search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாக்கடை"

    • சாக்கடை கால்வாயில் அதிகாலையில் நாய் ஒன்று விழுந்துள்ளது
    • தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து நாயை உயிருடன் மீட்டனர்

    திருச்செங்கோடு:

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வாலறைக்கேட் அருகே பண்ணக்காடு பகுதியில் அதிக ஆழமுள்ள சாக்கடை கால்வாய் உள்ளது. இந்த சாக்கடை கால்வாயில் அதிகாலையில் நாய் ஒன்று விழுந்துள்ளது. பின்னர் சாக்கடையில் இருந்து வெளியே வரமுடியாததால் தொடர்ந்து சத்தமிட்டு கொண்டே இருந்தது. இதை பார்த்த அந்த வழியாக சென்ற கணேஷ் புவன் என்பவர் திருச்செங்கோடு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து தீயணைப்பு அலுவலர் குணசேகரன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சதீஷ்குமார், ஹரிஹரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து நாயை உயிருடன் மீட்டனர். இதை தொடர்ந்து அப்பகுதி மக்கள் தீயணைப்புத் துறை வீரர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.

    • திருச்சி மாநகராட்சியில் பாதாள சாக்கடை கழிவுகளை அகற்ற நவீன எந்திரம் வாங்கப்பட்டு உள்ளது
    • மேயர் அன்பழகன் முன்னிலையில் கோர்ட்டு அருகில் உள்ள பாதாள சாக்கடையில் உள்ள குப்பை மற்றும் மண் கழிவுகள் அகற்றப்பட்டது

    திருச்சி, 

    திருச்சி மாநகராட்சி சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது. அதன்படி மழைக்காலங்களில் குடியிருப்பு பகுதிகள். சாலைகளில் மழைநீர் தேங்கி நிற்காமல் இருக்க மாநகராட்சிக்கு உட்பட்ட 5 மண்டலங்களிலும் உள்ள மழைநீர் கால்வாய்களில் தேங்கி நிற்கும் குப்பை கழிவுகள் மாநகராட்சி ஊழி யர்களால் அகற்றப்பட்டு வருகிறது.

    மேலும், பாதாள சாக் கடையில் உள்ள குப்பை மற்றும் மண் கழிவுகளை அகற்றுவதற்காக நவீன நீர் உறிஞ்சும் எந்திரம் திருச்சி மாநகராட்சிக்கு வரவழைக்கப்பட்டுள்ளது. இந்த எந்திரம் பாதாள சாக்கடையில் உள்ள குப்பை மற்றும் மண் கழிவு களை மொத்தமாக உறிஞ்சி எடுத்து, பின்னர் குப்பை மற்றும் மண் கழிவுகளை மட்டும் தனியாக சேகரித் துக்கொண்டு மீண்டும் தண்ணீரை மட்டும் பாதாள சாக்கடையில் விட்டுவிடும்.

    இவ்வாறு செய்வதன் மூலம் பாதாள சாக்க டைகளில் அடைப்புகள் இல்லாமல் மழைக்காலங் களில் தண்ணீர் செல்வதுடன் குடியிருப்பு பகுதி மற்றும் சாலைகளில் தண்ணீர் தேங்கி நிற்கும் நிலை ஏற்படாமல் இருப்ப துடன் பொதுமக்களும் சிரமத்திற்கு ஆளாகாமல் இருப்பார்கள்.

    நவீன நீர் உறிஞ்சும் எந்திரம் மூலம் திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் முன்னிலையில் கோர்ட்டு அருகில் உள்ள பாதாள சாக்கடையில் உள்ள குப்பை மற்றும் மண் கழிவுகளை அகற்றினர்.

    அவருடன் நகரப் பொறியாளர் சிவபாதம், மண்டலத் தலைவர் துர்கா தேவி, செயற்பொறியாளர் கே. எஸ். பாலசுப்பிரமணியன், உதவி ஆணையர் சண்முகம், இளநிலை பொறியாளர் பாவா பக்ருதீன், கவுன்சிலர் கலைச்செல்வி மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    • தென்னோலைக்கார தெருவில் நிரம்பி வழியும் பாதாள சாக்கடையால் நோய் பரவும் அபாயம் நிலவுகிறது.
    • கடும் துர்நாற்றம் வீசுகிறது.

    மதுரை

    மதுரை மாநகராட்சியில் பல்வேறு பகுதிகளில் பாதாள சாக்கடை நிரம்பி வழிகிறது. இதனால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. மதுரை நகரின் மையப் பகுதியான தெற்கு கிருஷ்ணன் கோவில் தெருவில் உள்ள தென் னோலைக்கார தெருவில் கடந்த சில மாதங்களாக அடிக்கடி பாதாள சாக்கடை நிரம்பி வெளி யேறுவது வாடிக்கை யாக உள்ளது.

    இதனால் தெருவில் வசிக்கும் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து உள்ளனர். சாக்கடை நீர் நிரம்பி வீட்டின் வாசலில் தேங்கி கிடக்கிறது. இதன் காரணமாக அந்த தெருவில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. தற்போதும் தென்னோலைக் கார தெருவில் இதே சூழ்நிலை நிலவுகிறது.

    இது குறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. அங்குள்ள பாதாள சாக்கடையை முழுமையாக சுத்தம் செய்யாமல் நிரம்பும்போது மட்டும் மேற்புறமாக சுத்தம் செய்துவிட்டு செல்வதால் இந்த பிரச்சனை தொடர்ந்து நீடிப்பதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

    மேலும் அந்த தெருவில் குப்பைகளும் கழிவுகளும் அதிக அளவில் தேங்கி கிடக்கின்றன. கழிவு நீர் தேக்கம், சுகாதார சீர்கேடு காரணமாக கொசு அதிகமாகி டெங்கு பரவலுக்கு வழிவகுப்பதாக அமைந்துள்ளது.

    இது குறித்த அப்பகுதி மக்கள் கூறுகையில், தென்னோலை கார தெருவில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு அடிக்கடி பாதாள சாக்கடை நிரம்பி வருகிறது. இது தொடர்பாக பலமுறை புகார் அளித்தோம். ஆனால் மாநகராட்சி அதிகாரிகள் கண்டும், காணாமல் இருப்பதாக வேதனையுடன் தெரிவித்தனர்.

    • கடைகளில் ஓட்டல் மற்றும் டீ கடைகள் வைத்து இருந்தவர்கள் கடையை காலி செய்து விட்டு சென்றுவிட்டனர்.
    • தற்போது கடந்த 2 நாட்களாக பெய்த மழையிலும் கடைக்குள் சாக்கடை நீர் புகுந்து கழிவுகள் தேங்கியுள்ளது. இதனால் கடையில் துர்நாற்றம் வீசுகிறது.

    சேலம்:

    சேலம் லாரி மார்க்கெட் அருகே உள்ள மெயின் ரோட்டில் ஏராளமான கடைகள் மற்றும் வணிக வளாகங்கள் உள்ளன.

    சேலம் மாநகரில் கனமழை பெய்யும் போது அரிசிபாளையம் பகுதியில் இருந்து வெளியேறும் கழிவுநீர் இந்த பகுதியில் அதிகளவில் தேங்குகிறது.

    இதனால் அங்குள்ள கடைகள் மற்றும் வணிக வளாகங்களுக்குள் தண்ணீர் புகுந்து விடுகிறது. இதனால் அந்த கடைகளில் ஓட்டல் மற்றும் டீ கடைகள் வைத்து இருந்தவர்கள் கடையை காலி செய்து விட்டு சென்றுவிட்டனர். இதனால் கடை உரிமையாளர்கள் பரிதவிப்பில் உள்ளனர்.

    இது குறித்து அந்த பகுதியை சேர்ந்த கடை உரிமையாளர் பங்கஜ் என்பவர் கூறுகையில், கடந்த 2 ஆண்டுகளாக சாக்கடை கால்வாய்களை தூர்வாராததால் அரிசிபாளையம் பகுதியிலிருந்து வரும் கழிவு நீர் எங்களது கடைக்குள் புகுந்து விடுகிறது.

    இதனால் கடையில் இருக்கும் பொருட்கள் அனைத்தும் வீணாகி சேதமாகிறது. தற்போது கடந்த 2 நாட்களாக பெய்த மழையிலும் கடைக்குள் சாக்கடை நீர் புகுந்து கழிவுகள் தேங்கியுள்ளது. இதனால் கடையில் துர்நாற்றம் வீசுகிறது.

    இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    இதே நிலை தொடர்ந்தால் விரைவில் மாநகராட்சி அலுவல கம் முன்பு போராட்டத்தில் ஈடுபடுவோம்.

    எனவே மாநகராட்சி அதிகாரிகள் தலையிட்டு இந்த பகுதியில் தண்ணீர் தேங்கா தவாறு சாக்கடை கால்வாய்களை உடனடியாக தூர்வார வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    • நிரந்தர தீர்வு ஏற்படுத்தப்படுமா?
    • நாகர்கோவில் பகுதியில் பல ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட நிலையில் உள்ள மழை நீர் வடிகால் அவ்வப்போது ஏற்படும் அடைப்புகளால் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளுக்கு கடும் சிரமத்தை கொடுத்து வருகின்றன.

    கன்னியாகுமரி:

    நாகர்கோவில் பகுதியில் பல ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட நிலையில் உள்ள மழை நீர் வடிகால் அவ்வப்போது ஏற்படும் அடைப்புகளால் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளுக்கு கடும் சிரமத்தை கொடுத்து வருகின்றன.

    சிதம்பரம் நகர் ஜங்ஷன் பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் கடைகளில் உள்ள கழிவுகள் பீ. டபுள் .யு .டி. ரோடு வழியாக செட்டிகுளம் சிக்னலை கடந்து அங்குள்ள பெரிய வாய்க்காலில் சென்று கலக்கிறது.

    இந்நிலையில் பல ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட மழை நீர் வடிகால்கள் ,கழிவுகள் மற்றும் சகதிமணல்களால் அடிக்கடி நிரம்பி விடுகின்றன. இதனால் பல இடங்களில் அடைப்புகள் ஏற்பட்டு கழிவு நீர் தடையின்றி செல்ல முடியாமல் உடைப்புகள் வழியாக வெளியேறி சாலையில் வழிந்து ஓடுகிறது.

    அதன் பிறகு மாநகராட்சி ஊழியர்கள் வந்து மழை நீர் வடிகால்கள் மேல் உள்ள ஸ்லாப்புகளை உடைத்து, அகற்றி அடைப்பை சரி செய்து முடித்த பிறகு தான் மீண்டும் கழிவுநீர் செல்லும் நிலை ஏற்படுகிறது.

    இந்த நிலை அடிக்கடி ஏற்படுவதால் ஸ்லாப்புகள் அடிக்கடி மாற்றபட வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. மாநகராட்சி சீரமைத்தாலும் இந்த செலவை வசதிகள் கருதி அப்பகுதியில் உள்ள வியாபாரிகள் தொழில திபர்கள் பொதுமக்கள் ஆகியோரே கூடுதலாக செய்யும் நிலை ஏற்படுகிறது. இதற்கு ஆண்டுக்கு பல ஆயிரம் வரை செலவு ஏற்படுவதாக கூறுகிறார்கள்.

    ஆண்டுக்கு 2முறை இது போன்ற செலவுகளை வியாபாரிகள் பொதுமக்கள் சந்திக்க வேண் டியதாககூறு கிறார்கள்.பாதாள சாக்கடை பணி யின் போது உண்டான மணல் சகதிகழிவுகளே மழை நீர் வடிகால்களில்தேங்கி இது போன்ற அடைப்பு களை அடிக்கடி ஏற்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. அடிக்கடி ஸ்லாப்புகளைஉடைத்து வியாபாரிகள் மற்றும் மாநகராட்சிக்கு செலவு ஏற்படுவதை தடுக்கும் வகையில் அனைத்து பகுதிகளிலும் உள்ள மழை நீர் வடிகால்களை ஆழமாக தூர்வாரி மீண்டும், மீண்டும் அடைப்புகள் ஏற்படா வண்ணம் தடுத்து பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளுக்கு வீண்செலவு ,சுகாதார சீர்கேடு உள்ளிட்ட சிரமங்களை தவிர்க்க நிரந்தர தீர்வு ஏற்படுத்த வேண்டும் என்று அப்பகுதி தொழிலதிபர்கள், வியாபா ரிகள் பொதுமக்கள் மாநகராட்சிக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • தடுப்பு பலகைள் வைக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டது.
    • இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது.

    ஊட்டி,

    ஊட்டி ரெயில் நிலையம் அருகே உள்ள சாலையில் பாதாள சாக்கடை செல்கிறது. இந்த பாதாள சாக்கடையானது கடந்த ஒரு மாத காலமாக திறந்தே கிடக்கிறது. இதனால் அங்கு தடுப்பு பலகைள் வைக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டது. இதையடுத்து தடுப்பு பலகை வைக்கப்பட்டது.

    ஆனால் தடுப்பு பலகைகள் வைத்தும் அந்த இடத்தில் அசம்பாவிதங்கள் நடந்த வண்ணம் இருக்கிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்பாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் மற்றும் சைக்கிளில் வந்தவர் விபத்தில் சிக்கினர்.

    அது மட்டுமல்லாமல் இரவு நேரங்களில் பாதசாரிகள் கவனமாக செல்லவில்லை என்றால் பாதாள சாக்கடைக்குள் விழும் நிலை உள்ளது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது.

    தற்போது பள்ளிகள் திறக்க இருப்பதால் பள்ளிக் குழந்தைகள் அந்தப் பாதையை தான் பயன்படுத்துவார்கள் எனவே அசம்பாவிதங்கள் ஏதேனும் ஏற்படும் முன்னர் சம்பந்தப்பட்ட துறை மக்களின் நலன் கருதி உடனடியாக அதனை சீரமைத்து தர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • வெள்ளகோவில் நகராட்சிக்குப்பட்ட பகுதிகளில் நூல் மில்கள், எண்ணை ஆலைகள், விசைத்தறிக்கூடங்கள் அமைந்துள்ளன.
    • மழை பெய்யும் போது மழை நீர் மற்றும் கழிவு நீர் கலந்து சாலைகளில் ஓடுகின்றன.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் நகராட்சிக்குப்பட்ட பகுதிகளில் ஏராளமான நூல் மில்கள், எண்ணை ஆலைகள், விசைத்தறிக்கூடங்கள் இதர தொழிற்சாலைகள் அமைந்துள்ளன.இந்தநிலையில் வெள்ளகோவிலில் இருந்து முத்தூர் செல்லும் ரோட்டில் சாக்கடைகளில் குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகள் நிரம்பி உள்ளன. இதனால் மழை பெய்யும் போது மழை நீர் மற்றும் கழிவு நீர் கலந்து சாலைகளில் ஓடுகின்றன. இதனால் தூர்நாற்றம் வீசுகிறது. சாலையில் நடந்து செல்வோர் அவதி அடைகின்றனர். சாக்கடைகளில் குப்பைகள் பிளாஸ்டிக் கழிவுகள் தேங்கி நிற்பதால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.

    சாக்கடைகளில் தேங்கி நிற்கும் குப்பை மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை அப்புறப்படுத்தி கழிவு மற்றும் மழைநீர் ஓடும் வகையில் வழிவகை ஏற்படுத்த வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    • சாக்கடை மூடாததால் பொதுமக்கள் அவதியடைந்து வருகிறார்கள்.
    • சாக்கடையை மூடி வைக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    அவனியாபுரம்

    மதுரை அவனியாபுரம் மெயின் ரோடு 100 வார்டுக்கு உட்பட்ட பகுதியில் ஒரு மாதத்திற்கு முன்பாக தோண்டிய சாக்கடையை மூடாததால் துர்நாற்றம் வீசி சுகாதாரக் கேடு ஏற்படும் அபாயம் உள்ளது.

    மேலும் அந்த சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் செல்லாமல் தேங்கி நிற்கிறது. இந்தக் கழிவு நீர் சாலையிலும் ஓடுகிறது. இதனால், அப்பகுதி பொதுமக்கள் சிரமம் அடைந்துள்ளனர்.

    இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

    இந்த நிலையில் சாக்கடையின் அடைப்பை சரி செய்து கழிவு நீர் தடையின்றி செல்லும்படி செய்ய வேண்டும் என்றும், சாக்கடையை மூடி வைக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ரேஷன் கடை எதிரில் சாக்கடை சாக்கடை நீர் தேங்கி நிற்கிறது.
    • அந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளும் அவதிக்குள்ளாகிறார்கள்.

    விழுப்புரம்:

    மரக்காணம் அருகே கீழ்புத்துப்பட்டு ஊராட்சியில் மொன்னையன் பேட்டை கிராமத்தில் விநாயகர் கோவில் தெருவில் உள்ள ரேஷன் கடை எதிரில் சாக்கடை சாக்கடை நீர் தேங்கி நிற்கிறது.அந்த சாலை பள்ளம் மேடாக இருப்பதால் சாக்கடை நீர் கடந்த 3 மாதங்களுக்கு மேலாக தேங்கி நிற்கிறது. இதனால் கொசு உற்பத்தியாக அங்கு வசிக்கும் மக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. ஒரு சிலருக்கு காய்ச்சல் இருப்பதாகவும் தெரிகிறது.

    மேலும், அந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டி களும் அவதிக்குள்ளாகி றார்கள். இது தொடர்பாக அங்கு வசிப்பவர்கள் வட்டார வளர்ச்சி அலுவ லகத்தில் பல முறை மனு கொடுத்தும் பலனில்லை. எனவே, இதில் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு கழிவுநீர் வாய்க்காலை சிரமைத்து சாலையில் சாக்கடை நீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், பள்ளம் மேடாக உள்ள சாலையை புதுப்பித்து தர வேண்டு மென பொது மக்கள் கோரிக்கை விடுத்து ள்ளனர்.

    • சோலைப்பகுதியில் அரசு அடுக்குமாடி குடியிருப்பில் 448 குடியிருப்புகள் உள்ளன.
    • குழந்தைகளுக்கு நோய் தொற்று ஏற்படுகிறது.

    அவினாசி :

    அவினாசி சேவூர் ரோட்டில் உள்ள சோலைப்பகுதியில் அரசு அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இதில் 448 குடியிருப்புகள் உள்ளன. இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த குடியிருப்பு பகுதிகளுக்கு போதிய சாக்கடை வசதிகள் இல்லை என்று உள்ளாட்சி நிர்வாகம் மற்றும் கலெக்டர் அலுவலகத்தில் அந்த பகுதி மக்கள் புகார் மனு அளித்துள்ளனர். ஆனால் உரிய நடவடிக்கை இல்லை என்று கூறி இன்று காலை 9 மணியளவில் 500க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் ஆண்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து அவர்கள் கூறுகையில்; குடியிருப்பு பகுதியில் சாக்கடை நீர் வெளியேற முடியாமல் குட்டை போல் தேங்கியுள்ளது. இதனால் குழந்தைகளுக்கு நோய் தொற்று ஏற்படுகிறது. இது குறித்து அதிகாரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என்று தெரிவித்தனர். போராட்டத்தில் ஈடுப்பட்ட வர்களிடம் அவினாசி தாசில்தார், பேரூராட்சித் தலைவர், போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தினார். அதில் தாசில்தார் போராட்டத்தில் ஈடுபட்ட வர்களிடம் இன்னும் 4 நாட்களில் முழுமையாக உங்கள் பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என்று உறுதியளித்தார்.

    ஆனால் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் தொகுதி எம். எல். ஏ, மற்றும் மாவட்ட கலெக்டர் ஆகியோர் வர வேண்டும் அதுவரை போராட்டத்தை கை விட மாட்டம் என்று சாலையில் படுத்து கோஷங்களை எழுப்பினர். இதனால் அவினாசி -சேவூர் சாலைகளின் இரண்டு புறங்களிலும் 100க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஒரு மணி நேரத்துக்கு மேல் காத்திருக்கின்றன.

    • வீடுகள் முன்பு குளம் போல் தேங்கி நிற்கும் சாக்கடை நீரால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.
    • மாநகராட்சி நடவடிக்கை எடுக்குமா?

    மதுரை

    மதுரை-திருப்ப ரங்குன்றம் சாலையில் உள்ள வசந்தநகர் 2-வது தெருவில் பாதாள சாக்கடையில் கழிவுநீர் நிரம்பி சாலையில் தொடர்ந்து வெளியேறி வருகிறது. கடந்த 10 நாட்களுக்கும் மேலாக கழிவுநீர் வெளியேறி கடை கள் மற்றும் வீடுகள் முன்பு குளம் தேங்கி இருந்தது. இதனால் அந்தப் பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசி வந்தது.

    இதுபற்றி மாநகராட்சிக்கு தகவல் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட வியாபாரிகள் கடைகள் முன்பு சாக்கடை நீர் வராத அளவிற்கு மணலை கொட்டி வைத்துள்ளனர். இதனால் அந்த பகுதியில் உள்ள 10-க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் கடைகள் உள்ள ஒரு தெரு முழுவதும் கழிவுநீர் குளம்போல் தேங்கியுள்ளது.

    இதனால் அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் தங்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழ்நிலை நிலவுகிறது. அதே பகுதியில் உள்ள கடைகளையும் வியாபாரிகள் திறக்க முடியாமல் மூடி வைத்துள்ளனர்.

    மாநகராட்சி பகுதியில் ஏற்பட்டுள்ள சுகாதார சீர்கேடு குறித்து அதிகாரிகளுக்கு தெரிவித்தும் எந்த நடவடிக்கை எடுக்காமல் மெத்தனம் காட்டி வரு கின்றனர். இது பொதுமக்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த சாக்கடை நீர் பிரச்சினைக்கு உடன டியாக மாநகராட்சி தீர்வு காணாவிட்டால் பல்வேறு போராட்டங்களை நடத்துவோம் என்று அந்த பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர்.

    • ஈரோடு சிந்தன் நகரில் இன்று பாதாள சாக்கடை கழிவுநீர் ஊற்று நிலையம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
    • இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஈரோடு டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆனந்தகுமார், இன்ஸ்பெக்டர்கள் ஜெயமுருகன், நிர்மலா உள்பட 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    ஈரோடு:

    ஈரோடு கருங்கல்பாளையம் சிந்தன் நகர் பகுதியில் மாநகராட்சி சார்பில் பாதாளசாக்கடை கழிவு நீர் ஊற்று நிலையம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதற்கு இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதுகுறித்து கலெக்டர் அலுவலகம், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், மாநகராட்சி அலுவலகத்தில் பல முறை மனு கொடுத்துள்ளனர். எனினும் பாதாள சாக்கடை கழிவு நீர் ஊற்று அமைக்கும் பணியை மாநகராட்சி நிர்வாகம் கைவிடவில்லை.

    ஏற்கனவே கடந்த 2 வாரத்திற்கு முன்பு இங்கு பணிகள் மேற்கொள்ள வந்த மாநகராட்சி அதிகாரிகளை இப்பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரண்டு வந்து பணிகளை செய்ய விடாமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

    இந்த நிலையில் பாதாள சாக்கடை கழிவு நீர் ஊற்று நிலையம் அமைப்பதற்கு குழிகள் தோண்டுவதற்காக இன்று மீண்டும் மாநகராட்சி சார்பில் பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டது.

    அப்போது மாநகராட்சி உதவி பொறியாளர் செல்வராஜ், மாலதி செயற்பொறியாளர் விஜயகுமார் ஆகியோர் இருந்தனர். இதை அறிந்த அந்த பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பெண்கள் இங்கு ஒன்று திரண்டனர்.

    அவர்கள் பாதாள சாக்கடை கழிவு நீர் ஊற்று நிலையம் அமைக்க கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஈரோடு டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆனந்தகுமார், இன்ஸ்பெக்டர்கள் ஜெயமுருகன், நிர்மலா உள்பட 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    அவர்கள் பணிகள் செய்ய விடாமல் தடுக்க சென்றவர்களை தடுத்து நிறுத்தினர். அப்போது போலீசாருக்கும் பொது மக்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது

    இதனால் அந்த பகுதியில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது. மேலும் போலீசார் பாதுகாப்புடன் மாநகராட்சி பணியாளர்கள் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

    இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-

    எங்கள் பகுதியில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு பள்ளி, கோவில்கள் உள்ளன. திடீரென மாநகராட்சி சார்பில் குடியிருப்பு மத்தியில் பாதாள சாக்கடை கழிவுநீர்ஊற்று நிலையம் அமைக்கப்படும் என அறிவித்துள்ளனர்.

    இதற்கு நாங்கள் ஆரம்பம் முதலே எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம். ஏற்கனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இதுகுறித்து மனு அளித்துள்ளோம். ஆனால் இன்று திடீரென மாநகர் சார்பில் பணிகளை மேற்கொள்வதற்காக அதிகாரிகள் வந்தனர். நாங்கள் பணிகளை மேற்கொள்ளாமல் அவர்க ளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டோம். இருந்தாலும் போலீசார் உதவியுடன் பணிகளை தொடங்கி மேற்கொண்டு வருகின்றனர்.

    இது சம்பந்தமாக எங்களிடம் எந்த ஒரு கருத்தும் இதுவரை கேட்கப்படவில்லை. குடியிருப்பு பகுதியில் கழிவுநீர் ஊற்று நிலையம் அமைந்தால் எங்கள் பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். குறிப்பாக பள்ளி குழந்தைகள் இந்த வழியாகத்தான் கடந்து பள்ளிக்கு செல்ல வேண்டும்.

    இதனால் துர்நாற்றம், சுகாதார கெடு, நோய் தொற்று பரவ ஏற்பட வாய்ப்புள்ளது. பொதுமக்கள் குடியிருக்கும் பகுதியில் இந்த திட்டம் அமைக்கப்படுவதற்கு பதில் ஊரின் ஒதுக்குப்புறமாக இந்தத் திட்டத்தை அமைக்க வேண்டும் என்று கூறி வருகிறோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×