search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புளியங்குடி அருகே பரிதாபம்-டிராக்டர் சக்கரத்தில் சிக்கி பள்ளி மாணவன் பலி
    X

    புளியங்குடி அருகே பரிதாபம்-டிராக்டர் சக்கரத்தில் சிக்கி பள்ளி மாணவன் பலி

    • புளியங்குடி அருகே உள்ள அரியூரை சேர்ந்த மனோஜ்பாண்டி 10-ம் வகுப்பு படித்து வந்தார்.
    • டிராக்டரின் பின்பக்க சக்கரம் மற்றும் அதன் அருகே பொருத்தப்பட்டிருந்த ரொட்டவேட்டர் எந்திரத்தில் சிக்கினார்.

    புளியங்குடி:

    தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே உள்ள அரியூரை சேர்ந்தவர் மாரிச்சாமி. இவரது மகன் மனோஜ்பாண்டி (வயது15). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

    மாணவன் பலி

    இவரது நண்பர் அதே பகுதியை சேர்ந்த மாரிமுத்து (16). இவர் பிளஸ்-1 படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று மாலை நண்பர்கள் இருவரும் அங்குள்ள வயல்பகுதிக்கு சென்றனர்.

    பின்னர் விவசாயத்திற்கு பயன்படுத்தபடும் டிராக்டரில் சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக பின்னால் இருந்த மனோஜ்பாண்டி தவறி கீழே விழுந்தார். இதில் டிராக்டரின் பின்பக்க சக்கரம் மற்றும் அதன் அருகே பொருத்தப்பட்டிருந்த ரொட்டவேட்டர் எந்திரத்தில் சிக்கினார். இதில் அவரது உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    போலீசார் விசாரணை

    தகவலறிந்ததும் சம்பவ இடத்திற்கு புளியங்குடி இன்ஸ்பெக்டர் பால கிருஷ்ணன் மற்றும் போலீசார் மனோஜ்பாண்டி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    தொடர்ந்து இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×