search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொருட்கள்"

    • இடி, மின்னலுடன் கனமழை பெய்து கொண்டிருந்தது.
    • தீயணைப்பு துறையினர் பேராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    அதிராம்பட்டினம்:

    பட்டுக்கோட்டை அடுத்த அதிராம்பட்டினத்தில் கூரை வீட்டில் வசித்து வருபவர் கருப்பையன் (வயது 65). கூலி தொழிலாளி. இவருக்கு நாகலட்சுமி என்ற மனைவியும், முனீஸ்வரன் என்ற மகனும் உள்ளனர்.

    இந்நிலையில், அனைவரும் வழக்கம்போல் வேலைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தனர். அன்று இடி மின்னலுடன் கனமழை பெய்து கொண்டிருந்தது. மின்னல் தாக்கியதில் அவரது கூரை வீடு திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதில் வீட்டில் இருந்த அனைத்து பொருட்களும் எரிந்து நாசமாகின. மேலும், வீட்டின் வாசலில் நிறுத்தியிருந்த இருசக்கர வாகனமும் எரிந்து சாம்பலானது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் பேராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த அண்ணாதுரை எம்.எல்.ஏ. பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நேரில் சென்று ஆறுதல் கூறி அடிப்படை உபகரணங்கள் வழங்கினார்.

    • ரூ. 15 ஆயிரம் பணம், ரூ. 5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் திருடு போனது.
    • தடய அறிவியல் நிபுணர் கார்த்திகேயன் சம்பவ இடத்திற்கு வந்து தடயங்களை பதிவு செய்தார்.

    பாபநாசம்:

    பாபநாசம் ஜெய் நகரில் வசித்து வருபவர் சுந்தர் ராமன் ஓய்வு பெற்ற ஆசிரியர்.

    இவர் தனது வீட்டை பூட்டி விட்டு மனைவியுடன் கும்பகோணத்தில் உள்ள உறவினர் விட்டு சென்றிருந்தார்.

    நேற்று காலை திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்து உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் உள்ள பீரோ கட்டில் உள்ளிட்டவை உடைக்கப்பட்டு அதிலிருந்து பொருட்கள் அலங்கோலமாக சிதறி கிடந்தது.

    இதில் அவர் வீட்டில் வைத்திருந்த தங்க நகைகள் மற்றும் ரூ.15 ஆயிரம் பணம் உள்ளிட்ட ரூ. 5 லட்சம் மதிப்பிலான பொருள்கள் திருட்டு போயிருப்பது தெரிய வந்தது.

    இது குறித்து சுந்தர்ராமன் பாபநாசம் காவல் நிலைய த்தில் புகார் கொடுத்தார்.

    புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற பாபநாசம் துணை போலீஸ் சூப்பிரண்டு பூரணி, பாபநாசம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைவாணி, சப்- இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை மேற்கொ ண்டனர்.

    மேலும் தஞ்சாவூரிலி ருந்து சோழா என்ற மோப்பநாய் வரவழை க்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன.

    தடய அறிவியல் நிபுணர் கார்த்திகேயன் சம்பவ இடத்திற்கு வந்து தடயங்களை பதிவு செய்தார். சம்பவம் குறித்து பாபநாசம் போலீசார் வழக்கு பதிவு செய்து நகைகொள்ளையில் ஈடுப்பட்ட மர்மநபர்களை தேடி வருகிறார்கள்.

    • 50-க்கும் மேற்பட்ட மகளிர் சுயஉதவி குழுவினர் தயாரித்த பொருட்களை காட்சிபடுத்தினர்.
    • வேதாரண்யம் ஒன்றியத்தில் 1603 மகளிர் சுயஉதவி குழுக்கள் உள்ளன.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மகளிர் சுயஉதவி குழுவினர், தமிழ்நாடு மாநில வாழ்வாதார குழு இயக்கம் சார்பில் மகளிர் சுயஉதவிக்குழு உற்பத்தி பொருட்கள் செய்வோர் மற்றும் விற்பனையாளர் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு ஊராட்சி ஒன்றிய துணை வட்டாட்சியர் அண்ணா துரை தலைமை தாங்கினார். முன்னதாக மகளிர் சுயஉதவி குழு வட்டார இயக்க மேலாளர் அன்பு ரோஸ் மேரி அனைவரையும் வரவேற்றார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட பயிற்றுனர் பாலகணேஷ் சுகந்தி, தலைமையாசிரியர் தெட்சணாமூர்த்தி, துணை வட்டார அலுவலர் பக்கிரிசாமி, வர்த்தக சங்க பொருளாளர் சீனிவாசன், வட்டார மகளிர் சுயஉதவி குழுஒருங்கிணை ப்பாள ர்கள் மேனகா, அருள்மேரி, ஜெயமாலினி சுமித்ரா, மணிபாரதி உள்ளிட்ட வர்கள் கலந்து கொண்டனர்.

    இதில் 50-க்கும் மேற்பட்ட மகளிர் சுயஉதவி குழுவினர் தாங்கள் தயாரித்த பொருட்களை காட்சிபடு த்தினர்.

    இதுகுறித்து மகளிர் சுயஉதவி குழு வட்டார இயக்க மேலாளர் அன்பு ரோஸ் மேரி கூறுகையில்:-

    வேதாரண்யம் ஒன்றியத்தில் 1603 மகளிர் சுயஉதவி குழுக்கள் உள்ளன. அவற்றில் 1400 குழுக்களுக்கு சுமார் ரூ.3 கோடி நிதி வழங்கப்பட்டு சிறுதானிய பொருட்களை கொண்டு உணவு பொருட்கள் தயாரித்து விற்பனை செய்து தங்கள் வாழ்வாதாரத்தை உயர்த்தி உள்ளனர்.

    • ரூ.65 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
    • தூய்மை பணியாளர்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    ஜோதி அறக்கட்டளை சார்பில் தஞ்சை மாநகராட்சி அலுவலகத்தில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் மற்றும் அலுவலக பணியாளர்களுக்கு ரூ.65,000 மதிப்பிட்டில் ஒவ்வொருவருக்கும் ஒரு மாதத்துக்கு தேவையான அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது . தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தஞ்சாவூர் மாநகராட்சி துணை மேயர் அஞ்சுகம் பூபதி இந்த நலத்திட்ட உதவிகளை வழங்கி தூய்மை பணியாளர்களின் பணியை பாராட்டி வாழ்த்தி பேசினார். இதற்கான ஏற்பாடுகளை ஜோதி அறக்கட்டளை செயலாளர் பிரபு ராஜ்குமார் தலைமையில் மேலாளர் ஞானசுந்தரி, மேற்பார்வையாளர் கல்யா ணசுந்தரம் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

    • பண்டிகை காலத்தை சிறப்பாக கொண்டாடும் வகையில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
    • ஒரு மாதத்துக்கு தேவையான அரிசி –மளிகை பொருட்கள், புத்தாடைகள் வழங்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    நோய் தொற்றை தவிர்க்கும் வகையிலும் சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள பாடுபடும் தூய்மை பணியாளர்களின் பங்கு மக த்தான போற்றுத லுக்குரியது.

    அவர்களது இன்றிய மையாத பணிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஜோதி அறக்கட்டளை சார்பில் பண்டிகை காலத்தை சிறப்பாக கொண்டாடும் வகையில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

    தஞ்சை மாவட்டம் விளார் ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த தூய்மை பணியாளர்கள் மற்றும் அலுவலக பணியா ளர்கள் அனைவருக்கும் ரூ. 50,000 மதிப்பிட்டில் ஒரு மாதத்துக்கு தேவையான அரிசி – மளிகை பொருட்கள், புத்தாடைகள் ஆகியவை விலையில்லாமல் வழங்கப்பட்டது.

    ஜோதி அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் விளார் ஊராட்சி மன்றத்தலைவி மைதிலி ரெத்தினசுந்தரம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பயனாளிகளுக்கு இந்த நலத்திட்ட உதவிகளை வழங்கினார் .

    இந்த நிகழ்ச்சி யில் விளார் ஊராட்சி செயலாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    இதற்கான ஏற்பாடு களை ஜோதி அறக்கட்டளை செயலாளர் பிரபு ராஜ்குமார் தலைமையில் மேலாளர் ஞானசுந்தரி , மேற்பார்வை யாளர் கல்யாணசுந்தரம் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

    • கூரை வீட்டில் உள்ள மின்மோட்டாரில் மின்கசிவு ஏற்பட்டுள்ளது.
    • ரூ.10 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தது.

    சுவாமிமலை:

    சுவாமிமலை அருகே உள்ள திம்மகுடி கிராமத்தில் அருள்ஜோதி தெருவில் வசிப்பவர் வந்தியத்தேவன் (வயது55). லாரி டிரைவர்.இவரது கூரை வீட்டில் உள்ள மின்மோட்டாரில் மின்கசிவு ஏற்பட்டுள்ளது. இதனால் கூரை வீடு தீப்பிடித்து எரிந்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த கும்பகோணம் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து தீ மேலும் பரவாமல் அணைத்தனர். இருப்பினும் வீடு முழுவதும் எரிந்து நாசமடைந்தது.

    இந்த தீவிபத்தில் வீட்டில் இருந்த ரூ.10 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தது. சுவாமிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவ செந்தில்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

    • புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் வந்தது.
    • கடையில் இருந்த புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    கும்பகோணம்:

    கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் தெற்கு மடவளாகத்தை சேர்ந்தவர் கார்த்தி (வயது 45).

    இவரது கடையில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் வந்தது.

    அதன்பேரில் திருவிடைமருதூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது அந்த கடையில் புகையிலை பொருட்கள் விற்றது தெரியவந்தது.

    இதையடுத்து கடையில் இருந்த புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இதுகுறித்து திருவிடை மருதூர் போலீசார் வழக்குபதிவு செய்து கார்த்தியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
    • பள்ளிக்கு விடுப்பு எடுக்காமல் வந்த மாணவர்களுக்கு எழுது பொருட்கள் வழங்கப்பட்டது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த கோடியக்காட்டில் உள்ள சுந்தரம் அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளி மாணவ- மாணவிகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

    விழாவிற்கு ஊராட்சி தலைவர் தமிழ்மணி தலைமை தாங்கினார்.

    முன்னதாக தலைமை ஆசிரியர் நீலமேகம் அனைவரையும் வரவேற்றார்.

    விழாவில் ஊராட்சி துணைத்தலைவர் சரவணன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சதக்கத்துல்லா, முன்னாள் ஊராட்சி தலைவர் பவானி, மீனவர் சங்க தலைவர் பக்கிரிசாமி, ஊராட்சி செயலாளர் சுபா, கிராம நிர்வாக அலுவலர் இளங்கோவன் மற்றும் பெற்றோர்கள், முன்னாள், இந்நாள் மாணவர்கள், ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    விழாவில் பொதுத்தேர்வி ல் முதல் 3 இடங்களை பிடித்த மாணவிகளுக்கும், மாவட்ட அளவிலான தூய்மை பாரத எழுத்தறிவு போட்டியில் முதல் பரிசு பெற்ற மாணவி கிருத்திகாஸ்ரீ-க்கும், புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தில் மாவட்ட அளவில் சிறந்த மையமாக தேர்வு செய்யப்பட்டு மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் அமைச்சர் வழங்கிய சுழற்கோப்பை, பாராட்டு சான்றிதழ், பதக்கம் பெற்றதற்காக தலைமை யாசிரியர் நீலமேகத்திற்கும், தன்னார்வலர் மீனாம்பாள் மற்றும் புதிய பாரத எழுத்தறிவு திட்ட தேர்வின் போது மனைவி இறந்த நிலையிலும் தேர்வு எழுதிய நாகரத்தினத்திற்கு சால்வை அணிவித்து, அவரிடம் மதுரையில் வழங்கப்பட்ட சுழற்கோப்பையை நாகாரத்தினத்திடம் வழங்கி பாராட்டினர்.

    மேலும், போட்டி தேர்வில் வெற்றிபெற்றவர்களுக்கு, கலை நிகழ்ச்சிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு, பள்ளிக்கு விடுப்பு எடுக்காமல் வந்த மாணவ- மாணவிகளுக்கு எழுது பொருட்கள், நினைவு பரிசுகள் வழங்கபட்டது.

    மேலும், பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு தலைமையாசிரியர் நீலமேகம் பரிசு வழங்கினார்.

    முடிவில் பள்ளி ஆசிரியர் கவிதா நன்றி கூறினார்.

    • பீரோவில் இருந்த ஒரு லட்சம் ரொக்கம், வெள்ளி பொருட்கள் ஆகியவையும் கொள்ளை போனது.
    • கைரேகை நிபுணர்களை வரவழைத்து தடயங்களை சேகரித்து வருகின்றனர்.

    சுவாமிமலை:

    தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அடுத்த திருவிசநல்லூர் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன்.

    இவர் கடந்த 11-ந் தேதி திருச்சியில் உள்ள அவரது மகன் சங்கர் வீட்டிற்கு சென்றுள்ளார்.

    இந்நிலையில், ராதாகிருஷ்ணன் நேற்று இரவு வீடு திரும்பியுள்ளார். அப்போது, வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது.

    பின், உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    பின், பீரோவில் இருந்த 15 பவுன் நகை, ஒரு லட்சம் ரொக்கம், வெள்ளி பொருட்கள் ஆகியவை கொள்ளை போனது தெரியவந்தது.

    தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருவிடைமருதூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜாபர் சித்திக், போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் போலீசார் கொள்ளை சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தஞ்சையில் இருந்து மோப்ப நாய், தடயவியல், கைரேகை நிபுணர்களை வரவழைத்து தடயங்களை சேகரித்து வருகின்றனர்.

    மேலும், கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் தனிப்படை அமைத்து வலைவீசி தேடி வருகின்றனர்.

    இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • சுவாமிக்கு அபிஷேகம் நடைபெற்று, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
    • பெண்களுக்கு தாலிக்கயிறு, மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட மங்கள பொருட்கள் வழங்கப்பட்டது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த திருக்குவளைக்கட்டளை - அண்ணா பேட்டை காமாட்சி அம்மன் முனீஸ்வரர் ஆலயத்தில் 11ம் ஆண்டு விளக்கு பூஜை உலக நன்மை வேண்டி நடைபெற்றது

    திருவிளக்கு பூஜையில் நூற்றுக்கணக்கான பெண்கள் கலந்துகொண்டு உலக நன்மை வேண்டி பூஜை செய்து வழிபட்டனர் முன்னதாக காமாட்சி அம்மன் பெத்தாரண்ய சுவாமி முனீஸ்வரர் சுவாமிக்கு பால் தயிர் பன்னீர் இளநீர் பஞ்சாமிர்தம் தேன் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் அபிஷேக ஆராதனை நடைபெற்று சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டுமகா தீபாரதணை நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அர்ச்சனை செய்து சுவாமியை வழிபட்டனர்.

    விளக்கு பூஜை முன்னிட்டு சுமங்கலி பெண்களுக்கு தாலிகயிறு, மஞ்சள் குங்குமம் உள்ளிட்ட, மங்களப் பொருட்கள் வழங்கப்பட்டது விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் கிராமத்தினர் செய்து இருந்தனர்

    • கடைக்கு பிளாஸ்டிக் பைப் வாங்குவது போல் ஒரு வாலிபர் வந்துள்ளார்.
    • கல்லாவில் வைத்திருந்த ரூ.20 ஆயிரத்தை திருடி விட்டு தப்பி சென்றார்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி விளந்திடசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் சேகர் (61). இவர் சிதம்பரம் - சீர்காழி பிரதான சாலையில் இரும்பு கடை நடத்தி வருகிறார்.

    இந்நிலையில் இன்று இவர் கடைக்கு பிளாஸ்டிக் பைப் வாங்குவது போல் ஒரு டிப்டாப் வாலிபர் வந்துள்ளார் பொருளின் விலையை கேட்டு கடையில் அமர்ந்து உள்ளார்.

    அப்போது சேகர் வியாபாரம் வியா பாரம் செய்து கொண்டி ருந்தார். விற்பனை செய்த ரூ 20 ஆயிரத்து கல்லாவில் வைத்துவிட்டு, சிமெண்டு மூட்டை வாகனத்தில் ஏற்றுவதை சென்று கண்கா ணித்து கொண்டிருந்தார்.

    அப்போது பொருள் வாங்குவது போல் கடையில் அமர்ந்திருந்த டிப்டாப் வாலிபர் கல்லாப்பெட்டியில் வைத்திருந்த ரூபாய் 20 ஆயிரத்தை திருடிக் கொண்டு தான் வந்த மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றார்.

    சேகர் சிமெண்ட் மூட்டை எடுத்துக் கொடுத்துவிட்டு கடைக்கு வந்தபோது டிப் டாப் வாலிபரை காணவில்லை.

    உள்ளே சென்று பார்த்த போது கல்லாப்பெட்டி திறந்து கிடந்தது அதிலிருந்து பணம் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த சீர்காழி போலீசார் விரைந்து வந்து சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பூம்புகார் விற்பனை நிலையத்தில் உள்ள பொருட்களை மேயர் பார்வையிட்டார்.
    • ரூ.75 முதல் ரூ. 2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் காட்சிக்கும், விற்பனைக்கும் இடம் பெற்றுள்ளன.

    தஞ்சாவூர்:

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தமிழ்நாடு அரசு நிறுவனமான பூம்புகார் விற்பனை நிலையத்தில் கைவினைப் பொருட்களின் சிறப்பு கண்காட்சி மற்றும் விற்பனை நடந்து வருகிறது. அதன்படி தஞ்சை பூம்புகார் விற்பனை நிலையத்தில் கைவினைப் பொருட்களின் கண்காட்சி, விற்பனையை மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் குத்துவிளக்கேற்றி வைத்து தொடங்கி வைத்தார் .

    தொடர்ந்து அவர் பூம்புகார் விற்பனை நிலையத்தில் உள்ள பொருட்களை பார்வையிட்டார். கலைத்தட்டுக்களில் நுணுக்கமான முறையில் கருணாநிதி உருவம் பதிக்கப்பட்டதை பார்வையிட்டார். இந்த கண்காட்சி மற்றும் விற்பனையில் கலைத்தட்டுக்கள், சுவாமி மலையில் பஞ்சலோகத்தினால் செய்யப்பட்ட கடவுளின் சிலைகள், நாச்சியார் கோவில், மதுரை, வாகைக்குளத்தில் செய்யப்படும் பித்தளை விளக்குகள், காகிதக்கூழ் பொம்மைகள், தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள், நவரத்தின கற்கள், கருங்காலி மாலைகள், ஸ்படிக மாலைகள், சந்தற மாலைகள், வாசனை திரவியங்கள், வெள்ளை மரம் , செம்மர கூலினால் செய்யப்பட்ட அலங்கார பொருட்கள், காட்டன் புடவைகள் உள்பட பல்வேறு பொருட்கள் இடம் பெற்றுள்ளன.

    இக்கண்காட்சியில் ரூ. 75 முதல் ரூ. 2,00,000 வரை மதிப்பிலான பொருட்கள் காட்சிக்கும் விற்பனைக்கும் இடம் பெற்றுள்ளன. வருகிற 19ஆம் தேதி வரை இந்த சிறப்பு கண்காட்சி மற்றும் விற்பனை நடைபெறுகிறது.

    இந்த நிகழ்ச்சியில் பூம்புகார் விற்பனை நிலையம் மேலாளர் சக்திதேவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×