search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொன்முடி"

    • பொன்முடி, அவரது மகன் கவுதம சிகாமணி, உறவினர் ராஜமகேந்திரன் உள்ளிட்டோர் மீது, 2012-ம் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
    • வழக்கு சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் உள்ள சிறப்பு அமர்வு நீதிமன்ற நீதிபதி மலர் வாலண்டினா முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

    சென்னை:

    தமிழ்நாட்டில், 2006-2011-ம் ஆண்டு வரையிலான தி.மு.க. ஆட்சியில் உயர்கல்வி மற்றும் கனிம வளங்கள், சுரங்கத்துறை அமைச்சராக க.பொன்முடி பதவி வகித்தார்.

    அப்போது, விழுப்புரம் மாவட்டத்தில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகளவில் செம்மண் வெட்டி எடுக்கப்பட்டதாகவும், அதன் மூலம், அரசுக்கு 28 கோடியே 36 லட்சத்து 40 ஆயிரத்து 600 ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து, பொன்முடி, அவரது மகன் கவுதம சிகாமணி, உறவினர் ராஜமகேந்திரன் உள்ளிட்டோர் மீது, 2012-ம் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு விழுப்புரம் மாவட்ட கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.

    இந்த வழக்கை அடிப்படையாகக் கொண்டு அமலாக்கத்துறையினர், அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் கவுதம சிகாமணி உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தி, செம்மண் முறைகேடு தொடர்பாக கிடைத்த பெருந்தொகை ஹவாலா பரிவர்த்தனைகள் மூலம் வெளிநாடுகளில் நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளதாகவும் கூறி, முக்கிய ஆவணங்களும், 13 லட்சம் ரூபாய் மதிப்பிலான பிரிட்டன் பவுண்ட்கள் உள்பட 81 லட்சத்து 70 ஆயிரம் ரூபாயும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், 41 கோடியே 90 லட்சம் ரூபாய் வங்கி நிரந்தர வைப்பீடு முடக்கப்பட்டுள்ளதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்திருந்தது.

    இந்தச் சூழ்நிலையில், சட்டவிரோத பணபரிமாற்ற தடை சட்டத்தில் கள்ளக்குறிச்சி தி.மு.க. எம்.பி. கவுதம சிகாமணி, கே.எஸ்.ராஜ மகேந்திரன், வி.ஜெயசந்திரன், கே.சதானந்தம், கோபிநாத் மற்றும் கே.எஸ். பிசினஸ் ஹவுஸ் நிறுவனம் ஆகிய 6 பேருக்கு எதிராக அமலாக்கத்துறை சார்பில் ஆகஸ்டு மாதம் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 90 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யப்பட்டது.

    இதையடுத்து இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் உள்ள சிறப்பு அமர்வு நீதிமன்ற நீதிபதி மலர் வாலண்டினா முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது, கவுதம சிகாமணி தவிர மற்றவர்கள் அஜராகி இருந்தனர்.

    குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான ராஜ மகேந்திரன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சி.எஸ்.எஸ்.பிள்ளை, தனக்கு எதிரான குற்றப்பத்திரிகை ஆவணங்களில் ஒரு சில பக்கங்களில் உள்ள விவரங்கள் தெளிவில்லாமல் இருப்பதாகவும், அதுகுறித்து அமலாக்கத்துறை தெளிவுபடுத்த வேண்டும் என்றும் வாதிட்டார்.

    இதையடுத்து வழக்கின் விசாரணையை ஜனவரி 24-ந்தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

    • இருவருக்கும் தலா ரூ.50 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
    • தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ஏதுவாக 30 நாட்களுக்கு தண்டனை நிறுத்தி வைக்க நீதிபதி உத்தரவிட்டு இருந்தார்.

    வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் பொன்முடி குற்றவாளி என டிசம்பர் மாதம் அறிவிக்கப்பட்ட நிலையில் அவருக்கும், அவரது மனைவிக்கும் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

    மேலும் இருவருக்கும் தலா ரூ.50 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. அபராதம் செலுத்த தவறினால் மேலும் 6 மாத சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்று கூறியும், தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ஏதுவாக 30 நாட்களுக்கு தண்டனை நிறுத்தி வைக்கவும் நீதிபதி உத்தரவிட்டு இருந்தார்.

    இந்த நிலையில், சொத்துக்குவிப்பு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தண்டனையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் பொன்முடி மேல்முறையீடு செய்துள்ளார்.

    • திமுக ஆட்சி அமைத்து 1967-ல் இருந்து பதவியில் இருக்கும் ஒரு அமைச்சர் தண்டனை பெற்றது இதுவே முதல்முறை
    • 3 ஆண்டு சிறைத்தண்டனையுடன் 50 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது

    மு.க. ஸ்டாலின் தலைமையிலான தமிழக அமைச்சரவையில் முக்கிய இடம் பிடித்திருந்தார் பொன்முடி. முக்கியமான உயர்க்கல்வித்துறை இலாக்கா பொன்முடிக்கு கொடுக்கப்பட்டிருந்தது. அரசியல் கட்சி தலைவர்கள் இருந்தால் அவர்கள் மீது வழக்குகள் போடப்படும். அதில் வியப்பு ஏதும் இல்லை. ஆனால், சில வழக்கு அவர்கள் அரசியல் வாழ்க்கையை அஸ்தமிக்க செய்துவிடும்.

    அப்படித்தான் பொன்முடிக்கு எதிராக வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு அமைந்துள்ளது.

    2006 முதல் 2011 வரை தமிழகத்தில் திமுக ஆட்சி நடைபெற்றது. அப்போது பொன்முடி அமைச்சராக இருந்தார். அந்த காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு தொடர்ந்தது.

    இந்த வழக்கை விழுப்புரம் நீதிமன்றம் விசாரித்தது. விசாரணை முடிவில் பொன்முடியை விடுதலை செய்தது. இதனை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துத்துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

    மேல்முறையீடு தொடர்பான விசாரணை முடிவடைந்து வழக்கு அப்படியே கிடப்பில் போடப்பட்டது. டிசம்பர் 19-ந்தேதி பொன்முடி குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்து, தண்டனை விவரம் 21-ந்தேதி வழங்கப்படும் எனத் தெரிவித்தது. அதன்படி 21-ந்தேதி பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

    இதனால் பொன்முடி தனது எம்.எல்.ஏ. பதவியை இழந்தார். அமைச்சர் பதவியையும் இழந்தார்.

    தமிழகத்தில் அமைச்சராக இருந்தபோது தண்டனை பெற்று பதவியை இழந்த 3-வது அமைச்சர் பொன்முடி ஆவார். முதன்முறையாக திமுக அமைச்சர் ஒருவர் பதவியை இழந்த நபரும் இவர்தான்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • முன்னாள் அமைச்சர் பொன்முடி நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
    • மு.க.அழகிரி, மு.க.தமிழரசு ஆகியோர் பொன்முடியை இன்று சந்தித்து பேசினர்.

    சென்னை:

    வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் 3 ஆண்டு சிறை தண்டனை பெற்ற முன்னாள் அமைச்சர் பொன்முடி நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

    இந்நிலையில், பொன்முடியுடன் மு.க.அழகிரி சந்தித்து பேசினார். சென்னை சைதாப்பேட்டையில் உள்ள பொன்முடியின் இல்லத்தில் மு.க.அழகிரி, மு.க.தமிழரசு ஆகியோர் பொன்முடியை சந்தித்து பேசிவிட்டு புறப்பட்டு சென்றனர்.

    • பொன்முடி வகித்து வந்த உயர்கல்வித்துறை பொறுப்பை அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
    • சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதலமைச்சர் இல்லத்தில் சந்திப்பானது நடைபெற்று வருகிறது.

    சென்னை:

    வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் பொன்முடிக்கும், அவரது மனைவி விசாலாட்சிக்கும் தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து பொன்முடி வகித்து வந்த உயர்கல்வித்துறை பொறுப்பு அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் பொன்முடி சந்தித்து பேசி வருகிறார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதலமைச்சர் இல்லத்தில் சந்திப்பானது நடைபெற்று வருகிறது.

    சந்திப்பின் போது வழக்கு தொடர்பாக அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடைபெறலாம் என கூறப்படுகிறது.

    • சிறப்பு நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட சொத்துக்களை தற்போதைய சூழலில் மீண்டும் முடக்க வேண்டிய அவசியம் இல்லை.
    • சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவு தவறாக இருந்தாலும் நீண்ட காலம் ஆகிவிட்டதால் தலையிட முடியாது.

    சென்னை:

    வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் பொன்முடி குற்றவாளி என கடந்த செவ்வாய்கிழமை அறிவிக்கப்பட்ட நிலையில் அவருக்கும், அவரது மனைவிக்கும் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி நேற்று தீர்ப்பளித்தார்.

    மேலும் இருவருக்கும் தலா ரூ.50 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. அபராதம் செலுத்த தவறினால் மேலும் 6 மாத சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்று கூறியும், தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ஏதுவாக 30 நாட்களுக்கு தண்டனை நிறுத்தி வைக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.

    இந்நிலையில், பொன்முடியின் முடக்கப்பட்ட சொத்துக்கள் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. அதில்:-

    சிறப்பு நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட சொத்துக்களை தற்போதைய சூழலில் மீண்டும் முடக்க வேண்டிய அவசியம் இல்லை. சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவு தவறாக இருந்தாலும் நீண்ட காலம் ஆகிவிட்டதால் தலையிட முடியாது. மீண்டும் முடக்குவதற்கான நடவடிக்கை எடுக்க தள்ளுபடி உத்தரவு தடையாக இருக்காது. இதனால் இந்த மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்வதாக நீதிபதி தெரிவித்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மற்றொரு வழக்கில் பொன்முடி தண்டனை பெற்றுள்ளார்.
    • ஊழல் வழக்கிலிருந்து தப்பிக்க பொன்முடி மேற்கொண்ட முயற்சிகளை குறிப்பிட்டு ஐகோர்ட்டே அதிர்ச்சி தெரிவித்தது.

    கோவை:

    பாரதிய ஜனதா மகளிரணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தற்போது தண்டனை பெற்றுள்ள அமைச்சர் பொன்முடி மீதான மற்றொரு சொத்து குவிப்பு வழக்கு, விழுப்புரம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அதை திடீரென வேலூர் மாவட்ட நீதிமன்றத்துக்கு மாற்றி 2022-ல் சென்னை ஐகோர்ட்டு, அலுவல் ரீதியான உத்தரவை பிறப்பித்தது. அதை தொடர்ந்து சொத்து குவிப்பு வழக்கில் இருந்து பொன்முடி விடுவிக்கப்பட்டார்.

    இது பெரும் சர்ச்சையான நிலையில், இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் எடுத்துக் கொண்டுள்ளது. இந்த வழக்கு தற்போது நிலுவையில் உள்ள நிலையில் தான் மற்றொரு வழக்கில் பொன்முடி தண்டனை பெற்றுள்ளார். ஆட்சி அதிகாரம் உள்ளிட்ட அனைத்தையும் பயன்படுத்தி ஊழல் வழக்கிலிருந்து தப்பிக்க பொன்முடி மேற்கொண்ட முயற்சிகளை குறிப்பிட்டு ஐகோர்ட்டே அதிர்ச்சி தெரிவித்தது.


     தமிழக முதலமைச்சராக ஜெயலலிதா இருந்த போது அவர் மீதான ஊழல் வழக்கை, பெங்களூருவுக்கு மாற்ற தி.மு.க. தொடர்ந்த வழக்கே காரணம். இப்போது தி.மு.க அரசில் அமைச்சர்களாக உள்ள பலர் மீது ஊழல் வழக்கு விசாரணையில் உள்ளது. எனவே, ஏற்கெனவே தி.மு.க.வே உருவாக்கிய முன்னுதாரணத்தின் படி தி.மு.க. அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்குகளை, தி.மு.க. கூட்டணி கட்சிகள் ஆட்சி செய்யாத வேறொரு மாநிலத்துக்கு மாற்ற வேண்டும்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    முன்னதாக, அவர் நிருபர்களிடம் கூறுகையில் அமைச்சர் செந்தில் பாலாஜி சிறைக்கு சென்றபோது அவரை பதவியில் இருந்து நீக்காமல், இலாகா இல்லாத அமைச்சராக இன்று வரை தொடரச் செய்து வருகின்றனர். இது மிகப்பெரிய அவமானம். குற்றச்சாட்டுகள் உள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, அவர்கள் அனைவரையும் அமைச்சர் பொறுப்பில் இருந்து நீக்கிவிட்டு, மாநிலத்தின் முதலமைச்சர், தான் நடத்துவது நேர்மையான ஆட்சி என்பதை நிரூபிக்க வேண்டும். நீதித்துறையில் நல்ல நபர்கள், எதற்கும் பயம் இல்லாத நபர்கள் இருக்கும் போது நல்ல தீர்ப்புகள் கிடைத்துக் கொண்டிருக்கிறது என்றார்.

    • பொன்முடிக்கு விதிக்கப்பட்ட தண்டனை விவரங்களை சென்னை ஐகோர்ட்டு வெளியிட்டுள்ள நிலையில் அந்த உத்தரவு இணையதளத்திலும் பார்க்கும் வகையில் இன்று வெளியிடப்பட்டு உள்ளது.
    • அறிவிப்பாணை தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்டதும், தகுதி இழப்பு அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வந்து விடும்.

    சென்னை:

    சொத்து குவிப்பு வழக்கில் 3 ஆண்டு தண்டனை பெற்றுள்ள பொன்முடி அமைச்சர் பதவியை இழந்ததுடன் எம்.எல்.ஏ. பதவியையும் தானாக இழந்துள்ளார்.

    பொன்முடி தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்த திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதியும் காலியாக விட்டது.

    அதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் நடவடிக்கைகளை தமிழக சட்டசபை செயலகம் மேற்கொள்ள உள்ளது. பொன்முடிக்கு விதிக்கப்பட்ட தண்டனை விவரங்களை சென்னை ஐகோர்ட்டு வெளியிட்டுள்ள நிலையில் அந்த உத்தரவு இணையதளத்திலும் பார்க்கும் வகையில் இன்று வெளியிடப்பட்டு உள்ளது.

    அது மட்டுமின்றி அந்த உத்தரவின் நகல் சட்டசபை செயலகத்துக்கும் இன்னும் ஓரிரு நாளில் அனுப்பப்பட்டு விடும். அந்த விவரங்கள் கிடைத்ததும் சட்டசபை செயலகம், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி பொன்முடியை எம்.எல்.ஏ. பதவியில் இருந்து தகுதி இழப்பு செய்வதற்கான அறிவிப்பை வெளியிடும். அந்த அறிவிப்பாணை தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்டதும், தகுதி இழப்பு அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வந்து விடும்.

    இது குறித்து சட்டசபை செயலக அதிகாரிகளிடம் கேட்டபோது, பொன்முடிக்கு 3 ஆண்டு தண்டனை கிடைத்துள்ளதால் தீர்ப்பு வழங்கிய ஒரு வாரத்துக்குள் அதை நடைமுறைப்படுத்த வேண்டும். அந்த வகையில் சட்டசபை செயலகம் பணியை தொடங்கும்.

    ஐகோர்ட்டு தீர்ப்பு அடிப்படையில் மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி பொன்முடியை எம்.எல்.ஏ. பதவியில் இருந்து தகுதி இழப்பு செய்வதற்கான நடவடிக்கையை ஒரு வாரத்திற்குள் விரைந்து செயல்படுத்தி விடுவோம். இதில் காலதாமதம் செய்ய வாய்ப்பில்லை என்று தெரிவித்தனர்.

    எனவே அடுத்த வாரம் திருக்கோவிலூர் சட்டசபை தொகுதி காலியானதாக இந்திய தேர்தல் கமிஷனுக்கு சட்டசபை செயலகம் கருத்துரு அனுப்பி வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ராஜகண்ணப்பன் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்து வருகிறார்.
    • ராஜகண்ணப்பனிடம் இருந்த காதி மற்றும் கிராம தொழில்கள் துறை அமைச்சர் காந்திக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    அமைச்சராக இருந்த பொன்முடிக்கு சொத்துக் குவிப்பு வழக்கில் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதனால் அவர் எம்.எல்.ஏ. பதவியை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அமைச்சர் பதவியில் நீடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    இதனால் அவர் வகித்து வந்த உயர் கல்வித்துறை வேறு அமைச்சருக்கு கூடுதலாக ஒதுக்கப்பட இருந்தது. இதற்கிடையே, அமைச்சர் ராஜ கண்ணப்பனுக்கு உயர் கல்வித்துறை கூடுதல் பொறுப்பாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    இந்நிலையில், ராஜகண்ணப்பனுக்கு கூடுதல் பொறுப்பு ஒதுக்கீடு செய்துள்ளதை கவர்னர் ஆர்.என்.ரவி ஏற்றுக் கொண்டார்.

    அமைச்சர் ராஜகண்ணப்பனிடம் இருந்த காதி மற்றும் கிராம தொழில்கள் வாரிய துறை அமைச்சர் காந்திக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

    • 3 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.50 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
    • 2 ஆண்டுக்கு மேல் தண்டனை பெறுபவர்கள் தேர்தலில் நிற்கவும் முடியாது.

    கடந்த தி.மு.க. ஆட்சியில் 2006-2011 காலக் கட்டத்தில் உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் இருவருக்கும் 3 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.50 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

    பொன்முடி அப்பீல் செய்ய 30 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் அவர் இப்போது சிறைக்கு செல்ல வேண்டியதில்லை. ஆனாலும் அவர் அமைச்சர் பதவியில் நீடிக்க முடியாது. பதவி இழந்துவிட்டார். எம்.எல்.ஏ. பதவியும் பறிபோய் விடுகிறது. சட்டசபைக்கும் செல்ல முடியாது என்று சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.

    மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்பிரிவு 8 (1)ன் படி ஊழல் தடுப்பு போன்ற சட்டங்களின் கீழ் ஒருவர் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் தகுதி இழப்புக்கு ஆளாக நேரிடும். அந்த வகையில் பொன்முடியின் அமைச்சர் பதவி பறிபோய் உள்ளது.

    இந்த விஷயத்தில் 2 ஆண்டுக்கும் மேல் தண்டனை பெறுபவர்கள் தேர்தலில் நிற்கவும் முடியாது. பொன்முடிக்கு 3 ஆண்டு தண்டனை விதிக்கப்பட்டு உள்ளதால் அவர் அப்பீல் செய்து அதிலும் தண்டனை உறுதிப்படுத்தப்பட்டால் சிறைக்குதான் செல்ல வேண்டும்.

    அந்த வகையில் 3 ஆண்டு தண்டனை அனுபவித்தால் அதன் பிறகு 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிடவும் முடியாது. ஆகமொத்தம் 9 ஆண்டுகளுக்கு அவர் தேர்தலில் நிற்க இயலாது என்று சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    • மேல்முறையீடு செய்யும் வகையில் 30 நாட்கள் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
    • தீர்ப்பின் நகல் இன்று கிடைக்கப்பெற்றதும், மூத்த வழக்கறிஞர்களுடன் ஆலோசனை.

    அமைச்சராக இருந்த பொன்முடிக்கு சொத்து குவிப்பு வழக்கில் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

    இதனால் அவர் எம்.எல்.ஏ. பதவியை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அமைச்சர் பதவியில் நீடிக்க முடியாத நிலை ஏற்பட்டது.

    மேலும், 3 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்யும் வகையில் 30 நாட்கள் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து வரும் ஜனவரி 2ம் தேதி உச்சநீதிமன்றத்தில் பொன்முடி மேல்முறையீடு செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு நகல் இன்று கிடைக்கப்பெற்றதும், மூத்த வழக்கறிஞர்களுடன் அவர் ஆலோசனை மேற்கொள்கிறார்.

    ஆலோசனைக்கு பிறகு வரும் ஜனவரி 2ம் தேதி மேல்முறையீடு செய்யவுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஊழல் இல்லாத சமுதாயத்தை படைப்பதற்கு இந்த தீர்ப்பு படிக்கல்லாக அமையும்.
    • இதே பட்டியலில் இன்னும் சில அமைச்சர்கள் இருக்கிறார்கள்.

    அமைச்சர் பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை கிடைத்திருப்பது பற்றி தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை கூறியதாவது:-

    கடந்த 2017-ம் ஆண்டில் இருந்து அப்பீல் செய்யப்பட்டு கடைசியாக தீர்ப்பு வந்துள்ளது. கொஞ்சம் தாமதமாக வந்தாலும் நல்ல தீர்ப்பு. தமிழக பா.ஜனதா சார்பில் வரவேற்கிறோம்.

    இதன்மூலம் ஊழல் இல்லாத சமுதாயத்தை படைப்பதற்கு இந்த தீர்ப்பு படிக்கல்லாக அமையும். ஏற்கனவே ஊழல் வழக்கில் சிக்கி செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக புழல் ஜெயிலில் இருக்கிறார். இந்தியாவே பார்த்து கொண்டிருக்கிறது.

    இப்போது தி.மு.க.வின் மூத்த அமைச்சர் பொன்முடி தண்டனை பெற்றுள்ளார். இதே பட்டியலில் இன்னும் சில அமைச்சர்கள் இருக்கிறார்கள். இது ஆரம்பம்தான். அடுத்த ஆண்டு மத்தியில் இன்னும் சிலருக்கும் தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளது.

    இந்த தீர்ப்பை பொறுத்தவரை தனிப்பட்ட மனிதரின் பாதிப்பு ஆகாது. தி.மு.க.வின் அரசியலையே புரட்டி போடும் தீர்ப்பு இது. நீதிமன்றத்தையும் ஆளும் கட்சியையும் சம்பந்தப்படுத்தி பேசுபவர்கள் அரசியலில் இருக்கவே லாயக்கில்லாதவர்கள்.

    பா.ஜனதாவில் சேருபவர்கள் மட்டும் விமோசனம் அடைவதாக கூறுவது தங்கள் மீதான பிரச்சினைகளை மக்களிடம் இருந்து திசை திருப்புவதற்குத்தான்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    காங்கிரஸ் சட்டமன்ற குழுத்தலைவர் கு. செல்வபெருந்தகை எம்.எல்.ஏ. கூறியதாவது:-

    பொன்முடி சுப்ரீம் கோர்ட்டில் தன் தரப்பு வாதத்தை முன் வைத்து விடுதலை பெறுவார் என்ற நம்பிக்கை இருக்கிறது. அவர் ஓடி ஒளிய கூடியவர் அல்ல. பல வழக்குகளை தி.மு.க. பார்த்து இருக்கிறது. எனவே இந்த வழக்கையும் எதிர் கொள்வார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×