search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புளியங்குடி  பவானி அம்மன் ஆலயத்தில் பவுர்ணமி பூஜை
    X

    பவானி அம்மன் ஆலயத்தில் தை மாத பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு பாலாபிஷேகம் நடைபெற்ற காட்சி.

    புளியங்குடி பவானி அம்மன் ஆலயத்தில் பவுர்ணமி பூஜை

    • பவானி அம்மன் ஆலயத்தில் பவுர்ணமி பூஜை சிறப்பு பாலபிஷேகம் நடைபெற்றது.
    • முப்பெரும் தேவியர் அம்மனுக்கு 27வகை அபிஷேகம் நடந்தது.

    புளியங்குடி:

    தென்காசி மாவட்டம் புளியங்குடி அரசு மருத்துவமனை அருகில் உள்ள அருள்வாக்கிற்கு பிரசித்தி பெற்ற முப்பெரும் தேவியர் பவானி அம்மன் ஆலயத்தில் தை மாத பவுர்ணமி பூஜை சிறப்பு பாலபிஷேகம் நடைபெற்றது.

    இங்குள்ள பெரியபாளையத்து பவானி அம்மன், நாக கன்னியம்மன், நாகம்மன் ஆகிய தெய்வங்களுக்கு 1008 லிட்டர் பாலபிஷேகம், 108 திருவிளக்கு பூஜை நேற்று நடைபெற்றது. பவுர்ணமி பூஜையை முன்னிட்டு மாலை 6 மணிக்கு குருநாதர் சக்தியம்மா தைப்பூசம், தை மாதம் பவுர்ணமி பூஜையின் சிறப்பு குறித்து ஆன்மீக சொற்பொழிவாற்றினார்.

    மாலை 7 மணிக்கு முப்பெரும் தேவியர் அம்மனுக்கு குங்குமம், மஞ்சள், தேன், சந்தனம், இளநீர், பால், தயிர் நறுமண பொருட்கள் உள்பட 27வகை அபிஷேகம் நடந்தது. கோவில் வளாகத்தில் உள்ள பாலவிநாயகர், புற்று காளி, நாகக்காளி சூலக்காளி, ரத்தக் காளி, பதினெட்டாம்படி கருப்பசாமி, செங்காளி அம்மன், மாகாளியம்மன், பேச்சியம்மனுக்கு பால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு மஞ்சள் காப்பு அலங்காரம் செய்யப்பட்டு பெரிய தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இரவு 9 மணிக்கு 108 திருவிளக்கு பூஜை நடந்தது.

    இதில் பெண்கள் கலந்துகொண்டு தீபமேற்றி பாடல்கள் பாடி திருவிளக்கு பூஜை நடைபெற்றது. அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கோவில் குருநாதர் சக்தியம்மா மற்றும் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

    Next Story
    ×