search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "complaint to police"

    • எனது குடும்ப கோவில்-நிலத்தை அபகரிக்க முயற்சி செய்கிறார்கள் என்று ரஜினி மன்ற பிரமுகர் போலீசில் புகார் செய்தார்.
    • இதனை தடுத்து நிறுத்தி உடனடியாக எங்களுக்கு உரிய சட்டப் பாதுகாப்பை வழங்க வேண்டும்.

    மதுரை

    மதுரை சின்ன சொக்கி குளம் பகுதியை சேர்ந்தவர் பாலநமச்சிவாயன். ரஜினி மன்ற நிர்வாகியான இவர் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகா சத்திரக் குடி போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்து உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    எங்களது குடும்பத்திற்கு சொந்தமாக பூர்வீகமான குமர கடவுள் சிலை, கிரீடம் மற்றும் எனது தாத்தாவின் சமாதி ஆகியவை முது குளத்தூர் அருகே வளநாடு கிராமத்தில் கருப்ப பிள்ளை மடம் என்ற பெயரில் உள்ளது.

    இங்கே பொதுமக்கள் வழிபாடு எதுவும் இல்லை. எங்கள் குடும்ப வழிபாடு மட்டுமே நடந்து வருகிறது. இது தனியார் கோவில். தனியார் சொத்து என்ப தற்கான உரிமை கோரி முதுகுளத்தூர் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்து நிலுவையில் இருந்து வரும் நிலையில் பரமக்குடி இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் அந்த கோவில் மற்றும் இடத்தை அப கரிக்கும் நோக்கில் அதன் சாவியை கேட்டு மிரட்டு கிறார்கள். சாவியை தரா விட்டால் பூட்டை உடைத்து உள்ளே செல்வோம் என்றும் வழக்கு நிலுவையில் இருப் பதையும் பொருட்படுத்தா மல் அதிகார துஷ்பிரயோகம் செய்து வருகிறார்கள்.

    யாரோ தூண்டுதலின் பேரில் எங்களது குடும்ப கோவில், நகை மற்றும் இடத்தை அபகரிக்க இந்து சமய அறநிலைத்துறை அதி காரிகள் முயற்சிக்கிறார்கள். எனவே இதனை தடுத்து நிறுத்தி உடனடியாக எங்க ளுக்கு உரிய சட்டப் பாது காப்பை வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரி வித்துள்ளார்.

    • இவர் கடந்த 6-ந் தேதி விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு பயிர்களை விற்க வந்துள்ளார்.
    • ஜெயராமன் 2 நாட்களாக வீடு திரும்பவில்லை.

    கடலூர்:

    ஸ்ரீமுஷ்ணம் அருகே அம்புஜவல்லி பேட்டை யைசேர்ந்தவர் ஜெயராமன்(வயது80) விவசாயி. இவர் கடந்த 6-ந் தேதி விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு பயிர்களை விற்க வந்துள்ளார். பிறகு மாலை தன்னுடன் இருந்த உறவினர் ஜெயச்சந்திரன் என்பவரிடம், தன்னுடைய வீட்டிற்கு பிறகு வருகிறேன் எனக்கூறி அவரை அனுப்பியுள்ளார். ஆனால் ஜெயராமன் 2 நாட்களாக வீடு திரும்பவில்லை.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது மகன் செம்பையன் அவரை பல இடங்கில் தேடி உள்ளார்.ஆனால் எங்கும் ஜெயராமன் கிடைக்காததால் அதிர்ச்சி அடைந்த செம்பையன் போலீசில் புகார் அளித்துள்ளார். சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த விருத்தாசலம் போலீசார் காணாமல் போன ஜெயராமனை தேடி வருகின்றனர்.

    • 2 நாட்களுக்கு முன்பு வள்ளி தனது கணவரிடம் ஆஸ்பத்திரிக்கு செல்வதாக கூறி மகனை அழைத்து சென்றவர் வீடு திரும்பவில்லை.
    • எங்கு ,தேடியும் அவர்கள் கிடைக்க வில்லை.போலீசில் அவர் கணவர் புகார் செய்தார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி வடுக பாளை யத்தை சேர்ந்தவர் பொன்ன ம்பலம். அவரது மணைவி வள்ளி (வயது 32). அவரது மகன் பிரதீப் (5)  கடந்த 2 நாட்களுக்கு முன்பு வள்ளி தனது கணவரிடம் ஆஸ்பத்திரிக்கு செல்வதாக கூறி மகனை அழைத்து சென்றார். அதன்பின்னர் அவர் வீடு திரும்பவில்லை

    . அதிர்ச்சி யடைந்த பொன்னம்பலம் தனது மனைவி மற்றும் மகனை பல்வேறு இடங்க ளில் தேடினார். எங்கு தேடியும் அவர்கள் கிடைக்க வில்லை.  இதுகுறித்து பண்ரு ட்டி போலீசில் பொன்ன ம்பலம் புகார் செய்தார். புகார் மனுவில் வடுகபாளை யத்தை சேர்ந்த சக்திவேல் என்பவர் ஆசைவார்த்தை கூறி தனது மனைவியை கடத்தி சென்றுவிட்டதாக கூறியுள்ளார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் வழக்குபதிந்து வள்ளி மற்றும் குழந்தையை தேடி வருகிறார்கள்.

    • கோமதி வீடு திரும்பாததால் சந்தேகம் அடைந்த பெற்றோர் கோமதியை தேடிப் பார்த்தனர்,
    • எங்கு தேடியும் கிடைக்காததால் போலீசில் புகார் அளித்தனர்,

    கள்ளக்குறிச்சி:

    சின்னசேலம் அருகே எரவார் கிராமத்தில் வசிக்கும் ராஜாமணி (வயது 55) இவரது கணவர் பெரியசாமி மகள் கோமதியுடன் வசித்து வந்தார். இந்நிலையில் கோமதி நேற்று அதிகாலையில் தோட்டத்திற்கு சென்று வருவதாக கூறிவிட்டு வீட்டிலிருந்து சென்றார். பின்னர் கோமதி வீடு திரும்பாததால் சந்தேகம் அடைந்த பெற்றோர் கோமதியை உறவினர் வீடு, அருகில் உள்ள இடங்களில் தேடிப் பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து தாய் ராஜாமணி கொடுத்த புகாரின் பேரில் சின்ன சேலம் போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன கோமதியை தேடி வருகின்றனர்.

    • சிதம்பரத்தில் கடைக்கு சென்ற 7-ம் வகுப்பு மாணவன் மாயமானர்.
    • சந்தேகம் அடைந்த பெற்றோர் பல்வேறு பகுதிகளில் தேடியும் கிடைக்கவில்லை.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் மேல புதுத் தெருவை சேர்ந்தவர் சபரிநாதன். அவரது மகன் சதீஷ்குமார் (வயது 12). இவர் சிதம்பரத்தில் உள்ள ஆறுமுகநாவலர் மேல்நிலைப் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 19-ந் தேதி அன்று மாலை வீட்டின் அருகே உள்ள பெட்டிக் கடையில் மாவு வாங்கி வரச் சென்றார்.ஆனால் கடைக்கு சென்ற சதீஷ்குமார் வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த பெற்றோர் பல்வேறு பகுதிகளில் தேடியும் கிடைக்கவில்லை. இதனையடுத்து இவர் தந்தை சபரிநாதன் சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் சிறுவனை தேடி வருகின்றனர்.

    ×