search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புளியங்குடி"

    • அரசு தொடக்கப்பள்ளியில் நேற்று Good Touch Bad Touch குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
    • அப்போது 4 சிறுமிகள், தலைமை ஆசிரியரிடம் சென்று, வீட்டின் அருகே விளையாடும் போது, ஒருவர் Bad Touch செய்ததாக கூறியுள்ளனர்.

    தென்காசி மாவட்டம், புளியங்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்து வரும் காட்டுராஜா என்பவர் தனது வீட்டின் அருகே விளையாடும் 9 வயது சிறுமிகள் 3 பேர் மற்றும் 8 வயது சிறுமி ஆகியோருக்கு மிட்டாய் வாங்கி கொடுத்து, அவரது வீட்டின் உள்ளே அழைத்துச் சென்று சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளதை அடுத்து போஸ்கோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

    புளியங்குடியில் உள்ள ஒரு அரசு தொடக்கப்பள்ளியில் நேற்று Good Touch Bad Touch குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அதில் தலைமை ஆசிரியர், பள்ளி குழந்தைகளிடம் உங்களது உடலில் உங்களது வீட்டு நபர்களை தவிர யாராவது உங்கள் உடலில் கை வைத்தால் பள்ளியிலோ, அல்லது வீட்டில் உள்ள பெற்றோர்களிடமோ உடனே தகவல் சொல்ல வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

    அப்போது 4 சிறுமிகள், தலைமை ஆசிரியரிடம் சென்று, வீட்டின் அருகே விளையாடும் போது, ஒருவர் Bad Touch செய்ததாக கூறியுள்ளனர். இதுகுறித்து சிறுமியின் பெற்றோரிடம் பள்ளியின் தலைமை ஆசிரியர் தகவல் கூறியுள்ளார். பின்னர் இதுகுறித்து நான்கு குழந்தைகளின் பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

    புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் டாஸ்மாக் ஊழியரான காட்டு ராஜாவை (48) போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • பவானி அம்மன் கோவிலில் ஐப்பசி மாத பவுர்ணமி பூஜை நடைபெற்றது.
    • முப்பெரும் தேவியர் பவானி அம்மனுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    புளியங்குடி:

    புளியங்குடி முப்பெரும் தேவியர் பவானி அம்மன் ஆலயத்தில் உள்ள பெரியபா ளையத்து பவானி அம்மன் கோவிலில் ஐப்பசி மாத பவுர்ணமி பூஜை நடைபெற்றது. பூஜையை முன்னிட்டு அதிகாலை 4 மணியளவில் நடை திறக்கப்பட்டு முப்பெரும்தேவி அம்மனுக்கு சிறப்பு பூஜை கள் நடந்தது. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பவுர்ணமி சிறப்பு அருள் வாக்கு நடைபெற்றது. மாலை 6 மணி அளவில் குருநாதர் சக்தியம்மா ஐப்பசி மாத பவுர்ணமி பூஜை குறித்து ஆன்மீக சொற்பொழிவாற்றினார்.

    இரவு 7 மணிக்கு பால், தயிர், சந்தனம், தேன், குங்குமம் உள்பட 21 வகையான நறுமணப் பொருட்களால் அபிஷேகம் மற்றும் உலக நன்மைக்காகவும், மழை வேண்டியும் 1008 லிட்டர் சிறப்பு பாலாபிஷேகம் நடைபெற்றது.

    தொடர்ந்து பரிகார தெய்வங்களான பால விநாயகர், கல்யாண சுப்பிரமணியர், வள்ளி, தெய்வானை, புற்றுக்காளி, நாகக்காளி, சூலக்காளி, ரத்தக்காளி, பதினெட்டாம் படி கருப்பசாமி, பவானி பத்திரகாளி அம்மன்,மகா காளியம்மன், பேச்சி யம்மன்களுக்கு பாலா பிஷேகம் நடை பெற்றது.

    தொடர்ந்து முப்பெரும் தேவியர் பவானி அம்மனுக்கு மஞ்சள் காப்பு அல ங்காரம் செய்யப்பட்டு பெரிய தீபாராதனை காண்பி க்கப்பட்டது. இரவு 8.30 மணியளவில் 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

    பின்னர் சிறப்பு அன்ன தானம் வழங்கப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். பூஜை க்கான ஏற்பாடுகளை குருநாதர் சக்தியம்மா மற்றும் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

    • விழாவை முன்னிட்டு பவானி அம்மாக்களுக்கு உள்பட 21 வகையான அபிஷேகங்கள் நடந்தது.
    • குருநாதர் சத்தியம்மா பெண் உருவத்தில் பக்தர்களுக்கு சிறப்பு அருள் வாக்கு வழங்கினார்.

    புளியங்குடி:

    புளியங்குடி முப்பெரும் தேவியர் பவானி அம்மன் ஆலயத்தில் உள்ள பெரியபாளையத்து பவானி அம்மன், நாக கன்னியம்மன், நாகம்மன் கோவிலில் ஐப்பசி பூஜை திருவிழா நடைபெற்றது.

    31-வது ஆண்டாக நடைபெறும் இந்த பூஜை திருவிழாவை முன்னிட்டு குருநாதர் சக்தியம்மா தனது சிறுவயதில் அருள் வாக்கு பலித்ததற்காக சென்னையில் உள்ள பெரியபாளையத்து பவானி அம்மன் தனது நாவினில் குடிகொண்ட நாளையே மகாபெரும் பூஜை திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    இவ்விழாவை முன்னிட்டு அதிகாலை 4 மணியளவில் நடை திறக்கப்பட்டு முப்பெரும் தேவியர் பவானி அம்மாக்களுக்கு சிறப்பு பால், தயிர், தேன்,சந்தனம், குங்குமம் உள்பட 21 வகையான நறுமண பொருள்களால் அபிஷேகங்கள் நடந்தது. சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டு பெரிய தீபாராதனை நடைபெற்றது. வருடம் தோறும் இந்நாளில் குருநாதர் சத்தியம்மா சேலை அணிந்து முழு பெண் உருவத்தில் ஒரு கையில் அக்னி சட்டியுடன் காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை பக்தர்களுக்கு சிறப்பு அருள் வாக்கு வழங்கினார்.

    குருநாதர் சக்தியம்மா பெண் வேடத்தில் அருள் வாக்கு கொடுக்கும் இந்நாளில் பக்தர்கள் குருநாதர் சக்தியம்மா விற்கு சேலை எடுத்து கொடுக்கும் போது நமக்கு வாழ்வில் அனைத்து நலமும் கிடைக்கும், மேலும் பக்தர்களுக்கு கொடுக்கும் அருள்வாக்கு ஒரு வருடத்திற்குரிய பலன் கிடைக்கும் என்பதும் ஐதீகம். மதியம் 12 மணி முதல் 4 மணி வரை அன்னதானம் நடைபெற்றது.

    திருவிழா ஏற்பாடுகளை கோவில் குருநாதர் சக்தியம்மா மற்றும் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    • மலையடிக்குறிச்சி பெரியகுளம் பகுதியில் இன்று காலை ஆட்டோ ஒன்று தீப்பற்றி எரிந்தது.
    • ஆட்டோவில் எரிந்த நிலையில் ஆண் சடலமும் கிடந்தது.

    புளியங்குடி:

    புளியங்குடி அருகே உள்ள மலையடிக்குறிச்சி பெரியகுளம் பகுதியில் இன்று காலை ஆட்டோ ஒன்று தீப்பற்றி எரிந்தது. அதனை அறிந்த புளியங்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தார்.

    அப்போது அந்த ஆட்டோவில் எரிந்த நிலையில் ஆண் சடலமும் கிடந்தது. இதையடுத்து ஆட்டோ பதிவெண்ணை கொண்டு விசாரணை நடத்தியதில் அது புளியங்குடி அருகே உள்ள தலைவன்கோட்டையை சேர்ந்த வெள்ளத்துரை (வயது60) என்பவருக்கு சொந்தமானது என்று தெரியவந்தது. இவர் தனது குடும்பத்தினரை பிரிந்து வாசுதேவநல்லூரில் தங்கியிருந்து ஆட்டோ ஓட்டி வந்துள்ளார். அவரை நேற்று முதல் காணவில்லை.

    இந்த நிலையில் அவரது ஆட்டோவில் எரிந்த நிலையில் அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது. இதனால் அவரை யாரேனும் ஆட்டோவுடன் கடத்தி சென்று கொலை செய்து எரித்து இருக்க லாமா? அப்படியானால் அந்த நபர்கள் யார்? எதற்காக கொலை செய்தா ர்கள்? என்பது குறித்து புளியங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகாலை நடை திறக்கப்பட்டு அம்மன்களுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
    • நிகழ்ச்சியின்போது மழை வேண்டி 1,008 லிட்டர் சிறப்பு பாலாபிஷேகம் நடந்தது.

    புளியங்குடி:

    புளியங்குடி முப்பெரும் தேவியர் பவானி அம்மன் ஆலயத்தில் உள்ள பெரிய பாளையத்து பவானி அம்மன், நாகக்கன்னி அம்மன், நாகம்மன் தெய்வங்களுக்கு புரட்டாசி மாத பவுர்ணமி பூஜை நடைபெற்றது. பூஜையை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு அம்மன்களுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    தொடர்ந்து காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பவுர்ணமி நாளில் சிறப்பு அருள்வாக்கு நடைபெற்றது. மாலை 6 மணிக்கு குருநாதர் சக்தியம்மா புரட்டாசி மாத பவுர்ணமி பூஜை குறித்து ஆன்மீக சொற்பொழி வாற்றினார்.

    தொடர்ந்து பால், தயிர், மஞ்சள், இளநீர், பஞ்சா மிர்தம் சந்தனம், குங்குமம் உட்பட 21 நறுமண பொருட்கள் மற்றும் உலக மக்கள் நன்மைக்காகவும், மழை வேண்டியும் 1008 லிட்டர் சிறப்பு பாலா பிஷேகம் நடந்தது. பின்னர் பரிவார தெய்வங்களான பால விநாயகர், கல்யாண சுப்பிர மணியர், வள்ளி, தெய்வா னை பதினெட்டா ம்படி கருப்பசாமி, பவானி, பத்திரகாளியம்மன், மகா காளியம்மன், புற்றுக்காளி, நாகக்காளி, சூலக்காளி, ரத்தக்காளி, பேச்சியம்மன் ஆகிய தெய்வங்களுக்கு பால் அபிஷேகம் நடை பெற்றது.

    தொடர்ந்து முப்பெரும் தேவியர் அம்மனுக்கு சந்தன காப்பு, அலங்காரம் செய்ய ப்பட்டு பெரிய தீபா ரா தனை காண்பிக்கப்பட்டது.

    இரவு 8.30 மணிக்கு 108 திருவிளக்கு பூஜை நடை பெற்றது. இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டு பக்தி பாடல்கள் பாடினர். பின்னர் சிறப்பு அன்ன தானம் வழங்க ப்பட்டது. இதில் திரளான பக்த ர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடு களை குருநாதர் சக்தியம்மா மற்றும் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

    • மின் தடை அறிவிப்பால் தொழிலாளர்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது.
    • மின்தடை ரத்து செய்த விபரத்தை முறையாக பொது மக்களுக்கு தெரிவிக்கவில்லை.

    புளியங்குடி:

    புளியங்குடி பகுதியில் நேற்று (2-ந்தேதி) மின்வினியோகம் ரத்து செய்யப்படும் என்று மின்வாரியம் சார்பாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனை நம்பி தொழிற் கூடங்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், இல்லத்தரசிகள் என அனைத்து தரப்பினரும் மின்தடைக்கு ஏற்ப தங்களது பணிகளை மாற்றி அமைத்துக் கொண்டனர். மேலும் தொழிலாளர்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது.

    இந்தநிலையில் நேற்று புளியங்குடி பகுதியில் மின் தடை செய்யப்படவில்லை. இதனால் தொழிலாளிகளுக்கு விடுமுறை அளித்திருந்த தொழிற் கூடங்கள், தங்களது பணிகளை மாற்றி அமைத்திருந்த தொழிலாளிகள், விவசாய நிலத்தில் நீர் பாசனத்தை மாற்றி அமைத்து இருந்த விவசாயிகள் மற்றும் இல்லத்தரசிகள் கடும் குழப்பத்திற்கு ஆளா னார்கள். மின்தடை குறித்து அறிவிப்பு வெளியிட்ட மின்வாரியம், அதனை ரத்து செய்த விபரத்தை முறையாக பொது மக்களுக்கு தெரிவிக்கவில்லை. மேலும் ஒரு சில தொழிற்கூடங்களுக்கும் தொழிலாளிகளுக்கு மட்டும் மின் தடை இல்லை என்ற தகவலை தெரியப்படுத்தி மின்வாரிய ஊழியர்கள் பாரபட்சம் காட்டியுள்ளதாக பெரும்பாலானோர் புகார் கூறினர்.

    இதேபோல் இதற்கு முன்பும் மின்வாரியத்தின் மின்தடை அறிவிப்பில் குளறுபடி நடந்துள்ளது. மின்தடை அறிவிப்பு வெளியிடுவதும், பின்னர்

    ரத்து செய்வதும் புளிய ங்குடி பகுதியில் வாடி க்கையான ஒன்றாகி விட்டது. எனவே இனிவரும் நாட்களில் மின்தடை குறித்து அறிவிக்கும் முன்னரே, மேற்கொள்ள வேண்டிய பராமரிப்பு பணிகள் மற்றும் நிர்வாக காரணங்களை ஆராய்ந்து அறிவிப்பு வெளியிட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • இளையராஜாவுக்கும், செல்லச்சாமிக்கும் இடம் சம்பந்தமாக பிரச்சினை இருந்து வந்துள்ளது.
    • செல்லச்சாமி அருகில் இருந்த மண்வெட்டியால் இளையராஜாவை தலையில் தாக்கியுள்ளார்.

    புளியங்குடி:

    தென்காசி மாவட்டம் புளியங்குடியை அடுத்த சிந்தாமணி அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் வீராசாமி. இவரது மகன் இளையராஜா(வயது 19). இவர் அதே பகுதியில் தனது தாய் மற்றும் தங்கையுடன் வசித்து வருகிறார்.

    இடப்பிரச்சினை

    இளையராஜாவுக்கும் அவரது சித்தப்பாவான செல்லச்சாமிக்கும்(35) இடம் சம்பந்தமாக பிரச்சினை இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் இன்று காலை வழக்கம் போல் இளையராஜா வேலைக்கு கிளம்பி கொண்டிருந்தார்.

    அப்போது செல்லச்சாமிக்கும், இளைய ராஜாவுக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது செல்லச்சாமி அருகில் இருந்த மண்வெட்டியால் இளையராஜாவை தலையில் தாக்கியுள்ளார். இதில் இளையராஜா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். உடனே செல்லச்சாமி அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

    போலீசார் விசாரணை

    இளையராஜா கொலை செய்யப்பட்டதை அறிந்த அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். அவர்கள் இளையராஜா உடலை பார்த்து கதறி அழுதனர். இதுகுறித்த தகவலின் பேரில் புளியங்குடி போலீசார் சம்பவஇடத்திற்கு விரைந்து சென்றனர்.

    அவர்கள், இளையராஜா உடலைக் கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர். மேலும் தப்பி ஓடிய அவரது சித்தப்பா செல்லச் சாமியை போலீசார் தேடி வருகின்றனர்.

    • பவானி அம்மனுக்கு 21 நறுமணப் பொருள்களால் அபிஷேகங்கள் நடந்தது.
    • இரவு 9 மணிக்கு பவானி அம்மனுக்கு நலங்கு வைக்கும் நிகழ்ச்சி நடந்தது.

    புளியங்குடி:

    புளியங்குடி முப்பெரும் தேவியர் பவானி அம்மன் ஆலயத்தில் அருள் பாலிக்கும் பெரியபாளையத்து பவானி அம்மன், நாக கன்னியம்மன், நாகம்மன் ஆகிய தெய்வங்களுக்கு ஆடிப்பூர வளைகாப்பு விழா நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது.

    விழாவில் கலந்து கொள்வதன் மூலம் நீண்ட நாட்கள் திருமண மாகாதவர்களுக்கு திருமணம், குழந்தை பாக்கியம் இல்லாத வர்களுக்கும் வரம் கிடைக்கும் என்பது ஐதீகம். விழாவை முன்னிட்டு மாலை 6 மணிக்கு குருநாதர் சக்தியம்மா ஆடிப்பூர வளைகாப்பு பற்றி ஆன்மிக சொற்பொழி வாற்றினார்.

    தொடர்ந்து முப்பெரும் தேவியர் பவானி அம்மனுக்கு பால், தயிர், மஞ்சள், குங்குமம், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 21 நறுமணப் பொரு ள்களால் அபிஷேகங்கள் நடந்தது. தொ ர்ந்து மஞ்சள் காப்பு, வளையல் மாலைகள் அலங்காரம் செய்ய ப்பட்டு, 21 வகையான வளைகாப்பு சாதங்கள் படையல் வைத்து, பெரிய தீபாராதனை காண்பிக்கப்பட்டு பூஜைகள் நடந்தது. அதனைத்தொ டர்ந்து குருநாதர் சக்தியம்மா முப்பெரும்தேவியர் பவானி அம்மனுக்கு இரவு 9 மணிக்கு நலங்கு வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. அதனைத் தொடர்ந்து அம்மன்களுக்கு வளைகாப்பு அணியும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    பின்னர் கோவில் வளாகத்தில் உள்ள புற்றுக்காளி, நாகக்காளி, சூலக்காளி, ரத்தக்காளி, பவானி பத்ரகாளியம்மன், மகாகாளியம்மன், வள்ளி, தெய்வானை ஆகிய பரிவார தெய்வங்களுக்கும் வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

    விழாவில் கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் பிரசாத மாக வளைகாப்பு சாதம், வளையல், மஞ்சள் கிழங்கு, மஞ்சள் காப்பு, குங்குமம், தாலிக்கயிறு வழங்கப்பட்டது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் நடைபெற்றது.

    இதில் தென்காசி, விருதுநகர், தேனி, மதுரை, நெல்லை, தூத்து க்குடி ஆகிய மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்த ர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை கோவில் குருநாதர் சக்தியம்மா மற்றும் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

    • மக்கள் நன்மைக்காக, மழை வேண்டியும் 1008 லிட்டர் சிறப்பு பாலாபிஷேகம் நடந்தது.
    • திருவிளக்கு பூஜையில் திரளான பெண்கள் கலந்துகொண்டு பக்தி பாடல்கள் பாடினர்.

    புளியங்குடி:

    புளியங்குடி பவானி அம்மன் ஆலயத்தில் ஆனி மாத பவுர்ணமி பூஜை நடைபெற்றது. பூஜையை முன்னிட்டு அதிகாலை 5 மணி அளவில் நடை திறக்கப்பட்டு அம்மன்களுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    தொடர்ந்து காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை பக்தர்களுக்கு சிறப்பு அருள் வாக்கு நடைபெற்றது. மாலை 6 மணி அளவில் குருநாதர் சக்தியம்மா பவுர்ணமி பூஜை குறித்து ஆன்மீக சொற்பொழிவாற்றினார். தொடர்ந்து பால், தயிர், மஞ்சள், இளநீர், சந்தனம், குங்குமம் உட்பட 21 நறுமண பொருட்கள் மற்றும் உலக மக்கள் நன்மைக்காகவும், மழை வேண்டியும் 1008 லிட்டர் சிறப்பு பாலாபிஷேகம் நடந்தது.

    தொடர்ந்து பரிவார தெய்வங்களான பால விநாயகர், கல்யாண சுப்பிரமணியர், வள்ளி, தெய்வானை பதினெட்டாம்படி கருப்பசாமி, பவானி பத்திரகாளியம்மன், மகா காளியம்மன், புற்றுக்காளி, நாகக்காளி, சூலக்காளி, ரத்தக்காளி ஆகிய தெய்வங்களுக்கு பால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து முப்பெரும் தேவியர் அம்மனுக்கு மஞ்சள் காப்பு, அலங்காரம் செய்யப்பட்டு பெரிய தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இரவு 8 மணிக்கு 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

    இதில் திரளான பெண்கள் கலந்துகொண்டு பக்தி பாடல்கள் பாடி திருவிளக்கு பூஜை நடந்தது. தொடர்ந்து சிறப்பு அன்ன தானம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை குருநாதர் சக்தியம்மா மற்றும் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

    • மாரியப்பன் காய்கறி வியாபாரம் பார்த்து வந்தார்.
    • போலீசார், மாரியப்பன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    புளியங்குடி:

    புளியங்குடி வல்லப விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் மாரியப்பன்(வயது 45). இவர் காய்கறி வியாபாரம் பார்த்து வந்தார். தினமும் மாலையில் தனது நண்பர்களுடன் சேர்ந்து புளியங்குடி ஊருக்கு வெளியே ஒருவரது கிணற்றில் அமர்ந்து பேசுவது வழக்கம்.

    நேற்றும் அவர் தனது நண்பர்களுடன் இரவில் பேசிக்கொண்டிருந்த நிலையில் அனைவரும் கிணற்று ஓரத்திலேயே தூங்கி விட்டனர். இந்நிலையில் இன்று காலை அவரது சக நண்பர்கள் எழுந்துவிட்ட நிலையில், மாரியப்பன் மட்டும் எழுந்திருக்கவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர்கள் பார்த்தபோது அவர் இறந்தது தெரியவந்தது. இதுகுறித்து அவர்கள் தெரிவித்த புகாரின்பேரில் புளியங்குடி போலீசார் அங்கு சென்று மாரியப்பன் உடலை மீட்டு பிரேத பரிசோ தனைக்காக அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    • அய்யாபுரம் பகுதியில்ஆரம்ப சுகாதார நிலையத்தை காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
    • மருத்துவ பணிகளை நகராட்சி தலைவர் விஜயா சவுந்தரபாண்டியன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

    புளியங்குடி:

    புளியங்குடி நகராட்சி 33-வது வார்டு அய்யாபுரம் பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இதனையடுத்து புளியங்குடி நகராட்சி தலைவரும், மாவட்ட தி.மு.க. மகளிர் தொண்டர் அணி அமைப்பாளருமான விஜயா சவுந்தரபாண்டியன் தலைமை தாங்கி மருத்துவ பணிகளை தொடங்கி வைத்தார்.

    விழாவில் நகர்மன்ற துணை தலைவரும், தி.மு.க.நகர செயலாளருமான அந்தோணிசாமி, சிவகிரி பேரூர் தி.மு.க. செயலாளர் டாக்டர் செண்பக விநாயகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம் பொதுமருத்துவர்கள் சூர்யா, ரேவதி, மாவட்ட மலேரியா அலுவலர் தண்டாயுதபாணி, சுகாதாரத்துறை அலுவலர்கள் ராமலிங்கம், பாலாஜி, சர்போஜி, கமிஷனர் சுகந்தி, என்ஜினீயர் முகைதீன் அப்துல் காதர், சுகாதார அலுவலர் கணேசன், 33-வது வார்டு செயலாளர் வெள்ளபாண்டி, ஊர் நாட்டாண்மை எட்வர்ட் ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் அய்யாபுரம் இந்திரா தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் டேனியல் இன்பராஜ் நன்றி கூறினார்.

    • அடிக்கல் நாட்டு விழா நகர்மன்ற தலைவர் விஜயா சவுந்தரபாண்டியன் தலைமையில் நடைபெற்றது.
    • நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையாளர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    புளியங்குடி:

    புளியங்குடி நகராட்சிக்கு உட்பட்ட 1-வது வார்டு பகுதியில் சுமார் ரூ. 75 லட்சம் மதிப்பில் 3 ஆயிரம் சதுர அடியில் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் 11-வது வார்டில் சுமார் ரூ. 70 லட்சம் மதிப்பில் குடிநீர் பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா நகர்மன்ற தலைவர் விஜயா சவுந்தரபாண்டியன் தலைமையில் நடைபெற்றது. புதிய திட்டப் பணிகளை தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும் சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான ராஜா அடிக்கல் நாட்டினர்.

    விழாவில் நகர்மன்ற துணைத் தலைவர் அந்தோணிசாமி, நகராட்சி ஆணையாளர் சுகந்தி, நகராட்சி பொறியாளர் முகைதீன், சுகாதார அலுவலர் கணேசன், நகர்மன்ற உறுப்பினர் லட்சுமி செல்வம், பீர்பாத்து சாகுல்ஹமீது, சங்கரநாராயணன், முகமது நைனார், பாலசுப்பிரமணியன், சீதாலட்சுமி முனியராஜ், நிர்வாகிகளான பொதுக்குழு உறுப்பினர் பத்திரம் சாகுல் ஹமீது, வக்கீல் பிச்சையா, கம்பிளி மாரியப்பன், ராஜவேல்பாண்டியன், ராஜ்குமார், சேதுராமன், குருராஜ், அன்பு, அக்ரி சந்திரன் மற்றும் நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×