search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கும்பகோணம் போலீஸ் நிலையம் முன்பு தீக்குளித்த ஆட்டோ டிரைவர் சாவு
    X

    கும்பகோணம் போலீஸ் நிலையம் முன்பு தீக்குளித்த ஆட்டோ டிரைவர் சாவு

    • பாட்டிலில் இருந்து மண்எண்ணைய்யை தனது உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண்டார்.
    • சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    கும்பகோணம்:

    கும்பகோணம் செக்காங்க ண்ணி பகுதியைச் சேர்ந்தவர் ஜான்பென்னி(வயது 49). ஆட்டோ டிரைவர். இவருடைய மகன் பிரவீன்கு மார். இவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து கடந்த மாதம்(ஆகஸ்டு) 11-ந் தேதி வெளியே வந்தார்.

    இந்த நிலையில் கும்பகோணம் மேற்கு போலீஸ் நிலையத்தில் செல்போன் வழிப்பறி உள்ளிட்ட குற்ற சம்பவங்களில் தொடர்பு இருப்பதாக கூறி பிரவீன்குமார் உள்ளிட்ட 5 பேரை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக போலீஸ் நிலையத்தில் வைத்திருந்தனர்.

    தனது மகன் கைது செய்யப்பட்டதை அறிந்த ஜான் பென்னி கும்பகோணம் மேற்கு போலீஸ் நிலையத்திற்கு வந்தார். அப்போது அங்கிருந்த போலீசாரிடம் இதுகுறித்து கேட்டுள்ளார். இதில் பிரவீன் குமாருக்கு பல்வேறு வழக்குகளில் தொடர்பு இருப்பதாகவும், அதனால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்து ள்ளனர். இதனால் மனம் உடைந்த ஜான் பென்னி தனது மகன் மீது பொய் வழக்கு போட்டுள்ளதாக கூறி போலீஸ் நிலையம் முன்பு தான் மறைத்து வைத்திருந்த பாட்டிலில் இருந்து மண்எண்ணைய்யை தனது உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண்டார்.

    இதனைக கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் ஜான்பென்னியை மீட்டு சிகிச்சைக்காக கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி ஜான் பென்னி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் கும்பகோணம் மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×