search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொதுமக்கள் அவதி"

    • பள்ளிகளுக்கு நடந்தும், சைக்கிள்களிலும் செல்லும் மாணவ-மாணவிகள் மிகவும் சிரமப்படுகிறார்கள்.
    • ஒரு வாரத்துக்கு முன்பே மெட்ரோ வாட்டர் பணிகள் முடிந்தும் பள்ளங்களை மூடி தார் சாலைகள் அமைக்கவில்லை.

    சென்னையில் முக்கிய பகுதிகளில் பல்வேறு பணிகளுக்காக சாலைகள் தோண்டப்பட்டு குண்டும் குழியுமாக மாறி போக்குவரத்தையே தடுமாற வைத்துள்ளது.

    தொழில் நகரமான அம்பத்தூரில் ஆயிரக்கணக்கான சிறு தொழில் நிறுவனங்கள் உள்ளன. 20-க்கும் மேற்பட்ட பள்ளிகள், அலுவலகங்கள், குடியிருப்புகள் நிறைந்துள்ள போக்குவரத்து அதிகம் உள்ள பகுதி.

    இந்த பகுதியில் மழைநீர் வடிகால்வாய் அமைக்க சாலைகளின் ஒரு பக்கம் பள்ளம் தோண்டப்பட்டு உள்ளது. இன்னொரு பக்கத்தில் தனியார் கியாஸ் நிறுவனத்துக்கான குழாய்கள் பதிக்க பள்ளம் தோண்டப்பட்டுள்ளது.

    ஒரே நேரத்தில் நடைபெறும் இந்த பணிகளால் சாலைகள் குறுகி குண்டும் குழியுமாகிவிட்டன. சாலைகள் இருந்த இடமே தெரியாமல் செம்மண் பகுதியாக காட்சி அளிக்கிறது.

    கள்ளிக்குப்பம், கடப்பா சாலை, மதனங்குப்பம் சாலை, கருக்கு சாலை, பட்டரைவாக்கம் சாலை, கொரட்டூர் சாலை, தொழிற்பேட்டை - திருவேற்காடு சாலை ஆகிய சாலைகள் படுமோசமாக காட்சி அளிக்கின்றன.

    லேசான தூறல் விழுந்தாலே இந்த பகுதி சேறும் சகதியுமாகி விடுகிறது. இந்த வழியாக பள்ளிகளுக்கு நடந்தும், சைக்கிள்களிலும் செல்லும் மாணவ-மாணவிகள் மிகவும் சிரமப்படுகிறார்கள். இரு சக்கர வாகனங்கள், சைக்கிள்களில் செல்பவர்கள் மழை நேரங்களில் பள்ளம் தெரியாமல் விழுந்து எழுந்து செல்வது வாடிக்கையாகிவிட்டது.

    கலெக்டர் நகர் சந்திப்பு, இளங்கோ நகர் சந்திப்பு, மங்கல் ஏரி பார்க் சந்திப்பு ஆகிய பகுதிகள் வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு படுமோசமாக கிடக்கின்றன. இந்த பகுதியில் ஒரு வாரத்துக்கு முன்பே மெட்ரோ வாட்டர் பணிகள் முடிந்தும் பள்ளங்களை மூடி தார் சாலைகள் அமைக்கவில்லை. சில இடங்களில் நிரப்புவதற்கு மண்கூட இல்லை.

    இதுபற்றி அந்த பகுதியை சேர்ந்தவர்கள் கூறும்போது, "ஓடை தோண்டும்போது ஒரு லாரி மண்ணை ரூ.2 ஆயிரம் விலைக்கு விற்று விடுகிறார்கள். இதில் அரசியல்வாதிகள் உடந்தையாக இருக்கிறார்கள். குழாய்கள் பதிக்கப்பட்ட பிறகும், கால்வாய் கரைகள் கட்டப்பட்ட பிறகும் மூடுவதற்கு போதுமான மண் கிடைப்பதில்லை. இதனால் அரை குறையாக மூடி போடுகிறார்கள். மழை நேரங்களில் தண்ணீர் தேங்கி விடுகிறது" என்றார்கள். சில இடங்களில் பணிகள் முடிந்தும் சாலையை சீர மைக்கவில்லை. இவ்வளவு முக்கியமான பகுதியில் சாலைகளை மாதக்கணக்கில் இப்படி போட்டிருப்பது சரி தானா? என்று பொதுமக்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.

    குறிப்பிட்ட அளவு தூரத்துக்கு பணிகள் முடிந்ததும் அந்த பகுதியில் சாலைகளை சீரமைத்து விட்டு அடுத்தக்கட்டமாக தொடரலாமே என்கிறார்கள் பொது மக்கள்.

    திரு.வி.க.நகரில் இருந்து மூலக்கடை வரை மழைநீர் கால்வாய் அமைக்கப்படுகிறது. கூவத்தில் கொண்டு இணைக்க பிருந்தா தியேட்டர் அருகே பணிகள் நடக்கிறது. மாதக்கணக்கில் நடக்கும் இந்த பணியால் அந்த பகுதியில் போக்குவரத்து முடங்கி உள்ளது.

    5 நிமிடங்களில் திரு.வி.க. நகருக்கு செல்லக்கூடியவர்கள் சந்து பொந்துகளில் நுழைந்து நெரிசலில் சிக்கி படாதபாடு பட்டு சுமார் ஒரு மணி நேரமாகிறது. நெரிசல் மிகுந்த சாலையால், மாலை நேரங்களில் மிகவும் சிரமப்படுகிறார்கள்.

    கோடம்பாக்கம் ஆற்காடு சாலை மெட்ரோ ரெயில் பணிகளால் ஏற்கனவே மேடு பள்ளங்களாக கிடக்கிறது. இதற்கிடையில் உட்புற பகுதிகளில் மழைநீர் கால்வாய்கள் அமைக்கும் பணிகளுக்காக தோண்டப்பட்டதால் பாத சாரிகளும், வாகன ஓட்டிகளும் மிகவும் சிரமப்படுகிறார்கள். சுமார் 3 வருடங்களாக சிரமப்பட்டு வருவதாக அந்த பகுதியில் உள்ளவர்கள் கூறுகிறார்கள்.

    மெயின் ரோடு மட்டுமில்லாமல் உட்புற சாலைகளையும் குண்டும் குழியுமாக்கி பணிகளை முடிக்காமல் போட்டு இருப்பதால் குடியிருப்பு வாசிகள் தெருச்சாலைகள் வழியாக மெயின் ரோட்டுக்கு வர சிரமப்படுகிறார்கள். மெயின் ரோட்டிலும் மெட்ரோ பணிகள் நடப்பதால் போக்குவரத்து சுற்றி சுற்றி விடப்பட்டுள்ளது.

    கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த சிறு மழையில் கூட காந்தி ரோடு, முரளி கிருஷ்ணாநகர் மெயின் ரோடு முழுவதும் சகதி மற்றும் குளம்போல் ஆகிவிட்டதாக தெரிவித்தனர்.

    சில சாலைகளின் நடு பகுதியிலேயே தோண்டி கழிவுநீர் குழாய்கள் பதிக்கும் வேலைகள் நடப்பதால் அந்த பகுதிகளில் இரு சக்கர வாகனங்களில் கூட செல்வது சிரமமாக இருப்பதாக கூறினார்கள்.

    வளசரவாக்கம் பகுதி மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டதும் பெரும்பாலும் அனைத்து ரோடுகளிலும் மெட்ரோ வாட்டர், பாதாள சாக்கடை இணைப்புகளுக்காக ஓடைகள் தோண்டப்பட்டன. சில பகுதிகளில் பணிகள் முடிந்தும் முறையாக மூடப்படாததால் போக்குவரத்துக்கு சிரமமாக இருப்பதாக கூறுகிறார்கள்.

    பூந்தமல்லி-கலங்கரை விளக்கம் இடையே மெட்ரோ ரெயில் பணிகளுக்காக சாலைகளின் நடுவே ராட்சத தூண்கள் அமைக்கப்படுவதால் போரூரில் இருந்து கோடம்பாக்கம், வடபழனி செல்லும் கனரக வாகனங்கள் அம்பேத்கர் சிலை, கே.கே.நநகர், வளசர வாக்கம் பகுதிகளில் மாற்று பாதைகளில் திருப்பி விடப்பட்டுள்ளன.

    அதேநேரம் வளசர வாக்கம், மேட்டுக்குப்பம், ஆழ்வார் திருநகர் பகுதிகளில் உட்புற சாலைகள் வழியாக திருப்பி விடப்பட்டு உள்ள இரு சக்கர வாகனங்கள், கார்கள் அந்த பகுதிகளில் நடந்து வரும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளால் மிகவும் சிரமப்படுகிறார்கள்.

    பரங்கிமலை - மேடவாக்கம் மெயின் ரோட்டில் மெட்ரோ ரெயில் பணிகளுக்காக சாலையின் நடுவே தூண்கள் அமைக்கப்படுவதால் இரு பக்கமும் இலகு ரக வாகனங்கள் செல்வதற்காக குறுகிய பாதைகள் உள்ளன.

    இந்த பாதைகளை தார் போட்டு சீரமைத்து கொடுக்காததால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகிறார்கள். மேடவாக்கம் கூட்டு ரோடு அருகில் சாலை இருந்த அடையாளமே இல்லாமல் செம்மண் பாதையாக குண்டும் குழியுமாக கிடக்கின்றன. இரவு நேரங்களில் இரு சக்கர வாகனங்களில் வருபவர்கள் விபத்துக்களில் சிக்குகிறார்கள்.

    சோழிங்கநல்லூர், சிறுசேரி, துரைப்பாக்கம் பகுதிகளில் ஐ.டி. நிறுவனங்களில் பணிபுரியும் பலர் இந்த வழிகளில் இரவு நேரத்தில் வருவது வழக்கம். ஒரு பக்கம் பணிகள் நடந்தாலும் இன்னொரு பக்கம் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமலும் சாலைகளை அமைத்து கொடுப்பது நல்லது.

    • மேச்சேரி 11-வது வார்டு அண்ணா நகரில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.
    • கழிவு நீர் கால்வாய் முறையாக தூர்வாரப்படாததால் சாக்கடை கழிவு நீர் வெளியேற வழியின்றி தேங்கி நிற்கிறது.

    மேட்டூர்:

    மேச்சேரி 11-வது வார்டு அண்ணா நகரில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்குள்ள கழிவு நீர் கால்வாய் முறையாக தூர்வாரப்படாததால் சாக்கடை கழிவு நீர் வெளியேற வழியின்றி தேங்கி நிற்கிறது. தேங்கி நிற்கும் கழிவு நீரால் கடும் துர்நாற்றம் வீசு வருகிறது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழ்நிலை உள்ளது. மேலும், தேங்கிய கழிவு நீரில் கொசு உற்பத்தியாகி பொதுமக்கள் பல்வேறு நோய் தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர்.

    • கடந்த 15 ஆண்டுகளாக தினமும் ஒரு வாகன ஓட்டியாவது சாலையில் கிழே விழுந்து படுகாயம் அடைந்து வருவதே தொடர்கதையாகி வருகிறது.
    • இதுவரை அதிகாரிகள் எந்த வித நடவடிக்கையும் எடுக்க வில்லை என அப்பகுதி பொதுமக்கள் ெதரி வித்தனர்.

    வேப்பனப்பள்ளி, 

    கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி ஊராட்சி ஒன்றியம் நாச்சிக்குப்பம் ஊராட்சி உட்பட்ட கத்திரிப்பள்ளி கிராமத்தில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில் நெடுசாலை கிராமம் வரை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு புதிய தார் சாலை அமைக்கப்பட்டது.

    இந்த 3 கிலோ மீட்டர் சாலையில் கத்திரிப்பள்ளி, புரம், விருப்பசந்திரம், நெடுசாலை பாட்டூர், கலைஞர் நகர் ஆகிய கிராமங்கள் உள்ளது.

    மேலும் இந்த சாலை அமைக்கப்பட்ட சில வருடங்களிலேயே சாலை முழுவதும் ஆங்காங்கே குண்டும் குழியுமாக மாறி உள்ள நிலையில்பொது மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வந்தனர்.

    இந்த நிலையில் சாலை உரிய பராமரிப்பு இல்லாத தால் நாளடைவில் சாலை முழுவதுமே பெயர்ந்து குண்டும் குழியுமாக சேரும் சகதியும் ஜல்லிக்கற்களுடன் சாலை காட்சியளிக்கிறது.

    இதனால் கடந்த 15 ஆண்டுகளாக தினமும் ஒரு வாகன ஓட்டியாவது சாலையில் கிழே விழுந்து படுகாயம் அடைந்து வருவதே தொடர்கதையாகி வருகிறது. மேலும் மழைக்காலங்களில் இந்த சாலையில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது.

    மேலும் இந்த சேற்றில் பல வாகனங்கள் சேற்றில் சிக்கிக் கொள்வதால் பொதுமக்கள் முதல் வாகன ஓட்டிகள் வரை கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.

    இரவு நேரங்களில் வரும் வாகன ஓட்டிகள் பலர் ஜல்லிக்கற்களில் தவறி விழுந்து படுகாயம் அடைந்து உள்ளனர்.

    மேலும் கத்திரிப் பள்ளியில் இருந்து நெடுசாலை கிராமத்திற்கு இந்த 3 கிலோ மீட்டர் சாலையை கடக்க 30-45 நிமிடங்கள் ஆகிறது.

    மேலும் இந்த சாலை பராமரிப்பு குறித்து பலமுறை சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடமும் கிராம மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் இதுவரை அதிகாரிகள் எந்த வித நடவடிக்கையும் எடுக்க வில்லை என அப்பகுதி பொதுமக்கள் ெதரி வித்தனர்.

    மேலும் அவசர காலத்திற்கு ஆம்புலன்ஸ் கூட கிராமத்திற்கு வர முடிவதில்லை. விபத்து நேர்ந்தாலும், முதியவர்கள், நோயாளிகள் மற்றும் கர்ப்பிணி பெண்களை சாலையில் அழைத்து செல்ல மிகவும் அச்சப்படு வதாக இப்பகுதி கிராம மக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

    பல ஆண்டுகளாக குண்டும் குழியுமான சாலையில் மழை காலங்களில் சேரும் சகதியுமாக உள்ளதால் கிராம மக்கள் தினமும் உயிரை கையில் பிடித்துக்கொண்டு வாகனம் ஓட்டி சென்று வருகின்றனர்.

    இந்த சாலையை உடனடியாக சீரமைத்து புதிய தார் சாலை அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்ைக எடுக்க வேண்டும் என இப்பகுதி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மேலூரில் அறிவிக்கப்படாத மின்வெட்டால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
    • தேவையான அளவுக்கு உயரழுத்த மின்சாரம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    மேலூர்

    மதுரை மாவட்டம் மேலூர் நகர் பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து இரவு நேரங்களில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வந்தது. இதனால் பொதுமக்கள் நிம்மதியாக தூங்க முடியவில்லை. தற்போது 2நாட்களாக இரவு நேரங்களில் மிதமான மழை பெய்து வருகிறது.

    இந்நிலையில் பகல் நேரங்களிலும் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருகிறது. இதனால் பள்ளி மற்றும் கல்லூரி வேலைக்கு செல்பவர்கள் மிகுந்த அவதிக்கு உள்ளாகி உள்ளனர்.

    மேலும் பகல் நேரங்களில் மிக குறைந்த மின்னழுத்தமே பிரச்சினை ஏற்படுகிறது. வீட்டில் இயக்கப்படும் மோட்டார், பிரிட்ஜ், கிரைண்டர், மிக்ஸி, வாஷிங் மெஷின் ஆகியவை செயல்படுவதில்லை. இதனால் வெளியே செல்பவர்கள் உரிய நேரத்தில் செல்ல முடியாத ஒரு அவல நிலை ஏற்பட்டுள்ளது.

    கடை மற்றும் வீடுகளிலும் பல்புகள் அவ்வப்போது மினிட்டாம்புச்சியை மின்னுவது போல் விட்டுவிட்டு வருகிறது. இதனால் பல்புகள் செயலிழந்து விடுகிறது. எனவே மேலூர் நகர்பகுதியில் அறிவிக்காத மின்வெட்டை உடனடியாக நிறுத்த வேண்டும்.

    குறைந்த அழுத்த மின்சாரம் வருவதை சரி செய்து தேவையான அளவுக்கு உயரழுத்த மின்சாரம் வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கிரிவலப்பாதையில் தேங்கும் கழிவுநீரால் பொதுமக்கள் அவதியடைந்து வருகிறார்கள்.
    • பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    திருப்பரங்குன்றம்,

    முருகப்பெருமானின் முதல் படை வீடான திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி திருமண கோலத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.

    மதுரைக்கு மிக அருகாமையில் இருப்பதால் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வரும் பக்தர் கள் திருப்பரங் குன்றத்திற்கும் வந்து சுவாமி தரிசனம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

    இந்த நிலையில் திருப்பரங்குன்றம் பெரியரத வீதி பேருந்து நிலையம் அருகே செல்லும் கழிவு நீர் கால்வாய் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் செல்ல வழி இல்லாமல் சாலையோரம் தேங்கி நிற்கிறது. இதனால் பெரியரத வீதி கிரிவலப் பாதை செல்லும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கழிவுநீர் வழியாகவே செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.

    மேலும் அப்பகுதியில் வணிக வளாகங்கள் அதிக அளவில் இருப்ப தால் வியாபாரிகளும், கடை களுக்கு வரும் வாடிக்கை யாளர்களும் மிகுந்த அவதிக்குள்ளாகும் சூழ்நிலை ஏற்படுகிறது.

    இதுகுறித்து மாநகராட்சி அதிகா ரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை என பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.எனவே சுகாதார சீர்கேடாக இருக்கும் கிரிவலப் பாதையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மின் கம்பி அறுந்து விழுந்ததால் பரபரப்பு
    • தொடர்ந்து மழை பெய்து வருகிறது

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை அருகே சந்தைக்கோடியூர் குடியிருப்பு பகுதியில் நேற்று இரவு திடிரென மின் கம்பி அறுந்து விழுந்தது.

    இதனால் அப்பகுதி முழுவதும் மின்தடை செய்யப்பட்டது.

    இதனால் அப்பகுதியில் உள்ள பொது மக்கள் இன்று காலை வரை மின் விநியோகம் இல்லாமல் மிகவும் அவதிப்பட்டனர்.

    தொடர்ந்து மழை பெய்து வருவதால் முதியவர்கள் மற்றும் பொது மக்களும் மிகவும் அவதிப்பட்டனர். 

    • அனல் காற்று வீசி வருவதோடு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை முற்றிலுமாக முடக்கி வருகின்றது.
    • மழை தொடர்ந்து நீடித்து வந்ததால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் கோடை வெயில் தொடங்கி அக்னி நட்சத்திரம் முடிந்து தற்போது வரை 104 டிகிரி வெயில் பதிவாகி வந்தது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும், சுட்டெரிக்கும் வெயில் காரணமாக கடலூர் மாவட்டத்தில் அனல் காற்று வீசி வருவதோடு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை முற்றிலுமாக முடக்கி வருகின்றது. கடலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக வெப்ப சலனம் காரணமாக பலத்த இடி மின்னலுடன் மழை பெய்து வருகிறது. பகலில் 104 டிகிரி வெயிலும், மாலை நேரங்களில் குளிர்ந்த காற்றுடன் பலத்த மழை பெய்து வருவதால் பொதுமக்களுக்கு பல்வேறு தொற்று நோய்கள் பரவி வருகிறது.

    இந்நிலையில் இன்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வந்த நிலையில் கடலூர், நெல்லிக்குப்பம், மேல்பட்டாம்பாக்கம், திருவந்திபுரம், கோண்டூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் லேசான சாரல் மழையுடன் தொடங்கியது. ஒரு மணி நேரத்திற்கு மேலாக மழை தொடர்ந்து நீடித்து வந்ததால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவதி அடைந்தனர். மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள மழையில் நனைந்து படியும், நடந்து சென்ற பொது மக்கள் குடை பிடித்த படியும் சென்றதை காண முடிந்தது. அதே சமயத்தில் இந்த திடீர் மழையால் குளிர்ந்த காற்று வீசிவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    • அபிராமம் பகுதியில் ரேசன் பொருட்கள் சரிவர கிடைக்காததால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.
    • கோதுமை, மண்எண்ணெய் சீனி, துவரம்பருப்பு உள்பட அனைத்து பொருட்களும் கிடைப்பதில்லை.

    அபிராமம்

    ராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டம், அபிராமம் பகுதியில் உள்ள ரேசன்கடைகளில் கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக அரிசி, தவிர கோதுமை, சீனி, துவரம்பருப்பு, மண்எண்ணெய் உள்பட அனைத்து பொருட்களும் சரிவர கிடைக்காததால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    ரேசன்கடையில் அத்தியாவசியப் பொருட்கள் குறைந்த விலையில் கிடைப்பதால் சாதாரண மக்கள் முதல் நடுத்தர மக்களும் ரேசன்கடையில் உணவு பொருட்களை வாங்கி பயனடைகின்றனர். அபிராமம் பகுதியில் உள்ள 3 ரேசன் கடைகளில் 1200 ரேசன்கார்டுதாரர்கள் பயனடைந்து வருகின்றனர்.

    கோடை வெயில் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. குறிப்பாக அக்னி வெயில் நட்சத்திரம் முடிந்த நிலையிலும் தொடர் வெப்பத்தால் பகல்நேரங்களில் ரேசன்கடைகளுக்கு பொதுமக்கள் வருகை குறைவாக காணப்படுகிறது. வெயிலின் தாக்கம் குறைந்து காலை, மாலை ரேசன்கடைகளுக்கு சென்றால் கடை பூட்டியே கிடைக்கிறது. இதனால் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்லும் நிலை உள்ளது.

    ரேசன்கடைகளுக்கு வழங்கப்படும் பொருட்கள் அரிசியை தவிர கோதுமை, சீனி, துவரம்பருப்பு, மண்எண்ணெய் உள்பட பல பொருட்கள் அபிராமம் பகுதி பொதுமக்களுக்கு பெயரளவிற்கு மட்டுமே கிடைக்கிறது. முன் கூட்டியே ரேசன் பொருட்கள் வாங்க வராமல் மாத கடைசியில் ரேசன்கடைக்கு ரேசன் பொருட்கள் வாங்க வருவோர் ஏமாற்றம் அடைகின்றனர்.

    இதுபற்றி அபிராமம் அப்பகுதி மக்கள் கூறுகையில், தகுதியான அனைத்து ரேசன்கார்டு தாரர்களுக்கும் கோதுமை, மண்எண்ணெய் சீனி, துவரம்பருப்பு உள்பட அனைத்து பொருட்களும் கிடைப்பதில்லை. ஏழை மக்களின் நன்மை கருதி அனைத்து பொருட்களும் அனைத்து மக்களுக்கும் மாதந்தோறும் ரேஷனில் ரேசன் பொருட்கள் கிடைக்க சமந்தப்பட்ட உணவுப்பொருள் வழங்கள் மற்றும் கூட்டுறவு துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    • ஜூன் மாதத்திலும் வாட்டி வதைக்கும் வெயில்
    • இதனால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

    மதுரை

    ஜூன் மாதத்தில் 2 வாரங்கள் கடந்த பின்னரும் மதுரையில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. கடந்த சில நாட்களாக வெப்பநிலை 38-40 டிகிரி செல்சியஸ் அளவில் உள்ளது. சில நேரங்களில் வெப்பம் குறை வாக இருந்தாலும் புழுக்கம் அதிகமாக இருக்கிறது.

    பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்ப தால் அவர்கள் சிரமம் அடைந்து வருகின்றனர்.

    ரோட்டில் கடை வைத்து வியாபாரம் செய்துவரும் வியாபாரிகளும் வெயிலின் தாக்கத்தால் அவதிக்குள்ளா கின்றனர். இரவு நேரங்களில் புழுக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் சிரமம் அடைந்துள்ளனர்.பலர் காற்றுக்காக வீட்டிற்கு வெளியில் வந்து அமர்ந்திருக்கின்றனர். மேலும் பகல் நேரங்களில் வெளியே செல்வதை பலர் தவிர்த்து வருகின்றனர்.

    காற்று வீசுவது குறைவாக இருப்பதால் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால் பகல் நேரங்களில் சாலைகள் மற்றும் பாலங்களில் செல்லும்போது அனல் அடிக்கிறது. இந்த நிலையில் குளிர்பானங்கள், பழங்களின் விற்பனை ஜோராக நடந்து வருகிறது.வழக்கமாக அக்னி நட்சத்திரம் முடிவடைந்த பின்னர் படிப்படியாக வெப்பத்தின் தாக்கம் குறையும். இந்தமுறை அக்னி நட்சத்திர காலத்தில் மழை பெய்தும்கூட வெப்பத்தின் தாக்கம் குறையவில்லை.

    இந்த நிலையில் ஜூன் மாதத்தில் ஒரு வாரத்திற்கு வெப்பம் அதிகமாக இருக்கும் என வானிலை மையம் தெரிவித்திருந்தது. ஆனால் 2 வாரங்களை கடந்த பின்னரும் வெயில் அதிகமாகவே உள்ளது. கடந்த சில தினங்களில் ஒருமுறை மழை பெய்தும் கூட அது வெப்பத்தை தணிக்க போதுமானதாக இல்லை. வரும் நாட்களில் வெப்பத்தின் தாக்கம் குறையுமா? என மக்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

    • கடந்த 20 நாட்களாக தொடர் மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது.
    • மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    ஏரியூர், 

    தருமபுரி மாவட்டம், பென்னாகரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளான பென்னாகரம், பாப்பாரப்பட்டி, ஏரியூர், அக்ரஹாரம், பெரும்பாலை, நாகமரை, பென்னாகரம் நகர், உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 20 நாட்களாக தொடர் மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது.

    கோடை வெயில் 100 டிகிரியை தாண்டி சுட்டு எரிக்கும் நிலையில், பகல் நேரங்களில் 20-க்கும் மேற்பட்ட முறை மின்சாரம் துண்டிக்க பட்டு வருகிறது.

    இதனால் வர்த்தக நிறுவனங்களும் எவ்வித பணியும் செய்ய முடியாமல் நஷ்டம் அடைந்து வருகின்றனர்.

    தொடர் மின்வெட்டின் காரணமாக பணியா ட்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாமல் சில நிறுவனங்களில் பணியாள ர்களை நிறுத்தி விட்டனர்.

    மேலும் இரவு நேரத்தில், பெரும்பாலும் மின்சாரம் இருப்பதே இல்லை. பென்னாகரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகள் இருளில் மூழ்கி உள்ளது.

    இந்த, இரவு நேர மின்வெட்டால், குழந்தை களும், முதியவர்களும், நோயாளிகளும் பெரும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர்.

    இது குறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டால் உரிய பதில் கிடைப்பதில்லை. எனவே பென்னாகரம் ஒன்றிய அளவிலான மின்வாரிய அதிகாரிகளின் அலட்சியத்தின் காரணமாக நடைபெறும் இந்தத் தொடர் மின் வெட்டால், இந்த பகுதி பொதுமக்கள் புலம்பி வருகின்றனர்.

    இது குறித்து மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், முறையான மின்சாரம் வழங்க தேவையான நட வடிக்கைகள் உடனடியாக எடுக்க வேண்டும் எனவும், இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

    • அறிவிக்கப்படாத மின் தடையால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகும் நிலை உள்ளது.
    • தடையில்லா மின் வினியோகம் செய்ய வேண்டும் என அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளம் பகுதியில் கடந்த ஒரு வாரமாக தினமும் இரவு, பகல் பாராமல் அடிக்கடி அறிவிக்கப்படாத மின்தடை ஏற்பட்டு வருவதால் அனைத்து தரப்பு மக்களும் பெரும் அவதியடைந்து வருகின்றனர்.

    இதனால் வியாபாரிகள், கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். கோடை வெயிலின் தாக்கத்தால் மக்கள் அவதிப்பட்டு வரும் வேளையில் இந்த மின்தடையால், மேலும் அவதிக்குள்ளாக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.

    சில பகுதிகளில் மின்தடை ஏற்பட்டு மீண்டும் மின்சாரம் வந்தாலும் குறைந்த மின் அழுத்தமாக உள்ளது. இது குறித்து பொதுமக்கள் மின்வாரிய அதிகாரிகளிடம் புகார் செய்தாலும் கண்டு கொள்வது கிடையாது. எந்த வித முன் அறிவிப்பும் இல்லாமல் இரவு நேத்தில் மின் தடை ஏற்படுத்தி வருவது மக்களுக்கு பெரும் வேதனையை அளித்தள்ளது.

    இரவு நேரங்களில் ஏற்படும் தொடர் மின்தடை யால் கைக்குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியோர்கள், உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள் என அனைத்து தரப்பினரும் கொசுக்கடியிலும், புழுக்கம் காரணமாகவும் தூக்கத்தை தொலைத்து அவதிப்பட்டு வருகின்றனர்.

    இந்த தொடர் மின்தடை ஏற்பட காரணம் தெரியாமல் பொதுமக்கள் புலம்பி தவித்து வருகின்றனர். மின் தடைக்கு பொது மக்களும், சமூக ஆர்வலர்களும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். எனவே மின்சார வாரியம் உரிய நடவடிக்கை மேற்கொண்டு தடையில்லா மின் வினியோகம் செய்ய வேண்டும் என அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சாக்கடை மூடாததால் பொதுமக்கள் அவதியடைந்து வருகிறார்கள்.
    • சாக்கடையை மூடி வைக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    அவனியாபுரம்

    மதுரை அவனியாபுரம் மெயின் ரோடு 100 வார்டுக்கு உட்பட்ட பகுதியில் ஒரு மாதத்திற்கு முன்பாக தோண்டிய சாக்கடையை மூடாததால் துர்நாற்றம் வீசி சுகாதாரக் கேடு ஏற்படும் அபாயம் உள்ளது.

    மேலும் அந்த சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் செல்லாமல் தேங்கி நிற்கிறது. இந்தக் கழிவு நீர் சாலையிலும் ஓடுகிறது. இதனால், அப்பகுதி பொதுமக்கள் சிரமம் அடைந்துள்ளனர்.

    இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

    இந்த நிலையில் சாக்கடையின் அடைப்பை சரி செய்து கழிவு நீர் தடையின்றி செல்லும்படி செய்ய வேண்டும் என்றும், சாக்கடையை மூடி வைக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×