search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இளம்பெண் மாயம் ..
    X

    இளம்பெண் மாயம் ..

    • இவர் விழுப்புரம் எம்.ஜி.ஆர் கல்லூரியில் பி.ஏ. 3-ம் ஆண்டு படித்து வருகிறார்,
    • எங்கு தேடியும் தனது மகள் கிடைக்காததால் திருவெண்ணைநல்லூர் போலீசில் புகார் கொடுத்தனர்.

    விழுப்புரம்:

    திருவெண்ணைநல்லூர் அருகே பேரங்கியூர் புதுகாலணியைச் சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மகள் கபிலா (வயது 20), இவர் விழுப்புரம் எம்.ஜி.ஆர் கல்லூரியில் பி.ஏ. 3-ம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 6-ந் தேதி கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற கபிலா இரவு நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் தங்களது உறவினர்கள் வீடுகளில் தேடினர். ஆனால் எங்கு தேடியும் தனது மகள் கிடைக்காததால் திருவெண்ணைநல்லூர் போலீசில் புகார் கொடுத்தனர். ஏழுமலை கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மணிகன்டன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

    Next Story
    ×