search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "wolf"

    • தென்னோலைக்கார தெருவில் நிரம்பி வழியும் பாதாள சாக்கடையால் நோய் பரவும் அபாயம் நிலவுகிறது.
    • கடும் துர்நாற்றம் வீசுகிறது.

    மதுரை

    மதுரை மாநகராட்சியில் பல்வேறு பகுதிகளில் பாதாள சாக்கடை நிரம்பி வழிகிறது. இதனால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. மதுரை நகரின் மையப் பகுதியான தெற்கு கிருஷ்ணன் கோவில் தெருவில் உள்ள தென் னோலைக்கார தெருவில் கடந்த சில மாதங்களாக அடிக்கடி பாதாள சாக்கடை நிரம்பி வெளி யேறுவது வாடிக்கை யாக உள்ளது.

    இதனால் தெருவில் வசிக்கும் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து உள்ளனர். சாக்கடை நீர் நிரம்பி வீட்டின் வாசலில் தேங்கி கிடக்கிறது. இதன் காரணமாக அந்த தெருவில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. தற்போதும் தென்னோலைக் கார தெருவில் இதே சூழ்நிலை நிலவுகிறது.

    இது குறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. அங்குள்ள பாதாள சாக்கடையை முழுமையாக சுத்தம் செய்யாமல் நிரம்பும்போது மட்டும் மேற்புறமாக சுத்தம் செய்துவிட்டு செல்வதால் இந்த பிரச்சனை தொடர்ந்து நீடிப்பதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

    மேலும் அந்த தெருவில் குப்பைகளும் கழிவுகளும் அதிக அளவில் தேங்கி கிடக்கின்றன. கழிவு நீர் தேக்கம், சுகாதார சீர்கேடு காரணமாக கொசு அதிகமாகி டெங்கு பரவலுக்கு வழிவகுப்பதாக அமைந்துள்ளது.

    இது குறித்த அப்பகுதி மக்கள் கூறுகையில், தென்னோலை கார தெருவில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு அடிக்கடி பாதாள சாக்கடை நிரம்பி வருகிறது. இது தொடர்பாக பலமுறை புகார் அளித்தோம். ஆனால் மாநகராட்சி அதிகாரிகள் கண்டும், காணாமல் இருப்பதாக வேதனையுடன் தெரிவித்தனர்.

    • பிரபு தேவாவின் 'வுல்ஃப்' திரைப்படத்தை வினு வெங்கடேஷ் இயக்குகிறார்.
    • இப்படத்தில் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    எஸ்.ஜே.சூர்யாவின் உதவி இயக்குனராக பணியாற்றி 'சிண்ட்ரெல்லா' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் வினு வெங்கடேஷ். இவர் தற்போது 'வுல்ஃப்' திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் கதாநாயகனாக பிரபு தேவா நடித்துள்ளார். மேலும், அனுசுயா பரத்வாஜ், ராய் லக்ஷ்மி, வசிஷ்ட சிம்ஹா, ஆர்.ஜே.ரமேஷ், அஞ்சு குரியன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


    சந்தேஷ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு அம்ரிஷ் இசையமைத்துள்ளார். அருள் வின்சென்ட் ஒளிப்பதிவை மேற்கொண்டுள்ளார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமான 'வுல்ஃப்' திரைப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. மிகவும் வித்தியாசமான முறையில் உருவாகியுள்ள இந்த டீசர் சமூக வலைதளத்தில் ட்ரெண்டாகி வருகிறது.





    • நடிகர் பிரபு தேவா ’வுல்ஃப்’ திரைப்படத்தில் நடித்துள்ளார்.
    • இந்த படத்தை வினு வெங்கடேஷ் இயக்கியுள்ளார்.

    எஸ்.ஜே.சூர்யாவின் உதவி இயக்குனராக பணியாற்றி 'சிண்ட்ரெல்லா' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் வினு வெங்கடேஷ். இவர் தற்போது 'வுல்ஃப்' திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் கதாநாயகனாக பிரபு தேவா நடித்துள்ளார். மேலும், அனுசுயா பரத்வாஜ், ராய் லக்ஷ்மி, வசிஷ்ட சிம்ஹா, ஆர்.ஜே.ரமேஷ், அஞ்சு குரியன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


    வுல்ஃப்

    சந்தேஷ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு அம்ரிஷ் இசையமைத்துள்ளார். அருள் வின்சென்ட் ஒளிப்பதிவை மேற்கொண்டுள்ளார். இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'வுல்ஃப்' திரைப்படத்தின் டீசர் நாளை காலை 11 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்த போஸ்டரை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.

    • திடீரென யாரும் பார்த்தால் அது ஒநாய் தான் என்று சொல்லும் அளவுக்கு அவரது கெட்-அப் கச்சிதமாக இருந்தது.
    • சிறு வயது முதல் விலங்குகள் என்றால் எனக்கு ரொம்ப பிடிக்கும் என்கிறார்

    ஒவ்வொருவருக்கும் ஒரு ஆசை இருக்கும். அது போல தான் ஜப்பானை சேர்ந்த ஒரு வாலிபருக்கு வித்தியாசமான ஆசை வந்தது. அவர் ஓநாயாக உருமாற முடிவு செய்தார். ஏனென்றால் விலங்குகள் மற்றும் செல்ல பிராணிகள் மீது அவர் அளவுகடந்த பாசம் வைத்து இருந்தார். இதனால் நாமும் அதுபோல ஒருநாள் வேடமிட்டால் என்ன என யோசித்தார். இதற்கான முயற்சியிலும் அவர் இறங்கினார்.

    அவர் ஆடை அலங்கார நிபுணரை அணுகி தன்னுடைய ஆசையை தெரிவித்தார். இதை கேட்ட அவரும் சரி என ஒப்புக்கொண்டார். ஆனால் ஆடைகள் உள்ளிட்ட பொருட்கள் வாங்க நிறைய செலவு ஆகும் என ஆடை வடிவமைப்பாளர் கூறினார். அதற்கும் அந்த வாலிபர் சம்மதம் தெரிவித்தார். இதையடுத்து அந்த வாலிபரை ஓநாயாக உருமாற்றுவதற்கான வேலைகள் தொடங்கியது. இதற்காக அவர் பல முறை உடையை அளவெடுப்பதற்காக நிறுவனத்துக்கு சென்று வந்தார்.

    அதற்கான பலனும் அவருக்கு கிடைத்தது. 50 நாட்களில் அந்த வாலிபர் அச்சு அசல் ஓநாய் போல உருமாறினார். பின்னங்கால்களால் ஓநாய் நடப்பதுபோல சிறிது தூரம் நடந்தார். இதை பார்த்து அனைவரும் அசந்துபோனார்கள். திடீரென யாரும் பார்த்தால் அது ஒநாய் தான் என்று சொல்லும் அளவுக்கு அவரது கெட்-அப் கச்சிதமாக இருந்தது.

    இதற்காக அந்த வாலிபர் இந்திய மதிப்பில் ரூ.18 லட்சம் ரூபாய் செலவு செய்து இருந்தார். அது அவருக்கு ஒரு பொருட்டாக தெரியவில்லை. தனது கனவு நனவாகி விட்டதாக மகிழ்ச்சி அடைந்தார். இது குறித்து அவர் கூறியதாவது:-

    சிறு வயது முதல் விலங்குகள் என்றால் எனக்கு ரொம்ப பிடிக்கும். டி.வியில் யாராவது அது போன்று நடித்தால் விரும்பி பார்ப்பேன். நாமும் இது போன்று முயற்சி செய்தால் என்ன என்று நினைத்தேன். இதற்காக ஓநாய் போன்று வேடமணிய முடிவு செய்தேன். அதற்கு ஏற்றாற்போல நான் சென்ற நிறுவனமும் எனக்கு நல்ல ஊக்கம் கொடுத்து ஆடைகளை தயார் செய்து கொடுத்தனர். அதை எனது உடலில் மாட்டிக்கொண்டு கண்ணாடி முன்பு நின்றேன்.

    எனது உருவத்தை பார்த்து என்னாலேயே அதை நம்ப முடியவில்லை. உண்மையான ஓநாய் போன்று இருந்தது. இதனால் எனது நீண்ட நாள் கனவு நிறைவேறி இருக்கிறது.

    பின்னங்கால்களால் ஓநாய் நடப்பதுபோன்று சிரமப்பட்டு நடந்தேன். ஆனாலும் எனது ஆசை நிறைவேறியதால் அந்த வலி எனக்கு பெரிதாக தெரியவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதே நிறுவனத்தின் மூலம் இதற்கு முன்பு டேக்கோ என்பவர் ரூ.12 லட்சம் செலவில் நாய் போல வேடமணிந்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    ×