search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sidewalk"

    • நீரழிவு மற்றும் ரத்த அழுத்த நோய்களின் தாக்கம் 28 சதவீதம் குறைகிறது.
    • இந்த திட்டமானது ஒவ்வொரு மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை தோறும் நடத்தப்பட உள்ளது.

    தஞ்சாவூர்:

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் நடப்போம் நலம் பெறுவோம் திட்டத்தினை இன்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்ரமணியம் ஆகியோர் காணொளி காட்சி மூலம் சென்னையில் தொடக்கி வைத்தனர்.

    அதனை தொடர்ந்து தஞ்சாவூர் மாவட்டம் அன்னை சத்யா விளையாட்டு அரங்கில் நடப்போம் நலம் பெறுவோம் திட்டத்தினை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    பின்னர் அவர் கூறியதாவது :-

    உலக சுகாதார அமைப்புகளின் தரவுகளின்படி உடற்பயிற்சி மேற்கொள்வதால் நீரழிவு மற்றும் ரத்த அழுத்த நோய்களின் தாக்கம் 28 சதவீதமும், இதய நோயின் தாக்கம் 30 சதவீதமும் குறைகின்றது என கண்டறியப்பட்டுள்ளது.

    நடைப்பயிற்சி உடலை சுறுசுறுப்பாகவும் ஆரோக்கியமாகவும் நல்ல உடல் எடையுடன் இருக்க உதவுகிறது.

    மேலும் நாள்பட்ட உடல் பிரச்சினை மற்றும் மன அழுத்தத்தை குறைக்க உதவுகிறது.

    தஞ்சாவூர் மாவட்டத்தில் நடப்போம் நலம் பெறுவோம் என்பதற்கு இணங்க பொதுமக்களின் நலன் மற்றும் ஆரோக்கியத்தை பேணிக்காக்கும் பொருட்டு 8 கிலோமீட்டர் நடை பாதை கண்டறியப்பட்டுள்ளது.

    இந்த நடைபாதை 4 கிலோமீட்டர் தூரம் கொண்ட அன்னை சத்யா விளையாட்டரங்கம் முதல் முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி அரங்கம் தஞ்சாவூர் மாநகராட்சி வரை ஒரு முழு சுற்று சுற்றி 8 கிலோமீட்டர் தூரம் தொடங்கிய இடத்தில் முடிவடைகிறது.

    மேலும் இத்திட்டமானது ஒவ்வொரு மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை தோறும் நடத்தப்படவுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத், எம்.எல்.ஏ.க்கள் துரை சந்திரசேகரன் , டி. கே. ஜி. நீலமேகம், மாநகராட்சி மேயர் சண். ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, மாவட்ட ஊராட்சி தலைவர் உஷா புண்ணியமூர்த்தி, சுகாதார துறை துணை இயக்குனர்கலைவாணி, மாநகர நல அலுவலர் சுபாஷ் காந்தி, மாவட்ட விளையாட்டு அலுவலர் டேவிட் டேனியல், முன்னாள் கவுன்சிலர் சதாசிவம், கவுன்சிலர் தமிழ்வாணன், விளையாட்டு மேம்பாட்டு பிரிவு அமைப்பாளர் ராணிகண்ணன், மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் ராஜசேகரன், பொறியாளர் முத்துக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அழகிகுளம், சாமந்தான் குளம் உள்பட பல்வேறு குளங்கள் தூர்வாரப்பட்டுள்ளது.
    • குளத்தின் இருபுறமும் நடைபாதை அமைத்து மின் விளக்கு, நாற்காலிகள் போடப்படும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாநகராட்சி வார்டு 10-ல் வடவாற்ற ங்கரை பகுதியில் சூரியக் குளம் உள்ளது.

    மாநகரில் முக்கியமான குளமாக விளங்கி வந்தது. ஆனால் கடந்த 35 ஆண்டுகளாக இந்த குளத்தில் தண்ணீர் இல்லாமல் வறண்டு காணப்பட்டது.

    இந்த நிலையில் மாநகராட்சியில் ஏற்கனவே அழகி குளம் உள்பட பல்வேறு குளங்கள் தண்ணீர் நிரப்பப்பட்டு நடைபா தைகள் அமைக்கப்பட்டு அங்கு பல்வேறு வசதிகளுடன் புதுப்பொலிவுடன் காட்சியளித்து வருகின்றன.

    அந்த வகையில் சூரிய குளத்தையும் மாற்ற வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி மேயர் சண்.ராமநாதன் அந்த குளத்தை ஆய்வு செய்து வடவாறில் இருந்து குழாய் மூலம் தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுத்தார். மேலும் அவர் குளத்தில் தண்ணீர் நிரப்பி அந்த பணியை தொடங்கி வைத்தார்.

    இது குறித்து அவர் கூறும் போது:-

    தஞ்சை மாநகராட்சியில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் நடந்து வருகின்றன. அழகிகுளம், சாமந்தான் குளம் உள்பட பல்வேறு குளங்கள் தூர்வாரப்பட்டு நவீன முறையில் புதுப்பொலிவுடன் மாற்றப்பட்டுள்ளது. இதே போல் இன்னும் பல்வேறு குளங்கள் சீரமைக்கப்பட உள்ளன.

    அந்த வகையில் வடவாற்றங்கறை சூரிய குளத்தில் தண்ணீர் நிரப்பப்பட்டுள்ளது. 35 ஆண்டுகளுக்கு பிறகு இந்த குளத்தில் தண்ணீர் நிரப்பப்பட்டுள்ளது.

    அடுத்த கட்டமாக குளத்தின் இருபுறமும் நடைபாதை அமைத்து மின் விளக்கு, நாற்காலிகள் போடப்படும். இன்னும் பல்வேறு வசதிகள் இந்த சூரிய குளத்தில் அமைக்கப்படும்.

    இதற்காக ரூ.80 லட்சத்திற்கு திட்ட மதிப்பீடு தயார் செய்து அனுப்பப்பட்டுள்ளன. நிதி வந்தவுடன் பணிகள் தொடங்கி விடும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி செயற்பொ றியாளர் ( பொறுப்பு ) ராஜசேகரன், உதவி பொறியாளர்கள் கார்த்திக், ஆனந்தி, மண்டல குழு தலைவர்கள் மேத்தா, புண்ணியமூர்த்தி, ரம்யா சரவணன், கவுன்சிலர் செந்தமிழ் செல்வன், தி.மு.க.பகுதி செயலாளர் கார்த்திகேயன், மாநகரப் பிரதிநிதி பத்மநாதன், அறிவு, கண்ணன், மூவேந்தர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி குறைதீர்க்கும் கூட்டத்தில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
    • 6-வது வார்டில் பதிக்கப்பட்டுள்ள பேவர்பிளாக் கற்கள் மீது கழிவு நீர் குழாய் அமைக்க வேண்டும்.

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகா அலுவலகத்தில் மாதாந்திர விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு தாசில்தார் நவநீதகிருஷ்ணன் தலைமை தாங்கினார். தலைமையிடத்து துணை தாசில்தார் நாகேந்திரன் முன்னிலை வகித்தார். வருவாய் ஆய்வாளர் அசோக்குமார் வரவேற்றார்.

    இந்த கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் விடுத்த கோரிக்கைகள் வருமாறு:-

    வாடிப்பட்டி பகுதியில் விவசாய நிலங்கள் உள்ள இடங்களில், ஊரணிக்கரை திறந்தவெளியில் மதுபானம் குடித்துவிட்டு பாட்டில்களை சாலையிலும், வயல்வெளி களத்தில் உடைத்து வீசி எறியும் குடிமகன்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்.

    வாடிப்பட்டி பஸ் நிலையம் எதிரில் கல்வித்துறை அலுவலகம் அருகில் பள்ளிக் கூட வாசலில் ஆக்கிரமிப்பு செய்து கடைகளையும், தாதம்பட்டி மந்தையில் ஓய்வூதியர் சங்க கட்டிடத்தை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி நடைபாதையை சீரமைக்க வேண்டும்.

    வாடிப்பட்டி பேரூராட்சி 6-வது வார்டில் பதிக்கப்பட்டுள்ள பேவர்பிளாக் கற்கள் மீது கழிவுநீர் குழாய் அமைக்க வேண்டும்.

    மேலும் அதன் மீது வேகத்தடை போல் அமைந்துள்ள சிமெண்டு திண்டுகளை அகற்ற வேண்டும். வாடிப்பட்டி பகுதியில் விவசாயத்திற்கு தண்ணீர் எளிதாக பாயும் விதத்தில் அதிகாலை நேரங்களில் மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும்.

    தற்போது நெல்அறுவடை பணி தொடங்க உள்ளதால் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும். வாடிப்பட்டி பகுதியில் உரக்கடைகளில் விலைபட்டியல் மற்றும் பொருள் இருப்பு விவரங்களை தினந்தோறும் எழுதி வைக்க வேண்டும்.

    கட்டக்குளம் கண்மாய், வடகரை கண்மாய் பகுதிகளில் முட்புதர்களை அகற்றி அதில் பல்கி பெருகியுள்ள காட்டுப்பன்றிகளை வனப்பகுதியில் கொண்டு விட வேண்டும். சாத்தையாறு அணை பகுதியில் படிந்துள்ள வண்டல் மண்ணை விவசாய நிலங்களுக்கு பயன்படுத்திக்கொள்ள அனுமதி வழங்க வேண்டும்.

    பாண்டியராஜபுரம் சர்க்கரை ஆலை இருந்த இடத்தை சீரமைத்து அரசு கலைக் கல்லூரி அமைக்க வேண்டும். ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் ஏல நடவடிக்கையில் செல்லாத காசுகளை வைத்து ஏலம் நடத்தும் முறையை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

    ×