search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போலீஸ் கமிஷனர்"

    • மதுரையில் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக 100 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர்.
    • போலீஸ் கமிஷனர் செந்தில்குமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் ஆகியோர் பாது காப்பு பணிகளில் மும்முரம் காட்டி வருகின்றனர்.

    மதுரை

    ஆங்கில புத்தாண்டுக்கு 13 நாட்களே உள்ளன. இதையொட்டி மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் ஆகியோர் பாது காப்பு பணிகளில் மும்முரம் காட்டி வருகின்றனர்.

    ஆங்கில புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு பழைய குற்றவாளிகள் மீண்டும் குற்ற சம்பவங்க ளில் ஈடுபட திட்டமிட்டுள்ளதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது.

    மதுரை மாவட்டத்தில் கொலை, கொள்ளை, வழிப்பறியில் தொடர்புடைய சுமார் 1000 பேர் மீது வழக்கு நிலுவையில் உள்ளது. அவர்கள் ஜாமீனில் விடு தலை செய்யப்பட்டுள்ள னர். அவர்கள் மீண்டும் குற்ற சம்பவங்களில் ஈடுபடு கின்றனரா? என்பதை போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

    மதுரை மாவட்டத்தில் ஆங்கில புத்தாண்டு தினத்தில் குற்ற சம்பவங்க ளில் மீண்டும் ஈடுபட தயா ராகி வரும் ரவுடிகளில் பலரை கைது செய்ய போலீசார் முடிவு செய்த னர்.

    இதற்கான பணி கடந்த ஒரு மாதமாக தொடங்கி நடந்து வருகிறது. மதுரை மாவட்டம் ஒத்தக்கடை, கருப்பாயூரணி, வாடிப்பட்டி, திருமங்கலம், டி.கல்லுப்பட்டி, மாநகரில் தல்லாகுளம், செல்லூர், தெப்பக்குளம் உள்பட பல்வேறு போலீஸ் நிலை யங்களில் இருந்து சுமார் 100 ரவுடிகள் இதுவரை கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இவர்கள் மீது கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்கு கள் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    இதுதவிர தப்பி ஓடிய மேலும் பலரை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

    • போலீசாரும் சமூகத்தின் ஒரு பகுதியினரே. சமூகத்தின் குறைபாடுகள், குணாதிசயங்கள் அனைத்தும் போலீ சாரிடமும் இருக்கவே செய்யும்.
    • போலீசாரை மட்டும் தனியாக பிரித்துப் பார்த்து அவர்களை மட்டும் குறை சொல்வது சரியல்ல.

    கோவை

    போலீஸ் குடும்பத்தைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கும் விழா கோவையில் நடந்தது. இதில் போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசினார்.

    அவர் கூறியதாவது:-

    போலீசாரும் சமூகத்தின் ஒரு பகுதியினரே. சமூகத்தின் குறைபாடுகள், குணாதிச யங்கள் அனைத்தும் போலீ சாரிடமும் இருக்கவே செய்யும். அது தான் இயற்கை.

    அதில் போலீசாரை மட்டும் தனியாக பிரித்துப் பார்த்து அவர்களை மட்டும் குறை சொல்வது சரியல்ல. ஒரு குழந்தையிடம் இருக்கும் எதிர்மறையான விஷயங்களையே மீண்டும், மீண்டும் சுட்டிக்காட்டி சொல்லி கொண்டிருந்தால் அந்த குழந்தை உளவியல் ரீதியாக பாதிக்கப்படும். செயல் திறனும் நிச்சயம் பாதிக்கும்.

    நடிகர் சூர்யா நடித்த ஜெய்பீம் படத்தில் ஒரு விஷயம் எனக்கு வருத்தம் அளிப்பதாக இருந்தது. அந்த சம்பவம், 1980-களில் நடந்தது. அந்த படத்தில் இடம்பெற்றிருந்த சம்பவம், எந்த காலக்கட்டத்தில் நிகழ்ந்தது என்பதை குறிக்கும் வரலாற்று கண்ணோட்டத்துடன் படம் எடுத்திருந்தால் ஏற்றுக் கொள்ளலாம். அதை விடுத்து எப்போதோ நடந்த ஒரு விஷயத்தை இன்றைய காலக்கட்டத்தில் நடப்பது போல ஒரு பிரமையை ஏற்படுத்துவது, மக்களை நம்ப வைப்பது எவ்வளவு பெரிய மோசடி என்பதை நாம் உணர வேண்டும்.

    இவ்வளவு கொடுமையானதா போலீஸ் துறை என்றும் இன்னும் மாறவே இல்லையா என்றும் பலருக்கு தோன்றுகிறது. இத்தகையாக தவறான எண்ணம் ஏற்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    • மின்வாரியத்திலிருந்து குறுந்தகவல்களோ, போன் அழைப்புகளோ வராது.
    • பொதுமக்களுக்கு போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    சென்னை :

    சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சமீப காலமாக 'சைபர் கிரைம்' குற்றவாளிகள் பொதுமக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் நோக்கத்தில் புது யுக்திகளை கையாண்டு வருகின்றனர். அதன்படி பொதுமக்களின் செல்போன் எண்ணுக்கு தங்கள் வீட்டு மின் இணைப்பு இன்று இரவோடு துண்டிக்கப்படும். சென்ற மாத பில் கட்டணம் 'அப்டேட்' செய்யப்படவில்லை. உடனே மின்வாரிய அதிகாரியை தொடர்பு கொள்ளுங்கள் அல்லது வாட்ஸ் அப்பில் தொடர்பு கொள்ளுங்கள் என்று ஒரு செல்போன் எண்ணையும் சேர்த்து குறுந்தகவலாக (எஸ்.எம்.எஸ்.) அனுப்புவார்கள்.

    பொதுமக்களிடம் அவர்கள் செல்போனில் ரிமோட் அக்சஸ் அப்ளிகேஷன்களான Quick Support அல்லது Any Desk போன்ற செயலிகளை பதிவிறக்கம் (டவுன்லோட்) செய்ய சொல்லுவார்கள். அதன் மூலம் எதிர்முனையில் இருக்கும் பொதுமக்களின் செல்போனில் உள்ள விவரங்களை 'சைபர்' குற்றவாளிகள் எளிதாக பார்க்க முடியும். பின்னர் ரூ.10-க்கு குறைந்த அளவில் 'ரீசார்ஜ்' செய்ய சொல்லுவார்கள். அப்போது பொதுமக்கள் உள்ளிடும் வங்கி தொடர்பான யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்டுகளை பயன்படுத்தி குற்றவாளிகள் தங்களுக்கு தேவையான வங்கி கணக்குகளுக்கு பணத்தை அனுப்பிவிடுவார்கள்.

    இந்த செயலிகள் மூலம் பொதுமக்களின் செல்போன் எண்ணிற்கு வரும் ஓ.டி.பி. எண்களையும் குற்றவாளிகளால் எளிதில் கண்டறிய முடியும். இதன் மூலம் வங்கி கணக்கிலிருந்து பணத்தை கொள்ளையடிப்பார்கள். எனவே பொதுமக்கள் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்று வரும் போலியான செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம். அந்த செல்போன் எண்களை தொடர்பு கொள்ள வேண்டாம். மின்வாரியத்திலிருந்து இதுபோன்ற குறுந்தகவல்களோ, போன் அழைப்புகளோ வராது. எனவே பொதுமக்கள் இதுபோன்ற சம்பவங்களில் கவனமுடன் இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • தனியார் தங்கும் விடுதிகளின் உரிமையாளர்கள் மற்றும் மேலாளர்களின் ஆலோசனைக்கூட்டம் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடைபெற்றது.
    • 50 தனியார் விடுதிகளின் உரிமையாளர்கள் மற்றும் மேலாளர்கள் பங்கேற்றனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகரில் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் சந்தேகப்படும்படியான நபர்களை கண்காணிப்பதற்கு வசதியாக திருப்பூர் மாநகர எல்லைக்குள் உள்ள தனியார் தங்கும் விடுதிகளின் உரிமையாளர்கள் மற்றும் மேலாளர்களின் ஆலோசனைக்கூட்டம் திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடைபெற்றது. போலீஸ் கமிஷனர் பிரபாகரன் தலைமை தாங்கினார். இதில் 50 தனியார் விடுதிகளின் உரிமையாளர்கள் மற்றும் மேலாளர்கள் பங்கேற்றனர்.

    கூட்டத்தில் கமிஷனர் பிரபாகரன் பேசியதாவது:-

    லாட்ஜிகளில் உள்ளே வருபவர்கள் மற்றும் வெளியே செல்பவர்களின் பதிவேடு முறையாக பராமரிக்க வேண்டும். தினமும் தங்கி செல்பவர்களின் விவரங்களை சம்மந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு அளிக்க வேண்டும்.அறையில் தங்கக்கூடிய அனைத்து வாடிக்கையாளர்களின் விபரங்களை வாங்கி சேமித்து பராமரிக்க வேண்டும்.வாடிக்கையாளர்கள் அளிக்கும் தொலைபேசி எண் சரியானதுதானா எனஉறுதி செய்ய வேண்டும்.

    லாட்ஜ் வரவேற்பு அறையில்வாடிக்கையாளர்கள் முகம் தெளிவாக பதிவாகும் வகையில் சிசிடிவி கேமரா பொருத்தவேண்டும்.

    அதேபோல் வாகன நிறுத்தும் இடங்களில் உள்ளகேமரா வாகன எண் தெளிவாக பதிவு செய்யும் வகையில் பொருத்தவேண்டும். 24x7 என்ற வகையில் கண்காணித்து பதிவுகளை பாதுகாத்து வைக்க வேண்டும்.லாட்ஜிற்கு வரும் வாடிக்கையாளர்கள் கொண்டு வரும் உடைமைகளைசோதனை செய்ய Baggage Scanner பொருத்த வேண்டும்.தனியார் தங்கும் விடுதிகளில் தங்கும் நபர்களின் முழுவிவரங்களையும் பதிவு செய்வது அவசியம். அவர்களின்அடையாள அட்டைகளைபெற வேண்டும். அதேபோல்லாட்ஜில் வேலை செய்யும் அனைத்து ஊழியர்கள், வேலையாட்கள்விவரங்களை அடையாள அட்டையுடன் வாங்கி வைத்து பராமரிக்க வேண்டும்.

    தங்கும் விடுதிகளில் தவிர்க்க வேண்டியவை

    லாட்ஜில் (சீட்டாட்டம், விபச்சாரம் மற்றும் மது அருந்த அனுமதிஅளித்தல்) ஆகிய சட்ட விரோதமான செயல்கள் எதையும் அனுமதிக்ககூடாது.லாட்ஜில் தங்கக்கூடிய நபரின் அடையாள அட்டை மட்டுமே வாங்கவேண்டும். வேறு ஒரு நபரின் அடையாள அட்டை வாங்கி வைக்ககூடாது.உரிய அடையாள அட்டை அளிக்காத நபர்களை தங்க அனுமதிக்க கூடாது.வாடிக்கையாளர்கள் லாட்ஜில் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள்எதையும் வைத்திருக்க அனுமதிக்க கூடாது. இது போன்ற விதிமுறைகளை கடைபிடிக்காத லாட்ஜ் மற்றும் தங்கும் விடுதிகள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பேசினார்.கூட்டத்தில் துணைகமிஷனர்கள், உதவிகமிஷனர்கள் பங்கேற்றனர்.

    • பெண்களுக்கு இலவச மதுபானம் என்று விளம்பரப்படுத்தப்பட்டு இருந்தது.
    • அரசியல் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் மங்கலம் ரோடு பாரப்பாளையத்தில் உள்ள தனியார் ஓட்டலில் பொழுதுபோக்கு நிகழ்ச்சியில் பங்கேற்கும் பெண்களுக்கு இலவச மதுபானம் என்று விளம்பரப்படுத்தப்பட்டு இருந்தது. இதற்கு அரசியல் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.இந்த நிலையில் ஓட்டல் நிர்வாகம் அந்த நிகழ்ச்சியை ரத்து செய்து விட்டதாக அறிவித்ததுடன், விளம்பரம் செய்ததற்கு மன்னிப்பும் கோரியது. முன்னதாக மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனருக்கு புகார் மனு அனுப்பினார்.

    அதில், தனியார் ஓட்டல் சார்பில் கலாசார சீர்கேடு ஏற்படுத்தும் வகையில் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. இதுமிகவும் கண்டிக்கத்தக்கது. தமிழக அரசுக்கும், மாநகராட்சிக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பகிரப்பட்டு வருகிறது. கலாசார சீரழிவு ஏற்படுத்தும் நிகழ்ச்சியை அனுமதிக்கக்கூடாது. தவறான செய்திகளை சமூகவலைதளங்களில் பரப்புவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறியிருந்தார்.

    • இரவு நேரங்களில் அதிகப்படியான போலீசாரை ரோந்து பணியில் ஈடுபடுத்தி குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கப்படும்.
    • போதைப் பொருள்கள் விற்பனை செய்பவர்களை் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனராக இருந்த ஏ.ஜி. பாபு மாற்றப்பட்டு புதிய போலீஸ் கமிஷனராக பிரபாகரன் நியமிக்கப்பட்டார். அவர் இன்று காலை திருப்பூர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மாநகர கமிஷனராக பொறு–ப்பேற்றுக் கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- திருப்பூர் மாநகரில் கஞ்சா விற்பனையை முழுமையாக தடுக்கும் வகையில் முக்கியத்துவம் கொடுத்து தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படும். அதேபோல் இரவு நேரங்களில் அதிகப்படியான போலீசாரை ரோந்து பணியில் ஈடுபடுத்தி குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கப்படும்.

    அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி, போதைப் பொருள்கள் விற்பனை செய்பவர்களை கண்டறிந்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அதேபோல் மாநகரில் அதிக போக்குவரத்து நெரிசல் உள்ள பகுதிகளை ஆய்வு செய்து போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

    • தனியாா் தொலைக்காட்சியில் நாள்தோறும் இரவு 9.30 மணிக்கு தொடா் நாடகம் ஒளிபரப்பாகி வருகிறது.
    • நகை தொழிலாளா்களை இழிவுபடுத்தும் வகையில் நகைபட்டறையில் களவாணிதனம் நிறைய நடக்கும் என்று தவறான கருத்தைப் பதிவு செய்துள்ளனா்.

    திருப்பூர் :

    பொற்கொல்லா் சமுதாயத்தை இழிவுப்படுத்திய தனியாா் தொலைக்காட்சி மற்றும் தொடா் இயக்குநா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி திருப்பூா் மாநகரக் காவல் ஆணையா் அலுவலகத்தில் புகாா் அளிக்கப்பட்டது.

    இது தொடா்பாக தமிழ்நாடு எம்.கே.டி.பேரவை திருப்பூா் மாவட்டச் செயலாளா் ஆா்.பிரகாஷ் அளித்துள்ள புகாா் மனுவில் கூறியுள்ளதாவது: -தனியாா் தொலைக்காட்சியில் நாள்தோறும் இரவு 9.30 மணிக்கு தொடா் நாடகம் ஒளிபரப்பாகி வருகிறது.

    இந்தத் தொடரில் விஸ்வகா்மா சமுதாயத்தைச் சோ்ந்த நகைத் தொழிலாளா்களை இழிவுபடுத்தும் வகையில் நகைப் பட்டறையில்களவாணிதனம் நிறைய நடக்கும் என்று தவறான கருத்தைப் பதிவு செய்துள்ளனா்.

    இது பாரம்பரியத்தைப் போற்றிப் பாதுகாத்து வரும் பொற்கொல்லா் சமுதாயத்தை இழிவுபடுத்தும் வகையில் உள்ளது.இதனால், நகைத் தொழிலாளா்கள் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளனா். ஆகவே, தனியாா் தொலைக்காட்சி மற்றும் தொடரின் இயக்குநா் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னை மாநகர போலீசாருக்கு வாரத்தில் ஒருநாள் விடுமுறை அளிப்பது குறித்து அதிகாரிகளுடன் போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
    சென்னை:

    தமிழக காவல்துறையில் பணியாற்றும் போலீசார் பணிச்சுமை காரணமாக பல்வேறு நோய்களால் பாதிக்கப்படும் நிலை உள்ளது. அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் பல்வேறு பிரச்சினைகளுக்காக இடைவிடாமல் தொடர்ந்து போராட்டம் நடத்துகின்றன. இதனால் இடைவிடாமல் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டியுள்ளது.

    ஜனாதிபதி, பிரதமர் போன்ற முக்கிய பிரமுகர்கள் சுற்றுப்பயணம் செய்யும்போது, தொடர்ந்து 2 அல்லது 3 நாட்கள் இரவு-பகல் பாராமல் பாதுகாப்பு பணியை மேற்கொள்ள வேண்டி இருக்கிறது. இதனால் போலீஸ் நிலையத்திற்கு புகார் கொடுக்க வரும் பொதுமக்களுக்கு நல்லது செய்ய முடியவில்லை என்று போலீசாருக்கு ஒரு மனக்குறை இருந்தவண்ணம் உள்ளது. இதுபோன்ற இடைவிடாத பணிச்சுமையால் தங்களது குடும்பத்தை கவனிக்க முடியவில்லை என்றும் போலீசார் உள்ளக்குமுறலுடன் உள்ளனர்.

    இதனால் ஏற்படும் மன அழுத்தத்தால் போலீசார் தற்கொலை செய்யும் நிகழ்வுகள் நடக்கின்றன. போலீசாருக்கு தேவையான விடுமுறை அளிக்க வேண்டும், அவர்களது பணிச்சுமையை குறைக்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகள் போலீசாரால் எழுப்பப்பட்டுள்ளது.


    போலீசாரின் மனக்குறையை போக்கும்வகையில், சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் அதிரடி நடவடிக்கை எடுக்க உள்ளார் என்றும், சென்னை மாநகர போலீசாருக்கு வாரத்தில் ஒருநாள் விடுமுறை அளிக்க உள்ளதாகவும், நேற்று ‘வாட்ஸ்-அப்’பில் தகவல் பரவியது.

    இதுதொடர்பாக உயர் போலீஸ் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    சென்னை மாநகர போலீசாருக்கு வாரத்தில் ஒருநாள் விடுமுறை அளிக்கலாமா? என்பது குறித்து அதிகாரிகள் மட்டத்தில் ஆலோசித்து வருகிறோம். அதில் உள்ள சாதக-பாதக அம்சங்கள் குறித்து தீவிரமாக பரிசீலித்து வருகிறோம். முதல்கட்டமாக, முதல்நிலை மற்றும் இரண்டாம்நிலை காவலர்களுக்கு மட்டும் வாரத்தில் ஒருநாள் விடுமுறை அளிக்கலாமா?, அதற்கடுத்தாற்போல, சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு, இன்ஸ்பெக்டர்களுக்கு விடுமுறை சலுகையை கொடுக்கலாமா? என்பது பற்றியெல்லாம் யோசித்து வருகிறோம்.

    போலீஸ் துறையைச் சேர்ந்த சிலர் விடுமுறை நாட்களில் வேலைபார்த்து அதனால் கிடைக்கும் பணபலனை அனுபவித்து வருகிறார்கள். விடுமுறை கிடைக்கும்பட்சத்தில் பணபலனில் குறைவு ஏற்படும். அதை சிலர் விரும்பவில்லை. ஒட்டுமொத்தமாக இதுகுறித்து தீவிரமாக ஆலோசித்து ஒரு நல்ல முடிவு எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.
    ×