search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சென்னையில் 32 சதவீத மாணவர்களுக்கு மன அழுத்தம்
    X

    சென்னையில் 32 சதவீத மாணவர்களுக்கு மன அழுத்தம்

    • இந்தியாவில் பாதிக்கும் மேற்பட்ட இளைஞர்கள் மனநல பிரச்சனைகளுக்கு சிகிச்சை பெறுவதில்லை.
    • தென் மாவட்டங்களில் உள்ள இளைஞர்கள் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள்.

    சென்னை:

    சென்னையில் தற்போது மாணவர்கள் மத்தியில் மன அழுத்தம் அதிகரித்து வருவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

    மனநல பராமரிப்பு மற்றும் மறுவாழ்வு சேவைகளை வழங்கும் தன்னார்வ அமைப்பு ஒன்று நடத்திய ஆய்வின்படி 32 சதவீத பள்ளி-கல்லூரி மாணவர்கள் கடுமையாக மன அழுத்தத்துக்கு ஆளாகியிருப்பது தெரிய வந்தது.

    30 சதவீதம் மாணவர்கள் எதிர்காலம் பற்றிய கவலைக்கு உள்ளாகியுள்ளனர். சில மாணவர்கள் தற்கொலை எண்ணம் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

    மாணவர்களின் மன அழுத்தம் மற்றும் பதற்றத்தை கண்டறிவதற்காக 15 ஆயிரம் மாணவர்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இதுகுறித்து மனநல மருத்துவர்கள் கூறியதாவது:-

    32 சதவீத மாணவர்கள் மன அழுத்தத்துக்கு ஆளாகி இருந்தாலும் அவர்களில் 5 சதவீதத்துக்கு குறைவானவர்கள் மட்டுமே மனநல மருத்துவ உதவியை நாடுகிறார்கள். மற்றவர்கள் மருத்துவர்களின் உதவியை புறக்கணிப்பது பெரிய ஆபத்தாக பார்க்கப்படுகிறது.

    இந்த மாணவர்களுக்கு எப்படி மனநல மருத்துவர்களின் உதவியை பெற வைப்பது என்பதுதான் மிகப்பெரிய கேள்வியாக உள்ளது.

    இந்தியாவில் பாதிக்கும் மேற்பட்ட இளைஞர்கள் மனநல பிரச்சனைகளுக்கு சிகிச்சை பெறுவதில்லை. அதனால் சிலர் வன்முறையை கையில் எடுக்கிறார்கள். சிலர் போதை பொருளுக்கு அடிமையாகிறார்கள். சிலருக்கு தற்கொலை எண்ணம் அதிகரிக்கிறது.

    குறிப்பாக தென் மாவட்டங்களில் உள்ள இளைஞர்கள் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள். இந்தியாவில் ஏற்படும் மரணங்களில் தற்கொலை விகிதம் கடந்த 2019-ம் ஆண்டு 9.9 சதவீதமாக இருந்தது. அது 2022-ம் ஆண்டு 12.4 சதவீதமாக அதிகரித்துள்ளது.

    இதற்கு முன்பு சாலை விபத்துக்களாலேயே அதிக மரணம் ஏற்பட்டது. தற்போது தற்கொலையால் அதிக இறப்புகள் ஏற்படுகின்றன.

    மாணவர்களிடம் ஏற்படும் மன அழுத்தம், மனக்கலவையின் ஆரம்ப அறிகுறிகளை கண்டறிய ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். உதாரணமாக, ஒரு மாணவர் தூங்குவதிலும், சாப்பிடுவதிலும் பிரச்சனை இருப்பதை கண்டறிந்தாலோ, நட்பு வட்டாரங்களில் இருந்து விலகி தனியாக இருந்தாலோ பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் உடனடியாக தலையிட வேண்டும். அடுத்த கட்டமாக அந்த மாணவர்களை மனநல ஆலோசகர்களிடம் அழைத்து சென்று ஆலோசனை பெற வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    Next Story
    ×