சின்னசேலம் அருகே மகள் மாயம்; தாய் போலீசில் புகார்

கோமதி வீடு திரும்பாததால் சந்தேகம் அடைந்த பெற்றோர் கோமதியை தேடிப் பார்த்தனர், எங்கு தேடியும் கிடைக்காததால் போலீசில் புகார் அளித்தனர்,
சின்னசேலம் அருகே மகள் மாயம்; தாய் போலீசில் புகார்
Published on

கள்ளக்குறிச்சி:

சின்னசேலம் அருகே எரவார் கிராமத்தில் வசிக்கும் ராஜாமணி (வயது 55) இவரது கணவர் பெரியசாமி மகள் கோமதியுடன் வசித்து வந்தார். இந்நிலையில் கோமதி நேற்று அதிகாலையில் தோட்டத்திற்கு சென்று வருவதாக கூறிவிட்டு வீட்டிலிருந்து சென்றார். பின்னர் கோமதி வீடு திரும்பாததால் சந்தேகம் அடைந்த பெற்றோர் கோமதியை உறவினர் வீடு, அருகில் உள்ள இடங்களில் தேடிப் பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து தாய் ராஜாமணி கொடுத்த புகாரின் பேரில் சின்ன சேலம் போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன கோமதியை தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com