search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sewers"

    • சாக்கடை மூடாததால் பொதுமக்கள் அவதியடைந்து வருகிறார்கள்.
    • சாக்கடையை மூடி வைக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    அவனியாபுரம்

    மதுரை அவனியாபுரம் மெயின் ரோடு 100 வார்டுக்கு உட்பட்ட பகுதியில் ஒரு மாதத்திற்கு முன்பாக தோண்டிய சாக்கடையை மூடாததால் துர்நாற்றம் வீசி சுகாதாரக் கேடு ஏற்படும் அபாயம் உள்ளது.

    மேலும் அந்த சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் செல்லாமல் தேங்கி நிற்கிறது. இந்தக் கழிவு நீர் சாலையிலும் ஓடுகிறது. இதனால், அப்பகுதி பொதுமக்கள் சிரமம் அடைந்துள்ளனர்.

    இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

    இந்த நிலையில் சாக்கடையின் அடைப்பை சரி செய்து கழிவு நீர் தடையின்றி செல்லும்படி செய்ய வேண்டும் என்றும், சாக்கடையை மூடி வைக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • லேசார் கோவில் வீதியில் பல ஆண்டுகளாக பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படாமல் இருந்தது.
    • அனிபால் கென்னடியை சந்தித்து பாதாள சாக்கடை வசதி ஏற்படுத்தி தரவேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    புதுச்சேரி:

    உப்பளம் தொகுதிக்குட்பட்ட நேதாஜி நகர் 3, அகத்தியர் நகர் விரிவாக்கம், திருவள்ளுவர் வீதி, மற்றும் திப்புராயப்பேட்டையில் உள்ள லேசார் கோவில் வீதியில் பல ஆண்டுகளாக பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படாமல் இருந்தது.

    இது தொடர்பாக அப்பகுதியை சேர்ந்த பொது மக்கள் தொகுதி எம்.எல்.ஏ. அனிபால் கென்னடியை சந்தித்து பாதாள சாக்கடை வசதி ஏற்படுத்தி தரவேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    இதையடுத்து பொதுப்ப ணித்துறை தலைமை பொறியாளர் சத்திய மூர்த்தி, கண்காணிப்பு பொறியாளர் பாஸ்கர், செயற்பொறியாளர் முருகா னந்தம் உள்ளிட்டோரிடம் பாதாள சாக்கடை அமைத்து தர கோரி கென்னடி எம்.எல்.ஏ. மனு அளித்தார்.

    அதன் பேரில் தற்போது அப்பகுதியில் பாதாள சாக்கடை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணியை அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.

    அப்போது தொகுதி செயலாளர் சக்தி வேல், அவைத்தலைவர் ரவி, ஆதி திராவிடர் அணி துணை அமைப்பாளர் தங்கவேல், இளைஞர் அணி துணை அமைப்பாளர் ராஜி, கிளை செயலாளர்கள் மணிகண்டன், செல்வம், காந்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    ×