என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தருமபுரியில் தீபாவளி பண்டிகைக்காக பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் குடும்பத்தினருக்கு இனிப்பு, புத்தாடைகள் -போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் வழங்கினார்
- பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு தீபாவளி பரிசுத் தொகுப்பினை வழங்கினார்.
- மாற்றுத் திறனாளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் அனைவருக்கும் மதிய உணவும் வழங்கப்பட்டது
தருமபுரி,
தீபாவளி பண்டிகை நாளை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளின் நலனுக்காக செயல்பட்டு வரும் லிட்டில் லைட் தன்னார்வ அமைப்பின் சார்பில் தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மாவட்டங்களில் உள்ள பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் தீபாவளி பண்டிகையை கொண்டாடும் வகையில், புத்தாடை, இனிப்பு, காரம் மற்றும் மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்புகள் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சி தருமபுரி ஆயுதப்படை காவலர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன் கலந்து கொண்டு பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு தீபாவளி பரிசுத் தொகுப்பினை வழங்கினார். இதனைத் தொடர்ந்து மாற்றுத் திறனாளிகளாக இருந்து வாழ்க்கையில் சாதித்து வெற்றி பெற்று உயர்ந்த நிலையில் உள்ளவர்களை பாராட்டி கேடயங்களும் வழங்கப்பட்டது.
இதனால் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் மாற்றுத் திறனாளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் அனைவருக்கும் மதிய உணவும் வழங்கப்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்