search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெட்ரோல்"

    • கடலூர் அருகே மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • 3 பேர் பாலாஜியிடம் தகராறில் ஈடுபட்டனர்.

    கடலூர்:

    கடலூர் அடுத்த அகரத்தை சேர்ந்தவர் பாலாஜி (வயது 27). இவருக்கும் குள்ளஞ்சாவடியை சேர்ந்த மற்றொரு பாலாஜி (23) என்பவருக்கும் முன் விரோதம் இருந்து வந்தது. சம்பவத்தன்று பாலாஜி தனது மோட்டார் சைக்கிளில் அகரம் பகுதியில் உள்ள மளிகை கடைக்கு பொருட்கள் வாங்க சென்றார்.

    அப்போது அங்கு இருந்த பாலாஜி உட்பட 3 பேர் பாலாஜியிடம் தகராறில் ஈடுபட்டனர். பின்னர் திடீரென்று மோட்டார் சைக்கிள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொளுத்தினர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பாலாஜி உடனடியாக மோட்டார் சைக்கிளில் ஏற்பட்ட தீயை அணைக்க முயற்சி செய்தபோது, அவர் மீதும் பெட்ரோல் ஊற்றி தீ வைக்க முயன்றதாக கூறப்படுகிறது.

    அங்கிருந்து பாலாஜி தப்பியோடிவிட்டார். இந்த சம்பவத்தில் மோட்டார் சைக்கிள் முழுவதும் எரிந்து நாசமானது. இது குறித்து பாலாஜி குள்ளஞ்சாவடி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் குள்ளஞ்சாவடியை சேர்ந்த பாலாஜி (23), வன்னியர் பாளையத்தை சேர்ந்த ராகுல் (23), குள்ளஞ்சாவடியை சேர்ந்த குமரகுரு (33) ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    • தற்காலிக பிரதமராக பலூசிஸ்தான் எம்.பி. அன்வர் உல் ஹக் ககர் நியமிக்கப்பட்டுள்ளார்.
    • நிதி நிலைமையை சமாளிக்க பெட்ரோல் டீசல் மீதான வரி இன்று மேலும் உயர்த்தப்பட்டுள்ளது.

    லாகூர், பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் ஆட்சியில் அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனால் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டு அவருடைய ஆட்சி கவிழ்ந்தது. அதன் பின்னர் புதிய பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் ஆட்சி பொறுப்பேற்றார். இதனைத் தொடர்ந்து இம்ரான்கான் மீது 100-க்கும் அதிகமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

    மேலும், அரசுக்கு வந்த பரிசுப்பொருட்களை விற்று சொத்து சேர்த்ததாக இம்ரான்கான் மீது 'தோஷகானா' வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக இம்ரான்கானின் எம்.பி. பதவி பறிபோனது. ஊழல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு அவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

    அதைத்தொடர்ந்து இம்ரான்கான் உடனடியாக கைது செய்யப்பட்டு பஞ்சாப் மாகாணத்தின் அட்டாக் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த சம்பவத்தை தொடர்ந்து கடந்த மாதம் பாகிஸ்தான் நாடாளுமன்றம் இரவோடு இரவாகக் கலைக்கப்பட்டது. இதற்கான பிரகடனத்தைப் பாகிஸ்தான் அதிபர் பிறப்பித்தார்.

    நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட நிலையில் இன்னும் 90 நாட்களில் தேர்தல் நடத்தப்பட வாய்ப்பு உள்ளது. இம்ரான்கான் சிறையில் உள்ள நிலையில் அவர் தேர்தலில் போட்டியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதேவேளை, ஷெபாஸ் ஷெரீப் மீண்டும் தேர்தலில் போட்டியிட உள்ளார். தேர்தலில் வெற்றிபெறும்பட்சத்தில் ஷெபாஸ் ஷெரீப் மீண்டும் பிரதமராகும் வாய்ப்புகள் அதிக அளவில் உள்ளன.

    பாகிஸ்தான் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ள நிலையில் தற்காலிக பிரதமராக பலூசிஸ்தான் எம்.பி. அன்வர் உல் ஹக் ககர் நியமிக்கப்பட்டுள்ளார். தற்காலிக பிரதமராக அன்வர் உல் ஹக் ககர் செயல்பட்டு வரும் நிலையில் பாகிஸ்தானின் நிதி நிலைமை மோசமடைந்து வருகிறது. இந்நிலையில், அந்நாட்டில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. நிதி நிலைமையை சமாளிக்க பெட்ரோல் டீசல் மீதான வரி இன்று மேலும் உயர்த்தப்பட்டுள்ளது.

    அதன்படி, பெட்ரோல் லிட்டருக்கு 26 ரூபாயும், டீசல் லிட்டருக்கு 17 ரூபாயும் வரி உயர்த்தப்பட்டுள்ளது. ஏற்கனவே பாகிஸ்தானில் ஒரு லிட்டர் பெட்ரோல் 305 ரூபாய்-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது கூடுதல் வரியுடன் சேர்த்து ஒரு லிட்டர் 331 ரூபாய்-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் ஒரு லிட்டர் டீசல் 311 ரூபாய்-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது வரியுடன் சேர்த்து 329 ரூபாய்-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால், பாகிஸ்தான் மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகியுள்ளனர். பாகிஸ்தான் வரலாற்றில் உச்சபட்ச விலையாக ஒரு லிட்டர் பெட்ரோல் 331 ரூபாய்-க்கும், டீசல் 329 ரூபாய்-க்கு விற்பனை செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும்.

    • ஆத்திரம் அடைந்த வாகன ஓட்டிகள் பெட்ரோல் பங்க் ஊழியர்களிடம் கடும் வாக்குவாதம் செய்தனர்.
    • நீண்ட நேரத்திற்கு பின்னர் பெட்ரோல் பங்க் ஊழியர்கள் சமாதானம் செய்து வாகன ஓட்டிகளை அனுப்பி வைத்தனர்.

    ஆவடி:

    ஆவடியை அடுத்த திருமுல்லைவாயல், சி.டி.எச் சாலையில் பெட்ரோல் பங்க் உள்ளது. கடந்த சில நாட்களாக திருமுல்லைவாயில் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதியில் இரவு நேரத்தில் பலத்த மழை பெய்து வருகிறது.

    இதன் காரணமாக இந்த பெட்ரோல் பங்க்கில் தரைக்கு அடியில் புதைத்து வைக்கப்பட்டு இருக்கும் டேங்கிற்குள் தண்ணீர் கசிந்தது.

    இதனை அறியாமல் வழக்கம் போல் வாகனங்களுக்கு ஊழியர்கள் பெட்ரோல் நிரப்பினர். சிறிது தூரம் சென்றும் சில மோட்டார் சைக்கிள்கள் மற்றும் கனரக வாகனங்கள் பழுதாகி நின்றன.

    தண்ணீர் கலந்த பெட்ரோல் நிரப்பப்பட்டதால் பழுது ஏற்பட்டு இருப்பது தெரிந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த வாகன ஓட்டிகள் பெட்ரோல் பங்க் ஊழியர்களிடம் கடும் வாக்குவாதம் செய்தனர்.

    பெட்ரோல் பங்க் ஊழியர்கள் வாகன ஓட்டிகளுக்கு முறையான பதில் கூறவில்லை என்று தெரிகிறது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. நீண்ட நேரத்திற்கு பின்னர் பெட்ரோல் பங்க் ஊழியர்கள் சமாதானம் செய்து வாகன ஓட்டிகளை அனுப்பி வைத்தனர். இது குறித்து திருமுல்லைவாயல் போலீசார் மேலும் விசாரித்து வருகின்றனர்.

    • கன்னியாகுமரி அருகே உள்ள சின்னமுட்டம் மீன்பிடிதுறைமுகம் அருகே பெட்ரோல் பங்க் ஒன்று அமைக்கப்பட்டு வந்தது.
    • கடந்த 9-ந்தேதி முதல் தொடர்ந்து பல்வேறு கட்ட போராட்டம் நடத்தி வந்தனர்.

    நாகர்கோவில்: கன்னியாகுமரி அருகே உள்ள சின்னமுட்டம் மீன்பிடிதுறைமுகம் அருகே பெட்ரோல் பங்க் ஒன்று அமைக்கப்பட்டு வந்தது. இந்த பெட்ரோல் பங்க் அமைக்கும்பணியை தடுத்து நிறுத்த கோரி சின்னமுட்டம் பகுதி மீனவர்கள் கடந்த 9-ந்தேதி முதல் தொடர்ந்து பல்வேறு கட்ட போராட்டம் நடத்தி வந்தனர்.

    இருப்பினும் மீன வர்களின் இந்த தொடர் போராட்டத்துக்கு இடையே பெட்ரோல்பங்கு நேற்று திறக்கப்பட்டு உள்ளது. இதற்கு சின்ன முட்டம் பகுதி மீனவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.இதைத்தொடர்ந்து சின்ன முட்டத்தில் திறக்கப்பட்டு உள்ள பெட்ரோல்பங்கை மூடக்கோரி சின்ன முட்டத்தில் மீனவர்கள் நேற்று முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இன்று 2-வது நாளாக இந்த வேலை நிறுத்த போராட்டம் நீடிக்கிறது. இதனால் சின்னமுட்டம் பகுதியை சேர்ந்த 100-க்கும்மேற்பட்ட விசைப்படகுகளும் 100-க்கு கட் ம் மேற்பட்டநாட்டுபடகுகளும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.இதனால் இந்த விசைப்படகுகளும் நாட்டுப்படகுகளும் கடற்கரையில் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

    மேலும் சின்னமுட்டம் புனிததோமையார்ஆலயம் முன்புமீனவர்கள் இன்று 2-வதுநாளாக உண்ணாவிரத போராட்ட மும்நடத்திவந்தனர். இதைத் தொடர்ந்து சின்னமுட்டத்தில் பரபரப்பும் பதட்டமும் நிலவுகிறது. இதனால் அங்கு பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். போலீசார் நடத்திய சமரச பேச்சு வார்த்தையில் இதுவரை எந்தவித சமரச தீர்வும் ஏற்படவில்லை. இதைத் தொடர்ந்து இன்று17- வது நாளாக சின்னமுட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள பெட்ரோல் பங்குக்கு எதிராக மீனவர்களின் போராட்டம் தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் திடீரென வெள்ளியல்பாறை பகுதியில் கையில் கருப்பு கொடியை ஏந்தி கடலில் இறங்கி முட்டளவு தண்ணீரில் நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர். மீனவர்கள், மீனவ பெண்கள் என 50-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.  

    • என்னுடைய இடத்தை மீட்டு அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • பெட்ரோல் கேனை போலீசார் கண்டுபிடித்து அதனை பறித்தனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.

    கலெக்டர் தீபக்ஜேக்கப் தலைமை தாங்கினார்.

    இதில் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

    அப்போது அம்மாபேட்டை அருகே உக்கடை ஊராட்சி வேளாளர் தெரு சேர்மன்நல்லூர் பகுதியை சேர்ந்த கலியபெருமாள் (வயது 52) என்பவர் பெட்ரோல் கேனை மறைத்து வைத்துக் கொண்டு தனது மனைவி செல்வியுடன் கலெக்டர் அலுவலகத்தில் நுழைந்தார்.

    பின்னர் அவர் கலெக்டரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    எங்களுக்கு தங்கராசு, சரவணகுமார் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.

    மகன்கள் இருவரும் மாற்றுத்திறனாளி ஆவர்.

    எனக்கு சொந்தமான இடத்தை ஒருவர் ஆக்கிரமித்துள்ளார்.

    மேலும் அந்த நபர் வேலியை புல்டோசர் வைத்து இடித்து சேதப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்தார்.

    இது குறித்து போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

    எனவே என்னுடைய இடத்தை மீட்டு அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் .

    இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

    இதனை தொடர்ந்து மனு அளித்து வெளியே வரும்போது கலியபெருமாள் வைத்திருந்த பெட்ரோல் கேனை போலீசார் கண்டுபிடித்து அதனை பறித்தனர்.

    பின்னர் அவரிடம் எதற்காக பெட்ரோல் கேன் கொண்டு வந்தார்? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

    • மதுரை மத்திய சிறை கைதிகளால் நடத்தப்படும் பெட்ரோல் விற்பனை நிலையத்தை அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார்.
    • பயிற்சியை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் வழங்கியது.

    மதுரை

    மதுரை மத்திய சிறையில் உள்ள தண்டனை சிறை வாசிகளின் தண்டனை காலம் முடிந்த பின் அவர்களது வாழ்வாதா ரத்திற்காக பல்வேறு வகை யான தொழில் பயிற்சிகள் சிறைக்குள் அளிக்கப்பட்டு வருகிறது.

    அதன் ஒரு பகுதியாக இந்தியன் ஆயில் கார்ப்ப ரேஷன் மற்றும் தமிழக சிறைத் துறையுடன் இணைந்து பெட்ரோல் டீசல் விற்பனை நிலை யத்தை பிரீடம் பில்லிங் ஸ்டேஷன் என்ற பெயரில் தொடங்கி சிறைவாசி களுக்கு வேலை வாயப்பை அளித்து வருகிறது.

    முதற்கட்டமாக இத்திட்டத்தில் புழல் , வேலூர் பாளையங் ேகாட்டை, புதுக்கோட்டை, கோவை ஆகிய 5 இடங்களில் தொடங்கப் பட்டு செயல்பட்டு வரு கிறது.

    அதன் தொடர்ச்சியாக 2-ம் கட்டமாக தமிழகம் முழுவதும் உள்ள ஆறு முக்கிய இடங்களில் புதிய பெட்ரோல் விற்பனை நிலையங்கள் தொடங்க ஆணை பிறப்பிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தன. அதில் மதுரை புதுஜெயில் ரோடு பகுதியில் புதிய பெட்ரோல் பல்க் கட்டுமானப்பணிகள் நடைபெற்றன. இதன் திறப்பு விழா நேற்று மாலை நடந்தது. சிறப்பு விருந்தி னராக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பங்கேற்று கைதிகளால் நடத்தப்படும் பெட்ரோல் விற்பனை நிலையத்தை தொடங்கி வைத்தார்.

    விழாவில் சிறைத்துறை டி.ஜி.பி. அம்ரேஷ் பூஜாரி, மதுரை சரக சிறைத்துறை துணை தலைவர் பழனி, மதுரை மத்திய சிறை கண்காணிப்பாளர் (பொறுப்பு) பரசுராமன், இந்தியன் ஆயில் கார்ப்ப ரேஷன் அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பெட்ரோல் நிலையங்களில் பணிபுரியும் சிறைவாசிகளுக்கு பயிற்சி அளிக்கும் வகையில் மதுரை மத்திய சிறையில் உள்ள தகுதியான 41 தண்டனை சிறைவாசிகளை நன்னடத்தை அடிப்படை யில் தேர்வு செய்து அவர்களுக்கு களப்பயிற்சி யும் பெட்ரோல் நிலையத்தில் பணி புரிவது குறித்தான பயிற்சியை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் வழங்கியது.

    • பெட்ரோல் நிரப்பப்பட்ட பீர் பாட்டிலை வீசிவிட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.
    • இதில் தொடர்புடையதாக மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.

    பட்டுக்கோட்டை:

    தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை ஆணை விழுந்தான் குளத்தெருவில் வசித்து வருபவர் ஸ்ரீகாந்த் (வயது 26) இவர் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் மாநில மாணவரணி இளைஞர் காங்கிரஸ் பொது செயலாளராக பொறுப்பில் இருந்து வருகிறார்.

    இந்நிலையில் கடந்த 23-ந் தேதி இரவு மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் ஸ்ரீகாந்தின் வீட்டை நோக்கி பெட்ரோல் நிரப்பப்பட்ட பீர் பாட்டிலை வீசிவிட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

    இதில் வீட்டு கதவில் இருந்த திரைச் சேலை மட்டும் எரிந்து சாம்பலானது.

    இது குறித்து பட்டுக்கோட்டை நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ேலும் இவ்வழக்கு தொடர்பாக பட்டுக்கோட்டை அருகே உள்ள ஆம்பலாப்பட்டு தெற்கு பாலாயி குடிகாடு பகுதியை சேர்ந்த கவிக்குமார் (வயது 26), பட்டுக்கோட்டை வண்டிப்பேட்டை பகுதியை சேர்ந்த முரளிதரன் (வயது 28), ஏனாதி மேலத்தெரு பகுதியை சேர்ந்த ரெங்கநாத் (வயது 26) ஆகிய 3 பேரை கைது செய்துள்ளனர்.

    மேலும் இதில் தொடர்புடையதாக கூறப்படும் மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.

    இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • 30 சதவீதத்துக்கும் அதிகமாக கச்சா எண்ணையின் விலை வீழ்ச்சி அடைந்து உள்ளது.
    • கடந்த சில நிதி ஆண்டுகளாக பாதிக்கப்பட்ட வருமானத்தையும் செலவினங்களையும் ஈடுசெய்ய உதவும்.

    மும்பை:

    சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. ஆனாலும் இந்திய எண்ணை நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை குறைக்காமலேயே உள்ளன. இந்நிலையில் எண்ணை நிறுவனங்களுக்கு இந்த நிதி ஆண்டில் வரிக்கு முந்தைய லாபம் மட்டுமே 3 மடங்கு அதிகரித்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

    இதுதொடர்பாக கிரிசில் என்ற ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சர்வதேச சந்தையில் கடந்த நிதி ஆண்டோடு (2022-23) ஒப்பிடுகையில், இந்த நிதி ஆண்டில் 30 சதவீதத்துக்கும் அதிகமாக கச்சா எண்ணையின் விலை வீழ்ச்சி அடைந்து உள்ளது.

    ஆனால் இந்திய எண்ணை நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையில் கடந்த ஆண்டு மே மாதத்துக்கு பிறகு எந்த மாற்றமும் செய்யாமல் அதே விலையில் தொடர்ந்து விற்பனை செய்து வருகின்றன.

    இதனால் இந்நிதி ஆண்டில் எண்ணெய் நிறுவனங்களின் வரிக்கு முந்தைய லாபம் ரூ.1 லட்சம் கோடியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2022-23ம் நிதி ஆண்டில் இது ரூ.33 ஆயிரம் கோடியாக இருந்தது. எனவே இந்த நிதி ஆண்டில் வரிக்கு முந்தைய லாபம் மட்டுமே 3 மடங்காக அதிகரித்துள்ளது.

    கடந்த 2017 முதல் 2022-ம் ஆண்டு வரை எண்ணெய் நிறுவனங்களின் வரிக்கு முந்தைய லாபம் சராசரியாக ரூ.60 ஆயிரம் கோடியாக இருந்தது.

    இந்த அதிக லாபம் எண்ணெய் நிறுவனங்களுக்கு கடந்த சில நிதி ஆண்டுகளாக பாதிக்கப்பட்ட வருமானத்தையும் செலவினங்களையும் ஈடுசெய்ய உதவும்.

    எண்ணெய் நிறுவனங்கள் 2 வழிகளில் லாபம் ஈட்டுகின்றன. அவை எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் சில்லரை விற்பனை ஆகும். கச்சா எண்ணையின் விலை, அதை சுத்திகரிக்க ஆகும் செலவு ஆகியவற்றுடன் சுத்திகரிக்கப்பட்ட பொருட்களின் மொத்த விலையை கழித்தால் வரும் லாபம் எண்ணை நிறுவனங்களுடையது. மேலும் கச்சா எண்ணையை சுத்திகரித்த பின்பு கிடைக்கும் பெட்ரோல், டீசல் ஆகியவற்றை விற்பனை செய்வதன் மூலமும் எண்ணெய் நிறுவனங்கள் லாபம் பெறுகின்றன.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    இந்நிலையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து குறைந்து வருவதால் பெட்ரோல், டீசல் விலையை குறைப்பார்களா? என்று பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

    • தமிழகத்தில் இதுவரை 26 பெட்ரோல் நிலையங்களில் இ - 20’ எனப்படும் 20 சதவீத எத்தனால் கலந்த பெட்ரோல் விற்கப்படுகிறது.
    • வீடுகளுக்கு குறைந்த எடையில் அதிக பாதுகாப்பு நிறைந்த ‘காம்போ சிட் சிலிண்டர்கள் விற்கப்படுகின்றது.

    சென்னை:

    இந்தியன் ஆயில் நிறுவனத்தின் தமிழகம் - புதுச்சேரி மாநிலங்களுக்கான மண்டல தலைவர் வி.சி.அசோகன் சென்னையில், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    இந்தியன் ஆயில் நிறுவனத்துக்கு, தமிழகம் மிக முக்கிய சந்தையாக உள்ளது. எங்கள் நிறுவனத்தால், கடந்த ஆண்டில் 10 சதவீதம் எத்தனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெட்ரோலுடன், சேர்க்கப்பட்டுள்ளது. 2025 -க்குள், 20 சதவீத எத்தனால் கலந்த பெட்ரோலை தயாரிக்க அரசு ஆணைக்கு ஏற்ப செயல்பட்டு வருகிறோம்.

    தமிழகத்தில் இதுவரை 26 பெட்ரோல் நிலையங்களில் இ - 20' எனப்படும் 20 சதவீத எத்தனால் கலந்த பெட்ரோல் விற்கப்படுகிறது. வரும் மார்ச்சுக்குள் கூடுதலாக, 8 பெட்ரோல் நிலையங்களில் விற்கப்படும்.

    தமிழகத்தில் விரைவில் பல்வேறு திட்டங்களில் 54,000 கோடி ரூபாய் முதலீடு செய்யப்படும். அதில், 35,580 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நாகையில் 1,300 ஏக்கரில் ஆண்டுக்கு 90 லட்சம் டன் கச்சா எண்ணெய் சுத்தி கரிக்கும் திறனில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும்.

    அங்கு பி.எஸ். 4 திறனில் பெட்ரோல், டீசல், 'பாலி புரோப்லீன்' உற்பத்தி செய்யப்படும்.

    விழுப்புரம், ஆசனூரில், 466 கோடி ரூபாயில் பெட்ரோல், டீசல் முனை யம் அமைக்கப்பட்டுள்ள நிலையில், திருவள்ளூர் வல்லூரில், 724 கோடி ரூபாயில் ஒரு முனையம் அமைக்கப்பட்டு வருகிறது. எண்ணூர் துறைமுகத் தில் பெட்ரோல், டீசல், சமையல் காஸ் முனையம், 921 கோடி ரூபாயில் அமைக்கப்படுகிறது.

    வீடுகளுக்கு குறைந்த எடையில் அதிக பாதுகாப்பு நிறைந்த 'காம்போ சிட் சிலிண்டர்கள் விற்கப்படுகின்றது.

    இவ்வாறு அவர்கூறினார்.

    பேட்டியின் போது இந்தியன் ஆயிலின் தென் மண்டல, மண்டல சேவைகள் செயல் இயக்குனர் தனபாண்டியன், தலைமை பொது மேலாளர் வெற்றி செல்வகுமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • போலீசார் விசாரணைக்காக அழைத்தபோது, குடிபோதையில் இருந்த அவர் திடீரென்று கையில் வைத்திருந்த பாட்டிலில் இருந்து பெட்ரோலை போலீசார் மீது ஊற்ற முயன்றார்.
    • சுதாரித்து கொண்ட போலீசார் வாலிபரிடம் இருந்து பாட்டிலை பறிமுதல் செய்தனர்.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அட்கோ போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் ஓசூரில் உள்ள பஸ்டி என்ற இடத்தில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சந்தேகம்படும்படி ஒரு வாலிபர் பெட்ரோல் நிரப்பிய பாட்டிலை கையில் எடுத்து கொண்டு நடந்து சென்றார்.

    அவரை போலீசார் விசாரணைக்காக அழைத்தபோது, குடிபோதையில் இருந்த அவர் திடீரென்று கையில் வைத்திருந்த பாட்டிலில் இருந்து பெட்ரோலை போலீசார் மீது ஊற்ற முயன்றார்.

    அப்போது சுதாரித்து கொண்ட போலீசார் வாலிபரிடம் இருந்து பாட்டிலை பறிமுதல் செய்தனர். இதனால் அவர் போலீசாரை ஆபாசமாக திட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது போலீசார் அந்த வாலிபரை பிடித்து விசாரித்ததில் பாகலூர் கே.கே.நகரைச் சேர்ந்த எலக்ட்ரீசியன் வடிவேல் (வயது35) என்பது தெரியவந்தது.

    இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து வடிவேலை கைது செய்தனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • பெட்ரோல் இல்லாததால் தீ வைத்ததாக வாக்குமூலம்
    • போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி நாகர்கோவில் ஜெயிலில் அடைத்தனர்.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் கோட்டார் வாகையடி தெருவை சேர்ந்தவர் ஹரிஹரசுதன் (வயது 35). இவர் திருவனந்தபுரத்தில் உள்ள ஐ.டி. நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தார். கடந்த 6-ந்தேதி இரவு வீட்டின் முன்பு தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி இருந்தார். மறுநாள் காலையில் பார்த்தபோது மோட்டார் சைக்கிள் தீயில் எரிந்து கிடந்தது. இதுகுறித்து ஹரிஹரசுதன் கோட்டார் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவின் காட்சிகளை கைப்பற்றியும் விசாரணை நடத்தப்பட்டது.

    இந்த நிலையில் தனிப்படை போலீசார் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டதில் ஹரிஹரன்சுதன் மோட்டார் சைக்கிள் எரித்தது வாகையடி தெருவை சேர்ந்த தாணு மூர்த்தி (21), மீனாட்சி செட்டிதெருவை சேர்ந்த ராம்கி (21) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்ட இருவரிடமும் விசாரணை நடத்திய போது பைக்குக்கு பெட்ரோல் இல்லாததால் ஹரிஹரசுதன் மோட்டார் சைக்கிளில் பெட்ரோலை எடுக்க முயன்றோம். அப்போது அவரது மோட்டார் சைக்கிளில் பெட்ரோல் இல்லை. இது எங்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. பெட்ரோல் இல்லாத மோட்டார் சைக்கிள் எதற்கு என்பதற்காக அவரது மோட்டார் சைக்கிளை தீ வைத்து எரித்தோம் என்று கூறினார்கள். கைது செய்யப்பட்ட தாணுமூர்த்தி, ராம்கி இருவரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி நாகர்கோவில் ஜெயிலில் அடைத்தனர்.

    • வாலிபர் தப்பி ஓட்டம்
    • எங்கள் ஏரியாவில் வந்து கடை வைத்துவிட்டு, எனக்கே பழம் தர மாட்டாயா என மிரட்டல்.

    கன்னியாகுமரி:

    நாகர்கோவில் அருகே வடக்கு சூரங்குடி தட்டான் விளை பகுதியை சேர்ந்தவர் பிரேம் ஆனந்த் (வயது 30). இவர் ராமன்புதூர் பகுதி யில் பழக்கடை வைத்துள்ளார்.

    நேற்று பிரேம் ஆனந்த் வழக்கம்போல் கடையை திறந்து இருந்தார். இரவு 10 மணிக்கு கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு செல்வதற்கு தயாரானார். இதையடுத்து கடையில் இருந்த பொருட்களை எடுத்து வைத்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர், பழம் வேண்டும் என்று கேட்டுள்ளார்.

    அதற்கு பிரேம் ஆனந்த், பழங்களை கடையில் உள்ளே வைத்து விட்டதால் தற்பொழுது எடுக்க முடியாது என்று கூறியுள்ளார். எங்கள் ஏரியாவில் வந்து கடை வைத்துவிட்டு, எனக்கே பழம் தர மாட்டாயா என்று கூறி பிரேம் ஆனந்திடம் அந்த வாலிபர் தகராறில் ஈடுபட்டார். திடீரென தான் கையில் பாட்டிலில் வைத்தி ருந்த பெட்ரோலை பிரேம் ஆனந்த் மீது ஊற்றினார். பின்னர் கையில் வைத்தி ருந்த தீப்பெட்டியால் பிரேம் ஆனந்த் மீது தீ வைத்தார். பிரேம் ஆனந்த் உடலில் தீ எரிந்தது. அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்தனர்.

    அவர்கள் பிரேம் ஆனந்த் உடலில் எரிந்த தீயை அணைத்து சிகிச்சைக்காக அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அதற்குள் தீ வைத்த வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

    இதுகுறித்து நேசமணி நகர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீ சார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற் கொண்டனர். ஆஸ்பத்திரி யில் பிரேம் ஆனந்த் சிகிச்சை பெற்று வருகிறார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவின் காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். பிரேம் ஆனந்த் கூறிய தகவல் மற்றும் சி.சி.டி.வி. கேமராவில் கைப்பற்றப்பட்ட காட்சிகளை வைத்து போலீசார் பிரேம் ஆனந்த் மீது தீ வைத்த வாலிபரை பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டனர்.

    முதற்கட்ட விசாரணை யில் பிரேம் ஆனந்த் மீது தீ வைத்த வாலிபர் அதே பகுதியை சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. அவரை பிடிக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண் டுள்ளனர்.

    போலீசார் தேடுவது அறிந்த அந்த வாலிபர் தலைமறைவாகிவிட்டார். அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப் படை போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட் டுள்ளனர். இது குறித்து பிரேம் ஆனந்த் கொடுத்த புகாரின்பேரில் நேசமணி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கடைக் காரர் மீது பெட் ரோல் ஊற்றி தீவைத்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ×