search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Citizens suffer"

    • சாக்கடை மூடாததால் பொதுமக்கள் அவதியடைந்து வருகிறார்கள்.
    • சாக்கடையை மூடி வைக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    அவனியாபுரம்

    மதுரை அவனியாபுரம் மெயின் ரோடு 100 வார்டுக்கு உட்பட்ட பகுதியில் ஒரு மாதத்திற்கு முன்பாக தோண்டிய சாக்கடையை மூடாததால் துர்நாற்றம் வீசி சுகாதாரக் கேடு ஏற்படும் அபாயம் உள்ளது.

    மேலும் அந்த சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் செல்லாமல் தேங்கி நிற்கிறது. இந்தக் கழிவு நீர் சாலையிலும் ஓடுகிறது. இதனால், அப்பகுதி பொதுமக்கள் சிரமம் அடைந்துள்ளனர்.

    இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

    இந்த நிலையில் சாக்கடையின் அடைப்பை சரி செய்து கழிவு நீர் தடையின்றி செல்லும்படி செய்ய வேண்டும் என்றும், சாக்கடையை மூடி வைக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×