search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சுவர் ஓவியங்களுடன் மக்களை கவரும் மேட்டுப்பாளையம் போலீஸ் நிலையம்
    X

    சுவர் ஓவியங்களுடன் மக்களை கவரும் மேட்டுப்பாளையம் போலீஸ் நிலையம்

    • இன்ஸ்பெக்டர் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர், போலீசார் இணைந்து சுத்தம் செய்து சுகாதாரமாக பேணி காத்து வருகின்றனர்.
    • இந்த செயலை காவலர்கள் சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம் உட்கோட்டத்தில் மேட்டுப்பாளையம், சிறுமுகை, காரமடை, அன்னூர், பில்லூர் ஆகிய 5 காவல் நிலையங்கள் உள்ளது.

    இதில் மேட்டுப்பாளையம் போலீஸ் நிலையம் மேட்டுப்பாளையம் நகரின் மத்தியில் உள்ளது. சுற்றுவட்டாரத்தில் உள்ள பொதுமக்கள் ஏதாவது புகார் கொடுக்க வேண்டும் என்றால் இங்கு தான் வருவார்கள்.

    இந்த போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக கடந்த ஓராண்டுக்கு முன்பு நவநீதகிருஷ்ணன் என்பவர் பொறுப்பேற்றுக் கொண்டார்.

    அவர் பொறுப்பேற்ற நாளில் இருந்து சுத்தம் மற்றும் சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். தான் மற்றும் தன்னை சுற்றி இருப்பவர்கள் எப்போதும் சுத்தம், சுகாதாரத்துடன் இருக்கவே விரும்புகிறார்.

    இவர் இங்கு வந்ததில் இருந்து போலீஸ் நிலையத்தை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்துள்ளார்.

    அதன்படி தினமும் காலையில் காவலர்களின் ரோல் கால் முடிந்தவுடன் காவலர்கள் குடியிருப்பு பகுதி மற்றும் போலீஸ் நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் இன்ஸ்பெக்டர் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர், போலீசார் இணைந்து சுத்தம் செய்து சுகாதாரமாக பேணி காத்து வருகின்றனர்.

    மேலும் போலீஸ் நிலையம் சுற்றியுள்ள பகுதிகளில் விழிப்புணர்வு ஓவியங்கள், போலீஸ் நிலையத்தை பூங்கா போல் அமைத்து உள்ளனர்.

    புகார் அளிக்க வரும் பொது மக்களுக்கு அமர்வதற்கு இருக்கை, மேலும் காவலர்கள் குடியிருப்பில் உள்ள குழந்தைகள் விளையாடுவதற்காக மைதானம் ஆகியவையும் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டு ள்ளது.

    இவருடைய இந்த செயலை காவலர்கள் சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

    Next Story
    ×