search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Gasoline"

    • மதுரை மத்திய சிறை கைதிகளால் நடத்தப்படும் பெட்ரோல் விற்பனை நிலையத்தை அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார்.
    • பயிற்சியை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் வழங்கியது.

    மதுரை

    மதுரை மத்திய சிறையில் உள்ள தண்டனை சிறை வாசிகளின் தண்டனை காலம் முடிந்த பின் அவர்களது வாழ்வாதா ரத்திற்காக பல்வேறு வகை யான தொழில் பயிற்சிகள் சிறைக்குள் அளிக்கப்பட்டு வருகிறது.

    அதன் ஒரு பகுதியாக இந்தியன் ஆயில் கார்ப்ப ரேஷன் மற்றும் தமிழக சிறைத் துறையுடன் இணைந்து பெட்ரோல் டீசல் விற்பனை நிலை யத்தை பிரீடம் பில்லிங் ஸ்டேஷன் என்ற பெயரில் தொடங்கி சிறைவாசி களுக்கு வேலை வாயப்பை அளித்து வருகிறது.

    முதற்கட்டமாக இத்திட்டத்தில் புழல் , வேலூர் பாளையங் ேகாட்டை, புதுக்கோட்டை, கோவை ஆகிய 5 இடங்களில் தொடங்கப் பட்டு செயல்பட்டு வரு கிறது.

    அதன் தொடர்ச்சியாக 2-ம் கட்டமாக தமிழகம் முழுவதும் உள்ள ஆறு முக்கிய இடங்களில் புதிய பெட்ரோல் விற்பனை நிலையங்கள் தொடங்க ஆணை பிறப்பிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தன. அதில் மதுரை புதுஜெயில் ரோடு பகுதியில் புதிய பெட்ரோல் பல்க் கட்டுமானப்பணிகள் நடைபெற்றன. இதன் திறப்பு விழா நேற்று மாலை நடந்தது. சிறப்பு விருந்தி னராக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பங்கேற்று கைதிகளால் நடத்தப்படும் பெட்ரோல் விற்பனை நிலையத்தை தொடங்கி வைத்தார்.

    விழாவில் சிறைத்துறை டி.ஜி.பி. அம்ரேஷ் பூஜாரி, மதுரை சரக சிறைத்துறை துணை தலைவர் பழனி, மதுரை மத்திய சிறை கண்காணிப்பாளர் (பொறுப்பு) பரசுராமன், இந்தியன் ஆயில் கார்ப்ப ரேஷன் அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பெட்ரோல் நிலையங்களில் பணிபுரியும் சிறைவாசிகளுக்கு பயிற்சி அளிக்கும் வகையில் மதுரை மத்திய சிறையில் உள்ள தகுதியான 41 தண்டனை சிறைவாசிகளை நன்னடத்தை அடிப்படை யில் தேர்வு செய்து அவர்களுக்கு களப்பயிற்சி யும் பெட்ரோல் நிலையத்தில் பணி புரிவது குறித்தான பயிற்சியை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் வழங்கியது.

    • தலா 1 லிட்டர் பெட்ரோல் இலவசமாக வழங்கி நூதன முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
    • அதேபோல், உங்கள் தந்தை, கணவன் மற்றும்– உறவினர்களிடமும் அறிவுறுத்துங்கள்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை ஜோதி அறக்கட்ட ளை, தஞ்சை நகர போக்கு வரத்து காவல்துறை யுடன் இணைந்து ஹெல்மெட் அணிந்து வரும் குடும்ப தலைவிகளை ஊக்குவிக்கும் வகையில் தலா 1 லிட்டர் பெட்ரோல் இலவசமாக வழங்கி நூதன முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    தஞ்சை பழைய பஸ் நிலையம், அண்ணா சிலை அருகில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தஞ்சை நகர போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்த குடும்ப தலைவிகளை பாராட்டி அவர்களை ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வொருவருக்கும் தலா 1 லிட்டர் இலவச பெட்ரோலுக்கான கூப்பன்களை வழங்கினார். அப்போது அவர் பேசுகையில்:-

    குடும்ப தலைவிகளான நீங்கள் எப்படி அரசின் சட்டதிட்டங்களை மதித்து இருசக்கர வாகனத்தில் செல்லும்போது ஹெல்மெட் அணிந்து வருகிறீர்களோ அதேபோல், உங்கள் தந்தை, கணவன் மற்றும்– உறவினர்களிடமும் அறிவு றுத்துங்கள் என்றார்.

    நிகழ்ச்சியில்போக்கு வரத்து உதவி இன்ஸ்பெ க்டர் பாஸ்கரன், போக்கு வரத்து சிறப்பு உதவி இன்ஸ்பெ க்டர்கள் ரமேஷ், ரமேஷ்குமார், ஜோதி அறக்கட்டளை செயலாளர் டாக்டர் பிரபு ராஜ்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.

    நிகழ்ச்சி ஏற்பாடுகளை அறக்கட்டளை மேலாளர் தலைமையில் பணியாளர்கள் செய்திருந்தனர் .

    ×