search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மன அழுத்தம்"

    • உடல் மற்றும் மன மாற்றங்கள் அதிகம் ஏற்படும்.
    • கருச்சிதைவு அவர்களின் மனதை பெரிதும் பாதிக்கும்.

    பொதுவாக கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு ஹார்மோன் மாற்றங்கள், உடல் மற்றும் மன மாற்றங்கள் அதிகம் ஏற்படும். அடிக்கடி சிறுநீர் கழிப்பது, ஹார்மோன் மாற்றம் அல்லது உணர்ச்சிகளில் ஏற்படும் மாற்றங்களால் அவதிப்படுவார்கள். அப்படியான நேரத்தில் ஏற்படும் கருச்சிதைவு அவர்களின் மனதை பெரிதும் பாதிக்கும்.

    கருச்சிதைவு என்பது குழந்தை பிறப்பதற்கு முன்னரே கருச்சிதைவு ஏற்பட்டு குழந்தை கருவிலே உயிரிழப்பது ஆகும். ஒரு தாய் தனது கருவை இழக்கும்போது ஏற்படும் திடீர் சில உடல்நல சிக்கல்களால் உடல் வலிமையை இழப்பது மட்டுமல்லாமல், கர்ப்பமாக இருப்பதை உறுதி செய்த நாளில் இருந்து அவள் திட்டமிட்டிருந்த முழு கனவுகளையும் இழக்கிறாள். கருச்சிதைவு ஏற்பட்ட பின்னர் மிகுந்த மன உளைச்சலுடன் உயிரற்றவராக உணர்க்கிறார்.

    கர்ப்பத்தின் ஆரம்பத்திலேயே கூட கருச்சிதைவு ஏற்படலாம். எனவே நீங்கள் புள்ளி அல்லது ரத்தப்போக்கு ஏற்பட்டால் உடனே மருத்துவமனைக்கு செல்வது தான் நல்லது.

    நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்கள் என்பதை அறிந்த பிறகு உங்களுக்கு கருச்சிதைவு ஏற்பட்டால் அதிர்ச்சி மற்றும் அதனால் வரும் மன அழுத்தம் என்பது இயல்பானது. ஆனால் முதலில், கருச்சிதைவின் போது மனச்சோர்வின் அறிகுறிகளை நீங்கள் அடையாளம் காண வேண்டும்.

    அறிகுறிகள்

    * எரிச்சல் அல்லது விரக்தி உணர்வு

    * சோகம், வெறுமை அல்லது நம்பிக்கையற்ற உணர்வு

    * பெரும்பாலான அல்லது அனைத்து வழக்கமான நடவடிக்கைகளிலும் ஆர்வம் அல்லது மகிழ்ச்சியை இழப்பது

    * வழக்கத்திற்கு மாறாக சோர்வாகவும் கவலையாகவும் இருப்பது

    * தூங்குவது மற்றும் மிகக் குறைவாகவோ அல்லது அதிகமாகவோ சாப்பிடுவது

    * பயனற்ற அல்லது குற்ற உணர்வு

    * விஷயங்களை நினைவில் வைத்து கவனம் செலுத்துவதில் சிரமம்

    * மரணம் அல்லது தற்கொலை பற்றிய எண்ணங்கள் மற்றும் தற்கொலை முயற்சிகள்

    * சீரற்ற வலிகள்

    மேற்கூறிய அறிகுறிகளில் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட அறிகுறிகள் இரண்டு வாரங்களுக்கு மேல் இருந்தால், ஒரு பெண் குணமடைய மருத்துவரின் ஆலோசனை தேவைப்படலாம்.

    கருச்சிதைவுக்குப் பிறகு, கோபம், மனச்சோர்வு போன்றவற்றை அனுபவிப்பது பொதுவானது. ஆனால் கருச்சிதைவுகளால் பாதிக்கப்படும் பெரும்பாலான பெண்களுக்கு எதிர்காலத்தில் ஆரோக்கியமான கர்ப்பம் இருக்கும். நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பேசுவது மற்றும் நம்பிக்கையை தக்கவைத்துக்கொள்வது விரும்பத்தகாத அனுபவத்தையும் குற்ற உணர்வையும் போக்க உதவும். இருப்பினும், மனச்சோர்வு கடுமையாக இருந்தால், மருத்துவர்களிடம் செல்லலாம்

    சிகிச்சைமுறை

    * ஆரோக்கியமான உணவை உண்ணுதல் மற்றும் சரியான நேரத்தில் தூங்குதல், சிறிது ஓய்வுக்குப் பிறகு உடற்பயிற்சி செய்தல் உடலைக் குணப்படுத்தும்

    * மனச்சோர்வு அறிகுறிகளைக் குறைக்க ஆண்டிடிரசண்ட்ஸ்

    * துக்கத்தை ஆரோக்கியமான முறையில் சமாளிக்க உதவும் உளவியல் சிகிச்சை

    * எலெக்ட்ரோகான்வல்சிவ் தெரபி (ECT), அதாவது உங்கள் மூளைக்கு லேசான மின்சாரத்தை பயன்படுத்துதல், ஆனால் இது மன அழுத்தத்தின் கடுமையான நிகழ்வுகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுகிறது.

    • இந்தியாவில் பாதிக்கும் மேற்பட்ட இளைஞர்கள் மனநல பிரச்சனைகளுக்கு சிகிச்சை பெறுவதில்லை.
    • தென் மாவட்டங்களில் உள்ள இளைஞர்கள் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள்.

    சென்னை:

    சென்னையில் தற்போது மாணவர்கள் மத்தியில் மன அழுத்தம் அதிகரித்து வருவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

    மனநல பராமரிப்பு மற்றும் மறுவாழ்வு சேவைகளை வழங்கும் தன்னார்வ அமைப்பு ஒன்று நடத்திய ஆய்வின்படி 32 சதவீத பள்ளி-கல்லூரி மாணவர்கள் கடுமையாக மன அழுத்தத்துக்கு ஆளாகியிருப்பது தெரிய வந்தது.

    30 சதவீதம் மாணவர்கள் எதிர்காலம் பற்றிய கவலைக்கு உள்ளாகியுள்ளனர். சில மாணவர்கள் தற்கொலை எண்ணம் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

    மாணவர்களின் மன அழுத்தம் மற்றும் பதற்றத்தை கண்டறிவதற்காக 15 ஆயிரம் மாணவர்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இதுகுறித்து மனநல மருத்துவர்கள் கூறியதாவது:-

    32 சதவீத மாணவர்கள் மன அழுத்தத்துக்கு ஆளாகி இருந்தாலும் அவர்களில் 5 சதவீதத்துக்கு குறைவானவர்கள் மட்டுமே மனநல மருத்துவ உதவியை நாடுகிறார்கள். மற்றவர்கள் மருத்துவர்களின் உதவியை புறக்கணிப்பது பெரிய ஆபத்தாக பார்க்கப்படுகிறது.

    இந்த மாணவர்களுக்கு எப்படி மனநல மருத்துவர்களின் உதவியை பெற வைப்பது என்பதுதான் மிகப்பெரிய கேள்வியாக உள்ளது.

    இந்தியாவில் பாதிக்கும் மேற்பட்ட இளைஞர்கள் மனநல பிரச்சனைகளுக்கு சிகிச்சை பெறுவதில்லை. அதனால் சிலர் வன்முறையை கையில் எடுக்கிறார்கள். சிலர் போதை பொருளுக்கு அடிமையாகிறார்கள். சிலருக்கு தற்கொலை எண்ணம் அதிகரிக்கிறது.

    குறிப்பாக தென் மாவட்டங்களில் உள்ள இளைஞர்கள் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள். இந்தியாவில் ஏற்படும் மரணங்களில் தற்கொலை விகிதம் கடந்த 2019-ம் ஆண்டு 9.9 சதவீதமாக இருந்தது. அது 2022-ம் ஆண்டு 12.4 சதவீதமாக அதிகரித்துள்ளது.

    இதற்கு முன்பு சாலை விபத்துக்களாலேயே அதிக மரணம் ஏற்பட்டது. தற்போது தற்கொலையால் அதிக இறப்புகள் ஏற்படுகின்றன.

    மாணவர்களிடம் ஏற்படும் மன அழுத்தம், மனக்கலவையின் ஆரம்ப அறிகுறிகளை கண்டறிய ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். உதாரணமாக, ஒரு மாணவர் தூங்குவதிலும், சாப்பிடுவதிலும் பிரச்சனை இருப்பதை கண்டறிந்தாலோ, நட்பு வட்டாரங்களில் இருந்து விலகி தனியாக இருந்தாலோ பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் உடனடியாக தலையிட வேண்டும். அடுத்த கட்டமாக அந்த மாணவர்களை மனநல ஆலோசகர்களிடம் அழைத்து சென்று ஆலோசனை பெற வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    • இனிமையான மண வாழ்க்கை எல்லோருக்கும் அமைந்து விடுவதில்லை.
    • கருத்து வேறுபாடுகளால் மணமுறிவுகள் அதிகமாகி வருகின்றன.

    இனிமையான மண வாழ்க்கை எல்லோருக்கும் அமைந்து விடுவதில்லை. கருத்து வேறுபாடுகளால் மணமுறிவுகள் அதிகமாகி வருகின்றன. விவாகரத்து செய்யாவிட்டாலும் சலிப்புடன் திருமண வாழ்க்கை வாழ்பவர்கள் பலர். இன்னொருபுறம் எனக்கு திருமணமே வேண்டாம், தனியாக வாழ்கிறேன் என்று திருமணத்தையே நிராகரிக்கும் போக்கும் சிலரிடம் நிலவுகிறது.

    வேலைக்கு போனதும் திருமணம் என்ற சமூக நியதி மெல்ல மெல்ல மாறி, சொந்தமாக ஒரு வாகனம், வீடு என்று வாங்கியதும் திருமணம் என்ற முடிவில் பலர் இருக்கிறார்கள். இதனால் வயதும் கூடிப்போகிறது. நிலைமை உயர உயர எதிர்பார்ப்புகள் எகிற ஆரம்பிக்கின்றன. இதனாலும் திருமணங்கள் தடைபடுகின்றன.

    திருமணம் எனும் அமைப்பு மிகுந்த சிக்கலான விஷயமாக மாறி வருவது உண்மை. இதற்கு முக்கிய காரணம் திருமணம் என்பது இன்றைக்கு குடும்ப நிகழ்வாக இல்லாமல் தனி மனித ஏற்பாடாக மாறியதுதான் அதற்கு காரணம். திருமணம் என்றில்லை, எல்லா உறவுகளிலும் ஏமாற்றம் வருவதற்கு காரணம் எதிர்பார்ப்புகள் பொய்த்துப் போவதுதான்.

    திருமணத்துக்கு தயாராதல் என்பது வீட்டை சரிசெய்து ஷோ செய்வது அல்ல. வரப்போகும் பந்தத்துக்காக தன்னை தயார்செய்துகொள்வது. மேலை நாடுகளில் இதற்கு கவுன்சலிங் போகிறார்கள்.

    கையில் இருக்கும் 'ஆப்'பை தட்டினால் அரை மணி நேரத்தில் எதுவும் வீடு தேடி வரும் என்ற மனப்பான்மை இன்றைய 20 வயசுக்காரர்களை பெரிதும் பலவீனப்படுத்தி விட்டது. "பிடிக்கலையாம், அதான் பிரிஞ்சிட்டாங்களாம்" என்று ஒற்றை வரியில் திருமண முறிவுக்கு பதில் தருகிறார்கள்.

    எனவே பொறுமையாக இருந்தால் சரியாகும் என்ற பழைய அறிவுரை போதாது. அடிப்படை மாற்றம் நிகழ வேண்டிய இடம் திருமணம் பற்றிய எண்ணங்கள், எதிர்பார்ப்புகளில்தான்.

    அதேபோல் உங்கள் மேல் உங்கள் வாழ்க்கைத் துணை கொண்ட எதிர்பார்ப்புகள் என்னவாக இருக்கும் என யூகித்து பட்டியல் இடுங்கள். பட்டியலை பரிமாறிக்கொள்ளுங்கள். இது பிரச்சினையை தீர்க்காது. ஆனால், பிரச்சினை எங்கு இருந்து தொடங்கி இருக்கிறது? என்பதை புரிய வைக்கும்.

    • காலையிலேயே யோகாசனம் செய்வதால் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால்கள் கரைகிறது.
    • கணினி சார்ந்த வேலை செய்பவர்கள், மன அழுத்தம் உள்ளவர்களுக்கு மன அமைதி தருவது யோகாசனம்.

    உடலையும், மனதையும் வலிமையாக்கும் பயிற்சிகளில் யோகாசனம் முக்கியமானது. காலையிலேயே யோகாசனம் செய்யலாமா? யோகாவின் பயன்கள் குறித்து தெரிந்து கொள்வோம்.

    * கணினி சார்ந்த வேலை செய்பவர்கள், மன அழுத்தம் உள்ளவர்களுக்கு மன அமைதி தருவது யோகாசனம்.

    * யோகாசனம் மூலம் செய்யும் மூச்சு பயிற்சி சீரான சுவாசத்தை அளித்து சுவாச பிரச்சினைகள் வராமல் தடுக்கிறது.

    * யோகா செய்வதால் ரத்த ஓட்டம் சீராவதுடன் இதய ஆரோக்கியம் மேம்படுகிறது.

    * பல கோணங்களில் வளைந்து யோகா செய்வதால் உடல் அழகான வடிவத்தை பெறுகிறது.

    * தினசரி காலை யோகா செய்வதால் மூளை புத்துணர்ச்சி அடைந்து சுறுசுறுப்பாக இருக்க உதவுகிறது.

    * காலையிலேயே யோகாசனம் செய்வதால் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால்கள் கரைகிறது.

    * காலை சூரிய ஒளியில் யோகா செய்வதால் விட்டமின் டி சத்து கிடைப்பதுடன் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கிறது.

    • இடுப்பை வளைத்து முக்கோண நிலையில் இருக்கும்.
    • தோள்பட்டை, கைகள், கால் ஆகியவற்றுக்கு வலிமையையும் நெகிழ்வுத் தன்மையையும் கொடுக்கும்.

    திரிகோணாசனம் என்பது ஆங்கிலத்தில் triangle pose என்று அழைப்பார்கள். இடுப்பை வளைத்து முக்கோண நிலையில் உடல் இருக்கும்படி செய்யும் இந்த ஆசனம் ஜீரணத்தை மேம்படுத்தவும், தொப்பையை குறைக்கவும், இன்சுலின் உற்பத்தியை தூண்டுவதற்கும் என பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை நமக்கு கொடுக்கிறது.

    உடல் தசைகளை நன்கு நீட்டி மடக்கும் இலகுவான தன்மையையும் உடலுக்கு நல்ல நெகிழ்வுத் தன்மையையும் கொடுக்கும். குறிப்பாக தோள்பட்டை, கைகள், கால் ஆகியவற்றுக்கு வலிமையையும் நெகிழ்வுத் தன்மையையும் கொடுக்கும்.

    ஜீரணக்கோளாறுகள் தான் உடலில் நிறைய பிரச்சினைகளுக்கு காரணமாக இருக்கின்றன. அவற்றை சரிசெய்யவும் ஜீரண ஆற்றலை மேம்படுத்தவும் திரிகோணாசனம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

    கை, கால், இடுப்பு, கழுத்து, தோள்பட்டை ஆகியவற்றை வளைத்து நீட்டி செய்கின்ற இந்த ஆசனம் அடிவயிற்று பகுதி மற்றும் ஜீரண மண்டலத்தை தூண்டும் வேலையை செய்கிறது.

    முக்கோணம் போன்ற நிலையில் இருக்கும் இந்த திரிகோணாசத்தை செய்வதன் மூலம் சுவாச மண்டலத்தில் இருக்கும் அடைப்பு போன்றவை நீங்கும். ஆழமாக சுவாசிக்க உதவி செய்யும்.

    நன்கு மூச்சை இழுத்து அதிகமான ஆக்சிஜன் அளவைப் பெற முடியும். இதனால் நுரையீரலுக்கும் அதிக அழுத்தம் ஏற்படாமல் அதன் செயல்பாட்டை அதிகரிக்கச் செய்யும். ஆஸ்துமா, வீசிங் போன்ற சுவாச மண்டல பிரச்சினை இருப்பவர்கள் இந்த திரிகோணாசனத்தை செய்து வருவது நல்லது.

    முதுகு வலி பிரச்சினை உள்ளவர்களுக்கு இந்த திரிகோணாசனம் மிகச்சிறந்த தீர்வாக இருக்கும். இந்த ஆசனம் செய்யும்போது மார்பு பகுதி விரிவடைந்து மூச்சு விடுவது மிக எளிதாக இருக்கும். ஆழமாக மூச்சை இழுத்து விட முடியும். இதனால் மார்பு மற்றும் இடுப்பு பகுதியில் ஏற்படும் அழுத்தம் குறைந்து இடுப்பு மற்றும் முதுகுவலி குறைய ஆரம்பிக்கும்.

    இந்த திரிகோணாசனம் செய்யும் போது உடல், மனம் இரண்டுமே ரிலாக்சாக இருக்கும். இது மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டத்தையும் அதிகரிக்கச் செய்யும். இதனால் மன அழுத்தம், பதட்டம், டென்ஷன், மனச்சோர்வு ஆகியவை குறையும்.

    சிலருக்கு இடுப்பை வளைத்து செய்யும் எந்தவித வேலைகளும் செய்யவே முடியாது. ஏனெனில் இடுப்பு பகுதியில் உள்ள தசைகள் மிகவும் இறுக்கமாக இருக்கும். இந்த இறுக்கத்தை குறைத்து இடுப்பு தசைகளை நெகிழ்வுத் தன்மையோடும் வலுவாகவும் வைத்திருக்க உதவும்.

    திரிகோணாசனம் செய்யும் போது ஒட்டுமொத்த உடலும் வலிமை அடையும். அதோடு இடுப்பு பகுதியில் உள்ள தசைகளை வலுப்படுத்தும். குறிப்பாக இடுப்பு தசைகளை வலுப்படுத்துவது மட்டுமின்றி, அடிவயிற்றுப் பகுதியில் உள்ள கொழுப்பை கரைக்கச் செய்து தொப்பையை குறைக்க உதவி செய்கிறது.

    • ஒரு வேளை சாப்பாடை தவிர்ப்பதால் கூட தலைவலி ஏற்படலாம்.
    • வலி உணர்திறன் கொண்ட நியூரான்களை மூளை தூண்டுவதால் தலைவலி ஏற்படுகிறது.

    தலைவலியை அனுபவிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. அந்த அளவிற்கு பொதுவான விஷயம் இந்த தலைவலி. அதிலும் ஆண்களை விடவும் பெண்களுக்கு தலைவலி வருவது அதிகம்.

    இன்றைய காலத்தில் பல காணரங்களால் அடிக்கடி தலைவலி ஏற்படுகின்றது. தலைவலி சில மணி நேரமோ, சில நாட்களுக்கோ காணப்படும். இதனை அலட்சியமாக எடுத்து கொள்ளக்கூடாது.

    முதலில் தலைவலி ஏன் வருகிறது என்பது குறித்து சில அடிப்படையான விஷயங்களை புரிந்து கொள்வது அவசியம். அந்த வகையில் தற்போது தலைவலி எதனால் ஏற்படுகின்றது என்ற காரணத்தை தெரிந்து கொள்வோம். இந்த பிரச்சினை ஏற்படாமல் உங்களால் முன்கூட்டியே தடுக்க முடியும்.

    காரணங்கள்:

    கோடை காலத்தில் ஏற்படும் தலைவலி வெப்பத்தின் காரணமாக ஏற்படலாம். இந்த வெப்பம் காரணமாக மூளைக்கு செல்கின்ற ஆக்சிஜன் குறைகிறது. இதனால் தலைவலி ஏற்படுகிறது. இந்த கோடைகாலத்தில் ஏற்படும் தலைவலிக்கு அறிகுறிகள் எதுவும் இல்லை.

    வலி நிவாரண மாத்திரைகளை அதிகமாக பயன்படுவதால் கூட தலைவலி ஏற்பட ஒரு காரணமாக அமைகிறது. இந்த மாத்திரைகளை அடிக்கடி எடுத்துக்கொள்ளும்போது, காஃபின் அல்லது ஆன்ட்டி ஹிஸ்டமைன் கலந்துள்ள இந்த மருந்துகள் நமது மூளையின் கட்டுப்பாட்டில் இடர்பாடுகளை ஏற்படுத்துகிறது.

    ஒருவேளை சாப்பாடை தவிர்ப்பதால் கூட தலைவலி ஏற்படலாம். நமது மூளை இரண்டு விஷயங்களை முக்கியமாக கொண்டு இயங்குகிறது. அவை குளுக்கோஸ் மற்றும் ஆக்சிஜன். நாம் எடுத்துக்கொள்ளும் உணவுகளில் இருந்து இவை இரண்டும் நமது மூளைக்கு கிடைக்கிறது. இந்த இரண்டு ஊட்டச்சத்துகளும் மூளைக்கு கிடைக்காத பொழுது, வலி உணர்திறன் கொண்ட நியூரான்களை மூளை தூண்டி நமக்கு தலைவலி ஏற்படுகிறது.

    புளித்த அல்லது பழைய உணவுகள் கூட தலைவலியை ஏற்படுத்தக்கூடும். மேலும் நீண்ட நாள் அடைத்து வைக்கப்பட்ட வைக்கப்பட்ட வினிகர், சோயா சாஸ், மற்றும் சீஸ் உணவுகள் ஆகியவற்றில் அமினோ அமிலம் உள்ளது. இது நமது உடலில் ரத்த நாளங்களை கட்டுப்படுத்தி விரிவடையச் செய்வதன் மூலம் தலைவலியை தூண்டுகிறது.

    உடலில் உள்ள முக்கிய உறுப்புகளுக்கு போதுமான அளவு மெக்னீசியம் சத்து இல்லை என்றால் உங்களுக்கு தலைவலி ஏற்படலாம்.

    உடலில் நீர்ச்சத்து குறைபாடு காரணமாகவும் தலைவலி ஏற்படலாம். நாம் பகல் நேரங்களில் உடலுக்கு தேவையான தண்ணீரை அருந்தாமல் இருப்பது, இந்த தலைவலி ஏற்பட காரணமாகிறது. உடலில் நீர்சத்து இல்லாமல் இருந்தால் ரத்தம் கெட்டியாகி, இதன் விளைவாக மூளைக்கு செல்லும் ஆக்சிஜன் அளவு குறைகிறது. இதனால் மூளையில் தூண்டப்படும் ரசாயன செரடோனின் காரணமாக ஒற்றைத்தலைவலி ஏற்படுகிறது.

    உடலுக்கு தேவையான ஓய்வு கிடைக்காததன் காரணமாகவும் தலைவலி ஏற்படுகிறது. தினசரி வேலையின் காரணமாக ஹார்மோன்களின் அளவு குறைகிறது. இதனால் ரத்த நாளங்கள் சுருங்கி நீர்ச்சத்து குறையும்.

    மாதவிடாய் காலங்களில் மன அழுத்தம் மற்றும் தசைப்பிடிப்புகளுக்கு மத்தியில் இந்த தலைவலி பொதுவாக ஏற்படும் ஒரு பக்க விளைவாகும்.

    தொடர்ந்து நாற்காலியில் அமர்ந்து கணினியில் நேரத்தை செலவிடுவதால், உங்களுக்கு தலைவலி ஏற்படலாம். இதனால் உங்கள் தோள்கள் இறுக்கமாகிறது மற்றும் கண்களுக்கு ஓய்வு கிடைக்காமல் இருக்கிறது.

    சில வாசனை காரணமாகவும் தலைவலி ஏற்படுகிறது. வாசனைகள் மூக்கின் வழியாக நேரடியாக மூளைக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. அதிக வேதிப்பொருட்கள் அடங்கிய ஒரு நறுமணம் தலைவலிக்கு வழிவகுக்கிறது.

    தூக்கத்தில் உங்கள் பற்களை கடிப்பதாலும் தலைவலி ஏற்படலாம். இந்த பிரச்சினை மன அழுத்தம், மருந்து அல்லது மோசமான பல் சீரமைப்பு ஆகியவற்றால் கூட அதிகரிக்கலாம்.

    • தவறாமல் உடற்பயிற்சி செய்யுங்கள் மற்றும் உங்கள் உணவில் சிறப்பு கவனம் செலுத்துங்கள்.
    • மன அழுத்தத்திற்கான தியானம் எல்லாவற்றிலும் சிறிது நேரம் ஒதுக்கி மன அழுத்தத்தை தவிர்க்கவும்.

    மன அழுத்த ஹார்மோன்கள் பெண்களின் உடலை ஆண்களை விட வித்தியாசமாக பாதிக்கிறது. இந்த பகுதியில் அதிக ஆராய்ச்சி தேவைப்பட்டாலும், பெண்களில் உள்ள லிம்பிக் அமைப்பு ஆண்களை விட பெண்களில் ஆழமாக உள்ளது. இது ஆண்களை விட உணர்ச்சிகளை ஆழமாக உணர வைக்கிறது. அது அவர்களை நீண்ட நேரம் புண்படுத்தும் மற்றும் வலிமிகுந்த சூழ்நிலைகளை நினைவில் வைத்திருக்கவும், அவற்றை பற்றி சிந்திக்கவும் மற்றும் வலுவான எதிர்வினைகளை உருவாக்கவும் முடியும்.

    பெரும்பாலும், பெண்கள் குடும்ப பொறுப்புகளை கையாள்வதோடு, அதே நேரத்தில் வேலை செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது அவர்களை அதிகமாக உணர வைக்கும். மன அழுத்தம் காரணமாக கர்ப்பம் தரிக்க முடியாமல் போவது போன்ற சூழ்நிலைகள் அவர்களை மேலும் மன அழுத்தத்திற்கு ஆளாக்கும். இத்தகைய சூழ்நிலைகள் மன அழுத்தத்தை உருவாக்கி, நீண்ட காலத்திற்கு கார்டிசோலின் அளவை அதிகமாக வைத்திருக்கலாம், இதனால் நீண்ட காலத்திற்கு உடலை சேதப்படுத்தலாம்.

    பெண்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தை எவ்வாறு கையாள்வது?

    நீங்கள் ஒரு ஆணாக இருந்தால், உங்கள் வாழ்க்கையில் மன அழுத்தத்திற்கு ஆளாகும் பெண்களை பற்றி நீங்கள் கவலைப்படுகிறீர்கள் என்றால், அவர்களுக்கு உதவக்கூடிய சில விஷயங்கள்:

    * அவர்களுக்கு காது கொடுத்து, அவர்கள் சொல்வதைக் கேளுங்கள்

    * கேட்கும் வரை அறிவுரை வழங்காதீர்கள்

    * அவர்களின் உணர்ச்சிகளை நிராகரிக்காதீர்கள்

    * முடிந்தால் அவர்களுக்கு 'எனக்கு நேரம்' கொடுக்க சில பொறுப்புகளைப் பகிரவும் அல்லது எடுத்துக்கொள்ளவும்.

    * அவர்களின் மன அழுத்தத்தை தூண்டுவதைக் கண்டறிய அவர்களுக்கு உதவுங்கள்

    * தொழில்முறை உதவியை நாடும் யோசனையை அறிமுகப்படுத்துங்கள்

    மன அழுத்தத்திற்கான தியானம் எல்லாவற்றிலும் சிறிது நேரம் ஒதுக்கி மன அழுத்தத்தை தவிர்க்கவும். ஒரு பெண்ணாக இருந்தால் மன அழுத்தத்தில் இருக்கும் ஆண்களை அதில் இருந்து தப்பிக்க வைக்க விரும்பும் விஷயங்கள்:

    * உங்களுக்கு மன அழுத்தத்தைத் தரும் விஷயங்களின் பட்டியலை எழுத முயற்சிக்கவும், அவற்றை குறைக்க நீங்கள் என்ன செய்யலாம் என்பதை பார்க்கவும்.

    * நாளிதழை பராமரித்து, உங்கள் எண்ணங்களை எழுதுங்கள்

    * தவறாமல் உடற்பயிற்சி செய்யுங்கள் மற்றும் உங்கள் உணவில் சிறப்பு கவனம் செலுத்துங்கள்

    * சர்க்கரை உணவுகளில் இருந்து விலகி இருங்கள்

    * புகைபிடித்தல் அல்லது மது அருந்துதல் போன்ற பழக்கங்களைக் குறைத்தல்

    * ஒரு பொழுதுபோக்கை தேர்ந்தெடுங்கள்

    * தவறாமல் தியானம் செய்யுங்கள்

    * தூக்க சுகாதாரத்தை கடைபிடிக்கவும், போதுமான தூக்கம் (6 முதல் 8 மணிநேரம்) பெறுவதை உறுதிப்படுத்தவும்

    * தினசரி போதுமான சுத்தமான காற்று மற்றும் சூரிய ஒளியை பெறுங்கள்

    சில சமயங்களில், பெண்கள் எதிர்பார்ப்புகள் மற்றும் பொறுப்புகளால் சுமையாக இருக்கலாம். அவர்களை அதிகமாகவும் அழுத்தமாகவும் ஆக்குகிறது. நீங்கள் நீண்ட காலமாக மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தால், அதற்கான மூல காரணத்தை கண்டறிந்து அதற்குத் தீர்வு காண்பது நல்லது. உங்களால் அதை செய்ய முடியாவிட்டால், தொழில்முறை உதவியை நாடுங்கள்.

    நீங்கள் ஒரு நண்பராகவோ அல்லது உங்கள் வாழ்க்கையில் பெண்களை கவனித்துக் கொள்ளும் ஆணாகவோ இருந்தால், அவர்களின் பிரச்சினைகளுக்கு நீங்கள் செவிசாய்த்து, தொழில்முறை உதவியை நாட அவர்களுக்கு உதவலாம். சில நேரங்களில், மன அழுத்தத்தை ஏற்படுத்தும் விஷயங்களின் பட்டியலை உருவாக்குவது, அவசரத்தின் அடிப்படையில் முன்னுரிமை அளிப்பது மற்றும் அவற்றை கையாள்வதற்கான மூளைச்சலவை செய்யும் வழிகள் ஒரு சிறந்த செயலாக இருக்கும்,

    மேலும் விஷயங்கள் குழப்பமாகத் தோன்றும்போது பெண்கள் கட்டுப்பாட்டை உணர உதவும். பெண்கள் பல பணிச்சுமை மற்றும் பல பொறுப்புகளை கையாள்வதில் சிறந்தவர்கள், ஆனால் ஏன், நீங்கள் விரும்புவதை செய்ய தினமும் உங்களுக்காக நேரம் ஒதுக்குவது இல்லை. நீங்கள் செய்ய வேண்டிய பட்டியலில் இதற்கான நேரமும் இருக்க வேண்டும்.

    மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்வதற்கு உங்கள் முழு ஆற்றலையும் செலுத்தலாம். நீங்கள் ஒரு வளர்ச்சி மனப்பான்மையை கடைப்பிடிக்கலாம் மற்றும் வாழ்க்கை வழங்கும் அனைத்து அனுபவங்களுக்கும் உங்களை தயாராக வைத்துக் கொள்ளலாம்.

    • மாதவிடாய் முறைகேடுகளுக்கு மன அழுத்தம் பொதுவான காரணங்களில் ஒன்றாகும்.
    • நீண்ட கால மன அழுத்தம் உங்கள் உடலில் அழிவை ஏற்படுத்தும்.

    மன அழுத்தம் என்பது உங்களை பதட்டமாகவும், விரக்தியாகவும், பயமாகவும் அல்லது மகிழ்ச்சியற்றதாகவும் ஆக்கும் எந்தவொரு நிகழ்வு அல்லது சூழ்நிலைக்கும் ஒரு உணர்ச்சி அல்லது உடல் ரீதியான எதிர்வினையாக இருக்கலாம். எப்போதாவது ஏற்படும் மன அழுத்தங்கள் உங்கள் செயல்திறனை சாதகமாக பாதிக்கும். அதே வேளையில், நீண்ட கால மன அழுத்தம் உங்கள் உடலில் அழிவை ஏற்படுத்தும்.

    ஆண்களும், பெண்களும் மன அழுத்தத்தை அனுபவித்தாலும், அது இரு பாலினத்திலும் வித்தியாசமாக வெளிப்படுகிறது. மன அழுத்தம் ஆண்களை விட மிகவும் தீவிரமான வழிகளில் பெண்களை பாதிக்கும். எளிமையான வார்த்தைகளில், மன அழுத்தம் ஒரு பெண்ணை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பல்வேறு வழிகளில் அழிக்கக்கூடும்.

    பெண்களுக்கு மன அழுத்தம் எப்படி தீங்கு விளைவிக்கும்

    பெண்களுக்கு மன அழுத்தத்தின் மிக முக்கியமான விளைவு அவர்களின் உணர்ச்சி நல்வாழ்வில் உள்ளது. அவர்கள் மன அழுத்தமில்லாத நாட்களில் இருப்பதை விட இது அவர்களை எரிச்சல், மனநிலை, சோகம் அல்லது அதிக உணர்ச்சிவசப்பட வைக்கும். நீண்ட கால மன அழுத்தம் மனச்சோர்வு மற்றும் பதட்டம் போன்ற மனநல பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். குறைந்த அழுத்தச் செயல்பாடுகளைக் கூட அவர்கள் அதிகமாகக் காணலாம்.

    சிலர் போதைப்பொருள் துஷ்பிரயோகத்திற்கு திரும்பலாம், இதையொட்டி, பரவலான சுகாதார நிலைமைகளை உருவாக்கலாம். தலைவலிக்கான பொதுவான தூண்டுதல் எந்த வகையான மன அழுத்தமும் ஆகும். இது தலையில் இறுக்கத்திற்கு வழிவகுக்கும். சில நேரங்களில் இது தோள்பட்டை வலிக்கு வழிவகுக்கும் மற்றும் ஒருவரின் அன்றாட செயல்பாட்டில் தலையிடலாம்.

    ஆண்களை விட பெண்களுக்கு மன அழுத்தம் காரணமாக மாரடைப்பு ஏற்படும் அபாயம் அதிகம். மன அழுத்த ஹார்மோன் கார்டிசோல் ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் தமனிகளை சுருக்கி, போதுமான அளவு ரத்தத்தை இதயத்தை அடைவதை கடினமாக்குகிறது.

    மன அழுத்தத்தில் உள்ள பெண்கள் பீஸ்ஸாக்கள், சாக்லேட்கள் மற்றும் ஐஸ்கிரீம்கள் போன்ற விரும்பி சாப்பிடக்கூடிய உணவுகளை உண்ணலாம், இது அவர்களின் கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கும். புகைபிடித்தல் மற்றும் குடிப்பழக்கம் போன்ற பிற பழக்கங்கள் பல்வேறு இதய பிரச்சினைகள் மற்றும் மாரடைப்புகளுக்கு வழிவகுக்கும்.

    கார்டிசோல் உடலில் இன்சுலின் அளவை அதிகரிப்பதால் பசியைத் தூண்டுகிறது. இது அவர்களுக்கு சர்க்கரை, கொழுப்பு நிறைந்த உணவுகளை ஏங்க வைக்கும், இது எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கும். மன அழுத்தம், உணர்ச்சிவசப்பட்ட உணவு, உணவை தவிர்ப்பது மற்றும் நொறுக்குத் தீனிகளை அடைவது போன்ற ஆரோக்கியமற்ற உணவு பழக்கங்களையும் ஏற்படுத்தலாம்.

    மன அழுத்தத்தில் உள்ள பெண்கள் அதிக கலோரி உணவுகளை உட்கொள்ளாவிட்டாலும், கார்டிசோல் அவர்களின் வளர்சிதை மாற்றத்தை குறைக்கிறது, இதனால் அவர்கள் வழக்கத்தை விட குறைவான கலோரிகளை எரிக்கிறார்கள்.

    மாதவிடாய் முறைகேடுகளுக்கு மன அழுத்தம் மிகவும் பொதுவான காரணங்களில் ஒன்றாகும் என்று பல மகளிர் மருத்துவ நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர். கார்டிசோல் மாதவிடாய் சுழற்சியை கட்டுப்படுத்தும் ஹார்மோன்களில் தலையிடலாம் மற்றும் வழக்கத்தை விட இலகுவான, கனமான அல்லது அதிக வலியுடன் கூடிய காலங்களுக்கு வழிவகுக்கும். கார்டிசோல் அளவுகள் இயல்பு நிலைக்கு திரும்பும் வரை இது மாதவிடாய்களை சிறிது நேரம் இடைநிறுத்தலாம்.

    மாதவிடாய் நிற்கும் பெண்களுக்கு, நீண்ட காலத்திற்கு அதிக கார்டிசோல் அளவு மாற்றத்தை கடினமாக்குகிறது, இதனால் சூடான ஃப்ளாஷ்கள், தூக்கம் மற்றும் பிற அசௌகரியங்கள் ஏற்படலாம். கர்ப்பம் தரிக்க முயற்சிக்கும் பெண்கள் மன அழுத்தத்திற்கு ஆளானால் அவர்களுக்கு சிரமமாக இருக்கும்.

    நீண்ட கால மன அழுத்தம் கார்டிசோலை பாலியல் ஹார்மோன்களை அடக்கி, ஒருவருடைய பாலியல் ஆசைகளை பாதிக்கும். அவர்கள் உடலுறவில் ஈடுபட்டாலும், அவர்கள் முழுமையாக இருக்க மாட்டார்கள் மற்றும் மகிழ்ச்சியை உணர மாட்டார்கள். வழக்கமான நாட்களில் உச்சக்கட்டத்தை அடைவது பெண்களுக்கு கடினமாக இருந்தாலும், மன அழுத்தத்தால் அதை மேலும் கடினமாக்கலாம்.

    மன அழுத்தம் அமில ரிஃப்ளக்ஸ், குமட்டல், வீக்கம் மற்றும் வயிற்றுப் பிடிப்புகளை ஏற்படுத்தும். மன அழுத்தம் மிக அதிகமாக இருந்தால், அது வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கிற்கும் வழிவகுக்கும். சிலருக்கு, மன அழுத்தம் அவர்களின் பசியை கொன்று, எடையை குறைக்கும். மன அழுத்தத்தின் போது ஆரோக்கியமற்ற உணவுகளை அதிகமாக உட்கொள்வது குடல் நுண்ணுயிரியை தொந்தரவு செய்யலாம்,

    மேலும் மனநிலை மற்றும் ஆற்றல் நிலைகளை பாதிக்கும். மன அழுத்தம் பெண்களுக்கு இருக்கும் தோல் நிலைகளை மோசமாக்கும். இது முகப்பரு வெடிப்பு, கடுமையான அரிப்பு, சொறி மற்றும் படை நோய்க்கு வழிவகுக்கும். பெண்கள் நீண்ட நேரம் மன அழுத்தத்தில் இருந்தால் கடுமையான முடி உதிர்வையும் சந்திக்கின்றனர்.

    அதிக அளவு மன அழுத்தத்தை அனுபவிக்கும் பெண்கள் தூங்குவது கடினம். இது தூக்கமின்மையை ஏற்படுத்தும், இதையொட்டி, உடல் பருமன், சிறுநீரகப் பிரச்சனைகள், சர்க்கரை நோய், இதய நோய்கள், பக்கவாதம் போன்றவற்றை உண்டாக்கும். தூக்கமின்மை உள்ள பெண், மன அழுத்தத்திற்கு உள்ளாகி, அன்றாட பணிகளை செய்வதில் சிரமப்படுவார்.

    மன அழுத்த ஹார்மோன் கார்டிசோலின் அதிக அளவு ஒருவரின் நோய் எதிர்ப்பு சக்தியை பாதிக்கிறது மற்றும் ஒருவரை தொற்று மற்றும் நோய்களுக்கு ஆளாக்குகிறது. எனவே, மன அழுத்தத்தை அனுபவிக்கும் ஒரு பெண் அடிக்கடி நோய்வாய்ப்படலாம்.

    • 2 நாட்களாக சரிவர சாப்பிடாமல் மன அழுத்தமுடன் இருந்ததார்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை நவல்பூர் கிரேட் நகர் பகுதியை சேர்ந்தவர் அமுதா இவரது மகள் ராஜஸ்ரீ (வயது 23). ராஜஸ்ரீ பி.காம் படித்துவிட்டு வேலூரில் உள்ள தனியார் ஹெல்த் கேர் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தவர்.

    கடந்த 2 நாட்களாக ராஜஸ்ரீ சரிவர சாப்பிடாமல் மன அழுத்தமுடன் இருந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையில் நேற்று முன்தினம் இரவில் அமுதா காய்கறி வாங்க சந்தைக்கு சென்றுள்ளார்.

    பின்னர் அமுதா வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ராஜஸ்ரீ வீட்டின் பூஜை அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

    இது தொடர்பாக ராணிப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கூட்டத்தில் மன அழுத்தம் போக்குவது எப்படி என்பது குறித்து டாக்டர்கள் மூலம் விளக்கம் அளிக்கப்பட்டது.
    • மன அழுத்தம் வராமல் தவிர்க்க, போலீசாருக்கு வாராந்திர விடுமுறை கட்டாயம் அளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

    கோவை:

    கோவை மாநகரில் செயல்படும் அனைத்து போலீஸ் நிலையங்களிலும் ஸ்டேஷன்ஸ் ஹேப்பினெஸ் ஆபீசர் என்ற பெயரில் மகிழ்ச்சி அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    அதே போலீஸ் நிலையத்தில் பணிபுரிபவர்களாகவும், போலீசார் முதல் அதிகாரிகள் வரை அனைவரையும் பற்றியும் நன்கு அறிந்தவர்களாகவும், இந்த பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளனர். மன அழுத்த பாதிப்பு இருக்கும் போலீசாரை கண்டறிந்து, அவர்களுடன் பேசி தாங்களாகவோ, அதிகாரிகள் மூலமாகவோ பிரச்சினைக்கு தீர்வு காண்பது தான், மகிழ்ச்சி அதிகாரிகளின் பணி.

    சமீபத்திய டி.ஐ.ஜி. விஜயகுமார் தற்கொலைக்கு பிறகு போலீசார் மன அழுத்தத்துக்கு தீர்வு காண்பதற்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கும்படி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். அதன்படி போலீஸ் நிலையங்களில் பணியாற்ற உள்ள மகிழ்ச்சி அதிகாரிகள் கூட்டம் கோவை கமிஷனர் அலுவலகத்தில் நடந்தது.

    கூட்டத்தில் சட்டம் ஒழுங்கு, போக்குவரத்து, மகளிர் போலீஸ் நிலையம் ஆகியவற்றில் பணிபுரியும் 30 மகிழ்ச்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர். போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் மன அழுத்தம் போக்குவது எப்படி என்பது குறித்து டாக்டர்கள் மூலம் விளக்கம் அளிக்கப்பட்டது.

    குடும்பச்சூழல், பணிச்சுமை, உடல் நலக்குறைபாடுகளால் ஏற்படும் மன அழுத்தத்துக்கு தீர்வு காண்பது பற்றியும் டாக்டர்கள் எடுத்து கூறினர். முன்னதாக போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் பேசியதாவது:-

    மன அழுத்தம் வராமல் தவிர்க்க, போலீசாருக்கு வாராந்திர விடுமுறை கட்டாயம் அளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. வீடு அமைந்துள்ள பகுதிக்கு இடமாறுதல் வேண்டும் என்று கோரியவர்களுக்கு மாறுதல் வழங்கப்பட்டு விட்டது. ஒவ்வொரு போலீஸ் நிலையத்திலும் அவ்வப்போது குடும்பத்தினர் சந்திப்பு, நிகழ்ச்சிகள் நடத்தவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    இதுதவிர ஒவ்வொரு போலீஸ் நிலையத்திலும் மகிழ்ச்சி அதிகாரிகள் என்ற பெயரில் போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் பணியில் இருக்கும் போலீசாரின் செயல்பாடுகளை கண்காணித்து, ஏதேனும் மன அழுத்தம் பாதிப்பு இருப்பது தெரிய வந்தால் உடனடியாக செயல்படுவதற்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • மன அழுத்தம் அதிகமாகும்போது, அது தாய்க்கும் குழந்தைக்கும் உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
    • தியானம் மற்றும் சுவாசத்தில் கவனம் செலுத்துவது மன அழுத்தத்தைக் குறைக்கும்.

    கருவுற்றிருக்கும் பெண், அதிலும் குறிப்பாக முதல் முறையாக கர்ப்பமாக இருக்கும் பெண்ணிற்கு கர்ப்பம் குறித்து மன அழுத்தம் ஏற்படுவது வழக்கம். இது பலவிதமான உணர்ச்சிகளையும், கவலைகளையும் கொண்டு வரலாம். ஆரோக்கியமான கர்ப்பத்தைப் பற்றி கவலைப்படுவது ஒரு மோசமான விஷயம் அல்ல, ஏனெனில் இது புதிய சவால்களை எதிர்கொண்டு நடவடிக்கை எடுக்க மக்களைத் தள்ளும். எனவே கர்ப்ப காலத்தில் மன அழுத்தத்தை குறைப்பது எப்படி என்று பார்ப்போம்..

    கர்ப்ப காலத்தில் ஒரு பெண்ணின் உடலில் பல மாற்றங்கள் நிகழ்கின்றன. இந்த மாற்றங்கள் உடல் ரீதியாக மட்டுமல்ல, உணர்ச்சி மற்றும் மனரீதியானவை. இது மன அழுத்தத்திற்கு வழிவகுக்கிறது. எதிர்பார்ப்புள்ள தாய்மார்களையும் மன அழுத்தம் கடுமையாக பாதிக்கும்.

    கர்ப்பிணிப் பெண்கள் மன அழுத்தத்தில் இருந்தால், தாய் மற்றும் குழந்தை பல உடல்நலப் பிரச்சினைகளுக்கு ஆளாக நேரிடும். அடிப்படையில் இது உங்கள் குழந்தையை உணர்ச்சி ரீதியாக பலவீனப்படுத்துகிறது. இருப்பினும், மன அழுத்தம் அதிகமாகும்போது, அது தாய்க்கும் குழந்தைக்கும் உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும். எனவே, சுமூகமான மற்றும் ஆபத்து இல்லாத கர்ப்பத்திற்கு உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது அவசியம்.

    சீரான முறையில் சுவாசிக்க:

    சுவாச முறைகள் மன அழுத்தத்தால் கணிசமாக பாதிக்கப்படுகின்றன. இதன் பொருள் நீங்கள் குறைவாக சுவாசிக்கிறீர்கள். இது உங்கள் உடலில் ஆக்ஸிஜனின் அளவைக் குறைக்கிறது. இதனால் உங்கள் உடலில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்படுகிறது. இது உங்கள் மன அழுத்தத்தை அதிகரிக்கும். தியானம் மற்றும் சுவாசத்தில் கவனம் செலுத்துவது மன அழுத்தத்தைக் குறைக்கும். கர்ப்ப காலத்தில் சரியாக சுவாசிக்கவும் மற்றும் உட்கார்ந்து அல்லது படுத்து, கண்களை மூடி சுவாசிக்க வேண்டும். நீங்கள் கவலையாக உணரும் போதெல்லாம் குறைந்தது ஐந்து ஆழமான சுவாசங்களை எடுத்துக் கொள்ளுங்கள்.

    நிம்மதியான நித்திரை:

    கர்ப்ப காலத்தில் ஏற்படும் மன அழுத்தம் பல பிரச்சனைகளை ஏற்படுத்தும். கர்ப்பிணிப் பெண்கள் மன அழுத்தம் காரணமாக தூங்குவதில் சிரமம் மற்றும் உடல் வலி போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். மேலும் மனச்சோர்வு, எடை அதிகரிப்பு அல்லது இழப்பு, உயர் இரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகள் அதிகம். உங்களுக்கு போதுமான தூக்கம் வராவிட்டால், உங்கள் உடலும் மனமும் விரைவாக ஆற்றலை இழக்கின்றன. குறிப்பாக அழுத்தத்தில் இருக்கும்போது. ஏனெனில் அது எதிர்மறையான எண்ணங்களுக்கும் வழிவகுக்கிறது. உங்களுக்கு இரவில் தூங்குவதில் சிக்கல் இருந்தால், பகலில் சிறிது நேரம் தூங்க முயற்சிக்கவும்.

    உடற்பயிற்சி:

    மன அழுத்தத்தின் போது வெளியாகும் ஹார்மோன்கள் உங்கள் தசைகளை பதற்றம் மற்றும் சுருங்கச் செய்யும். கர்ப்ப காலத்தில் இந்த பிரச்சனையை சமாளிக்க, உடலில் உள்ள பதற்றத்தை குறைக்க, இது ஒரு சிறந்த நுட்பமாகும். நீங்கள் பதற்றமாகவோ அல்லது பதட்டமாகவோ உணர்ந்தால், உங்கள் கழுத்து, முதுகு, கைகள் மற்றும் கால்களை நீட்டி சில நிமிடங்கள் செலவிடுங்கள். உங்கள் இடது காது உங்கள் இடது தோள்பட்டைக்கு அருகில் இருக்கும்படி உங்கள் தலையைத் திருப்புங்கள். மேலும் உங்கள் கழுத்தை நீட்டவும். இந்த நிலையில் 20 வினாடிகள் இருங்கள்.

    மிளகுக்கீரை சாப்பிடவும்:

    புதினா இலைகளில் மெந்தோல் என்ற பொருள் உள்ளது. இது தசை பதற்றத்தை குறைக்கிறது. இதை குடித்தால் அழுத்தம் குறையும். புதினா வீக்கம், குமட்டல் மற்றும் வாந்தி போன்ற இரைப்பை குடல் பிரச்சனைகளை நீக்குகிறது. நீங்கள் எங்கிருந்தாலும் மன அழுத்தம் மற்றும் வயிற்று பிரச்சனைகளை குறைக்க மிளகுக்கீரை மிகவும் உதவியாக இருக்கும்.

    • பெண்கள் தங்கள் உடல்நலனில் அக்கறை செலுத்துவது இல்லை.
    • பெண்களின் பொதுவான பிரச்சினை இரும்புசத்து குறைவு ஆகும்.

    பெண்கள் ஒவ்வொரு பருவங்களுக்கு ஏற்றவாறு பொறுப்புகளும் அதிகரிப்பதால் பல பெண்கள் தங்கள் உடல்நலனில் அக்கறை செலுத்துவது இல்லை. ஒரு பெண் பூப்பு அடையும் காலம் தொடங்கி, மகப்பேறு காலம், கடைப்பூப்பு காலம் என அனைத்து நிலைகளிலும் உடல் அளவிலும், மனதளவிலும் பல மாற்றங்களை எதிர்கொள்கிறாள்.

    பெண்கள் பூப்பு எய்திய காலம் தொடங்கி அவர்களுக்கு காணப்படும் பொதுவான பிரச்சினை இரும்புசத்து குறைவு ஆகும். இச்சத்து குறைவினால் உடல் சோர்வு, தலைவலி, மூச்சுவிட சிரமம், உடல் வீக்கம், முடி உதிர்வு, முறையற்ற மாதவிடாய் போன்ற பல குறிகுணங்கள் ஏற்படும். பேரீச்சம் பழம், உலர்ந்த திராட்சை, கீரை வகைகள், கறிவேப்பிலை, நெல்லிக்காய், அத்திப்பழம், முழு உளுந்து, கருப்பட்டி, ஈரல் வகைகள் இவைகளில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது.

    மாதவிடாய் காலத்தில் ஏற்படும் ஹார்மோன்களின் மாற்றங்களினால் அதிகரித்த பசி, எதிலும் நாட்டம் இன்மை, கோபம் போன்றவை ஏற்படலாம். பெரும்பாலான பெண்கள், இத்தகைய நேரத்தில் சத்தான உணவினை தவிர்த்து பாஸ்ட்புட்களை உண்பது உடல்நலத்தினை பாதிக்கும் செயலாகும். இத்தகைய உணவுப் பழக்கவழக்கங்களினால் முறையற்ற மாதவிடாய் சுழற்சி பெரும்பாலான பெண்களில் காணப்படுகிறது. பெரும்பாலும் தைராய்டு சுரப்பியில் ஏற்படும் பிரச்சினை, சினைப்பை நீர்கட்டி, கருப்பை தசைக்கட்டி போன்றவைகளால் முறையற்ற மாதவிடாய் சுழற்சி ஏற்படலாம்.

    முறையற்ற மாதவிடாய் உள்ளவர்கள் எள்ளு மற்றும் கருஞ்சீரகத்தை இரவில் நீரில் ஊறவைத்து காலையில் அந்த நீரினைப் பருகிவரலாம். மேலும் இரும்புச்சத்து மற்றும் வைட்டமின்-சி நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளலாம். ஐந்து நாட்களுக்கு மேல் அதிகப்படியான உதிரப்போக்கு உள்ளவர்கள் துவர்ப்புச் சுவை உடைய அத்திப் பிஞ்சு, மாதுளைப் பிஞ்சு, மாதுளை தோல் கஷாயம், வாழைப்பூ போன்றவற்றை உணவில் சேர்த்து வரலாம்.

    கர்ப்பப்பை வாயில் சதை வளர்ச்சி இருந்தால் ஒரே மாதத்தில் இரண்டு முறைகூட மாதவிடாய் ஏற்படும். உடலில் கொழுப்பு சேர்வதால் சுரக்கும் அதிகப்படியான ஈஸ்ட்ரோஜென், கர்ப்பப்பை வாயில் சதை வளர்வதைத் தூண்டும். ஒப்பீட்டு அளவில் இந்தப் பிரச்னை மிகச் சிலருக்கே ஏற்படுகிறது.

    ×