search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புத்தாடைகள்"

    • ஒவ்வொருவருக்கும் ரூ.1000 மதிப்பில் புத்தாடைகள் வாங்கி கொடுக்கப்பட்டது.
    • மொத்தமாக ரூ.1.50 லட்சம் மதிப்பில் புத்தாடைகள் வழங்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாநகராட்சி யில் மொத்தம் 51 வார்டுகள் உள்ளது. இந்த வார்டுகளில் 300-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர் .

    ஊரே தீபாவளி , பொங்கல் போன்ற பண்டிகைகளை உற்சாகமாக கொண்டாடும் நிலையில், பொதுமக்களின் நலன் கருதி தூய்மை பணியாளர்கள் தங்களது கடமையில் தவறாது பணி செய்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. 'சுத்தம் சோறு போடும்' என்ற முதுமொழிக்கு ஏற்ப தூய்மை இந்தியா எனும் வாசகத்தை முன்னிறுத்தி பல்வேறு சுகாதார திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. கிராமம், நகரம் என அனைத்தின் சுகாதாரத்திலும் தூய்மை பணியாளர்களின் பங்கு அளப்பரியது . மக்களின் சுகாதார நலனை மட்டுமே குறிக்கோளாகக்கொண்டு பண்டிகை நாளன்று கூட தங்களது குடும்பத்துடன் பண்டிகையை கொண்டாடி மகிழாமல் பணிகளில் துரித கவனம் செலுத்திவரும் நிகழ்வு நெகழ்ச்சியை அளிக்கிறது.இந்நிலையில் தூய்மை பணியாளர்களை கௌரவிக்கும் வகையில் தஞ்சை ஜோதி அறக்கட்டளை சார்பில் தூய்மை பணியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தார் அனைவரையும் பிரபல துணிக்கடைக்கு அழைத்துச்சென்று அவர்களுக்கு பிடித்த புத்தாடையை தேர்வு செய்ய வைத்து அதை வாங்கிக்கொடுக்கும் நிகழ்வு

    தஞ்சையில் நடைபெற்றது.

    தஞ்சை மாநகராட்சி 12-வது டிவிஷனை சேர்ந்த தூய்மை பணியாளர்கள், வாகன ஓட்டுனர்கள், அனிமேட்டர் உள்ளிட்ட 40 பணியாளர்கள் மற்றும் ஒவ்வொரு பணியாளரின் குடும்பத்தார் என சுமார் 150 நபர்களை ஜோதி அறக்கட்டளை நிர்வாகத்தினர் தனி வாகனத்தில் தஞ்சை ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள பிரபல துணிக்கடைக்கு அழைத்து சென்று அவர்களுக்கு பிடித்த ஆடைகளை அவர்களே தேர்வு செய்ய வைத்து வாங்கி கொடுத்து ஆச்சர்யப்படுத்தினர். ஒவ்வொருவருக்கும் ஆயிரம் ரூபாய் மதிப்பில் புத்தாடைகள் என மொத்தம் 1.50 லட்சம் மதிப்பீட்டில் புத்தாடைகள் வழங்கப்பட்டது .

    இது குறித்து தூய்மை பணியாளர்கள் கூறுகையில், புத்தாடை வழங்க இருக்கிறார்கள் என்று கூறியவுடன் சாதரணமாக நினைத்தோம். ஆனால் எங்களை குடும்பம் சகிதமாக தனி வாகனத்தில் அழைத்து வந்து மிகப்பெரிய துணிக்கடையில் எங்களுக்கான ஆடைகள் மற்றும் எங்கள் குடும்ப த்தாருக்கும் தேவையான ஆடைகளை நாங்களே தேர்ந்தெடுக்கும் வகையில் ஜோதி அறக்கட்டளை நிர்வாகம் ஏற்பாடு செய்தது மகிழ்ச்சியாக இருக்கிறது என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டனர்.

    முன்னதாக தூய்மை பணியாளர்களுக்கு பாரம்பரிய முறைப்படி வெற்றிலை, பாக்கு, சந்தானம், குங்குமம், கல்கண்டு சகிதம் பன்னீர் தெளித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் தூய்மை பணியாளர்களுக்கு மதிய உணவும் வழங்கப்பட்டது . இதற்கான ஏற்பாடுகளை ஜோதி அறக்கட்டளை செயலாளர் பிரபு ராஜ்குமார், மேலாளர் ஞான சுந்தரி, மேற்பார்வையாளர் கல்யாண சுந்தரம், தன்னார்வலர் ஆர்த்தி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

    • மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு புத்தாடைகள் வழங்கி அய்யாத்துரை பாண்டியன் தீபாவளி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினார்.
    • நிகழ்ச்சியில், மானூர் வடக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    தென்காசி:

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சங்கரன்கோவிலில் உள்ள விண்மின் இல்லத்தில் உள்ள மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு புத்தாடைகள் வழங்கி, உணவு பரிமாறி குழந்தைகளோடு இணைந்து தீபாவளியை அ.தி.மு.க. மாநில கொள்கை பரப்பு துணைச்செயலாளர் அய்யாத்துரை பாண்டியன் உற்சாகமாக கொண்டாடினார்.

    நிகழ்ச்சியில், மானூர் வடக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ், குருவிகளும் தெற்கு ஒன்றிய துணைச் செயலாளர் கிருஷ்ணசாமி, கோவிந்தன், தேவர்குளம் கிளை செயலாளர் சண்முகசுந்தரம், களப்பாகுளம் பசும்பொன், களப்பாகுளம் கிளை செயலாளர் முருகன், எழில் நகர் கிளை செயலாளர் பாபு கதிரேசன், என்.ஜி.ஓ. காலனி கிளை செயலாளர் ராஜா, இருமன்குளம் பசும்பொன், சங்கரன்கோவில் காங்கேயன் என்ற கார்த்தி, இளைஞர் அணி பட்டு ராஜா, கார்த்திக் தங்கமுத்து, மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் நடராஜன், ஞானசேகரன், மகேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

    • ஜெயபாலன் தனது சொந்த செலவில் நகராட்சியில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு புத்தாடைகள் வழங்கி வாழ்த்துக்கள் தெரிவித்தார்.
    • நிகழ்ச்சியில் கவுன்சிலர்கள் பரமசிவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    சுரண்டை:

    தீபாவளியை முன்னிட்டு சுரண்டை நகராட்சி பணி யாளர்களுக்கு புத்தாடைகள் வழங்கும் விழா நடைபெற்றது. சேர்மன் வள்ளி முருகன் தலைமை தாங்கினார். பொறியாளர் முகைதீன், மேலாளர் வெங்கட சுப்பிரமணியன், கணக்காளர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலன் தனது சொந்த செலவில் நகராட்சியில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் துப்புரவு பணியா ளர்களுக்கு புத்தாடைகள் வழங்கி வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

    நிகழ்ச்சியில் கவுன்சிலர்கள் பரமசிவன், வைகை கணேசன், அமுதா சந்திரன்,ஜேம்ஸ்,செல்வி, கூட்டுறவு சங்க துணை தலைவர் கணேசன், சங்கரநயினார், சசிகுமார், கோமதிநாயகம், டான் கணேசன், முத்துக்குமார், ஜோதிடர் தங்க இசக்கி, மோகன், ராஜன், ரஹீம், பவுல், கஸ்பா செல்வம் மற்றும் ஏராளமான தி.மு.க., காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • கிளாங்காடு ஊராட்சியில் 3-ம் ஆண்டு தொடக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
    • ஊராட்சியில் பணிபுரிந்து வரும் தூய்மை பணியாளர்களுக்கும், அலுவலர்களுக்கும் புத்தாடைகள், இனிப்பு வழங்கப்பட்டது.

    தென்காசி:

    தென்காசி அருகே உள்ள கிளாங்காடு ஊராட்சியில் 3-ம் ஆண்டு தொடக்க விழா மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கேக் வெட்டி பணியாளர்களுக்கு புத்தாடை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் சந்திரசேகரன் துணைத் தலைவர் பாலகிருஷ்ணன் மற்றும் கால்நடை மருத்துவர் சிவக்குமார், ஊராட்சி செயலர் இசக்கிமுத்து, வார்டு உறுப்பினர்கள், பணித்தள பொறுப்பாளர்கள், மக்கள் நலப் பணியாளர்கள்,தூய்மை காவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கிளாங்காடு ஊராட்சியில் பணிபுரிந்து வரும் அனைத்து தூய்மை பணியாளர்களுக்கும், அலுவலர்களுக்கும் தீபாவளி பண்டி கைக்கான புத்தாடைகள் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது.

    • மாணவர்களுக்கு ஸ்வீட் பாக்ஸ் வழங்கப்பட்டு தீபாவளி வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது.
    • மாற்றுத்திறன் மாணவர்களை கடைக்கு அழைத்து சென்று உடைகளை எடுத்து கொடுப்பது மன நிறைவை தருகிறது.

    தஞ்சாவூர்:

    நாடு முழுவதும் வரும் 12-ம் தேதி (ஞாயிறு) தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.

    அதற்காக அனைத்து மக்களும் பண்டிகைக்கு தேவையான துணிமணிகள் மற்றும் பொருட்கள் வாங்கிட கடைவீதிகளில் குவிந்து வருகின்றனர் .

    விளிம்பு நிலை குடும்பத்தை சேர்ந்த குழந்தைகளும், பெற்றோரை இழந்த மாற்றுத்திறன் மாணவ -மாணவிகளும் எந்த ஒரு காரணத்துக்காகவும் தீபாவளி கொண்டாட்டங்க ளையும் பண்டிகை தரும் அளவற்ற மகிழ்வான தருணங்களையும் தவற விடக்கூடாது என்ப தற்காக தஞ்சை ஜோதி அறக்கட்டளை சார்பில் அவர்களுக்கு தீபாவளி பரிசு வழங்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    இதனை முன்னிட்டு ஒரத்தநாடு அருகே உள்ள திருவோணம் ஊராட்சி ஒன்றியத்தில் செயல்பட்டு வரும் திப்பியக்குடி அரசு தொடக்கப்பள்ளியில் பயிலும் அனைத்து மாண வர்களையும் அவர்களது பெற்றோர், ஆசிரியர்களுடன் அவர்களது இல்லத்திலிருந்து தஞ்சாவூரில் உள்ள பிரபல துணிக்கடைக்கு அழைத்து சென்று அங்கு குழந்தைகள் அவர்கள் விரும்பும் உடைகளை தீபாவளி பரிசாக ஜோதி அறக்கட்டளை நிர்வாகத்தினர் வாங்கிக் கொடுத்தனர்.

    மேம்பாலம் பார்வைத்திறன் குறைவுடையோர் பள்ளியில் பயிலும் பெற்றோரை இழந்த மாணவ- மாணவிகளுக்கும் தேவையான புத்தாடைகளும் இந்நிகழ்ச்சியில் வழங்கப்பட்டது .

    மேலும் அனைத்து மாணவ -மாணவிகளுக்கும் 10 வகையான இனிப்புகள் அடங்கிய ஸ்வீட்பாக்ஸ் வழங்கி பண்டிகை கால வாழ்த்துக்கள் தெரிவிக்க ப்பட்டது.

    மொத்தம் ரூ. 1 லட்சம் மதிப்பீட்டில் புத்தாடைகள் , இனிப்புகள் வழங்கப்பட்டன.

    இந்த நிகழ்ச்சியில் தஞ்சாவூர் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் கவிதா சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார்.

    இது குறித்து ஜோதி அறக்கட்டளை நிர்வாகிகள் தெரிவிக்கையில், ஆதர வற்ற குழந்தைகள் மகிழ்ச்சியாக தீபாவளி உள்ளிட்டபண்டிகை காலங்களை மகிழ்வாக கொண்டா டுவதற்காக தொடர்ந்து பல்வேறுநிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டு வரும் வேளையில் அரசுப்பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோரை இழந்த மாற்றுத்திறன் மாணவர்களை நேரடியாக கடைக்கு அழைத்து சென்று அவர்கள் விரும்பும் உடைகளை எடுத்து கொடுப்பது மன நிறைவை தருவதாக தெரிவித்தனர்.

    இதற்கான ஏற்பாடுகளை ஜோதி அறக்கட்டளை செயலாளர் பிரபு ராஜ்குமார், மேலாளர் ஞானசுந்தரி, மேற்பார்வை யாளர் கல்யாண சுந்தரம், தன்னார்வலர் ஆர்த்தி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

    • ஆதரவற்ற குழந்தைகளுக்கு புத்தாடைகளை தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. வாங்கி தருகிறார்.
    • புத்தாடைகளை குழந்தைகள் மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டனர்.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் தங்கபாண்டியன். தனது சட்டமன்ற ஊதியத்தின் மூலம் கொரோனா நிவாரண நிதி, மாணவர் களுக்கு கல்வி உதவித்தொகை, ஏழை மக்களுக்கு மருத்துவ உதவி போன்றவற்றை வழங்கி வருகிறார்.

    அதன்படி கடந்த 6 ஆண்டுகளாக தீபாவளியை முன்னிட்டு ராஜபாளையம் பொன்னகரத்தில் உள்ள ஆதரவற்ற குழந்தைகள் காப்பகம், மருது நகரில் உள்ள லைட் ஆப் லைப் குழந்தைகள் காப்பகம் மற்றும் சேத்தூரில் உள்ள அருளோதயம் ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்தில் உள்ள குழந்தைகளுக்கு தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. தனது ஊதியம் மூலம் புத்தாடைகளை வாங்கி தந்து வருகிறார்.

    இந்த ஆண்டு 7-வது முறையாக தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மேற்கண்ட 3 காப்பகத்தில் உள்ள 231 ஆதரவற்ற குழந்தைகளுக்கு தங்க பாண்டியன் எம்.எல்.ஏ. புத்தாடைகளை வாங்கித் தந்தார். இதற்காக அவர் அந்த குழந்தைகளை ராஜபாளையத்தில் உள்ள பிரபல ஜவுளி கடைக்கு அழைத்துச் சென்றார். அங்கு குழந்தைகள் விரும்பி தேர்வு செய்த புத்தா டைகளை தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. தனது 3 மாத ஊதியமான ரூ. 3 லட்சத்து 15 ஆயிரத்தை செலவு செய்து வாங்கி கொடுத்தார்.புத்தாடைகளை குழந்தைகள் மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டனர்.

    இது குறித்து தங்க பாண்டியன் எம்.எல்.ஏ. கூறுகையில், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஆதரவற்ற குழந்தைகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து தந்தார். அதேபோல் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினும் ஆதரவற்ற குழந்தைகளின் முன்னேற்றத்திற்கும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செயல்படுத்தி வருகிறார்.

    ஆதரவற்ற குழந்தைகள் மகிழ்ச்சியாக தீபாவளி கொண்டாடுவதற்காக தொடர்ந்து 7 ஆண்டுகளாக புத்தாடை எடுத்து கொடுத்து வருகிறேன். குழந்தைகளை நேரடியாக கடைக்கு அழைத்து சென்று அவர்கள் விரும்பும் உடைகளை எடுத்து கொடுப்பது, அவர்களுக்கு மகிழ்ச்சியை தருவதை போல எனக்கும் மன நிறைவை தருகிறது. தீபாவளி அன்று காப்பகத்துக்கு நேரடியாக சென்று இனிப்பு, பட்டாசு கொடுத்து அவர்களுடன் தீபாவளி கொண்டாட உள்ளேன் என்றார். ஆதரவற்ற குழந்தை களுக்கு தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. புத்தாடைகளை வாங்கி கொடுத்ததை தொகுதி மக்கள் பாராட்டினர்.

    • பண்டிகை காலத்தை சிறப்பாக கொண்டாடும் வகையில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
    • ஒரு மாதத்துக்கு தேவையான அரிசி –மளிகை பொருட்கள், புத்தாடைகள் வழங்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    நோய் தொற்றை தவிர்க்கும் வகையிலும் சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள பாடுபடும் தூய்மை பணியாளர்களின் பங்கு மக த்தான போற்றுத லுக்குரியது.

    அவர்களது இன்றிய மையாத பணிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஜோதி அறக்கட்டளை சார்பில் பண்டிகை காலத்தை சிறப்பாக கொண்டாடும் வகையில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

    தஞ்சை மாவட்டம் விளார் ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த தூய்மை பணியாளர்கள் மற்றும் அலுவலக பணியா ளர்கள் அனைவருக்கும் ரூ. 50,000 மதிப்பிட்டில் ஒரு மாதத்துக்கு தேவையான அரிசி – மளிகை பொருட்கள், புத்தாடைகள் ஆகியவை விலையில்லாமல் வழங்கப்பட்டது.

    ஜோதி அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் விளார் ஊராட்சி மன்றத்தலைவி மைதிலி ரெத்தினசுந்தரம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பயனாளிகளுக்கு இந்த நலத்திட்ட உதவிகளை வழங்கினார் .

    இந்த நிகழ்ச்சி யில் விளார் ஊராட்சி செயலாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    இதற்கான ஏற்பாடு களை ஜோதி அறக்கட்டளை செயலாளர் பிரபு ராஜ்குமார் தலைமையில் மேலாளர் ஞானசுந்தரி , மேற்பார்வை யாளர் கல்யாணசுந்தரம் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

    • 3 பேரின் வீடுகள் தீ விபத்தில் எரிந்து சேதமானது
    • பாய், தலையணை, மளிகை பொருட்கள், புத்தாடைகள் மற்றும் தலா ரூ.1000 ரொக்கம் ஆகியவை வழங்கினர்.

    சீர்காழி:

    சீர்காழி அடுத்த செருகுடி கிராமத்தில் தியாகராஜன், ஆராயி, பாஸ்கரன் ஆகிய 3 பேரின் வீடுகள் தீ விபத்தில் எரிந்து சேதமானது. தகவல் அறிந்த சீர்காழி டெம்பிள் டவுன் ரோட்டரி சங்கத்தினர் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறி அதன் தலைவர் கார்த்திகேயன் தலைமையில் வீட்டு உபயோகப் பொருட்கள், பாய், தலையணை, மளிகைபொருட்கள், புத்தாடைகள் மற்றும் தலா ரூ.1000 ரொக்கம் ஆகியவற்றை வழங்கினர்.

    அப்போது செயலாளர் ரவி, பொருளாளர் சந்தோஷ்குமார் மற்றும் முன்னாள் தலைவர்கள் மலர்க்கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடைகள், விளையாட்டு வீரர்களுக்கு உபகரணங்கள் வழங்கப்பட்டது.
    • வீட்டுக்கு ஒரு விருட்சம் திட்டம் மூலம் 300-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை வழங்கினார்.

    தஞ்சாவூர்:

    ஒன்றுப்பட்ட தஞ்சை மாவட்டத்தில் உள்ள முன்னாள் மற்றும் இன்னாள் முப்படை மற்றும் துணை ராணுவ படை வீரர்களைக் கொண்டு அமையப் பெற்ற சோழ நாட்டு பட்டாளம் சமூக சேவை அறக்கட்ட ளையின் 4-ம் ஆண்டு தொடக்க விழா தஞ்சையில் நடைபெற்றது.

    மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கி குத்துவிளக்கேற்றி விழாவை ெதாடங்கி வைத்தார்.

    இந்த விழாவில் ஈ.சி.எச்.எஸ் பொறுப்பு அதிகாரி ஜிபி கேப்ட் சிபிகே. கென்னடி ( ஓய்வு ), குந்தவை நாச்சியார் கலை கல்லூரி பேராசிரியர் முனைவர் தமிழடியான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    விழாவில் தூய்மை பணியாளர்களுக்கு புத்தா டைகள், விளையாட்டு வீரர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள், ரத்த தானம் வழங்கியவர்களுக்கு பரிசு சான்றிதழ்கள் ஆகியவற்றை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வழங்கி பாராட்டினார்.

    மேலும் அவர் வீட்டுக்கு ஒரு விருட்சம் திட்டம் மூலம் 300-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் வழங்கினார்.

    மேலும் இந்த விழாவோடு இணைந்து சோழநாட்டு பட்டாள படை வீரர் அந்தோ ணியின் பணி ஓய்வு பாராட்டு விழாவும் நடைபெற்றது. அவரை கலெக்டர் கவுர வித்தார்.

    • பிறந்த 4 குழந்தைகளுக்கும் தங்க கணையாழி வழங்கும் நிகழ்ச்சி.
    • உட்புற நோயாளிகளுக்கு பால், பிரட், பிஸ்கட் உள்ளிட்ட உணவு பொருட்கள்.

    சீர்காழி:

    சீர்காழியில் தி.மு.க. நகர இளைஞரணிஉதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு அரசு மருத்து வமனையில் நவம்பர் 27ஆம் தேதி பிறந்த 4 குழந்தைகளுக்கும் தங்க கணையாழி வழங்கும் நிகழ்ச்சி நகர இளைஞரணி அமைப்பாளர் ராஜசேகரன் தலைமையில் நடைபெற்றது.

    மாவட்ட பொருளாளர் மகா.அலெக்சாண்டர், சீர்காழி நகர்மன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி ராஜசே கரன், துணை தலைவர் சுப்ப ராயன், ஒன்றிய செயலாளர் பிரபாகரன், நகர்மன்ற உறுப்பினர்கள் பாஸ்கரன், ராமு, ஜெயந்தி முன்னிலை வகித்தனர்.குழந்தைகளுக்கு தங்க கணையாழிகளை பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. வழங்கினார்.

    மேலும் உட்புற நோயாளிகளுக்கு பால், பிரட், பிஸ்கட் உள்ளிட்ட உணவுப் பொருட்களும், பச்சிளம் குழந்தைகளுக்கு புத்தாடைகளும் வழ ங்கினார்.

    நிகழ்ச்சியில்விவசாய அணி துணை அமைப்பாளர் முருகன், மாவட்ட மாணவ ரணி துணை அமைப்பாளர் செந்தில், மாவட்ட கலை இலக்கிய அணி அமைப்பாளர் செல்வமுத்து, பொறியாளர் தன்ராஜ், நகர பொருளாளர்கள் கோட ங்குடி சங்கர், பந்தல்.முத்து, முன்னாள் பொருளாளர் துரை, நிர்வாகிகள் லெனின், ஆனந்த் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடி வில் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ராமச்சந்திரன் நன்றிக் கூறினார்.

    • பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு தீபாவளி பரிசுத் தொகுப்பினை வழங்கினார்.
    • மாற்றுத் திறனாளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் அனைவருக்கும் மதிய உணவும் வழங்கப்பட்டது

    தருமபுரி,

    தீபாவளி பண்டிகை நாளை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளின் நலனுக்காக செயல்பட்டு வரும் லிட்டில் லைட் தன்னார்வ அமைப்பின் சார்பில் தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மாவட்டங்களில் உள்ள பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் தீபாவளி பண்டிகையை கொண்டாடும் வகையில், புத்தாடை, இனிப்பு, காரம் மற்றும் மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்புகள் வழங்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சி தருமபுரி ஆயுதப்படை காவலர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன் கலந்து கொண்டு பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு தீபாவளி பரிசுத் தொகுப்பினை வழங்கினார். இதனைத் தொடர்ந்து மாற்றுத் திறனாளிகளாக இருந்து வாழ்க்கையில் சாதித்து வெற்றி பெற்று உயர்ந்த நிலையில் உள்ளவர்களை பாராட்டி கேடயங்களும் வழங்கப்பட்டது.

    இதனால் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் மாற்றுத் திறனாளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் அனைவருக்கும் மதிய உணவும் வழங்கப்பட்டது.

    • 1243 துப்புரவு பணியாளர்களுக்கு இனிப்பு- புத்தாடைகளை தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. வழங்கினார்.
    • பொதுமக்கள் கடவுள் போல் எண்ணி மலர் தூவி வணங்கினர் என்றார்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம்- தென்காசி ரோட்டில் உள்ள பி.எஸ்.குமாரசாமிராஜா திருமண மண்டபத்தில் தூய்மைப் பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய முன்கள பணியா ளரான தூய்மைப் பணியாளர்களை பாராட்டி கவுரவப் படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் 3-வது முறையாக ராஜபாளையம் சட்ட மன்ற தொகுதியில் தூய்மைப் பணியாளர்கள் 1243 பேருக்கு புத்தாடை மற்றும் இனிப்புகளை தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. வழங்கினார்.

    இதில் எம்.எல்.ஏ. பேசுகையில், கொரோனா காலத்தில் ராஜபாளையம் தொகுதியில் தொற்று பரவாத வகையில் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் அர்ப்பணிப்புடனும் சிறப்பாகவும் பணியாற்றிய முன்கள பணியாளர்களான தூய்மை பணியாளர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    கொரோனா காலத்தில் கோவில்கள் கூட மூடி இருந்தது. ஆனால் தூய்மை பணியாளர்களாகிய நீங்கள் சிறப்பாக பணியாற்றி ராஜபாளையம் தொகுதியில் கொரோனா தாக்கத்தை குறைத்துள்ளீர்கள். உங்களை பொதுமக்கள் கடவுள் போல் எண்ணி மலர் தூவி வணங்கினர் என்றார்.

    இந்த நிகழ்வில் நகராட்சி சேர்மன் பவித்ராஷியாம்ராஜா, தி.மு.க. நகர செயலாளர் (வடக்கு) மணிகண்டராஜா,(தெற்கு) ராமமூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ் ,மாவட்ட மீனவரணி அமைப்பாளர் நவமணி, பேரூர் சேர்மன் பாலசுப்பிரமணியன் பேரூர் செயலாளர் சிங்கப்புலி அண்ணாவி, மாவட்ட கவுன்சிலர் முத்துச்செல்வி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    ×