search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முண்டவிளை பகுதியில் ரூ.9 லட்சம் மதிப்பீட்டில் உயர் கோபுர சோலார் மின்விளக்கு
    X

    முண்டவிளை பகுதியில் ரூ.9 லட்சம் மதிப்பீட்டில் உயர் கோபுர சோலார் மின்விளக்கு

    • விஜய்வசந்த் எம்.பி. திறந்து வைத்தார்
    • கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

    கன்னியாகுமரி :

    வேர்கிளம்பி பேரூராட்சிக்குட்பட்ட முண்டவிளை பகுதியில் உயர்கோபுர மின்விளக்கு அமைத்து தர வேண்டும் என்று அந்த பகுதியை சேர்ந்தவர்கள் அகில இந்திய காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர் ரெத்தினகுமாரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.

    மனுவை ஏற்று அவர், விஜய்வசந்த் எம்.பி.யிடம் வழங்கி முண்டவிளை பகுதியில் உயர்கோபுர மின்விளக்கு அமைத்து தர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். அவரின் கோரிக்கை மனுவை பரிசீலித்து எம்.பி. நிதியிலிருத்து ரூ.9 லட்சத்து 36 ஆயிரம் மதிப்பீட்டில் உயர்கோபுர சோலார் மின்விளக்கு அமைக்கப்பட்டது.

    பின்னர் இதன் திறப்பு விழா நடந்தது. விழாவில் விஜய் வசந்த் எம்.பி. கலந்து கொண்டு உயர் கோபுர சோலார் மின்விளக்கை திறந்து வைத்தார்.

    நிகழ்ச்சிக்கு பேரூராட்சி தலைவர் சுஜிர்ஜெபசிங்குமார் தலைமை தாங்கினார். துணை தலைவர் துரைராஜ் மனுவேல், காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினர் ரெத்தினகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நெல்லை பொதுப்பணி மின்கோட்டம் செயற்பொறியாளர் சிவகாமி, உதவி செயற்பொறியாளர்கள் ராஜலெட்சுமி, பத்மபியூலா, குமரி மேற்கு மாவட்ட தலைவர் பினுலால்சிங், பொருளாளர் ஐஜிபி. லாரன்ஸ், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு தலைவர் ஏசுராஜா, மாவட்ட செயலாளர்கள் ஜான் இக்னோசியஸ், ஆற்றூர்குமார், கண்ணனூர் ஊராட்சி மன்ற கவுன்சிலர் ஜோண், வட்டார தலைவர் ஜெபா, வட்டார சிறுபான்மை பிரிவு தலைவர் ஜாண்வெர்ஜின், பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் சென்றில் லதா சுஜிர், லலிதா, மேரி அனிதா, சுகிதா, சுந்தர்சிங், லாசர், சோபிதராஜ், ஜெயந்தி மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×