search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இரவு விருந்து"

    • குடியரசு தலைவர் திரவுபதி முர்மு டெல்லி பிரகதி மைதானத்தின் பாரத் மண்டபத்தில் விருந்தளித்தார்.
    • இதில் கலந்துகொள்ள வருகை தந்த வெளிநாட்டு தலைவர்களை குடியரசு தலைவர், பிரதமர் வரவேற்றனர்.

    புதுடெல்லி:

    ஜி20 மாநாட்டை முன்னிட்டு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தின் பாரத் மண்டபத்தில் சிறப்பு விருந்தளித்தார்.

    சிறப்பு விருந்தில் கலந்து கொள்ள வருகை தந்த வெளிநாட்டு தலைவர்களை இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு ஆகியோர் வரவேற்றனர்.

    இந்நிலையில், குடியரசு தலைவர் திரவுபதி முர்மு அளித்த விருந்தில் கலந்து கொள்ள வந்த இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் மனைவி அக்ஷிதா, ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா மனைவி யுகோ கிஷிடா, ஐ.எம்.எப். தலைவர் கிறிஸ்டினா ஜியார்ஜியா, மொரீஷியஸ் பிரதமர் மனைவி, வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா உள்ளிட்ட பலர் இந்திய பாரம்பரிய உடைகளை அணிந்து வந்திருந்தனர்.

    • பெண்களுக்கு இலவச மதுபானம் என்று விளம்பரப்படுத்தப்பட்டு இருந்தது.
    • அரசியல் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் மங்கலம் ரோடு பாரப்பாளையத்தில் உள்ள தனியார் ஓட்டலில் பொழுதுபோக்கு நிகழ்ச்சியில் பங்கேற்கும் பெண்களுக்கு இலவச மதுபானம் என்று விளம்பரப்படுத்தப்பட்டு இருந்தது. இதற்கு அரசியல் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.இந்த நிலையில் ஓட்டல் நிர்வாகம் அந்த நிகழ்ச்சியை ரத்து செய்து விட்டதாக அறிவித்ததுடன், விளம்பரம் செய்ததற்கு மன்னிப்பும் கோரியது. முன்னதாக மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனருக்கு புகார் மனு அனுப்பினார்.

    அதில், தனியார் ஓட்டல் சார்பில் கலாசார சீர்கேடு ஏற்படுத்தும் வகையில் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. இதுமிகவும் கண்டிக்கத்தக்கது. தமிழக அரசுக்கும், மாநகராட்சிக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பகிரப்பட்டு வருகிறது. கலாசார சீரழிவு ஏற்படுத்தும் நிகழ்ச்சியை அனுமதிக்கக்கூடாது. தவறான செய்திகளை சமூகவலைதளங்களில் பரப்புவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறியிருந்தார்.

    ×