மாமல்லபுரத்தில் மனைவி மாயம்- கணவர் புகார்

தாம்பரம் வரை செல்வதாக கணவரிடம் கூறிவிட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை.உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் தேடியும் எங்கும் இல்லை.
மாமல்லபுரத்தில் மனைவி மாயம்- கணவர் புகார்
Published on

மாமல்லபுரம்:

மாமல்லபுரம் அடுத்த நந்திமா நகரை சேர்ந்த ஏழுமலையின் மனைவி கலையரசி (வயது.35), திருப்போரூர் அருகே உள்ள ஆலத்தூர் தொழில்பேட்டையில் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். திருமணம் ஆகி 15ஆண்டுகள் ஆகியும் இவர்களுக்கு குழந்தை இல்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் தாம்பரம் வரை செல்வதாக கணவரிடம் கூறிவிட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை. உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் தேடியும் எங்கும் இல்லை. இதுகுறித்து மாமல்லபுரம் போலீஸ் நிலையத்தில் ஏழுமலை தனது மனைவியை கண்டுபிடித்து தரும்படி புகார் அளித்தார்.

மாமல்லபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன கலையரசியை தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com