search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "high tower light"

    • உயர் கோபுர மின்விளக்கு அமைத்து விபத்தை தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • மதுரை- தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையை கடந்து செல்கின்றனர்.

    பாலையம்பட்டி

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே பாலையம்பட்டியில் இருந்து கட்டங்குடி, பொய்யாங் குளம் உள்ளிட்ட ஊர்களுக்கு செல்பவா்கள் மதுரை- தூத்துக்குடி தேசிய நெடுஞ்சா லையை கடந்து செல்கின்றனர்.

    இந்த சாலையை கடந்து தான் வட்டார போக்குவரத்து அலுவலகம், அரசு ஐ.டி.ஐ, ஆசிரியர் பயிற்சி கல்லூரிக்கு செல்ல வேண்டும். தினமும் ஆயிரக் கணக்கான பொதுமக்கள், விவசாயிகள், மாணவர்கள் இந்த சாலையை கடந்து செல்கின்றனர்.

    போக்குவரத்துக்கு முக்கியத்துவம் வாய்ந்த இந்த சாலையில் விபத்தை தடுப்பதற்காக எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக் கையும் எடுக்கப்படவில்லை.

    போதிய மின்விளக்கு வசதிகளும் இல்லை. இதனால் சில சமயங்களில் விபத்து ஏற்படுகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், பாலையம்பட்டியில் இருந்து கட்டங்குடி, பொய்யாங் குளம் உள்ளிட்ட ஊர்களுக்கு செல்பவா்கள் மதுரை- தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையை கடந்து செல்கின்றனர்.

    இந்த சாலை வழியாக தினமும் எண்ணற்ற வாகனங்கள் சென்று வருகின்றன.

    பொதுமக்களின் பாது காப்பு கருதி நான்கு வழிச்சாலை சந்திப்பில் உயர்கோபுர மின் விளக்குகள் பொருத்தி விபத்து ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றனர்.

    ×