்விளக்குகள், 75 இருக்கைகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.
    • மாணவிகளுக்கான கையுந்து பந்து போட்டியை தொடங்கி வைத்தார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டு அரங்கில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரு.5 கோடி மதிப்பில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் நடந்து முடிந்தன.

    தஞ்சை மாநகர மக்கள் நடைபயிற்சி மேற்கொள்ளும் வகையில் ரூ.3 கோடி மதிப்பில் 1200 மீட்டர் தூரத்திற்கு நடைபாதை, 750 மீட்டர் தூரத்திற்கு தார்ச்சாலை, 75 மின்விளக்குகள், 75 இருக்கைகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.

    மேலும் ரூ.2 கோடியில் திறந்தவெளி ஸ்கேட்டிங் தளம், கையுந்து பந்து மைதானம் மேம்படுத்துதல், கழிவறை வசதி அமைத்தல், நுழைவு வாயில் அமைத்தல் போன்ற பணிகளு முடிக்கப்பட்டுள்ளன.

    இந்த மேம்பாட்டு பணிகள் திறப்பு விழா நடைபெற்றது.

    விழாவுக்கு மாவட்ட கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கினார்.

    பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, அரசு தலைமை கொறடா கோவி.செழியன், எஸ்.எஸ்.பழநிமாணிக்கம் எம்.பி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட விளையாட்டு அலுவலர் டேவிட்டேனியல் வரவேற்றார்.

    விழாவில் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு அன்னை சத்யா அரங்கில் முடிக்கப்பட்டுள்ள ரூ.5 கோடி மதிப்பிலான மேம்பாட்டு பணிகளை திறந்து வைத்தார்.

    முதலில் ஸ்கேட்டிங் மைதானத்தை திறந்து வைத்து மாணவ-மாணவிகளுக்கான ஸ்கேட்டிங் பயிற்சியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    பின்னர் நடைபாதை, கையுந்துபந்து மைதானத்தை திறந்து வைத்து மகளிர் தினத்தை முன்னிட்டு மாணவிகளுக்கான கையுந்து பந்து போட்டியை தொடங்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் துரை சந்திரசேகரன் , டி.கே.ஜி.நீலமேகம் , கூடுதல் கலெக்டர் (வருவாய்) சுகபுத்ரா, மாநகராட்சி மேயர் சண். ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, மாவட்ட ஊராட்சித்தலைவர்உஷா புண்ணியமூர்த்தி, மாநகராட்சி ஆணையர் சரவணகுமார்மற்றும் அனைத்து துறை அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    இதைத்தொடர்ந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தஞ்சை எம்.கே.மூப்பனார் சாலையில் உள்ள கலைஞர் அறிவாலயத்திற்கு சென்று மறைந்த முன்னாள் அமைச்சர் எஸ்.என்.எம். உபயதுல்லா படத்தை திறந்து வைத்தார்.

    முன்னதாக தஞ்சைக்கு வந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு விளாங்குடி, பள்ளியக்கிரஹாரம் பிரிவு சாலை, கரந்தை பஸ் நிறுத்தம், கொண்டிராஜபாளையம் ரவுண்டானா, பழைய பஸ் நிலையம் அருகே உள்ள அண்ணா சிலை, புதுஆற்றுப்பா லம், அன்னை சத்யா விளையாட்டு அரங்கம் ஆகிய இடங்களில் தி.மு.க. தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர்.

    • பழமையான 5 மின் கம்பங்களுக்கு பதிலாக புதிய மின்கம்பங்கள் அமைக்க வேண்டும்.
    • 11 மின்கம்பங்கள் நடப்பட்டு, மின் கம்பிகள் பொருத்தப்பட்டு புதிய மின்விளக்குகளும் அமைக்கும் பணி.

    சீர்காழி:

    சீர்காழி வட்டத்தில் கடந்த 11ஆம் தேதி பெய்த கன மழையால் வெள்ளம் ஏற்பட்டு வேட்டங்குடி கிராமத்தை சூழ்ந்திருந்ததால் கிராம மக்கள் அவதி அடைந்து வந்தனர். கொள்ளிடம் பகுதியில் உள்ள அனைத்து சம்பா நெற்பயிர்களிலும் தண்ணீர் தேங்கி நின்றதால் நெற் பயிர்கள் முற்றிலும் தண்ணீரில் மூழ்கின. வேட்டங்குடி ஊராட்சி மிகவும் தாழ்வான பகுதியில் இருப்பதால் அங்குள்ள ஜீவா நகரில் உள்ள 250க்கும் மேற்பட்ட குடியிருப்பு வீடுகள் மற்றும் குடிசை வீடுகளை தண்ணீர் சூழ்ந்ததால் கிராம மக்கள் நிலை குலைந்து அங்குள்ளவர்கள் பாதுகாப்பாக முகாம்களுக்கு அழைத்து வரப்பட்டு தங்க வைக்கப்பட்டு பின்னர் தண்ணீர் வடிந்த பிறகு வீடுகளுக்கு திரும்பினர்.

    ஜீவா நகரில் பழமையான மின் கம்பங்கள் மற்றும் மின்கம்பிகள் ஆபத்தான நிலையில் இருந்து வந்தது.இதனால் அப்பகுதிக்கு அடிக்கடி மின்சாரம் தொடர்ந்து விநியோகம் செய்ய முடியாதநிலை ஏற்பட்டதால் அங்குள்ள வர்கள் அவதி அடைந்து வந்தனர்.

    வெள்ளம் பாதித்த கொள்ளிடம் பகுதிகளை சுற்றுச்சூழல் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் கடந்த 12ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை கிராமப் பகுதிக்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து கிராம மக்களின் கோரிக்கைகளை கேட்டு அறிந்து உடனுக்குடன் நடவடிக்கையை மேற்கொ ண்டு வந்தார்.

    அப்போது வேட்டங்குடி ஊராட்சியில் உள்ள ஜீவாநகரில் உள்ள குடியிருப்புகளை அமைச்சர் மெய்யநாதன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து அங்குள்ளவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

    அப்போது அங்குள்ளவர்கள் அப்பகுதியில் உள்ள பழமையான 5 மின் கம்பங்களுக்கு பதிலாக புதிய மின்கம்பங்கள் அமைக்க வேண்டும் என்று அமைச்சரிடம் நேரில் கோரிக்கை வைத்தனர்.

    ஆனால் அமைச்சரோ அப்பகுதியில் உள்ள அனைத்து பழமையான மின்கம்பங்களையும் உடனடியாக அகற்றுவதற்கு மின்வாரிய அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை தொடர்பு கொண்டு கிராமத்திற்கு நேரில் வரவழைத்து கிராம மக்கள் கேட்ட 5 மின் கம்பங்கள் மேலும் 6 மின்கம்பங்கள் உள்ளிட்ட 11 மின்கம்பங்கள் ஜீவா நகரில் நடப்பட்டு, மின் கம்பிகள் பொருத்தப்பட்டு புதிய மின்விளக்குகளும் அமைத்து தர நடவடிக்கை மேற்கொண்டார்.

    அதன்பேரில் ஒரே நாளில் புதன்கிழமை ஜீவா நகரில் 11 மின்கம்பங்கள் புதியதாக நடப்பட்டு புதியதாக மின் கம்பிகளும், மின்விளக்குகளும் பொறுத்தப்பட்டு மின்சாரம் வழங்கப்பட்டன. இதனால் ஜீவா நகர் இரவு நேரங்களில் பகலை போன்று காட்சியளிக்கின்றன.

    மக்கள் கோரிக்கையை ஏற்று புதியதாக 5 மின்கம்பங்களுக்கு பதிலாக 11 மின்கம்பங்களை அமைத்துக் கொடுத்து மின்விளக்குகளை புதியதாக பொருத்தி அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை நிறைவேற்றித் தந்த அமைச்சர் மெய்யநாதனுக்கு அப்பகுதி ஒன்றியக் குழுஉறுப்பினர் அங்குதன் மற்றும் ஜீவா நகர் கிராம மக்கள் நன்றி தெரிவித்தனர்.

    • வால்பாறைக்கு அதிக அளவிலான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர்.
    • இருள் சூழ்ந்தவேளையில் கரடிகள் குடியிருப்புப் பகுதிகளில் உலவி வருகின்றன.

    வால்பாறை

    வால்பாறை நகரசபை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு நகராட்சித் தலைவர் அழகுசுந்தரவள்ளி தலைமை தாங்கினார். ஆணையர் பாலு, துணைத் தலைவர் செந் தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில், வால்பாறைக்கு அதிக அளவிலான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். ஆனால், அவர்களுக்கு போதிய அளவில் கழிப்பறை வசதிகள் இல்லை. எனவே நகராட்சி மூலம் அடிப்படை வசதிகள் செய்ய வேண்டும். மேலும், எஸ்டேட் பகுதிகளில் கரடி நடமாட்டம் அதிகரித்துள்ளது.

    இதனால், இருள் சூழ்ந்தவேளையில் அவை குடியிருப்புப் பகுதிகளில் உலவி வருகின்றன. எனவே, குடியிருப்புப் பகுதிகளில் கூடுதல் தெருவிளக்குகள் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வார்டு உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.

    கூட்டத்தில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளுக்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நகராட்சி மேலாளர் ஜலாலுதீன், பொறியாளர் வெங்கடாசலம் உள்பட வார்டு உறுப்பினர் பலர் கலந்து கொண்டனர். 

    • பூண்டி மாதாவின் உருவம் வரையப்பட்ட திருக்கொடியை பேராலய முன்புறத்தில் இருந்து பக்தர்கள் பிடித்து சென்றனர்.
    • வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட பெரிய தேரில் அன்னையின் சொரூபம் வைக்கப்பட்டு தேர் பவனி நடைபெறும்.

    பூதலூர்:

    திருக்காட்டுப்பள்ளி அருகே காவிரி -கொள்ளிடம்‌ ஆறுகளுக்கு இடையே அமைதியான சூழலில் அமைந்துள்ளது பூண்டி புதுமை மாதா பேராலயம்.

    பூலோகம் போற்றும் பூண்டி மாதா என்று பக்தர்களால் போற்றி புகழப்படும் இப்பேராலயத்தில் மாதாவின் பிறப்பு பெருவிழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    பெருவிழா தொடக்கத்தை ஒட்டி ஆலயம் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

    பூண்டி மாதாவின் உருவம் வரையப்பட்ட திருக்கொடியை பேராலய முன்புறத்தில் இருந்து பக்தர்கள் பிடித்து சென்றனர்.

    பூண்டி அன்னையின் சொரூபம் வைக்கப்பட்ட சிறிய தேரை பக்தர்கள் சுமந்து சென்றனர்.

    திருக்கொடி பவனியை பேராலய அதிபர் சாம்சன் புனிதம் செய்து தொடங்கி வைத்தார்.

    பூண்டி அன்னையின் புகழ் பாடும் பாடல்களை பாடியவண்ணம், மரியே வாழ்க என்ற‌ வாழ்த்து முழக்கங்களுடன் கொடி ஊர்வலம் கொடி மரத்தை அடைந்தது.

    அன்னையின் உருவம் பொறிக்கப்பட்ட கொடியை கும்பகோணம் மறைமாவட்ட பிஷப் அந்தோணிசாமி அடிகளார் புனிதம் செய்து ஏற்றி வைத்தார்.

    கொடியேற்றியபோது அதிர்வேட்டுகள் முழங்கின.

    பக்தர்கள் மரியே வாழ்க என்று வாழ்த்து ஒலி முழக்கங்களை எழுப்பினர்.

    தொடர்ந்து பேராலயத்தின் எதிரில் உள்ள அரங்கில் சிறப்பு திருப்பலி மரியாள்-புதுமைகளின் அன்னை என்ற பொருளில் கும்பகோணம் மறைமாவட்ட பிஷப் அந்தோணிசாமி தலைமையில் நடைபெற்றது.

    பேராலய அதிபர் சாம்சன், உதவி அதிபர் ரூபன் அந்தோணி ராஜ், தியான மைய இயக்குனர் ஆல்பர்ட், மறைவட்ட முதன்மைகுரு இன்னசென்ட், உதவி பங்கு தந்தையர் அன்புராஜ், தாமஸ், ஆன்மீக தந்தையர் அருளானந்தம், ஜோசப் மற்றும் பல்வேறு அருட்தந்தையர்கள் கலந்து கொண்டனர்.

    விழா நாட்களில் தினமும் மாலை கொடி ஊர்வலம், சிறப்பு திருப்பலி நிறைவேற்றப்பட உள்ளது.

    மாதாவின் பிறப்பு நாளாக கருதப்படும் செப்டம்பர் 8ம் தேதி மாலை சிறப்பு திருப்பலி நிறைவேற்றப்படும்.

    தொடர்ந்து இரவு 9.30 மணி அளவில் மல்லிகை மலர்களாலும், வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட பெரிய தேரில் அன்னையின் சொரூபம் வைக்கப்பட்டு தேர் பவனி நடைபெறும்.

    தேர் பவனியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றிய பூண்டி அன்னைக்கு நன்றி செலுத்தும் விதமாக கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி வழிபடுவர். 9ம்தேதி காலை மரியாள் -தாய்மையின் தலைப்பேறு என்ற தலைப்பில் திருவிழா திருப்பலியை மறைமாவட்ட பிஷப் அந்தோணிசாமி அடிகளார் நிறைவேற்றுவதுடன் பெருவிழா நிறைவு பெறுகிறது.

    ஏற்பாடுகளை பேராலய அதிபர் சாம்சன், உதவி அதிபர் ரூபன் அந்தோணி ராஜ், தியானமைய இயக்குனர் ஆல்பர்ட், உதவி பங்கு தந்தையர்கள் தாமஸ், அன்புராஜ், மற்றும் பங்கு மக்கள் செய்து வருகின்றனர்.

    • தஞ்சை மாநகராட்சியில் பல இடங்களில் இரவு நேரங்களில் தெருவிளக்குகள் எரிவதில்லை.
    • வெள்ளை பிள்ளையார் கோவில் ரவுண்டானாவில் இருந்து சரபோஜி மார்க்கெட் வரை செல்லும் சாலை பழுதடைந்துள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாநகராட்சியில் இன்று மாமன்ற கூட்டம் நடைபெற்றது.

    இதற்கு மேயர்.சண் ராமநாதன் தலைமை தாங்கினார்.

    துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி, ஆணையர் சரவணகுமார் ஆகியோர் முன்னிலை வைகித்தனர்.

    இந்த கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசிய விவரம் வருமாறு:-

    எதிர்க்கட்சித் தலைவர் மணிகண்டன்:-

    திருவையாறு பஸ் நிறுத்தத்தில் கட்டப்பட்டுள்ள இரண்டு, நான்கு சக்கர வாகன நிறுத்துமிடம் பயன்பாட்டில் உள்ளதா? எந்த நிலையில் உள்ளது என்று கேள்வி கேட்டார்.

    கவுன்சிலர் கோபால்:‌‌

    தஞ்சை மாநகராட்சியில் பல இடங்களில் இரவு நேரங்களில் தெருவிளக்குகள் எரிவதில்லை.

    உடனே அனைத்து தெரு விளக்குகளையும் எரிய வைத்து அதனை முறையாக கண்காணிக்க வேண்டும்.

    கவுன்சிலர் காந்திமதி:

    கீழ அலங்கத்தில் 12 வீடுகள் பழுதடைந்த நிலையில் உள்ளது.

    அவர்கள் மாநகராட்சியில் பணிபுரிபவர்கள். தற்போது தொடர்ந்து மழை பெய்து வருவதால் இடிந்து விழும் நிலையில் காணப்படுகிறது.

    உடனடியாக அந்த 12 வீடுகளில் வசிப்பவர்களுக்கு அவர்களின் நீண்ட நாள் கோரிக்கையான வல்லம் அடுக்குமாடி குடியிருப்பில் வீடு ஒதுக்க வேண்டும்.

    வெள்ளைப் பிள்ளையார் கோவில் ரவுண்டானாவில் இருந்து சரபோஜி மார்க்கெட் வரை செல்லும் சாலை பழுதடைந்து உள்ளது.

    அதனைப் போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும்.

    கவுன்சிலர் ரம்யா சரவணன்:

    3-வது மண்டலத்தில் உள்ள அண்ணாநகர் மாநகராட்சி உயர்நிலைப் பள்ளிக்கு இயற்பியல் ஆய்வுக்கூடமும், கூடுதல் வகுப்பறை கட்டிடமும், தொடக்கப் பள்ளிக்கு ஸ்மார்ட் கிளாஸ் வகுப்புகளும், வண்டிக்கார தெரு மாநகராட்சி பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்ட நிதி ஒதுக்கிய மேயர், துணை மேயர், ஆணையர் ஆகியோருக்கு பாராட்டுக்கள்.

    தொடர்ந்து கவுன்சிலர்கள் கேசவன், ஜெய்சதீஷ், கன்னுக்கினியாள் உள்ளிட்ட பலரும் தங்களது வார்டு சம்பந்தப்பட்ட கோரிக்கைகளை முன்வைத்து பேசினர்.

    இதற்கு பதில் அளித்து மேயர் சண். ராமநாதன் பேசும்போது:-

    திருவையாறு பஸ் நிறுத்த வாகன நிறுத்தும் இடம் தற்போது இலவசமாக வானங்கள் நிறுத்தும் இடமாக மாற்றப்பட்டுள்ளது.

    தீபாவளி பண்டிகை வரை இந்த நிலை தொடரும்.

    அதன் பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்வோம்.

    நம்ம வார்டு நம்ம மேயர் என்ற திட்டம் கடந்து சில நாட்களுக்கு முன்பு முடிவடைந்தது. இதில் தினமும் ஆய்வு செய்ததில் சாலை வசதி, பாதாள சாக்கடை பிரச்சனை, பூங்கா அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வரப்பெற்றன.

    இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு மாநகராட்சி வளர்ச்சி திட்ட பணிக்கு நிதி கூறப்பட்டுள்ளது.

    அதாவது வார்டு 1 முதல் 13-வரை உள்ள முதல் டிவிசனுக்கு ரூ.120 கோடியிலும், வார்டு 14 முதல் 28 வரையிலான இரண்டாம் டிவிசனுக்கு ரூ.155.44 கோடியிலும், வார்டு 29 முதல் 41 வரையிலான மூன்றாம் டிவிசனுக்கு ரூ.466.94 கோடியிலும், வார்டு 42 முதல் 51 வரையிலான நான்காம் டிவிசனுக்கு ரூ.211.40 கோடி என மொத்தம் நான்கு டிவிசனுக்கும் சேர்த்து ரூ.1100 கோடிக்கு வளர்ச்சி திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு அனுப்பப்பட்டுள்ளது.

    இதற்கான நிதி வந்தவுடன் வளர்ச்சி திட்ட பணிகள் தொடங்கப்படும்.

    காமராஜர் மார்க்கெட் கடைகள் அமைப்பதற்கான ஏலம் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது.

    விரைவில் காமராஜர் மார்க்கெட், சிவகங்கை பூங்கா ஆகியவற்றை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைக்க உள்ளார் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார். 

    ×