search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போலீஸ் நிலையம்"

    • பணியில் இருந்த ஏட்டுக்கும் கொலைமிரட்டல் விடுத்ததாக புகார்
    • சதீஷ் அடிக்கடி குடித்து விட்டு வந்து தன்னிடம் தகராறு செய்வதாக மனைவி தேவி தெரிவித்தார்

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் வடி வீஸ்வ ரன் தோப்பு வணிகர் தெரு வைச் சேர்ந்தவர் சதீஷ். இவரது மனைவி தேவி (வயது 22). குடி பழக்கத்திற்கு அடி மையான சதீஷ், அடி க்கடி தகராறு செய்து மனை வியை தாக்கியதாக கூறப்ப டுகிறது.நேற்று வடசேரி மகளிர் போலீஸ் நிலையம் முன்பு சதீஷ், தனது மனைவி தேவியின் தலைமுடியை பிடித்து இழுந்து வந்ததோடு தாக்குதலிலும் ஈடுபட் டுள்ளார். இதனை மகளிர் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வரும் ரோஸ்பின் ஜெபராணி, கண்டித்துள்ளார்.

    இதனால் ஆத்திரமடைந்த சதீஷ், மீண்டும் மனைவியை தாக்கியதோடு, போலீஸ் ஏட்டு ரோஸ்பின் ஜெப ராணியை அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்த தாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஏட்டு ரோஸ் பின் ஜெபராணி, போலீ சில் புகார் கொடுத்தார்.

    அதில், தான் பணியில் இருந்த போது, சதீஷ் அங்கு தனது மனைவி தேவியின் தலைமுடியை பிடித்து இழுத்து வந்தார். இதனை நான் கேட்ட போது, கணவர் சதீஷ் அடிக்கடி குடித்து விட்டு வந்து தன்னிடம் தகராறு செய்வதாக மனைவி தேவி தெரிவித்தார். அப்போது சதீஷ் திடீரென மீண்டும் தேவியை தாக்கினார். இதனை நான் கண்டித்த போது, அவதூறாக பேசியதோடு, என்னை பணி செய்யவிடாமல் தடுத்து கொலைமிரட்டலும் விடுத்தார் என குறிப்பிட்டுள்ளார்.

    இது தொடர்பாக சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜெசிமேனகா, குமார் ஆகியோர் விசாரணை நடத்தி சதீஷ் மீது வழக்குப் பதிவு செய்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. மகளிர் போலீஸ் நிலையம் முன்பு மனைவியை தாக்கிய கணவர், போலீஸ் ஏட்டுக்கும் கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • போலீஸ் இன்ஸ்பெக்டரை விட போலீஸ் மோப்ப நாய்க்கு வாடகை அதிகமாக இருக்கிறது.
    • அரசின் நிதி நெருக்கடியை சரிசெய்வதற்கான திட்டம் என்று கருத்து நிலவியது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் போலீஸ் நிலையங்களை வாடகைக்கு எடுக்கலாம் என்று கேரள காவல்துறை தெரிவித்துள்ளது. போலீஸ் நிலையத்துடன் இன்ஸ்பெக்டர் மோப்பநாய், வயர்லெஸ் கருவிகள் உள்ளிட்டவைகளையும் கட்டணம் செலுத்தி வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம் என்று கூறியுள்ளது.

    மேலும் ஒவ்வொரு வசதிக்கான கட்டண பட்டியலையும் வெளியிட்டிருக்கிறது. நாள் ஒன்றுக்கு போலீஸ் நிலையத்திற்கு ரூ12 ஆயிரம், வயர்லெஸ் கருவிகளுக்கு ரூ12ஆயிரத்து 130, மோப்ப நாய்க்கு ரூ7ஆயிரத்து 280, போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு ரூ3 ஆயிரத்து 35 முதல் ரூ3ஆயிரத்து 340 வரை என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    மொத்தமாக ஒரு போலீஸ் நிலையம், ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர், வயர்லெஸ் கருவிகள், மோப்பநாய் என அனைத்தும் சேர்த்து ரூ34 ஆயிரத்து 750 கட்டணமாக இருக்கிறது. இன்ஸ்பெக்டருக்கு பதிலாக சிவில் போலீஸ அதிகாரிக்கான கட்டணம் ரூ610 ஆகும்.

    காவல்துறை வெளியிட்டுள்ள இந்த பட்டிலின்படி, போலீஸ் இன்ஸ்பெக்டரை விட போலீஸ் மோப்ப நாய்க்கு வாடகை அதிகமாக இருக்கிறது. ஆனால் அதற்கான காரணம் தெளிவாக கூறப்படவில்லை.

    காவல்துறையின் இந்த முடிவுக்கு பலர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். அரசு அதிகாரிகள் சிலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள்.

    அரசின் நிதி நெருக்கடியை சரிசெய்வதற்கான திட்டம் என்று கருத்து நிலவியது. ஆனால் இது நிதிநிலையை உயர்த்துவதற்கான திட்டம் இல்லை என்றும், இது ஏற்கனவே உள்ள பழைய திட்டம் எனவும், புதிய கட்டணங்களுடன் தற்போது வெளிவந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    • பாட்டிலில் இருந்து மண்எண்ணைய்யை தனது உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண்டார்.
    • சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    கும்பகோணம்:

    கும்பகோணம் செக்காங்க ண்ணி பகுதியைச் சேர்ந்தவர் ஜான்பென்னி(வயது 49). ஆட்டோ டிரைவர். இவருடைய மகன் பிரவீன்கு மார். இவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து கடந்த மாதம்(ஆகஸ்டு) 11-ந் தேதி வெளியே வந்தார்.

    இந்த நிலையில் கும்பகோணம் மேற்கு போலீஸ் நிலையத்தில் செல்போன் வழிப்பறி உள்ளிட்ட குற்ற சம்பவங்களில் தொடர்பு இருப்பதாக கூறி பிரவீன்குமார் உள்ளிட்ட 5 பேரை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக போலீஸ் நிலையத்தில் வைத்திருந்தனர்.

    தனது மகன் கைது செய்யப்பட்டதை அறிந்த ஜான் பென்னி கும்பகோணம் மேற்கு போலீஸ் நிலையத்திற்கு வந்தார். அப்போது அங்கிருந்த போலீசாரிடம் இதுகுறித்து கேட்டுள்ளார். இதில் பிரவீன் குமாருக்கு பல்வேறு வழக்குகளில் தொடர்பு இருப்பதாகவும், அதனால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்து ள்ளனர். இதனால் மனம் உடைந்த ஜான் பென்னி தனது மகன் மீது பொய் வழக்கு போட்டுள்ளதாக கூறி போலீஸ் நிலையம் முன்பு தான் மறைத்து வைத்திருந்த பாட்டிலில் இருந்து மண்எண்ணைய்யை தனது உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண்டார்.

    இதனைக கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் ஜான்பென்னியை மீட்டு சிகிச்சைக்காக கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி ஜான் பென்னி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் கும்பகோணம் மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பொதுமக்களின் வசதிக்காக நடமாடும் போலீஸ் நிலையம் வசதியும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
    • நடமாடும் போலீஸ் நிலையம், ஜி-20 மாநாடு முடிவடைந்தபிறகும் செயல்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    புதுடெல்லி:

    ஜி-20 மாநாடு டெல்லி பிரகதி மைதானத்தில் நாளையும் (சனிக்கிழமை), நாளை மறுநாளும் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. இந்நிலையில் பொதுமக்களின் வசதிக்காக நடமாடும் போலீஸ் நிலையம் வசதியும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

    இதற்காக ஒரு வேன், போலீஸ் நிலைய வடிவமைப்பில் மாற்றப்பட்டு உள்ளது. இதில் 5 பேர் உட்காருவதற்கு வசதி செய்யப்பட்டு உள்ளது. ஒரு இன்ஸ்பெக்டர் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர், ஏட்டு மற்றும் போலீசாருடன் சாதாரண போலீஸ் நிலையம் போல இது செயல்படும். இதில் இன்டர்நெட் வசதி மற்றும் மாநாட்டின் முக்கிய செய்திகளை பொதுமக்களுக்கு தெரிவிக்கும் விதமான வசதிகளும் செய்யப்பட்டு உள்ளன. 24 மணிநேரமும் செயல்படும் இது, எங்காவது அவசர நிலை ஏற்பட்டால் அங்கு உடனடியாக இந்த போலீஸ் நிலையம் சென்றடையும். இந்த நடமாடும் போலீஸ் நிலையம், ஜி-20 மாநாடு முடிவடைந்தபிறகும் செயல்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    • அசோக்குமாரை, போலீஸ் நிலையம் அழைத்து வந்தனர்.
    • மீண்டும் மீண்டும் தனது கைகளை கிழித்துக் கொண்டார்.

    கடலூர்:

    காடாம்புலியூர் பேர்பெரியான்குப்பம் கந்தன் தெருவைச் சேர்ந்த பெருமாள் மகன் அசோக்குமார் (வயது 23) ரவுடி. அப்பகுதியில் நடைபெற்ற திருட்டு குறித்து சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்த அசோக்குமாரை, போலீஸ் நிலையம் அழைத்து வந்தனர். அப்போது போலீசா ரிடம் வாக்குவாதம் செய்த அசோக்குமார், தான் வைத்திருந்த பிளேடால் கையை கிழித்து க்கொண்டார். சந்தேகத்தின் பேரில் என்னை கைது செய்ய துடிக்கும் போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸ் நிலையம் முன்பு நின்று கூச்சலிட்டார். மேலும், பிளேடால் மீண்டும் மீண்டும் தனது கைகளை கிழித்துக் கொண்டார். இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், 108 ஆம்புலன்ஸ் மூலம் பண்ருட்டி மருத்து வமனைக்கு அழைத்து சென்றனர். சிகிச்சைக்கு பின் அசோக்கு மாரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர்கள், ஏட்டு மற்றும் காவலர்கள் என 20-க்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றி வருகின்றனர்.
    • போலீசார் 2 செல்போன்களையும் திருடி சென்ற நபர்கள் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நெல்லை:

    நெல்லை டவுன் மேல ரத வீதியில் கீழ் புறத்தில் டவுன் போலீஸ் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர்கள், ஏட்டு மற்றும் காவலர்கள் என 20-க்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றி வருகின்றனர்.

    நேற்று இரவு பணியில் இருந்த போலீசார் நள்ளிரவு போலீஸ் நிலைய அறையில் அமர்ந்து சற்று ஓய்வெடுத்த நிலையில் இன்று அதிகாலை 2 மணி அளவில் போலீஸ் நிலைய பயன்பாட்டுக்கு வழங்கப்பட்ட செல்போன் திடீரென மாயமானது. அதேபோல் அங்கு பணியாற்றும் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவரின் செல்போனையும் காணவில்லை.

    இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் காணாமல் போன 2 செல்போன்களையும் வேறு அறைகளில் கிடைக்கிறதா என்று தேடிப்பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் செல்போன்கள் கிடைக்கவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் 2 செல்போன்களையும் மர்ம நபர்கள் யாரேனும் போலீஸ் நிலையத்திற்குள் புகுந்து தூக்கிச் சென்று இருக்கலாம் என்று சந்தேகம் அடைந்தனர். உடனடியாக கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் வந்து ஆய்வு செய்தனர். அதனை தொடர்ந்து இந்த தகவல் உயர் அதிகாரிகளுக்கும் தெரிவிக்கப்பட்டது.

    போலீசார் 2 செல்போன்களையும் திருடி சென்ற நபர்கள் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக போலீஸ் நிலையம் மற்றும் ரத வீதிகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களையும் ஆய்வு செய்து வருகின்றனர்.

    முதல் கட்ட விசாரணையில் நேற்று டவுன் ரத வீதியில் வாகன சோதனையில் டவுன் போலீசார் ஈடுபட்டிருந்த போது ஒரு நபர் மது போதையில் வாகனம் ஓட்டி வந்ததாகவும், அந்த வாகன ஓட்டி மீது சம்பந்தப்பட்ட சப்-இன்ஸ்பெக்டர் வழக்குப்பதிவு செய்து அபராதம் விதித்ததும் தெரிய வந்தது. இதனால் ஆத்திரமடைந்து அந்த நபர் போலீஸ் நிலையத்திற்குள் புகுந்து செல்போனை திருடி சென்றிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • சில நேரங்களில் மனிதர்களை தாக்கும் சம்பவங்களும் நடந்து வருகிறது.
    • கரடி கூடலூர் தாசில்தார் அலுவலகம் வழியாக கூடலூா் நகரில் உள்ள போலீஸ் நிலைய வளாகத்துக்குள் புகுந்தது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் அதிகமான வனப்பகுதிகள் உள்ளன. இந்த வனப்பகுதிகளில் யானை, கரடி, சிறுத்தை, புலி உள்பட பல்வேறு வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன.

    இந்த விலங்குகள் அவ்வப்போது தண்ணீர், உணவு தேடி வனத்தை விட்டு வெளியேறி ஊருக்குள் நுழைந்து வருகிறது.

    அவ்வாறு வரும் வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிகளில் சுற்றி திரிவதுடன், அங்குள்ள பயிர்களையும் சேதப்படுத்தி வருகிறது. அதோடு, சில நேரங்களில் மனிதர்களை தாக்கும் சம்பவங்களும் நடந்து வருகிறது.

    இந்த நிலையில் கூடலூர் பகுதியை யொட்டிவனத் தில் இருந்து சம்பவத்தன்று இரவு கரடி ஒன்று வனத்தை விட்டு வெளியேறியது.

    அந்த கரடி கூடலூர் தாசில்தார் அலுவலகம் வழியாக கூடலூா் நகரில் உள்ள போலீஸ் நிலைய வளாகத்துக்குள் புகுந்தது.

    அங்கு அந்த கரடி வெகு நேரமாக சுற்றித் திரிந்துள்ளது. பின்னர் அங்கிருந்து சென்றுவிட்டது. இந்த காட்சிகள் அங்குள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி இருந்தது.

    நகரின் மையப்பகுதியிலுள்ள போலீஸ் நிலைய வளாகத்துக்குள் கரடி நுழைந்திருப்பது அனைவரையும் அதிா்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

    • பெண்ணின் தாயார் பொள்ளாச்சி போலீஸ் நிலையத்தில் மகளை காணவில்லை என புகார் அளித்துள்ளார்.
    • பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பெண்ணை அழைத்து செல்வதாக கூறினார்கள்.

    அணைக்கட்டு:

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி நேதாஜி நகர், அசோக் தெரு சேர்ந்த கந்தசாமி என்பவரின் மகள் நாகஜோதி (வயது 22) இளம்பெண் வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் வணிக தெருவை சேர்ந்த முருகன் என்பவரின் மகன் சுரேஷ் (வயது 22) என்பவரை காதலித்து வந்தனர்.

    கடந்த 26-ந் தேதி இருவரும் வீட்டை விட்டு வெளியேறி வேலூர் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள செல்லியம்மன் கோவிலில் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

    இதனையடுத்து பெண்ணின் தாயார் பொள்ளாச்சி போலீஸ் நிலையத்தில் மகளை காணவில்லை என புகார் அளித்துள்ளார். இதனையடுத்து விசாரணையை மேற்கொண்ட போலீசார் அவர்களை தேடி ஒடுகத்தூர் பகுதிக்கு வந்திருந்தனர். இதையடுத்து இளம் ஜோடியான நாகஜோதி மற்றும் சுரேஷ் வேப்பங்குப்பம் போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தனர்.

    பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பெண்ணை அழைத்து செல்வதாக கூறினார்கள். சுரேஷை விட்டு நாகஜோதி பிரிய மனமில்லாமல் எனக்கு சுரேஷ் தான் வேணும் என்று போலீஸ் நிலையத்தில் கதறி அழுதார்.

    இதன் பின் பெண்ணின் உறவினர்கள் நாகஜோதி வேண்டாம் என கூறி இங்கேயை விட்டுவிட்டு பொள்ளாச்சிக்கு சென்றனர்.

    வேப்பங்குப்பம் போலீசார் இருவரிடமும் கடிதம் வாங்கிக்கொண்டு வழி அனுப்பி வைத்தனர்.

    • இன்ஸ்பெக்டர் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர், போலீசார் இணைந்து சுத்தம் செய்து சுகாதாரமாக பேணி காத்து வருகின்றனர்.
    • இந்த செயலை காவலர்கள் சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம் உட்கோட்டத்தில் மேட்டுப்பாளையம், சிறுமுகை, காரமடை, அன்னூர், பில்லூர் ஆகிய 5 காவல் நிலையங்கள் உள்ளது.

    இதில் மேட்டுப்பாளையம் போலீஸ் நிலையம் மேட்டுப்பாளையம் நகரின் மத்தியில் உள்ளது. சுற்றுவட்டாரத்தில் உள்ள பொதுமக்கள் ஏதாவது புகார் கொடுக்க வேண்டும் என்றால் இங்கு தான் வருவார்கள்.

    இந்த போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக கடந்த ஓராண்டுக்கு முன்பு நவநீதகிருஷ்ணன் என்பவர் பொறுப்பேற்றுக் கொண்டார்.

    அவர் பொறுப்பேற்ற நாளில் இருந்து சுத்தம் மற்றும் சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். தான் மற்றும் தன்னை சுற்றி இருப்பவர்கள் எப்போதும் சுத்தம், சுகாதாரத்துடன் இருக்கவே விரும்புகிறார்.

    இவர் இங்கு வந்ததில் இருந்து போலீஸ் நிலையத்தை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்துள்ளார்.

    அதன்படி தினமும் காலையில் காவலர்களின் ரோல் கால் முடிந்தவுடன் காவலர்கள் குடியிருப்பு பகுதி மற்றும் போலீஸ் நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் இன்ஸ்பெக்டர் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர், போலீசார் இணைந்து சுத்தம் செய்து சுகாதாரமாக பேணி காத்து வருகின்றனர்.

    மேலும் போலீஸ் நிலையம் சுற்றியுள்ள பகுதிகளில் விழிப்புணர்வு ஓவியங்கள், போலீஸ் நிலையத்தை பூங்கா போல் அமைத்து உள்ளனர்.

    புகார் அளிக்க வரும் பொது மக்களுக்கு அமர்வதற்கு இருக்கை, மேலும் காவலர்கள் குடியிருப்பில் உள்ள குழந்தைகள் விளையாடுவதற்காக மைதானம் ஆகியவையும் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டு ள்ளது.

    இவருடைய இந்த செயலை காவலர்கள் சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

    • போலீஸ் நிலையத்தில் பராமரிக்கப்படும் 38 பதிவேடுகள் குறித்து ஆய்வு செய்தார்.
    • கள்ள சந்தையில் மது விற்பனையை கட்டுக்குள் கொண்டு வர தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கினார்.

    அரூர்,

    தருமபுரி மாவட்டம், அரூர் உட்கோட்டத்தில் அரூர் கோட்டப்பட்டி, மொரப்பூர், கம்பைநல்லூர், பள்ளிப்பட்டி, கோபிநாதம்பட்டி, பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி, கடத்தூர், மொரப்பூர் உள்ளிட்ட இடங்களில் போலீஸ் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது.

    இந்நிலையில் அரூர் போலீஸ் நிலையத்தில் தலைமை காவல் துறை தலைவர் கே.ஜோஷி நிர்மல் குமார் , ஆய்வு மேற்கொண்டார்.

    போலீஸ் நிலையத்தில் பராமரிக்கப்படும் 38 பதிவேடுகள் குறித்து ஆய்வு செய்த பின்னர் நிலுவையில் உள்ள வழக்குகளின் தன்மை குறித்தும், அரூர் இன்ஸ்பெக்டர் பாஸ்கர பாபுவிடம் கேட்டறிந்தார்.

    அதன்பிறகு அரூர் கோட்டத்தில் கள்ளச்சாராயம் தடுப்பு மற்றும் கள்ள சந்தையில் மது பாட்டில்கள் விற்பனையை கட்டுக்குள் கொண்டுவர தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கினார்.

    அரூர் போலீஸ் நிலையத்திற்கு புகார் கொடுக்க வரும் வாதி, பிரதிவாதிகளிடம் புகார்களை பெற்றுக்கொண்டு சரியான முறையில் அவர்களுக்கு உரிய மரியாதைகள் கொடுத்து முறையான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

    ஆய்வின்போது போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசுபாதம், அரூர் (பொறுப்பு) காவல் துணை கண்காணிப்பாளர் நாகலிங்கம் தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் முருகன் உடன் இருந்தனர்.

    • போலீஸ் நிலையத்தில் பராமரிக்கப்படும் பதிவேடுகளை போலீஸ் சூப்பிரண்டு சாம்சன் ஆய்வு செய்தார்.
    • நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்கவும் போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டது.

    கடையநல்லூர்:

    கடையநல்லூர் அருகே உள்ள சொக்கம்பட்டி போலீஸ் நிலையத்தில் தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சன் 'திடீர்' ஆய்வு நடத்தினார். அப்போது போலீஸ் நிலையத்தில் பராமரிக்கப்படும் பதிவேடுகள், கைதிகள் அறை, கணினி அறை, வழக்குகளில் உள்ள இருசக்கர வாக னங்கள் உள்ளிட்டவைகளை ஆய்வு செய்தார்.

    மேலும் போலீஸ் நிலையத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்கவும் போலீசாருக்கு அறிவுறுத்தினார். அப்போது சப்-இன்ஸ்பெக்டர் உடையார் சாமி, தலைமை காவலர்கள் உள்பட போலீ சார் உடனிருந்தனர்.

    • பறிமுதல் செய்யப்பட்ட மண்எண்ணை உணவு பிரிவு தடுப்பு போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.
    • வேறு யாருக்காவது தொடர்பு உண்டா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்ட உணவுப் பிரிவு தடுப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பேபி இசக்கி பிரகதாம்பாள் தலைமை யிலான போலீசார் மண வாளக்குறிச்சி வள்ளியாற்று பாலத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக சந்தேகப்படும்படியாக வந்த மினி டெம்போ ஒன்றை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது டிரைவர் முன்னுக்கு பின் முரணான தகவலை தெரிவித்தார்.

    போலீசார் வண்டியை சோதனை செய்தபோது அதில் எந்த ஒரு ஆவணமும் இன்றி மண்எண்ணை கடத்தி சென்றது தெரிய வந்தது. இதையடுத்து கேன்களில் இருந்த 2000 லிட்டர் மண்எண்ணையை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    பிடிபட்ட டிரைவரிடம் விசாரணை நடத்தியபோது அவர் தக்கலை பகுதியை சேர்ந்த ஜெகன் ராஜ் (வயது 27) என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட மண்எண்ணை உணவு பிரிவு தடுப்பு போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.

    கைது செய்யப்பட்ட ஜெகன்ராஜிடம் போலீசார் நடத்திய விசாரணையில் மண்எண்ணையை முட்டத்திலிருந்து கொட்டில்பாட்டிற்கு கொண்டு செல்வதாக தெரிவித்தார். இதில் வேறு யாருக்காவது தொடர்பு உண்டா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில் கொட்டில்பாட்டை சேர்ந்த கண்ணன் என்பவருக்கு மண்எண்ணை கடத்தலில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. போலீசார் கண்ணன் மீதும் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    ×