search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மனைவி மாயம்"

    • விருதுநகர் அருகே 2-வது முறையாக மனைவி மாயமானார்.
    • இது தொடர்பாக அவரது கணவர் போலீசில் புகார் செய்தார்.

    விருதுநகர்

    விருதுநகர் அருகே உள்ள அல்லம்பட்டி பி.வி.ஆர். காலனியைச் சேர்ந்தவர் ராஜ்குமார். இவரது மனைவி கிருஷ்ணவேணி (வயது 30). இவர்களுக்கு 8 வருடங்களுக்கு முன்பு திருமணமானது.

    இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு கிருஷ்ண வேணி கோவில்பட்டி யில் நடந்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க செல்வதாக கூறிச் சென்றார். ஆனால் அவர் அங்கு செல்லாமல் மாரிக்கனி என்பவருடன் சென்றதாக கூறப்படுகிறது.

    இது குறித்து கணவர் கொ டுத்த புகாரின் அடிப் படையில் கோவில்பட்டி மேற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். கிருஷ்ணவேணி, மாரிக் கனி ஆகியோர் போலீஸ் நிலையத்தில் ஆஜராகினர். அவர்களை போலீசார் எச்சரித்து கிருஷ்ண வேணியை அவரது கணவருடன் அனுப்பி வைத்த னர். இந்த நிலையில் கிருஷ்ண வேணி மீண்டும் மாயமா னார். பல இடங்களில் தேடியும் கிடைக்க வில்லை. இது குறித்து ராஜ்குமார் சாத்தூர் டவுன் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    • கணவர் போலீசில் புகார்
    • அடிக்கடி குடும்பதகராறு ஏற்பட்டு வந்துள்ளது

    வெம்பாக்கம்:

    வெம்பாக்கம் அடுத்த தென்னம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 40). மனைவி லட்சுமி. இவர்களுக்கு 3 மாத பெண் குழந்தை உள்ளது.

    கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் கோபித்து கொண்டு லட்சுமி தனது தாயார் வீட்டிற்கு சென்று விட்டார். பின்னர் மாமியார் வீட்டிற்கு சென்று மனைவியிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி மீண்டும் வீட்டிற்கு அழைத்து வந்து குடும்பம் நடத்தினார்.

    இந்த நிலையில் வீட்டில் அனைவரும் நேற்று இரவு தூங்கிக் கொண்டிருந்தனர். காலையில் செல்வராஜ் எழுந்து பார்த்த போது மனைவி மற்றும் குழந்தை மாயமானது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இது குறித்து பிரம்ம தேசம் போலீசில் செல்வராஜ் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான பெண்ணையும், குழந்தையும் தேடி வருகின்றனர்.

    • தாம்பரம் வரை செல்வதாக கணவரிடம் கூறிவிட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை.
    • உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் தேடியும் எங்கும் இல்லை.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் அடுத்த நந்திமா நகரை சேர்ந்த ஏழுமலையின் மனைவி கலையரசி (வயது.35), திருப்போரூர் அருகே உள்ள ஆலத்தூர் தொழில்பேட்டையில் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். திருமணம் ஆகி 15ஆண்டுகள் ஆகியும் இவர்களுக்கு குழந்தை இல்லை என கூறப்படுகிறது.

    இந்நிலையில் தாம்பரம் வரை செல்வதாக கணவரிடம் கூறிவிட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை. உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் தேடியும் எங்கும் இல்லை. இதுகுறித்து மாமல்லபுரம் போலீஸ் நிலையத்தில் ஏழுமலை தனது மனைவியை கண்டுபிடித்து தரும்படி புகார் அளித்தார்.

    மாமல்லபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன கலையரசியை தேடி வருகின்றனர்.

    • கணவர் போலீசில் புகார்
    • தாலியை கழற்றி வைத்துவிட்டு சென்றுள்ளார்

    செய்யாறு:

    செய்யாறு டவுனை சேர்ந்தவர் 34 வயதுடைய வாலிபர். இவர் மாங்கால் கூட்ரோட்டில் உள்ள சிகாட்டில் வேலை செய்து வருகிறார். இவரது 24 வயது உடைய மனைவி ஸ்ரீபெரும்புதூரில் வேலை செய்து வருகிறார்.

    இவர்களுக்கு திருமணமாகி 13 வருடங்கள் ஆகிறது. குழந்தைகள் இல்லை. கணவன் - மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 31-ந் தேதி இளம் பெண் ஆரணியில் உள்ள தாயார் வீட்டிற்கு சென்றார்.

    மனைவியை குடும்பம் நடத்த வருமாறு கணவன் அழைத்துள்ளார். இந்த நிலையில் இளம்பெண் தன்னை தேட வேண்டாம் என்று கடிதம் எழுதி தாலியை கழற்றி வைத்துவிட்டு தனது தாயார் வீட்டில் இருந்து மாயமானார்.

    இது குறித்து செய்யாறு போலீசில் கணவர் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து இளம் பெண்ணை தேடி வருகின்றனர்.

    • மனைவி சஜிதா கமரூவை காணவில்லை.
    • அறச்சலூர் போலீ சார் வழக்கு பதிவு செய்து மாயமான சஜிதா கமரூவை தேடி வருகின்றனர்.

    ஈரோடு:

    மேற்கு வங்க மாநிலம், பர்கானாஸ் மாவட்டம், கிருஷ்ண சந்திரபூர் தெற்கு பகுதியை சேர்ந்தவர் ஷதேஹா கமரூ (30). இவரது மனைவி சஜிதா கமரூ (28). இவர்களுக்கு 11 வயதில் மகனும், 6 வயதில் மகனும் உள்ளனர். மகன் சொந்த ஊரில் ஷதேஹா கமரூவின் பெற்றோரின் பராமரிப்பில் உள்ளான்.

    ஷதேஹா கமரூ தனது மனைவி, மகளுடன், ஈரோடு மாவட்டம் அறச்சலூரை அடுத்துள்ள வடபழனி பகுதியில் உள்ள ஒரு தே ங்காய் நார் மில்லில் குடும்ப த்துடன் தங்கி வேலை பார்த்து வந்தார்.

    இந்த நிலையில் சம்பவ த்தன்று இரவு அனைவரும் சாப்பிட்டு விட்டு படுத்து தூங்கியுள்ளனர்.

    மறுநாள் அதிகாலை ஷதேஹா கமரூ கண் விழித்து பார்த்தபோது, அவரது மனைவி சஜிதா கமரூவை காணவில்லை. உடனடியாக தன்னுடன் வேலை செய்யும் நபர்களு டன் சேர்ந்து அக்கம்பக்கம் தேடி பார்த்தும் சஜிதா கமரூவை கிடைக்கவில்லை.

    ஒருவேளை அவர் தங்களது சொந்த ஊருக்கு சென்றிரு க்கலாம் என நினைத்து அங்கும் விசாரித்த போது சஜிதா கமரூ அங்கும் செல்ல வில்லை என்பது தெரியவ ந்தது.

    இதையடுத்து ஷதேஹா கமரூ அளித்த புகாரின் பேரில் அறச்சலூர் போலீ சார் வழக்கு பதிவு செய்து மாயமான சஜிதா கமரூவை தேடி வருகின்றனர்.

    • கடந்த 1-ம் தேதி மீண்டும் தகராறு ஏற்பட்டது.
    • கணவன் வேலைக்கு சென்ற பின்னர் ஜோதி வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார்.

    மாரண்டஅள்ளி,

    தருமபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி இ.பி. காலணி பகுதியில் வசித்து வருபவர் வெங்கடேசன் (வயது34). இவர் கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ஜோதி (27). இவர்களுக்கு திருமணமாகி 6 வயதில் தர்ஷன் என்ற மகனும், 3 வயதில் லிகிதா என்ற மகளும் உள்ளனர்.

    இந்த நிலையில் மாமியாருக்கும், மருமகள் ஜோதிக்கும் இைடயே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த 1-ம் தேதி மீண்டும் தகராறு ஏற்பட்டது.

    இந்நிலையில் கணவன் வேலைக்கு சென்ற பின்னர் ஜோதி வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். பின்னர் வெகுநேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அவரை பல்வேறு இடங்களில் தேடினார். எங்கு தேடியும் மனைவி கிடைக்கவில்லை.

    இது குறித்து வெங்கடேசன் மாரண்டஅள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான ஜோதியை தேடி வருகின்றனர்.

    • ஆச்சி என்கிற நிவேதா (வயது 28). இவர் கடந்த 25-ந்தேதி பகல் 11 மணி அளவில் வீட்டில் இருந்து வெளியில் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.
    • இவர் கணவர் பல இடங்களில் இவரைத் தேடியும் எங்கும் கிடைக்காதால் பண்ருட்டி போலீசில் புகார் கொடுத்தார்.

    கடலூர்:

    பண்ருட்டி அடுத்த மேல் கவரப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் சுபாஷ் சந்திர போஸ். இவரது மனைவி ஆச்சி என்கிற நிவேதா (வயது 28). இவர் கடந்த 25-ந்தேதி பகல் 11 மணி அளவில் வீட்டில் இருந்து வெளியில் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் இவரைத் தேடியும் எங்கும் கிடைக்காதால் பண்ருட்டி போலீசில் புகார் கொடுத்தார். இது குறித்து பண்ருட்டி போலீசார் கண்ணன் வழக்கு பதிவு செய்து காணாமல் போன நிவேதாவை தேடி வருகின்றனர்.

    • தென்செட்டியந்தல் கிராமத்தில் திருவிழாவுக்கு சென்று வருவதாக 2 குழந்தைகளை அழைத்துக் கொண்டு சந்தியா சென்றார்
    • திருவிழா முடிந்ததும் சந்தியா வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த மணிகண்டன் உறவினர் வீடுகளில் தேடினார்.

    கள்ளக்குறிச்சி:

    ஆத்தூர் அருகே உள்ள மஞ்சினி கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் (வயது 31) சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் இவருக்கு கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு சந்தியா (24) என்ற பெண்ணுடன் திருமணம் ஆனது. இவர்களுக்கு கிருபாஷினி என்கிற 4 வயது பெண் குழந்தையும் புவஸ்ரீ என்ற 5 மாத கை குழந்தை உள்ளது.

    இந்நிலையில் கடந்த 8-ம் தேதி சின்ன சேலம் அருகே உள்ள தென்செட்டியந்தல் கிராமத்தில் திருவிழாவுக்கு சென்று வருவதாக 2 குழந்தைகளை அழைத்துக் கொண்டு சந்தியா சென்றார். திருவிழா முடிந்ததும் சந்தியா வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த மணிகண்டன் உறவினர் வீடுகளில் தேடினார். ஆனால், எங்கு தேடியும் கிடைக்காததால் சின்ன சேலம் போலீஸ் நிலையத்தில் மணிகண்டன் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து 2 குழந்தைகளுடன் காணாமல் போன சந்தியாவை தேடி வருகின்றனர்.

    • மகாலட்சுமி திரும்ப வராததால் அவரது செல்போன் எண்ணுக்கு கார்த்திகேயன் போன் செய்தார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான மகாலட்சுமியை தேடி வருகின்றனா்.

    ஈரோடு:

    ஈரோடு வீரப்பன்சத்திரம் கொத்துக்காரர் தோட்டத்தை சேர்ந்த கார்த்திகேயன் (32). தொழிலாளி. இவரது மனைவி மகாலட்சுமி (23). இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது.

    இந்நிலையில் சம்பவத்தன்று கார்த்திகேயன் அவரது மனைவி மற்றும் குழந்தையுடன் சென்னிமலையில் உள்ள முருகன் கோவிலுக்கு சென்று விட்டு ஈரோடு நோக்கி வந்து கொண்டிருந்தார்.

    வெள்ளோடு அருகே வந்தபோது மகாலட்சுமி கழிப்பறைக்கு சென்று வருவதாக வருவதாக கூறி, அங்குள்ள கீழ் பவானி வாய்க்கால் கரையோரம் சென்றார்.

    நீண்ட நேரம் ஆகியும் மகாலட்சுமி திரும்ப வராததால் அவரது செல்போன் எண்ணுக்கு கார்த்திகேயன் போன் செய்தார். ஆனால் சுவிட்ச் ஆப் என வந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்து அக்கம்பக்கம், சுற்றுப்புற பகுதியில் தேடிப்பார்த்தும் மகாலட்சுமி கிடைக்கவில்லை. இதுகுறித்து வெள்ளோடு போலீசில் கார்த்திகேயன் புகார் அளித்தார்.

    இதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான மகாலட்சுமியை தேடி வருகின்றனா்.

    • இவர் தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வருவதால் கணவன் மனைவிக்குள் அடிக்கடிதகராறு இருந்து வந்துள்ளது.
    • சப் இன்ஸ்பெக்டர் சரண்யா ஆகியோர்வழக்கு பதிவு செய்து காணாமல்போன கஸ்தூரியை தேடி வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி பனங்காட்டு தெருவை சேர்ந்தவர் ஆனந்த். இவரது மனைவி கஸ்தூரி (வயது 30) இவர்களுக்குதிருமணம் ஆகி11ஆண்டுகள்ஆகிறது. இவர்களுக்குஒரு மகன் உள்ளான். ஆனந்த் குடிப்பழக்கம் உள்ளவர். இவர் தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வருவதால் கணவன் மனைவிக்குள் அடிக்கடிதகராறு இருந்துவந்துள்ளது.வழக்கம் போல நேற்று முன்தினம் 8ம்தேதி இரவு குடித்துவிட்டுஆனந்த் வீட்டுக்கு வந்துள்ளார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த அவரது மனைவி கஸ்தூரிசண்டை போட்டுவிட்டு படுத்து தூங்கிட்டார். காலையில் எழுந்து பார்த்தபோது மனைவியை காணவில்லை பல இடங்களில் தேடி எங்கும் கிடைக்காததால் பண்ருட்டி போலீசில் புகார் கொடுத்தார். பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் பொறுப்பு நந்தகுமார், சப் இன்ஸ்பெக்டர் சரண்யா ஆகியோர்வழக்கு பதிவு செய்து காணாமல்போன கஸ்தூரியை தேடி வருகின்றனர்.

    • புஞ்சை புளியம்பட்டி அருகே 2 குழந்தைகளுடன் மனைவி மாயமானார் இதையடுத்து கணவர் போலீசில் புகார் செய்தார்.
    • போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ஈரோடு:

    புளியம்பட்டி அடுத்துள்ள பனையம்பள்ளி, கே.வி.கே. நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன் (34). இவர் ஆயில் மில்லில் பணியாற்றி வருகின்றார்.

    இவரது மனைவி தனலட்சுமி (28). இவர்களுக்கு திவாகர் (11), தியாகு(8) ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர்.

    சம்வத்தன்று வழக்கம் போல ராஜேந்திரன் வேலைக்கு சென்றுவிட்டு மதியம் சாப்பிடுவதற்காக வீட்டிற்கு வந்த போது வீட்டில் மனைவி மற்றும் குழந்தைகள் மாயமாகி இருந்தது தெரியவந்தது.

    இதனால் அதிர்ச்சியடைந்த ராஜேந்திரன் பல்வேறு இடங்களில் தேடியும் எவ்வித தகவலும் கிடைக்காததால் புளியம்பட்டி போலீசில் இது குறித்து புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோல அந்தியூர் அடுத்துள்ள பர்கூர் மலைக்கிராமம் ஊசிமலையை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி கவிதா(35).

    இவர்களுக்கு 1 மகன், 2 பெண் குழந்தைகள் உள்ளனர். கட்டிட தொழிலாளியாக பணியாற்றி வந்த கவிதா சம்வத்தன்று வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.

    இது குறித்து கணவர் முருகன் பர்கூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்னர்.

    ×