search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Wife cheats"

    • விருதுநகர் அருகே 2-வது முறையாக மனைவி மாயமானார்.
    • இது தொடர்பாக அவரது கணவர் போலீசில் புகார் செய்தார்.

    விருதுநகர்

    விருதுநகர் அருகே உள்ள அல்லம்பட்டி பி.வி.ஆர். காலனியைச் சேர்ந்தவர் ராஜ்குமார். இவரது மனைவி கிருஷ்ணவேணி (வயது 30). இவர்களுக்கு 8 வருடங்களுக்கு முன்பு திருமணமானது.

    இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு கிருஷ்ண வேணி கோவில்பட்டி யில் நடந்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க செல்வதாக கூறிச் சென்றார். ஆனால் அவர் அங்கு செல்லாமல் மாரிக்கனி என்பவருடன் சென்றதாக கூறப்படுகிறது.

    இது குறித்து கணவர் கொ டுத்த புகாரின் அடிப் படையில் கோவில்பட்டி மேற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். கிருஷ்ணவேணி, மாரிக் கனி ஆகியோர் போலீஸ் நிலையத்தில் ஆஜராகினர். அவர்களை போலீசார் எச்சரித்து கிருஷ்ண வேணியை அவரது கணவருடன் அனுப்பி வைத்த னர். இந்த நிலையில் கிருஷ்ண வேணி மீண்டும் மாயமா னார். பல இடங்களில் தேடியும் கிடைக்க வில்லை. இது குறித்து ராஜ்குமார் சாத்தூர் டவுன் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    • தென்செட்டியந்தல் கிராமத்தில் திருவிழாவுக்கு சென்று வருவதாக 2 குழந்தைகளை அழைத்துக் கொண்டு சந்தியா சென்றார்
    • திருவிழா முடிந்ததும் சந்தியா வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த மணிகண்டன் உறவினர் வீடுகளில் தேடினார்.

    கள்ளக்குறிச்சி:

    ஆத்தூர் அருகே உள்ள மஞ்சினி கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் (வயது 31) சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் இவருக்கு கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு சந்தியா (24) என்ற பெண்ணுடன் திருமணம் ஆனது. இவர்களுக்கு கிருபாஷினி என்கிற 4 வயது பெண் குழந்தையும் புவஸ்ரீ என்ற 5 மாத கை குழந்தை உள்ளது.

    இந்நிலையில் கடந்த 8-ம் தேதி சின்ன சேலம் அருகே உள்ள தென்செட்டியந்தல் கிராமத்தில் திருவிழாவுக்கு சென்று வருவதாக 2 குழந்தைகளை அழைத்துக் கொண்டு சந்தியா சென்றார். திருவிழா முடிந்ததும் சந்தியா வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த மணிகண்டன் உறவினர் வீடுகளில் தேடினார். ஆனால், எங்கு தேடியும் கிடைக்காததால் சின்ன சேலம் போலீஸ் நிலையத்தில் மணிகண்டன் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து 2 குழந்தைகளுடன் காணாமல் போன சந்தியாவை தேடி வருகின்றனர்.

    ×