search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sewage stagnant"

    • ஆர்.எம்.காலனியில் இருந்து ரயில் தண்டவாளம் பாலம் கீழ் வழியாக வரும் கழிவுநீர் மழை காலங்களில் மழை நீருடன் கலந்து இந்த பகுதிகளில் தேங்கி நிற்கிறது.
    • எனவே மழை நீர், கழிவுநீர் வெளியே வராமல் அகலமான ஓடை அமைத்து தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அருகே செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சிக்கு உட்பட்டது மூவேந்தர் நகர், எ.எம்.ஜெ.எம்.நகர், சக்தி பாலாஜி நகர் பகுதிகள். இங்கு 500 க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. ஆர்.எம்.காலனியில் இருந்து ரயில் தண்டவாளம் பாலம் கீழ் வழியாக வரும் கழிவுநீர் மழை காலங்களில் மழை நீருடன் கலந்து இந்த பகுதிகளில் தேங்கி நிற்கிறது. மேலும் குடியிருப்புகளிலும் சூழ்ந்து வீடுகளுக்குள் புகுந்து வருகிறது.

    இதனால் சுகாதார கேட்டில் சிக்கி தவிப்பதாக அப்பகுதி மக்கள் புலம்புகின்றனர். கடந்த ஓராண்டாக கால்வாய் வசதி கேட்டு ஊராட்சி அலுவலகம், மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலும் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

    தற்போது டெங்கு காய்ச்சல், வைரஸ் காய்ச்சல் பரவி வரும் நிலையில் எங்களுக்கு அச்சம் ஏற்படுத்தும் வகையில் கொசுக்கள் உற்பத்தி அதிகரித்து வருகிறது. எனவே மழைநீரோடு தேங்கி நிற்கும் கழிவுநீரால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே மழை நீர், கழிவுநீர் வெளியே வராமல் அகலமான ஓடை அமைத்து தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கிரிவலப்பாதையில் தேங்கும் கழிவுநீரால் பொதுமக்கள் அவதியடைந்து வருகிறார்கள்.
    • பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    திருப்பரங்குன்றம்,

    முருகப்பெருமானின் முதல் படை வீடான திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி திருமண கோலத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.

    மதுரைக்கு மிக அருகாமையில் இருப்பதால் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வரும் பக்தர் கள் திருப்பரங் குன்றத்திற்கும் வந்து சுவாமி தரிசனம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

    இந்த நிலையில் திருப்பரங்குன்றம் பெரியரத வீதி பேருந்து நிலையம் அருகே செல்லும் கழிவு நீர் கால்வாய் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் செல்ல வழி இல்லாமல் சாலையோரம் தேங்கி நிற்கிறது. இதனால் பெரியரத வீதி கிரிவலப் பாதை செல்லும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கழிவுநீர் வழியாகவே செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.

    மேலும் அப்பகுதியில் வணிக வளாகங்கள் அதிக அளவில் இருப்ப தால் வியாபாரிகளும், கடை களுக்கு வரும் வாடிக்கை யாளர்களும் மிகுந்த அவதிக்குள்ளாகும் சூழ்நிலை ஏற்படுகிறது.

    இதுகுறித்து மாநகராட்சி அதிகா ரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை என பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.எனவே சுகாதார சீர்கேடாக இருக்கும் கிரிவலப் பாதையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×