search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இளம்பெண் காயம்"

    • வீடியோவில், கார் மோதியதில் சில அடி தூரங்கள் இளம்பெண் தூக்கி வீசப்படுகிறார்.
    • காயமடைந்த பெண்ணை அக்கம், பக்கத்தினர் உதவியுடன் மீட்கப்படுகிறார்.

    சென்னிமலை:

    ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த இளம்பெண் மீது கட்டுப்பாட்டை இழந்த கார் மோதி தூக்கி வீசும் சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    வீடியோவில், கார் மோதியதில் சில அடி தூரங்கள் இளம்பெண் தூக்கி வீசப்படுகிறார். காயமடைந்த பெண்ணை அக்கம், பக்கத்தினர் உதவியுடன் மீட்கப்படுகிறார். விபத்தில் காரின் முன்பகுதி சேதமடைந்தது.

    கடந்த மாதம் 27-ந்தேதி அன்று நடைபெற்ற விபத்து தொடர்பான வீடியோவை ஆய்வு செய்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ரெயில் நிலையத்தில் ரத்த வெள்ளத்தில் வெட்டுப்பட்டு கிடந்த இளம்பெண் அண்ணனூர் பகுதியை சேர்ந்தவர்.
    • வாலிபரை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் ரெயில் நிலையம் எப்போதும் பயணிகள் கூட்டத்தால் பரபரப்பாக இருக்கும். இந்த நிலையில் நேற்று இரவு 9 மணி அளவில் ரெயில் நிலையத்தில் உள்ள 3-வது நடைமேடையில் இளம்பெண் ஒருவர் நிர்வாண நிலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்தார்.

    அவரது உடல் முழுவதும் சுமார் 50 இடங்களில் பிளேடால் அறுக்கப்பட்டு இருந்தது. முகம், கை, கால் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் பலத்த காயம் காணப்பட்டது.

    இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பயணிகள் திருவள்ளூர் ரெயில்வே போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து உயிருக்கு போராடிய இளம்பெண்ணை மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு ஆபத்தான நிலையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    விசாரணையில் ரெயில் நிலையத்தில் ரத்த வெள்ளத்தில் வெட்டுப்பட்டு கிடந்த இளம்பெண் அண்ணனூர் பகுதியை சேர்ந்தவர் என்பது தெரியவந்து உள்ளது. அவர் அம்பத்தூரை சேர்ந்த ஒருவருடன் திருவள்ளூர் வந்ததாக தெரிகிறது.

    இந்த நிலையில் இளம்பெண் நிர்வாணப்படுத்தப்பட்டு பிளேடால் சரமாரியாக உடல் முழுவதும் கிழிக்கப்பட்டு கிடந்து உள்ளார். அவருடன் வந்த வாலிபர் தலைமறைவாகி விட்டதால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட காரணம் என்ன? என்று தெரியவில்லை. அந்த வாலிபரை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவம் திருவள்ளூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×