என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தனியார் நிதி நிறுவன மேலாளர் மனைவி மாயம்
- கடந்த 1-ம் தேதி மீண்டும் தகராறு ஏற்பட்டது.
- கணவன் வேலைக்கு சென்ற பின்னர் ஜோதி வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார்.
மாரண்டஅள்ளி,
தருமபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி இ.பி. காலணி பகுதியில் வசித்து வருபவர் வெங்கடேசன் (வயது34). இவர் கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ஜோதி (27). இவர்களுக்கு திருமணமாகி 6 வயதில் தர்ஷன் என்ற மகனும், 3 வயதில் லிகிதா என்ற மகளும் உள்ளனர்.
இந்த நிலையில் மாமியாருக்கும், மருமகள் ஜோதிக்கும் இைடயே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த 1-ம் தேதி மீண்டும் தகராறு ஏற்பட்டது.
இந்நிலையில் கணவன் வேலைக்கு சென்ற பின்னர் ஜோதி வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். பின்னர் வெகுநேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அவரை பல்வேறு இடங்களில் தேடினார். எங்கு தேடியும் மனைவி கிடைக்கவில்லை.
இது குறித்து வெங்கடேசன் மாரண்டஅள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான ஜோதியை தேடி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்