என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "complains to the police"

    • தென்செட்டியந்தல் கிராமத்தில் திருவிழாவுக்கு சென்று வருவதாக 2 குழந்தைகளை அழைத்துக் கொண்டு சந்தியா சென்றார்
    • திருவிழா முடிந்ததும் சந்தியா வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த மணிகண்டன் உறவினர் வீடுகளில் தேடினார்.

    கள்ளக்குறிச்சி:

    ஆத்தூர் அருகே உள்ள மஞ்சினி கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் (வயது 31) சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் இவருக்கு கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு சந்தியா (24) என்ற பெண்ணுடன் திருமணம் ஆனது. இவர்களுக்கு கிருபாஷினி என்கிற 4 வயது பெண் குழந்தையும் புவஸ்ரீ என்ற 5 மாத கை குழந்தை உள்ளது.

    இந்நிலையில் கடந்த 8-ம் தேதி சின்ன சேலம் அருகே உள்ள தென்செட்டியந்தல் கிராமத்தில் திருவிழாவுக்கு சென்று வருவதாக 2 குழந்தைகளை அழைத்துக் கொண்டு சந்தியா சென்றார். திருவிழா முடிந்ததும் சந்தியா வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த மணிகண்டன் உறவினர் வீடுகளில் தேடினார். ஆனால், எங்கு தேடியும் கிடைக்காததால் சின்ன சேலம் போலீஸ் நிலையத்தில் மணிகண்டன் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து 2 குழந்தைகளுடன் காணாமல் போன சந்தியாவை தேடி வருகின்றனர்.

    ×