search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மனைவி மாயம்: கணவர் புகார்
    X

    மனைவி மாயம்: கணவர் புகார்

    • மகாலட்சுமி திரும்ப வராததால் அவரது செல்போன் எண்ணுக்கு கார்த்திகேயன் போன் செய்தார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான மகாலட்சுமியை தேடி வருகின்றனா்.

    ஈரோடு:

    ஈரோடு வீரப்பன்சத்திரம் கொத்துக்காரர் தோட்டத்தை சேர்ந்த கார்த்திகேயன் (32). தொழிலாளி. இவரது மனைவி மகாலட்சுமி (23). இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது.

    இந்நிலையில் சம்பவத்தன்று கார்த்திகேயன் அவரது மனைவி மற்றும் குழந்தையுடன் சென்னிமலையில் உள்ள முருகன் கோவிலுக்கு சென்று விட்டு ஈரோடு நோக்கி வந்து கொண்டிருந்தார்.

    வெள்ளோடு அருகே வந்தபோது மகாலட்சுமி கழிப்பறைக்கு சென்று வருவதாக வருவதாக கூறி, அங்குள்ள கீழ் பவானி வாய்க்கால் கரையோரம் சென்றார்.

    நீண்ட நேரம் ஆகியும் மகாலட்சுமி திரும்ப வராததால் அவரது செல்போன் எண்ணுக்கு கார்த்திகேயன் போன் செய்தார். ஆனால் சுவிட்ச் ஆப் என வந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்து அக்கம்பக்கம், சுற்றுப்புற பகுதியில் தேடிப்பார்த்தும் மகாலட்சுமி கிடைக்கவில்லை. இதுகுறித்து வெள்ளோடு போலீசில் கார்த்திகேயன் புகார் அளித்தார்.

    இதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான மகாலட்சுமியை தேடி வருகின்றனா்.

    Next Story
    ×