search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போலீசில் புகார்"

    • நண்பரின் மகள் திருமண நிகழ்ச்சிக்கு வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் சென்றிருந்தார்.
    • மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றிருப்பதை கண்டு துரைசாமி அதிர்ச்சி அடைந்தார்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள ராயப்பனூர் கிராமம் பள்ளக்காடு பகுதியை சேர்ந்தவர் துரைசாமி. இவர் நேற்று மாலையில் சேலம் மாவட்டம் தலைவாசலில் உள்ள கொங்கு திருமண மண்டபத்தில் நடைபெற்ற தனது நண்பரின் மகள் திருமண நிகழ்ச்சிக்கு வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் சென்றிருந்தார். 

    அங்கு நிகழ்ச்சியை முடித்துவிட்டு பிறகு துரைசாமி உடனடியாக வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு, வீட்டில் இருந்த பீரோ மற்றும் கப்போர்டுகள் உடைக்கப்பட்டு பீரோவில் வைக்கப்பட்டிருந்த 6பவுன் ஆரம், 4 பவுன் நெக்லஸ், அரை பவுன் டையுள்ள 5 மோதிரம், தோடுகள் 5 பவுன், , ஒரு பவுன் எடையுள்ள 5 காயின் உள்ளிட்ட மொத்தம் 25பவுன் தங்க நகை, பணம் 9 ஆயிரம் ரொக்கப்பணம் போன்றவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றிருப்பதை கண்டு துரைசாமி அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து துரைசாமி சின்னசேலம் போலீஸ் நிலைய போலீசாருக்கு தகவல் அளித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர். போலீசார் குற்றவாளிகளை தேடும்பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    • குப்புராஜூக்கு பெண் வீட்டார் சார்பில் சீதனமாக ரூ.2லட்சம் ரொக்கம், 35 பவுன் நகை, ஒரு அபார்ட்மெண்ட் வீடு ஆகியவை கொடுக்கப்பட்ட தாக கூறப்படுகிறது.
    • தேவிக்கு தெரியாமல் குப்புராஜ் தனது தாய் ரேவதிக்கு மட்டும் விசா எடுத்து அனுப்பி வைத்து அவரை நண்பர்கள் உதவியுடன் அமெரிக்காவிற்கு அழைத்து சென்றுள்ளார்.

    தருமபுரி,

    தருமபுரி கலெக்டர் அலுவலகம் அருகே அதியமான் நகரைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவரது மகள் தேவி (வயது36). இவருக்கும், சேலம் மாவட்டம் அழகாபுரத்தைச் சேர்ந்த குப்புராஜ் என்பவருக்கும் கடந்த 9 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 7 வயதில் ஒரு குழந்தையும் உள்ளது.

    அப்போது குப்புராஜூக்கு பெண் வீட்டார் சார்பில் சீதனமாக ரூ.2லட்சம் ரொக்கம், 35 பவுன் நகை, ஒரு அபார்ட்மெண்ட் வீடு ஆகியவை கொடுக்கப்பட்ட தாக தெரிகிறது.

    இதைத்தொடர்ந்து குப்புராஜூக்கு அமெரிக்காவில் வேலை கிடைத்ததால் அங்கு விசா பெற்று கொண்டு தனது மனைவி, குழந்தையை அழைத்து சென்றார்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு தேவியிடம் குப்புராஜ் தமிழ்நாட்டிற்கு சென்று தனது தாய் ரேவதியை அமெரிக்காவிற்கு அழைத்து வருமாறும், இதற்காக 2 பேருக்கும் மீண்டும் விசா எடுத்து அனுப்பி வைப்பதாகவும் கூறி அங்கிருந்து அவரை தனியாக இந்தியாவிற்கு அனுப்பி வைத்துள்ளார்.

    இதனை நம்பி அவரும் தமிழ்நாட்டிற்கு வந்தார். பின்னர் அவர் தமிழ்நாட்டிற்கு வந்து சில நாட்கள் ஆகியும் குப்புராஜ் விசா எடுத்து அனுப்பி வைக்காமல் இருந்தார்.

    இதற்கிடையே தேவிக்கு தெரியாமல் குப்புராஜ் தனது தாய் ரேவதிக்கு மட்டும் விசா எடுத்து அனுப்பி வைத்து அவரை நண்பர்கள் உதவியுடன் அமெரிக்காவிற்கு அழைத்து சென்றுள்ளார்.

    இதுகுறித்து தகவலறிந்த தேவி அதிர்ச்சியடைந்தார். உடனே தனது கணவருக்கு தொடர்புக் கொண்டு கேட்டபோது, அவர் தேவிக்கு எந்த பதிலும் சொல்லாமல் இருந்துள்ளார்.

    தேவியுடன் அவரது மகனையும் பேசவிடாமல் தடுத்துள்ளார்.

    இதுகுறித்து தேவி தருமபுரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீசார் தேவியின் கணவர் குப்புராஜ், அவரது தாய் ரேவதி, தங்ைக உமா (37), தங்கையின் கணவர் பழனிவேல் ஆகிய 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஒரு ஆண்டுக்கு முன்பு பொது குடிநீர் குழாய் துண்டிக்கப்பட்டது.
    • விசாரணை நடத்துமாறு கலெக்டர் உத்தரவிட்டார்.

    அவினாசி :

    அவினாசி அருகேயுள்ள கருவலூர் ஊராட்சி அனந்தகிரி பகுதியில் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு பொது குடிநீர் குழாய் துண்டிக்கப்பட்டது. இது குறித்து நடவடிக்கை எடுக்குமாறுஅந்த பகுதியை சேர்ந்த தங்கமணி என்பவர் ஊராட்சி தலைவர்முரு கனிடம் புகார்அளித்ததாக கூறப்படுகிறது. அதற்கு முருகன் முறையான பதில் சொல்லாத காரணத்தால் தங்கமணி மாவட்ட கலெக்டரிடம் இது குறித்து மனு கொடுத்துள்ளார்.

    இது குறித்து விசாரணை நடத்துமாறு கலெக்டர் உத்தரவிட்டார். சம்பவத்தன்று விசாரணை நடத்தவந்தபெண் அதிகாரி யைபணி செய்யவிடாமல் தடுத்தும் புகார்அளித்த தங்கமணியை தகாத வார்த்தைகளால் பேசி கொலைமிரட்டல் விடுத்ததாகவும் ஊராட்சி மன்ற தலைவர் முருகன் மீது பெண் அதிகாரி அவினாசி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • ராமேசுவரம் அருகே இளம்பெண் ஒருவர் தோழியின் பேச்சை கேட்டு ரூ.2 லட்சத்தை இழந்தார்.
    • இதுகுறித்து அந்த பெண் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம் புதுரோடு பகுதியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மகள் விஷ்ணு பிரியா (வயது 25). இவர் சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

    இந்த நிலையில் கடந்த 19-ந்தேதி இன்ஸ்டாகிராம் பார்த்து கொண்டிருந்த போது தனது தோழியின் பெயரில் வந்த ஐ.டி.யில் ரூ.50 ஆயிரம் முதலீடு செய்து ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் லாபம் பெற்றதாக தகவல் வந்தது. இதுகுறித்து அவர், தனது தோழியிடம் கேட்டதற்கு அவரும் அந்த தகவல் உண்மைதான் என்று கூறி உள்ளார்.

    இதைத்தொடர்ந்து தனது தோழியைபோல் பணம் முதலீடு செய்து லாபம் ஈட்ட முடிவு செய்த விஷ்ணு பிரியா, தனது வங்கி கணக்கில் இருந்து சிறிது சிறிதாக மொத்தம் ரூ.2 லட்சம் வரை குறிப்பிட்ட தனியார் நிறுவனத்தில் முதலீடு செய்தார்.

    பின்னர் அந்த தொகைக்கு லாபம் வந்துள்ளதா? என அந்த நிறுவனத்திடம் கேட்ட போது, எந்த பதிலும் கிடைக்கவில்லை. இதையடுத்து தனது தோழியை அவர் தொடர்பு கொண்டு கேட்டபோது, அவர் தனது இன்ஸ்டாகிராமை பிளாக் செய்து விட்டது தெரியவந்தது.

    இதனால் தோழி கூறியதை நம்பி பணத்தை இழந்து விட்டதை அறிந்த விஷ்ணு பிரியா, இதுபற்றி ராமநாதபுரம் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன், கடலில் மீன்பிடித்தபோது, இலங்கை கடற்படை நடத்திய துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்து மாற்றுத்திறனாளியானார்..
    • அபிநயா கணவருடன் அடிக்கடி சண்டை போட்டு வந்துள்ளார்அபிநயா இரவு வெகுநேரம் ஆகியும் வீட்டுக்கு வரவில்லை.,

    புதுச்சேரி:

    காரைக்காலை அடுத்த மண்டபத்தூர் சுனாமி நகரைச்சேர்ந்தவர் சவுந்தரராஜ் (வயது 37). இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன், கடலில் மீன்பிடித்தபோது, இலங்கை கடற்படை நடத்திய துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்து மாற்றுத்திறனாளியானார். இதனால் மீன்பிடி தொழிலுக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 2018-ல் நாகப்பட்டினம் வெள்ளப்பள்ளத்தைச்சேர்ந்த ஜெயபால் மகள் அபிநயாவை (28) இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 4 வயது மற்றும் 2 வயதில் 2 பெண் குழந்தைகள் உள்ளது. அபிநயா கணவருடன் அடிக்கடி சண்டை போட்டு வந்துள்ளார். கடந்த பிப்ரவரி 1-ந் தேதி நாகப்பட்டினம் செல்வதாக கூறி, 2 குழந்தைகளோடு வெளியில் சென்ற அபிநயா இரவு வெகுநேரம் ஆகியும் வீட்டுக்கு வரவில்லை. தொடர்ந்து, சவுந்தரராஜ் அபிநயா வீட்டில் கேட்டபோது இங்கு வரவில்லையென கூறியுள்ளனர். கடந்த 2 வாரமாக பல்வேறு உறவினர்கள் வீட்டில் தேடியும் அபிநயா கிடைக்காதததால், சவுந்தரராஜ், காரைக்கால் கோட்டுச்சேரி செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான அபிநயா மற்றும் 2 குழந்தைகளை தேடிவருகின்றனர்.

    • தென்செட்டியந்தல் கிராமத்தில் திருவிழாவுக்கு சென்று வருவதாக 2 குழந்தைகளை அழைத்துக் கொண்டு சந்தியா சென்றார்
    • திருவிழா முடிந்ததும் சந்தியா வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த மணிகண்டன் உறவினர் வீடுகளில் தேடினார்.

    கள்ளக்குறிச்சி:

    ஆத்தூர் அருகே உள்ள மஞ்சினி கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் (வயது 31) சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் இவருக்கு கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு சந்தியா (24) என்ற பெண்ணுடன் திருமணம் ஆனது. இவர்களுக்கு கிருபாஷினி என்கிற 4 வயது பெண் குழந்தையும் புவஸ்ரீ என்ற 5 மாத கை குழந்தை உள்ளது.

    இந்நிலையில் கடந்த 8-ம் தேதி சின்ன சேலம் அருகே உள்ள தென்செட்டியந்தல் கிராமத்தில் திருவிழாவுக்கு சென்று வருவதாக 2 குழந்தைகளை அழைத்துக் கொண்டு சந்தியா சென்றார். திருவிழா முடிந்ததும் சந்தியா வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த மணிகண்டன் உறவினர் வீடுகளில் தேடினார். ஆனால், எங்கு தேடியும் கிடைக்காததால் சின்ன சேலம் போலீஸ் நிலையத்தில் மணிகண்டன் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து 2 குழந்தைகளுடன் காணாமல் போன சந்தியாவை தேடி வருகின்றனர்.

    • இந்த கோவில் செயல் அலுவலராக மஞ்சு உள்ளார்.
    • போலி ஆவணம் தயாரித்து வருவாய்துறைக்கு தடையில்லா சான்று கொடுத்து மின் இணைப்பு ஆணை பெற்றுள்ளார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே தெற்கு பிச்சாவரம் பகுதியில் குட்டியாண்டவர்கோவில் உள்ளது. இந்த கோவில் இந்து சமயஅறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த கோவில் செயல் அலுவலராக மஞ்சு உள்ளார்.இவர் அண்ணாமலைநகர் போலீசில் புகார் செய்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-தெற்கு பிச்சாவரம் பகுதியை சேர்ந்தவர் ஜெயராமன். விவசாயி. இவர் கடந்த 30-ந் தேதி கோவிலில் பயன்படுத்தப்படும் துறை ரீதியான முத்திரையை பயன்படுத்தி போலி ஆவணம் தயாரித்து வருவாய்துறைக்கு தடையில்லா சான்று கொடுத்து மின் இணைப்பு ஆணை பெற்றுள்ளார். எனவே இவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளார்.

    அதன்பேரில் போலீசார் ஜெயராமன் மீது வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • இவர் விழுப்புரம் எம்.ஜி.ஆர் கல்லூரியில் பி.ஏ. 3-ம் ஆண்டு படித்து வருகிறார்,
    • எங்கு தேடியும் தனது மகள் கிடைக்காததால் திருவெண்ணைநல்லூர் போலீசில் புகார் கொடுத்தனர்.

    விழுப்புரம்:

    திருவெண்ணைநல்லூர் அருகே பேரங்கியூர் புதுகாலணியைச் சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மகள் கபிலா (வயது 20), இவர் விழுப்புரம் எம்.ஜி.ஆர் கல்லூரியில் பி.ஏ. 3-ம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 6-ந் தேதி கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற கபிலா இரவு நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் தங்களது உறவினர்கள் வீடுகளில் தேடினர். ஆனால் எங்கு தேடியும் தனது மகள் கிடைக்காததால் திருவெண்ணைநல்லூர் போலீசில் புகார் கொடுத்தனர். ஏழுமலை கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மணிகன்டன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார். 

    • இவர் கடந்த 6-ந் தேதி விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு பயிர்களை விற்க வந்துள்ளார்.
    • ஜெயராமன் 2 நாட்களாக வீடு திரும்பவில்லை.

    கடலூர்:

    ஸ்ரீமுஷ்ணம் அருகே அம்புஜவல்லி பேட்டை யைசேர்ந்தவர் ஜெயராமன்(வயது80) விவசாயி. இவர் கடந்த 6-ந் தேதி விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு பயிர்களை விற்க வந்துள்ளார். பிறகு மாலை தன்னுடன் இருந்த உறவினர் ஜெயச்சந்திரன் என்பவரிடம், தன்னுடைய வீட்டிற்கு பிறகு வருகிறேன் எனக்கூறி அவரை அனுப்பியுள்ளார். ஆனால் ஜெயராமன் 2 நாட்களாக வீடு திரும்பவில்லை.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது மகன் செம்பையன் அவரை பல இடங்கில் தேடி உள்ளார்.ஆனால் எங்கும் ஜெயராமன் கிடைக்காததால் அதிர்ச்சி அடைந்த செம்பையன் போலீசில் புகார் அளித்துள்ளார். சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த விருத்தாசலம் போலீசார் காணாமல் போன ஜெயராமனை தேடி வருகின்றனர்.

    இவர் சம்பவத்தன்று தனது மனைவி அங்கம்மாள் (28) மற்றும் மகள் (8) ஆகியோருடன் வீட்டில் படுத்து தூங்கினார்.

    கள்ளக்குறிச்சி:

    தியாகதுருகம் அருகே மேல்வழி கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி (வயது 35). இவர் சம்பவத்தன்று தனது மனைவி அங்கம்மாள் (28) மற்றும் மகள் (8) ஆகியோருடன் வீட்டில் படுத்து தூங்கினார். மீண்டும் அதிகாலை எழுந்து பார்த்தபோது தனது மனைவியை காணவில்லை. அக்கம், பக்கம் மற்றும் உறவினர்கள் வீட்டில் தேடியும் எங்கும் கிடைக்கவில்லை. இது குறித்து ரவி கொடுத்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இலக்கியா (வயது 21). இவர் வேளாண் கல்லூரியில் 4-ம் ஆண்டு படித்து வருகிறார்.
    • பல்வேறு இடங்களில் மகளைத் தேடினார். எங்கு தேடியும் கிடைக்கவில்லை

    கடலூர்:

    சேலம் அருகே உள்ள தலைவாசல் சீனிவாசன் நகரை சேர்ந்தவர் ராஜராஜன். அவரது மகள் இலக்கியா (வயது 21). இவர் சிதம்பரம் அருகே வடக்கிருப்பு கிராமத்தில் வீடு எடுத்து தங்கி அண்ணாமலை பல்கலைகழக வேளாண் கல்லூரியில் 4-ம் ஆண்டு படித்து வருகிறார்.              இவர் விடுமுறையில் சொந்த ஊருக்கு செல்வதாக கூறி விட்டு சென்றார். ஆனால் ஊருக்கு செல்லவில்லை. இது பற்றி அறிந்த ராஜராஜன் தனது மகளை உறவினர்கள் வீடு மற்றும் பல்வேறு இடங்களில் தேடினார். எங்கு தேடியும் கிடைக்கவில்லை.  அதிர்ச்சி அடைந்த ராஜராஜன் இதுபற்றி அண்ணாமலை நகர் போலீசில் புகார் செய்தார்.

    போலீசார் வழக்குபதிந்து இலக்கியாவை தேடி வருகிறார்கள்.   சிதம்பரம் அருகே உள்ள திருக்கழிபாளையத்தை சேர்ந்தவர் பாலதண்டாயுதம். தச்சு தொழிலாளி. இவர் வேலைக்கு செல்வதாக கூறி விட்டு சென்றார். ஆனால் அவர் வீடு திரும்பவில்லை. பதறி போன அவரது மனைவி ராணி இதுபற்றி அண்ணாமலைநகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் பாலதண்டாயுதத்தை தேடி வருகிறார்கள். 

    • 2 நாட்களுக்கு முன்பு வள்ளி தனது கணவரிடம் ஆஸ்பத்திரிக்கு செல்வதாக கூறி மகனை அழைத்து சென்றவர் வீடு திரும்பவில்லை.
    • எங்கு ,தேடியும் அவர்கள் கிடைக்க வில்லை.போலீசில் அவர் கணவர் புகார் செய்தார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி வடுக பாளை யத்தை சேர்ந்தவர் பொன்ன ம்பலம். அவரது மணைவி வள்ளி (வயது 32). அவரது மகன் பிரதீப் (5)  கடந்த 2 நாட்களுக்கு முன்பு வள்ளி தனது கணவரிடம் ஆஸ்பத்திரிக்கு செல்வதாக கூறி மகனை அழைத்து சென்றார். அதன்பின்னர் அவர் வீடு திரும்பவில்லை

    . அதிர்ச்சி யடைந்த பொன்னம்பலம் தனது மனைவி மற்றும் மகனை பல்வேறு இடங்க ளில் தேடினார். எங்கு தேடியும் அவர்கள் கிடைக்க வில்லை.  இதுகுறித்து பண்ரு ட்டி போலீசில் பொன்ன ம்பலம் புகார் செய்தார். புகார் மனுவில் வடுகபாளை யத்தை சேர்ந்த சக்திவேல் என்பவர் ஆசைவார்த்தை கூறி தனது மனைவியை கடத்தி சென்றுவிட்டதாக கூறியுள்ளார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் வழக்குபதிந்து வள்ளி மற்றும் குழந்தையை தேடி வருகிறார்கள்.

    ×