search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போலீசார் விசாரணை"

    DGL0405052024: தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே சின்ன ஓவுலாபுரம் வரதராஜபுரத்தைச் சேர்ந்தவர் சந்திரவேல்முருகன் (வயது 49). கூலித் தொழிலாளி. இவருக்கு சுதா என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். சம்பவத்தன்று கூடலூருக்கு மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்ற சந்திரவேல்

    உத்தமபாளையம்:

    தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே சின்ன ஓவுலாபுரம் வரதராஜபுரத்தைச் சேர்ந்தவர் சந்திரவேல்முருகன் (வயது 49). கூலித் தொழிலாளி. இவருக்கு சுதா என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

    சம்பவத்தன்று கூடலூருக்கு மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்ற சந்திரவேல் முருகன் இரவு வீடு திரும்பவில்லை. அவரது செல்போனும் அணைத்து வைக்கப்பட்டு இருந்தது. இது குறித்து அவரது குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் ராயப்பன்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    இந்த நிலையில் எரசக்கநாயக்கனூர் பகுதியில் உள்ள தண்ணீர் இல்லாத பாழடைந்த கிணற்றில் சந்திரவேல் முருகன் மற்றும் அவரது பைக் கிடந்தது. சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவரது உடலில் வெட்டுக்காயங்கள் இருந்ததால் கொலை செய்யப்பட்டதும் உறுதி செய்யப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து போலீசார் அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவை ஆய்வு செய்தனர். மேலும் சந்திரவேல் முருகனுக்கு யாருடனும் முன் பகையா என விசாரணை மேற்கொண்டனர். இதில் அவரது உறவினர் கவிசீலன் மகன்கள் நிஷாந்த் (வயது 26), நிவிஸ் (24) ஆகியோர் முன் விரோதம் காரணமாக சந்திரவேல்முருகனை வெட்டிக் கொன்று கிணற்றில் வீசியது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து 2 பேரையும் கைது செய்தனர்.

    இது குறித்து போலீசார் கூறுகையில், சந்திரவேல் முருகன் குடும்பத்துக்கும் கவிசீலன் குடும்பத்துக்கும் முன் பகை இருந்துள்ளது. கடந்த வருடம் வருசநாடு தருமராஜபுரம் பகுதியில் நடைபெற்ற பஞ்சாயத்தில் சந்திரவேல்முருகனின் மருமகன் நல்லசாமி கொலை செய்யப்பட்டார். இது குறித்த வழக்கு கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இதனால் இரு குடும்பத்துக்கும் இடையே அடிக்கடி வாய் தகராறு ஏற்பட்டது. இதில் சந்திரவேல்முருகன் கவிசீலனின் மனைவி பேச்சியம்மாளை தாக்கியுள்ளார். இது குறித்து ராயப்பன்பட்டி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதனை மனதில் வைத்துக் கொண்டு மகன்கள் நிஷாந்த், நிவிஸ் ஆகியோர் சந்திரவேல்முருகனை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர். பின்னர் உடல் மற்றும் பைக்கை கிணற்றில் வீசி சென்றுள்ளனர் என தெரிவித்தனர்.

    • வேல்கம்பியில் பதிவாகியுள்ள கைரேகையை அதிகாரிகள் எடுத்தனர்.
    • கொள்ளையர்கள் ஏதாவது தடயங்களை விட்டு சென்றுள்ளார்களா என ஆய்வு செய்தனர்.

    தாரமங்கலம்:

    தாரமங்கலம் அருகில் உள்ள ஆரூர்பட்டி கிராமம் கணக்குப்பட்டி பகுதியில் நூற்றாண்டு பழமை வாய்ந்த பெரமனார் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் கணேசன் (33) என்பவர் பூசாரியாக உள்ளார்.

    இவர் அதிகாலை 5 மணிக்கு கோவிலுக்கு வந்து கோவிலை திறந்து பூஜைகளை முடித்துவிட்டு மாலையில் வீடு திரும்புவது வழக்கம்.

    அதுபோல் அதிகாலையில் கோவிலை திறந்து பூஜைகள் செய்துவிட்டு 11 மணியளவில் கணேசன் வீட்டிற்கு சென்றுள்ளார். அதன் பிறகு மாலை 5 மணி அளவில் கோவில் அருகில் வசிக்கும் கோவில் நிர்வாகத்தை சேர்ந்த செல்வம் மகன் ராஜரத்தினவேல் கோவிலை பூட்டி சாவியை வீட்டுக்கு எடுத்து சென்றார்.

    இந்த நிலையில் இன்று காலை வழக்கம் போல் கோவிலுக்கு வந்த பூசாரி கணேசன் கோவிலை திறந்து உள்ளே சென்றபோது உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்த சில்லரை காசுகள் சிதறி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது பற்றி அக்கம் பக்கத்தில் வசிக்கும் கோவில் நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவித்தார்.

    உடனே அவர்கள் அங்கு வந்து பார்த்தபோது மர்ம நபர்கள் கடப்பாரை மற்றும் கோவில் முன்பு நடப்பட்டிருந்த இரும்பு வேல் ஆகியவற்றை கொண்டு உண்டியலை உடைத்து அதில் பக்தர்கள், பொதுமக்கள் காணிக்கை செலுத்திய பணம் மற்றும் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளது தெரியவந்தது.

    இது பற்றி கோவில் நிர்வாகத்தினர் தாரமங்கலம் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன், சப்-இன்ஸ்பெக்டர் மாதையன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தியபோது உண்டியலில் இருந்த ரூ.5 லட்சத்திற்கும் மேற்பட்ட தங்க நகை மற்றும் பணம் கொள்ளை போயிருப்பதும், கோவிலில் சி.சி.டி.வி.கேமரா பொருத்தப்படவில்லை. இதை நோட்டமிட்டு கொள்ளை கும்பல் கைவரிசை காட்டியுள்ளதும் தெரியவந்தது.

    கைரேகை நிபுணர்கள், தடயவியல் நிபுணர்கள் கோவிலுக்கு வந்து உண்டியல் மற்றும் கதவு உள்ளிட்டவைகளில் மர்ம நபர்களின் கைரேகை பதிவாகி உள்ளதா? என ஆய்வு செய்தனர்.

    கோவில் முன்பு நடப்பட்டிருந்த வேல்கம்பியை பிடுங்கி எடுத்து உண்டியலில் இருந்த பூட்டை நெம்பி உடைத்து விட்டு மீண்டும் அதே இடத்தில் வேல்கம்பியை கொள்ளையர்கள் நட்டுள்ளனர். இந்த வேல்கம்பியில் பதிவாகியுள்ள கைரேகையை அதிகாரிகள் எடுத்தனர். மேலும் கொள்ளையர்கள் ஏதாவது தடயங்களை விட்டு சென்றுள்ளார்களா? என ஆய்வு செய்தனர்.

    கோவில் அருகாமையில் உள்ள வீடுகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் கொள்ளையர்கள் நடமாட்டம் பதிவாகி இருக்கிறதா? என போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் சாலையில் நேற்று நள்ளிரவு முதல் இன்று அதிகாலை வரை சந்தேகத்துக்கு இடமான வகையில் யாராவது சென்றார்களா? என அக்கம், பக்கத்தினரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவிலுக்குள் மர்ம நபர்கள் புகுந்து உண்டியலை உடைத்து பணம், நகையை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் மக்கள், பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • ஆஸ்பத்திரி நிர்வாகம் கொடுத்த தகவலின்படி மாம்பலம் போலீசார் நர்சு மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
    • எழும்பூர் அரசு மருத்துவமனையில் நர்சு சிகிச்சை பெற்று வந்தார்.

    சென்னை:

    சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 24 வயது இளம்பெண் நர்சாக வேலை பார்த்து வந்தார். இவர் தியாகராய நகர் சவுத்போக் பகுதியில் உடன் வேலைபார்க்கும் தோழிகளுடன் தங்கி இருந்தார்.

    இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் உசிலம்பட்டியை சேர்ந்த வாலிபர் ஒருவரிடம் திருமணம் செய்யாமல் நெருங்கி பழகினார். இதில் நர்சு கர்ப்பமானார்.

    இந்த நிலையில், அறையில் இருந்தபோது 7 மாதமாக கர்ப்பிணியாக இருந்த நர்சுக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டது. இதையடுத்து கழிவறைக்கு சென்ற நர்சு தனக்கு தானே பிரசவம் பார்த்தார்.

    அப்போது குழந்தையை வெளியே எடுக்க முடியாமல் அதன் ஒரு காலை வெட்டி எடுத்தார். இதில் பெண் குழந்தை இறந்தது. நர்சின் அலறல் சத்தம் கேட்டு வந்த உடன் தங்கி இருந்த தோழிகள் குழந்தையின் உடலையும், நர்சையும் மீட்டு எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு நர்சுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ஆஸ்பத்திரி நிர்வாகம் கொடுத்த தகவலின்படி மாம்பலம் போலீசார் நர்சு மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

    விசாரணையில், பிரசவத்தின் போது குழந்தையின் காலை வெட்டி எடுத்ததால் அந்த பெண் குழந்தை இறந்து இருப்பது டாக்டர்களின் பரிசோதனையில் தெரியவந்தது. இதையடுத்து நர்சு மீது மாம்பலம் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்தனர்.

    இந்நிலையில், எழும்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நர்சை போலீசார் கைது செய்துள்ளனர். குழந்தை இறந்ததால் நர்சு மீது 2 பிரிவுகளின் கீழ் கொலை வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

    • கர்ப்பிணி உயிரிழந்த விவகாரம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை.
    • அனைத்து ரெயில்களிலும் பாதுகாப்பு அம்சங்கள் சரிவர இயங்குகிறதா? என கண்காணிக்க உத்தரவு.

    சென்னையில் நேற்று பயணிகளை ஏற்றிக்கொண்டு கொல்லத்துக்கு புறப்பட்ட எக்ஸ்பிரஸ் ரெயில், உளுந்தூர்பேட்டைக்கும், விருத்தாசலத்துக்கும் இடையே வந்தபோது, 7 மாத கர்ப்பிணி பெண் கஸ்தூரி (22) தவறி கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதையடுத்த, கர்ப்பிணி கஸ்தூரியின் உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவரது வயிற்றில் 7 மாத ஆண் குழந்தை சடலமாக இருந்தது பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

    இந்நிலையில், ஓடும் ரெயிலில் இருந்து பெண் தவறி விழுந்து உயிரிழந்த விவகாரத்தில் விபத்து தொடர்பாக உரிய விசாரணை நடத்த ரெயில்வே துறை அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

    மேலும், அனைத்து ரெயில்களிலும் பாதுகாப்பு அம்சங்கள் சரிவர இயங்குகிறதா ? என்பதை கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    • மேம்பாலத்தின் அடியில் இருந்து இன்று கடும் துர்நாற்றம் வீசியது.
    • அழுகிய நிலையில் பிணமாக கிடந்த 3 பேர் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம்-சின்னப்பம்பட்டி செல்லும் சாலையில் உள்ளது பணிக்கனூர். இங்கு ராஜரத்தினம் என்பவருக்கு சொந்தமான தென்னந்தோப்பு அருகே மேம்பாலம் ஒன்று உள்ளது.

    இந்த மேம்பாலத்தின் அடியில் இருந்து இன்று கடும் துர்நாற்றம் வீசியது. இதையடுத்து தோட்ட உரிமையாளர் ராஜரத்தினம் சென்று எட்டி பார்த்துள்ளார். அப்போது ஒருவர் உடல் அழுகிய நிலையில் இறந்து கிடந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் இதுகுறித்து ஜலகண்டாபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

    இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு 2 ஆண்கள் மற்றும் ஒரு பெண் அழுகிய நிலையில் பிணமாக கிடப்பது தெரிய வந்தது. அவர்களுக்கு சுமார் 50 முதல் 60 வயது வரை இருக்கும் என்று தெரிய வந்தது.

    பிணமாக கிடந்த அவர்கள் அருகில் ஒரு மொபட்டும், மதுபாட்டில், தண்ணீர் இருந்தது. அவர்கள் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவில்லை. மேலும் அவர்கள் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்களா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அழுகிய நிலையில் பிணமாக கிடந்த 3 பேர் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கஸ்தூரி தவறி கீழே விழுந்த உடன் உறவினர்கள், அந்த பெட்டியில் இருந்த அபாய சங்கிலியை பிடித்து இழுத்தனர்.
    • கஸ்தூரி பலியான இடம் திருச்சி ரெயில்வே கோட்டத்தில் வருவதால் திருச்சி கோட்ட அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளனர்.

    விருத்தாசலம்:

    தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள மேலநீழிதநல்லூர் கிழக்குத்தெருவை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (வயது 25). இவர், சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

    இவருக்கும், சென்னை பெரியார் நகர் திரிசூலத்தை சேர்ந்த பி.எஸ்சி. நர்சிங் பட்டதாரியான கஸ்தூரி (22) என்பவருக்கும் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. கஸ்தூரி 7 மாத கர்ப்பிணியாக இருந்தார்.

    இதனிடையே மேலநீழிதநல்லூரில் நடைபெறும் கோவில் திருவிழாவில் பங்கேற்கவும், அங்கு நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) கஸ்தூரிக்கு வளைகாப்பு நடத்தவும் உறவினர்கள் திட்டமிட்டனர்.

    அதன்படி கொல்லம் எக்ஸ்பிரஸ் ரெயிலில் சொந்த ஊருக்கு செல்ல சுரேஷ்குமார் தனது மனைவி மற்றும் உறவினர்களுக்கு டிக்கெட் முன்பதிவு செய்திருந்தார். அந்த ரெயிலில் எஸ்-9 என்ற பெட்டியில் அனைவரும் பயணம் செய்தனர்.

    இந்த ரெயில் நேற்று இரவு 8 மணி அளவில் உளுந்தூர்பேட்டை பகுதியில் வந்து கொண்டிருந்த போது, கஸ்தூரிக்கு வாந்திக்கான அறிகுறி ஏற்பட்டது. உடனே அவர், தனது உறவினர்கள் உதவியுடன் எஸ்-9 பெட்டியில் உள்ள கை கழுவும் இடத்திற்கு வந்தார்.

    அந்த இடத்தில் வாந்தி எடுத்தபடி கஸ்தூரி நின்று கொண்டிருந்தார். அப்போது அவர் நிலை தடுமாறி ரெயிலில் இருந்து தவறி கீழே விழுந்து பலியானார்.

    கஸ்தூரி தவறி கீழே விழுந்த உடன் உறவினர்கள், அந்த பெட்டியில் இருந்த அபாய சங்கிலியை பிடித்து இழுத்தனர். ஆனால் ரெயில் நிற்கவில்லை. அப்போதுதான், அந்த அபாய சங்கிலி, வேலை செய்யாமல் செயல் இழந்து இருந்தது தெரிய வந்தது.

    உடனே உறவினர்கள் பக்கத்தில் உள்ள எஸ்-8 பெட்டிக்கு ஓடிச் சென்று, அங்குள்ள அபாய சங்கிலியை பிடித்து இழுத்துள்ளனர். அதன் பிறகே ரெயில் நின்றுள்ளது. அதற்குள் அந்த ரெயில் கர்ப்பிணி விழுந்த இடத்தில் இருந்து 8 கிலோ மீட்டர் தூரத்திற்கு சென்று விட்டது. உடனடியாக ரெயில் நின்றிருந்தால் கர்ப்பிணியை காப்பாற்றி இருக்கலாம் என்று கஸ்தூரியின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

    இதற்கிடையே கஸ்தூரி இறந்தது குறித்து விசாரணை நடத்த தெற்கு ரெயில்வே உத்தரவிட்டுள்ளது. கஸ்தூரி பலியான இடம் திருச்சி ரெயில்வே கோட்டத்தில் வருவதால் திருச்சி கோட்ட அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளனர்.

    மேலும் கஸ்தூரி பலியான ரெயில் தற்போது கொல்லம் சென்றடைந்து விட்டதால் அங்கு வைத்து அபாய சங்கிலி சரியாக வேலை செய்கிறதா? என்பது தொடர்பாக ஒவ்வொரு பெட்டியிலும் ரெயில்வே பணியாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.

    இதற்கிடையே கஸ்தூரிக்கு திருமணமாகி 9 மாதங்களே ஆவதால் அவரது இறப்பு குறித்து விசாரிக்க ஆர்.டி.ஓ.வுக்கு (கோட்டாட்சியர்) விருத்தாசலம் ரெயில்வே போலீசார் பரிந்துரை செய்துள்ளனர். அதன்படி திருக்கோவிலூர் ஆர்.டி.ஓ. கண்ணன் விசாரணை நடத்த உள்ளார்.

    • சிக்கன் ரைஸ் வாங்கிச் சென்ற அவரது பேரன் பகவதியிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர்.
    • பேரன் பகவதியை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தியதில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

    நாமக்கல்:

    நாமக்கல் பஸ் நிலையம் எதிரில் ஜீவானந்தம் (வயது 32) என்பவர் ஓட்டல் நடத்தி வருகிறார். இந்த ஓட்டலில் கடந்த 30-ந் தேதி எருமப்பட்டி அருகே உள்ள தேவராயபுரத்தை சேர்ந்த தனியார் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் பகவதி (20) சிக்கன் பிரியாணி சாப்பிட்டு உள்ளார்.

    தொடர்ந்து, 7 'சிக்கன் ரைஸ்' பொட்டலம் வாங்கி கொண்டு, வீட்டில் உள்ள தனது தாயார் நதியா (40), தாத்தா சண்முகம் (67) உள்ளிட்ட குடும்பத்தினருக்கு கொடுத்து உள்ளார். இதற்கிடையே 'சிக்கன் ரைஸ்' சாப்பிட்ட நதியா, சண்முகம் ஆகியோருக்கு மட்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, செயற்கை சுவாசம் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்தனர்.

    முன்னதாக சிகிச்சைக்கு வந்த 2 பேரும் வாயில் நுரை தள்ளியபடி வந்தனர். எனவே அவர்களுக்கு உணவு ஒவ்வாமையால் பிரச்சினை ஏற்பட்டு இருக்க வாய்ப்பு குறைவு எனவும், சாப்பாட்டில் விஷம் கலந்து இருக்க வாய்ப்பு இருக்கலாம் எனவும் மருத்துவமனை டாக்டர்கள் குழுவினர் தெரிவித்தனர்.

    இதற்கிடையே நேற்று முன்தினம் ஓட்டலில் ஆய்வு மேற்கொண்ட கலெக்டர் உமா, சம்பந்தப்பட்ட ஓட்டலுக்கு சீல் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து ஓட்டலுக்கு உணவு பாதுகாப்புத்துறையினர் சீல் வைத்தனர்.

    மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்த கலெக்டர் உமா போலீசாருக்கு உத்தரவிட்டார். அவர்களும் 'சிக்கன் ரைஸ்' உணவு மாதிரியை எடுத்து, சேலம் உணவு பகுப்பாய்வு கூடத்துக்கு அனுப்பினர். மேலும் கல்லூரி மாணவர் பகவதி மற்றும் ஓட்டல் உரிமையாளர் ஜீவானந்தம் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். இதற்கிடையே உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த கூலித்தொழிலாளி சண்முகம் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    அவர் சாப்பிட்ட உணவு மாதிரியை சேகரித்து போலீசார் சேலத்தில் உள்ள பகுப்பாய்வு மையத்திற்கு அனுப்பி இருந்தனர். இதற்கிடையே நேற்று இரவு சிக்கன் ரைசில் பூச்சிக்கொல்லி (விஷம்) கலந்து இருப்பது உறுதி செய்யப்பட்டது. மேலும் தொழிலாளி சண்முகம் உணவில் விஷம் கலந்து கொலை செய்யப்பட்டதும் உறுதியானது.

    இதற்கிடையே போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் பேரன் பகவதிக்கு கள்ளத்தொடர்பு இருந்ததாகவும், அதை கண்டித்ததால் சண்முகம் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. எனவே சிக்கன் ரைஸ் வாங்கிச் சென்ற அவரது பேரன் பகவதியிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர்.

    இந்நிலையில் தொழிலாளி சண்முகம் உயிரிழந்த விவகாரத்தில் அதிரடி திருப்பமாக சிக்கன் ரைசில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்ததை பேரன் பகவதி ஒப்புக்கொண்டார்.

    காதல் விவகாரத்தை குடும்பத்தினர் கண்டித்ததால் சிக்கன் ரைஸில் பூச்சிக்கொல்லியை கலந்து கொடுத்தாக பகவதி ஒப்புக்கொண்டார்.

    உடல்நலம் பாதிக்கப்பட்ட தாய் நதியாவுக்கு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    • கொல்லம் எக்ஸ்பிரஸ் ரெயிலில் சொந்த ஊருக்கு செல்ல சுரேஷ்குமார் தனது மனைவி மற்றும் உறவினர்களுக்கு டிக்கெட் முன்பதிவு செய்திருந்தார்.
    • கோவில் திருவிழாவில் பங்கேற்க செல்வதெனவும், அங்கேயே நாளை மறுநாள்(ஞாயிற்றுக்கிழமை) கஸ்தூரிக்கு வளைகாப்பு நடத்தவும் உறவினர்கள் திட்டமிட்டனர்.

    விருத்தாசலம்:

    சென்னையில் நேற்று பயணிகளை ஏற்றிக்கொண்டு கொல்லத்துக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டது. இந்த ரெயில் உளுந்தூர்பேட்டைக்கும், விருத்தாசலத்துக்கும் இடையே வந்தபோது, 7 மாத கர்ப்பிணி பெண் தவறி கீழே விழுந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பெண்ணின் உறவினர்கள், உடனடியாக பக்கத்து பெட்டியில் உள்ள அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரெயிலை நடுவழியில் நிறுத்தினர். பின்னர் ரெயிலில் இருந்து இறங்கிய உறவினர்கள், கர்ப்பிணி தவறி விழுந்த இடம் நோக்கி ஓடிச் சென்று பார்த்தனர். ஆனால் அந்த கர்ப்பிணி கிடைக்கவில்லை.

    பின்னர் அந்த ரெயில் அங்கிருந்து புறப்பட்டு, விருத்தாசலம் ரெயில் நிலையத்துக்கு வந்தது. அதாவது இரவு 8.10 மணிக்கு வர வேண்டிய ரெயில், 20 நிமிடம் தாமதமாக இரவு 8.30 மணிக்கு வந்தடைந்தது.

    ரெயிலில் இருந்து இறங்கிய கர்ப்பிணியின் உறவினர்கள் கதறி அழுதனர். உடனே அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள், சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்த சுரேஷ்குமார் மனைவி கஸ்தூரி என்ற 7 மாத கர்ப்பிணி பெண் தவறி விழுந்து விட்டதாகவும், அவரை உடனடியாக மீட்டு தருமாறும் கூறினர்.

    இதையடுத்து போலீசார் விரைந்து சென்று கஸ்தூரியை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது உளுந்தூர்பேட்டையில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் கஸ்தூரி இறந்து கிடந்தார். அவரது உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர்.

    போலீசார் நடத்திய விசாரணையில் வெளியான தகவல் விவரம் வருமாறு:-

    தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள மேலநீழிதநல்லூர் கிழக்குத்தெருவை சேர்ந்தவர் சுரேஷ்குமார்(வயது 25). இவர், சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும், சென்னை பெரியார் நகர் திரிசூலத்தை சேர்ந்த பி.எஸ்சி. நர்சிங் பட்டதாரியான கஸ்தூரி(22) என்பவருக்கும் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. கஸ்தூரி 7 மாத கர்ப்பிணியாக இருந்தார்.

    இதனிடையே மேலநீழிதநல்லூரில் நடைபெறும் கோவில் திருவிழாவில் பங்கேற்க செல்வதெனவும், அங்கேயே நாளை மறுநாள்(ஞாயிற்றுக்கிழமை) கஸ்தூரிக்கு வளைகாப்பு நடத்தவும் உறவினர்கள் திட்டமிட்டனர்.

    அதன்படி கொல்லம் எக்ஸ்பிரஸ் ரெயிலில் சொந்த ஊருக்கு செல்ல சுரேஷ்குமார் தனது மனைவி மற்றும் உறவினர்களுக்கு டிக்கெட் முன்பதிவு செய்திருந்தார். அந்த ரெயிலில் எஸ்-9 பெட்டியில் அனைவரும் பயணம் செய்தனர். இந்த ரெயில் இரவு 8 மணி அளவில் உளுந்தூர்பேட்டை பகுதியில் வந்து கொண்டிருந்தபோது, கஸ்தூரிக்கு வாந்திக்கான அறிகுறி ஏற்பட்டது. உடனே அவர், தனது உறவினர்கள் உதவியுடன் எஸ்-9 பெட்டியில் உள்ள கை கழுவும் இடத்திற்கு வந்தார். அந்த இடத்தில் வாந்தி எடுத்தபடி கஸ்தூரி நின்று கொண்டிருந்தார். அப்போது அவர் நிலைதடுமாறி ரெயிலில் இருந்து தவறி கீழே விழுந்து பலியானார்.

    மேற்கண்ட தகவல் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

    • பல வருடங்களாக பல தொழில் அதிபர்களை தங்கள் வலையில் சிக்கவைத்து லட்சக்கணக்கில் பணம் பறித்தது தெரியவந்தது.
    • வெளிமாவட்டங்கள் மட்டுமல்லாது நெல்லை மாவட்டத்திலும் சில தொழிலதிபர்கள் சபலத்தால் இந்த கும்பலிடம் சிக்கி பணத்தை இழந்துள்ளனர்.

    நெல்லை:

    சேலம் மாவட்டம் அய்யன் பெருமாள்பட்டியை சேர்ந்தவர் நித்தியானந்தம் (வயது 47). இவர் காற்றாலைகளுக்கு மின் உபகரணங்கள் வாங்கி மொத்தமாக விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார்.

    இவருக்கு முகநூல் (பேஸ்புக்) மூலமாக பாளையங்கோட்டை பெருமாள்புரம் என்.ஜி.ஓ. காலனியை சேர்ந்த பானுமதி(40) என்ற பெண்ணுடன் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

    தொடர்ந்து, பானுமதி கடந்த 29-ந்தேதி ஆசை வார்த்தை கூறி நித்யானந்தமை நெல்லைக்கு வரவழைத்துள்ளார். பின்னர் பானுமதி வீட்டுக்கு சென்ற அவரை அங்கிருந்த மேலும் 4 பேர் கும்பல் சேர்ந்து கடத்தி சென்று நகை, ரூ.10 லட்சம் பணம் உள்ளிட்டவற்றை பறித்தது.

    இதுகுறித்து நித்யானந்தம் நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் மூர்த்தியிடம் அளித்த புகாரின்பேரில் தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் அருணாச்சலம் தலைமையிலான போலீசார் பானுமதி, அவரது கூட்டாளிகளான ஆழ்வார்திருநகரியை சேர்ந்த பார்த்தசாரதி(46), வெள்ளத்துரை(42), ரஞ்சித்(42), ஸ்ரீவைகுண்டத்தை சேர்ந்த சுடலை(40) ஆகிய 5 பேரை கைது செய்தனர்.

    அந்த கும்பலிடம் நடத்திய விசாரணையில் பானுமதி மற்றும் அவரது கூட்டாளிகள் இதேபோல் பல வருடங்களாக பல தொழில் அதிபர்களை தங்கள் வலையில் சிக்கவைத்து லட்சக்கணக்கில் பணம் பறித்தது தெரியவந்தது. இதுதொடர்பான தகவல்கள் வருமாறு:-

    பானுமதிக்கு ஆழ்வார்திருநகரியை சேர்ந்த ஒருவருடன் திருமணமாகி கல்லூரி படிப்பு முடித்த ஒரு மகனும், 10-ம் வகுப்பு படிக்கும் ஒரு மகளும் உள்ளனர். இவரது நடவடிக்கைகள் சரியாக இல்லாததால், அவரது குடும்பத்தினர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பானுமதியை வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டனர்.

    இந்நிலையில் பானுமதிக்கு தனது பள்ளி தோழனான ஆழ்வார்திருநகரியை சேர்ந்த வெள்ளத்துரையுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் கடந்த 7 ஆண்டுகளாக அவருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் 2 பேரும் ஆடம்பர வாழ்க்கை வாழ்வதற்கு ஆசைப்பட்டுள்ளனர். பானுமதி பட்டப்படிப்பு முடித்தவர் என்பதால் முகநூலை பயன்படுத்தி அதில் தொழில் அதிபர்கள் மற்றும் கோடீஸ்வரர்களை தொடர்பு கொண்டு பழகி வந்துள்ளார்.

    அவர்களிடம் மாதக்கணக்கில் பழகி நம்ப வைத்து, ஆசை வார்த்தை கூறி நெல்லைக்கு வரவழைத்துள்ளார். பின்னர் பெருமாள்புரம் என்.ஜி.ஓ. காலனியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள தனது வீட்டுக்கு அவர் தொழிலதிபர்களை வரவழைத்து படுக்கை அறைக்கு அழைத்து சென்று கதவுகளை பூட்டிக்கொள்வார். அடுத்த 5 நிமிடங்களில் வெள்ளத்துரை தனது கூட்டாளிகள் 3 பேருடன் அங்கு வந்து கதவை தட்டுவார்.

    பின்னர் எனது மனைவியை கற்பழிக்க முயன்றுள்ளாய் என கூறி போலீசில் புகார் அளித்து உன்னை அவமானப்படுத்தி விடுவேன் என்று கூறி அந்த தொழில் அதிபர்களை மிரட்டி அவர்களிடம் இருக்கும் நகை மற்றும் உடைமைகளை பறித்து வந்துள்ளனர்.

    தங்களின் பிடியில் சிக்கும் தொழிலதிபர்களை பொன்னாக்குடி பகுதிக்கு அழைத்து சென்று அங்குள்ள ஒரு காட்டுப்பகுதியில் தங்களது பெயரில் உள்ள ஒரு தனி பண்ணை வீட்டில் அடைத்து வைத்து லட்சக்கணக்கில் பணம் பறித்து வந்துள்ளனர்.

    சுமார் 6 ஆண்டுகளுக்கு மேல் இந்த கும்பல் சென்னை, கோவை, காஞ்சிபுரம், சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த தொழிலதிபர்களை குறிவைத்து ஆசைவார்த்தை பேசி நெல்லைக்கு வரவழைத்து அவர்களிடம் பணத்தை பறிக்கும் செயலில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

    இவர்களது வலையில், 40 வயதில் தொடங்கி 65 வயது வரையிலான தொழிலதிபர்கள் 50-க்கும் மேற்பட்டோர் சபலத்தால் சிக்கி பணத்தை இழந்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

    இவ்வாறாக அந்த கும்பல் கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்துள்ளது.

    வெளிமாவட்டங்கள் மட்டுமல்லாது நெல்லை மாவட்டத்திலும் சில தொழிலதிபர்கள் சபலத்தால் இந்த கும்பலிடம் சிக்கி பணத்தை இழந்துள்ளனர். ஆனால் வெளியே தெரிந்தால் அவமானமாகிவிடும். அதற்கு பணத்தோடு போகட்டும் என்று அவர்கள் வெளியே தெரிவிக்காமல் இருக்கின்றனர் என்று போலீசார் தெரிவித்தனர்.

    இதற்கிடையே பார்த்தசாரதியை தவிர மற்ற 4 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பார்த்தசாரதிக்கு ரத்த அழுத்தம் அதிகமாக இருப்பதால் நெல்லை அரசு மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

    இதுகுறித்து மாநகர போலீஸ் கமிஷனர் கூறுகையில், பல வருடங்களாக இந்த கும்பல் தொழிலதிபர்களை ஆசை வார்த்தை கூறி அழைத்து பணத்தை பறித்து வந்துள்ளனர்.

    இந்த கும்பலிடம் தங்களது பணத்தை இழந்தவர்கள் வெளியே சொல்லாமல் இருக்கிறார்கள். இன்று அல்லது நாளை அந்த கும்பலை காவலில் எடுத்து விசாரிக்க உள்ளோம். அதன்பின்னரே இதுவரை எத்தனை தொழிலதிபர்களை ஏமாற்றி எவ்வளவு பணத்தை இவர்கள் பறித்துள்ளனர் என்ற விபரம் தெரியவரும்.

    அதேநேரத்தில் பணத்தை இழந்த தொழிலதிபர்கள் எங்களிடம் வந்து புகார் அளிக்கும் பட்சத்தில் அவர்கள் பெயர் ரகசியம் காக்கப்பட்டு அவர்களது பணத்தை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    • பிரசவத்தின் போது குழந்தையின் காலை வெட்டி எடுத்ததால் பெண் குழந்தை இறந்து இருப்பது டாக்டர்களின் பரிசோதனையில் தெரிய வந்து உள்ளது.
    • குழந்தையை கத்தியால் வெட்டிய போது நர்சுக்கும் காயங்கள் ஏற்பட்டு உள்ளன.

    போரூர்:

    சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 24 வயது இளம்பெண் நர்சாக வேலை பார்த்து வருகிறார். இவர் தியாகராய நகர் சவுத்போக் பகுதியில் உடன் வேலைபார்க்கும் தோழிகளுடன் தங்கி இருந்தார்.

    இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் உசிலம்பட்டியை சேர்ந்த வாலிபர் ஒருவரிடம் திருமணம் செய்யாமல் நெருங்கி பழகினார். இதில் நர்சு கர்ப்பமானார்.

    இந்த நிலையில் 7 மாதமாக கர்ப்பிணியாக இருந்த நர்சுக்கு நேற்று முன்தினம் தங்கி உள்ள அறையில் இருந்த போது வயிற்று வலி ஏற்பட்டது. இதையடுத்து கழிவறைக்கு சென்ற நர்சு தனக்கு தானே பிரசவம் பார்த்தார்.

    அப்போது குழந்தையை வெளியே எடுக்க முடியாமல் அதன் ஒரு காலை வெட்டி எடுத்தார். இதில் பெண் குழந்தை இறந்தது. நர்சின் அலறல் சத்தம் கேட்டு வந்த உடன் தங்கி இருந்த தோழிகள் குழந்தையின் உடலையும், நர்சையும் மீட்டு எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு நர்சுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ஆஸ்பத்திரி நிர்வாகம் கொடுத்த தகவலின்படி மாம்பலம் போலீசார் நர்சு மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

    இந்த நிலையில் பிரசவத்தின் போது குழந்தையின் காலை வெட்டி எடுத்ததால் அந்த பெண் குழந்தை இறந்து இருப்பது டாக்டர்களின் பரிசோதனையில் தெரிய வந்து உள்ளது. மேலும் குழந்தையை கத்தியால் வெட்டிய போது நர்சுக்கும் காயங்கள் ஏற்பட்டு உள்ளன.

    இதையடுத்து நர்சு மீது மாம்பலம் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து உள்ளனர். சிகிச்சை முடிந்ததும் நர்சு கைது செய்யப்படுவார் என்று போலீசார் தெரிவித்து உள்ளனர்.

    • வீடியோவில், கார் மோதியதில் சில அடி தூரங்கள் இளம்பெண் தூக்கி வீசப்படுகிறார்.
    • காயமடைந்த பெண்ணை அக்கம், பக்கத்தினர் உதவியுடன் மீட்கப்படுகிறார்.

    சென்னிமலை:

    ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த இளம்பெண் மீது கட்டுப்பாட்டை இழந்த கார் மோதி தூக்கி வீசும் சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    வீடியோவில், கார் மோதியதில் சில அடி தூரங்கள் இளம்பெண் தூக்கி வீசப்படுகிறார். காயமடைந்த பெண்ணை அக்கம், பக்கத்தினர் உதவியுடன் மீட்கப்படுகிறார். விபத்தில் காரின் முன்பகுதி சேதமடைந்தது.

    கடந்த மாதம் 27-ந்தேதி அன்று நடைபெற்ற விபத்து தொடர்பான வீடியோவை ஆய்வு செய்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போலீசார் கடந்த ஜனவரி 15-ந்தேதி போக்சோ சட்டத்தில் அன்புத் துரையை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
    • குழந்தையை கொன்ற சிறுமி மற்றும் உடந்தையாக இருந்த அவரது தாய் இருவரையும் மீன்சுட்டி போலீசார் கைது செய்தனர்.

    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே செம்போடை விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த உத்ராபதி மகன் அன்பு துரை (21) . இவரும் 18 வயதுக்கு உட்பட்ட சிறுமியும் காதலித்து வந்தனர். இந்த நிலையில் சிறுமி கர்ப்பம் ஆனார்.

    இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்கள் திருமணம் செய்ய இரு வீட்டிலும் எதிர்ப்பு கிளம்பியது. இது குறித்து ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது.

    இதை தொடர்ந்து போலீசார் கடந்த ஜனவரி 15-ந்தேதி போக்சோ சட்டத்தில் அன்புத் துரையை கைது செய்து சிறையில் அடைத்தனர். அன்புத்துறை திருச்சி மத்திய சிறையில் உள்ள நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அச்சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்தது.

    இதனிடையே சிறுமி கர்ப்பமான வழக்கில் குழந்தையின் டி.என்.ஏ. பரிசோதிக்க கோர்ட்டு உத்தரவிட்டது. அரியலூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குழந்தையின் டி.என்.ஏ. பரிசோதனைக்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் குழந்தை காணவில்லை என்று குழந்தையின் அம்மாவான சிறுமி மீன்சுருட்டி போலீசில் புகார் அளித்தார்.

    இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் உத்தரவின் பேரில் ஜெயங்கொண்டம் டி.எஸ்.பி. ராமச்சந்திரன் மேற்பார்வையில் குற்ற புலனாய்வு துறை சப்-இன்ஸ்பெக்டர் பழனிவேல் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் சிறுமி, தனது ஒரு மாத குழந்தையை கழுத்தை நெரித்து கொன்று வீட்டின் பின்புறம் உள்ள கழிப்பிடம் அருகே புதைத்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து எஸ்.பி. செல்வராஜ் சம்பவ இடத்தில் நேரில் விசாரணை செய்தார்.

    இன்ஸ்பெக்டர்கள் பிரேம்குமார், ராமராஜன் உட்பட 50-க்கும் மேற்பட்ட போலீசாரின் பாதுகாப்பில் தாசில்தார் கலிலூர் ரஹ்மான் தலைமையில் விஏஓ காமராஜ் உட்பட வருவாய்த் துறையினர் குழந்தையின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்கு அரியலூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    குழந்தையை கொன்ற சிறுமி மற்றும் உடந்தையாக இருந்த அவரது தாய் இருவரையும் மீன்சுட்டி போலீசார் கைது செய்து வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். கைதான சிறுமியின் தாய் போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில், என் மகள் திருமணம் செய்யும் முன்பே கர்ப்பமாக குழந்தை பெற்றது எனக்கு வேதனையை அளித்தது.

    இந்த விவகாரம் போலீஸ் நிலையம், கோர்ட்டு வரை சென்றது. கோர்ட்டு டி.என்.ஏ. பரிசோதனைக்கு உத்தரவிட்டதால் அதற்கு பயந்து குழந்தையை கொலை செய்ய திட்டமிட்டோம். மகள் வயிற்றில் பிறந்த குழந்தையை கொஞ்சி மகிழ வேண்டிய சூழலில் குழந்தையை கொன்று புதைத்துவிட்டோம்.

    இந்த விவகாரம் வெளியில் தெரியாமல் இருக்க புதைத்த இடத்தில் வாசனை திரவியங்களை தெளித்தோம். பின்னர் குழந்தையை காணவில்லை என நாடகம் ஆடினோம். போலீசார் விசாரித்து எங்களை கைது செய்துவிட்டனர்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ஒரு மாத குழந்தையை தாயே கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

    ×