search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாலியல் பலாத்காரம்"

    • கடந்த 25-ந் தேதி பிளாஸ்டிக் பொருட்களை சேகரிக்க சென்ற இளம்பெண் மீண்டும் வீடு திரும்பவில்லை.
    • காணாமல் போன இளம்பெண்ணை அவரது கணவர் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தார்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம், நானக் ராம்குடாவை சேர்ந்தவர் 30 வயது இளம்பெண். இவர் தனது குடும்பத்தினருடன் கோவில் தொட்டி என்ற பகுதியில் வசித்து வந்தார்.

    இளம்பெண் கட்டுமான வேலை செய்து வந்தார். மேலும் அவ்வப்போது பிளாஸ்டிக் பாட்டில்களை சேகரித்து கடைகளில் விற்று வந்தார்.

    இந்த நிலையில் கடந்த 25-ந் தேதி பிளாஸ்டிக் பொருட்களை சேகரிக்க சென்ற இளம்பெண் மீண்டும் வீடு திரும்பவில்லை.

    காணாமல் போன இளம்பெண்ணை அவரது கணவர் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தார். மனைவியை கண்டுபிடிக்க முடியாததால் இதுகுறித்து அங்குள்ள போலீசில் புகார் செய்தார்.

    போலீசார் வழக்கு பதிவு செய்து இளம்பெண்ணை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று காலை அதே பகுதியில் கட்டுமான பணி நடந்து வரும் கட்டிடத்தில் இருந்து துர்நாற்றம் வீசியது. அப்பகுதி மக்கள் கட்டிடத்தில் உள்ளே சென்று பார்த்தனர்.

    அப்போது கட்டிடத்தில் கீழ் பகுதியில் கட்டப்பட்டுள்ள தண்ணீர் தொட்டியில் மாயமான இளம்பெண் நிர்வாண நிலையில் பிணமாக மிதந்தார்.

    இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் போலீசருக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் இளம்பெண்ணின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பிளாஸ்டிக் பொருட்களை சேகரிக்க சென்ற இளம்பெண்ணை மர்ம நபர்கள் கடத்தி வந்து பலாத்காரம் செய்து பின்னர் கொலை செய்து குடிநீர் தொட்டியில் வீசி உள்ளனர். குற்றவாளிகளை தேடி வருகிறோம்.

    பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு முழு விவரமும் தெரியவரும் என கூறினர்.

    இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நாயக்கன் பேட்டையை சேர்ந்த 30 வயது பெண்ணையும், பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து தாங்கி அருகே அரிசி ஆலையில் வேலை செய்து வந்த இனர்ஜூட் முகியாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    செங்கல்பட்டு:

    காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அடுத்த ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 49 வயது பெண். இவருக்கு திருமணம் ஆகவில்லை. ஆடு மேய்க்கும் தொழில் செய்து வந்தார். கடந்த 2020-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஏரிக்கரையில் ஆடுகளை மேய்த்து கொண்டிருந்த அவரை பீகார் மாநிலத்தை சேர்ந்த இனர்ஜூட் முகியா (வயது 28) தாக்கி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தார்.

    அதே நாளில் நாயக்கன் பேட்டையை சேர்ந்த 30 வயது பெண்ணையும், பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். அப்போது அவர் கத்தி கூச்சலிட இனர்ஜூட் முகியா அங்கிருந்து தப்பிச்சென்று விட்டார்.

    இதுகுறித்து வாலாஜாபாத் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

    புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தாங்கி அருகே அரிசி ஆலையில் வேலை செய்து வந்த இனர்ஜூட் முகியாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு செங்கல்பட்டு மகிளா கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இதில் இனர்ஜூட் முகியாவின் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் உறுதி ஆனதால் அவருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.31 ஆயிரம் அபராதமும் விதித்து செங்கல்பட்டு மகிளா கோர்ட்டு நீதிபதி எழிலரசி தீர்ப்பளித்தார். அரசு தரப்பு வக்கீலாக சசிரேகா ஆஜரானார்.

    • மூதாட்டியிடம் பேசிக்கொண்டிருந்த சிலம்பரசன் திடீரென கையில் வைத்திருந்த தடியால் அவரை தாக்கினார்.
    • புகாரின் பேரில் பாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிலம்பரசனை கைது செய்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை எல்லை பகுதியான பாகூர் பகுதியை சேர்ந்த 63 வயது மூதாட்டி ஒருவர் கடந்த ஆண்டு ஜனவரி 30-ந் தேதி தனது வயலில் வேலை செய்து கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு குடிபோதையில் வந்த கடலூர் பள்ளிப்பட்டு கிராமத்தை சேர்ந்த உலகநாதன் மகன் சிலம்பரசன் (வயது 25) மூதாட்டியிடம் செல்போன் கேட்டுள்ளார்.

    பின்னர் மூதாட்டியிடம் பேசிக்கொண்டிருந்த சிலம்பரசன் திடீரென கையில் வைத்திருந்த தடியால் அவரை தாக்கினார். இதில் மயங்கி விழுந்த மூதாட்டியை ஈவு இரக்கமின்றி அருகில் உள்ள புதருக்குள் இழுத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்தார்.

    இதை வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டிய அவர், மூதாட்டி காதில் கிடந்த தங்க கம்மலையும் பறித்து கொண்டு தப்பி சென்றார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் பாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிலம்பரசனை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு புதுச்சேரி 2-வது கூடுதல் மாவட்ட கோர்ட்டில் நீதிபதி இளவரசன் முன்னிலையில் நடைபெற்று வந்தது.

    வழக்கு விசாரணை அனைத்தும் முடிவடைந்த நிலையில் தீர்ப்பு கூறப்பட்டது. சிலம்பரசன் மீதான குற்றம் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பு கூறினார்.

    மேலும் தங்க நகையை பறித்ததற்காக 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், கொலை மிரட்டல் விடுத்ததற்காக 2 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்கவும் உத்தரவு பிறப்பித்தார். 

    • அனைத்து மகளிர் போலீசில் சிறுமியின் தாய் புகார் செய்தார்.
    • போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து பாப்ஜானை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், அனந்தபூர் மாவட்டம், கதிரி நகரை சேர்ந்தவர் பாப் ஜான். இவருக்கு 14 வயதில் மகள் உள்ளார். அதே பகுதியில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.

    இந்த நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு பாப்ஜான் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது மகளை 3 மாதமாக பலாத்காரம் செய்து வந்துள்ளார். இதனால் சிறுமியின் உடல் நிலையில் பாதிப்பு ஏற்பட்டது.

    சிறுமியின் தாய் அவரை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றார். ஆஸ்பத்திரியில் சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள் சிறுமி 3 மாத கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர்.

    இதனைக் கேட்டு சிறுமியின் தாய் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அனைத்து மகளிர் போலீசில் சிறுமியின் தாய் புகார் செய்தார்.

    டி.எஸ்.பி. லட்சுமி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் பாப் ஜான் தனது மகளை பலாத்காரம் செய்தது உறுதியானது.

    போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து பாப்ஜானை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கின் விசாரணை அனந்தபுரம் போக்சோ கோர்ட்டில் நடந்து வந்தது.

    வழக்கு விசாரணை முடிந்து நேற்று நீதிபதி தீர்ப்பு அளித்தார்.

    பெற்ற மகள் என்றும் பாராமல் பாலியல் பலாத்காரம் செய்த பாப் ஜானுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

    மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஆந்திர அரசு சார்பில் ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டார்.

    • இளம்பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த உறவினர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
    • அந்த பெண்ணுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது.

    மேலூர்

    மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே பள்ளப்பட்டியை அடுத்து உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 17 வயது இளம்பெண் 10-ம் படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார். இவரது வீட்டுக்கு அதே பகுதியை சேர்ந்த அண்ணன் உறவு முறையை கொண்ட காட்டு ராஜா (வயது 36). அடிக்கடி வந்து செல்வார்.

    சம்பவத்தன்று பெண் ணின் பெற்றோர் வேலை நிமித்தமாக வெளியே சென்று விட்டனர். அப்போது அங்கு வந்த காட்டுராஜா இளம்பெண் தனியாக இருப்பதை அறிந்து அவரிடம் தவறாக நடக்க முயன்றார். இதற்கு அந்த பெண் எதிர்ப்பு தெரிவிக் கவே மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதுபோன்று பலமுறை நிகழ்ந்ததாக தெரி கிறது.

    இந்த நிலையில் அந்த பெண்ணுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதை யடுத்து அவரது தாயார் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் மகளை அழைத்து சென்றார். அங்கு டாக்டர்கள் பரிசோ தனை செய்தபோது, அந்த பெண் 11 வார கர்ப்பிணியாக இருந்ததை தெரியவந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த தாயார் மகளிடம் நடந்த விவரம் குறித்து கேட்டறிந்தார். இதுகுறித்து அவர் மேலூர் மகளிர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சாந்தி பாலாஜி விசாரணை நடத்தி இளம்பெண்ணை மிரட்டி பலாத்காரம் செய்த காட்டு ராஜாைவ போக்சோ சட்டத் தின் கீழ் கைது செய்தனர்.

    • அதிர்ச்சியடைந்த புதுப்பெண் இது குறித்து ராமநாதபுரம் போலீசில் புகார் செய்தார்.
    • வீட்டிற்கு அத்துமீறி நுழைந்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    கோவை:

    கோவை ராமநாதபுரம் அருகே உள்ள 80 அடி ரோட்டை சேர்ந்தவர் 19 வயது இளம்பெண்.

    இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. புதுப்பெண் அவரது கணவருடன் தனியாக வசித்து வருகிறார்.

    சம்பவத்தன்று புதுப்பெண்ணின் கணவர் வேலைக்கு சென்றுவிட்டார். அவர் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.

    புதுப்பெண் மதியம் சமையல் வேலைகளை முடித்து சாப்பிட்டு விட்டு வீட்டில் அமர்ந்து டி.வி. பார்த்து கொண்டு இருந்தார்.

    அப்போது வாலிபர் ஒருவர் இளம்பெண்ணின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்தார்.

    வாலிபர் இளம்பெண்ணை கீழே தள்ளி அவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார். இதில் அதிர்ச்சியடைந்த இளம்பெண் சத்தம் போட்டார்.

    இதனை கேட்ட அக்கம் பக்கத்தினர் இளம்பெண்ணின் வீட்டிற்கு விரைந்து சென்றனர். அதற்குள் வாலிபர் நடந்த சம்பவத்தை வெளியே கூறினால் கொலை செய்து விடுவதாக மிரட்டி விட்டு அங்கு இருந்து தப்பிச் சென்றார்.

    இதில் அதிர்ச்சியடைந்த புதுப்பெண் இது குறித்து ராமநாதபுரம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் வீட்டில் தனியாக இருந்த புதுப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றது தர்மபுரியை சேர்ந்தவரும் தற்போது 80 அடி ரோட்டில் வசித்து வரும் கட்டிட தொழிலாளி ஆனந்த் (வயது 21) என்பது தெரிய வந்தது.

    அவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் ஆனந்தை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    வீட்டில் தனியாக இருந்த புதுப்பெண்ணை பட்டப்பகலில் வாலிபர் வீட்டிற்கு அத்துமீறி நுழைந்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • செல்போன் சிக்னலின் அடிப்படையில் அந்த பகுதிக்கு போலீசார் சென்றனர்.
    • தப்பிஓடிய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியை சேர்ந்த மாணவி ஒருவர், அதே பகுதியில் உள்ள கல்லூரி ஒன்றில் விடுதியில் தங்கி படித்து வந்திருக்கிறார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாணவி திடீரென மாயமானார்.

    அவரை அவரது பெற்றோர் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதனால் தங்களது மகள் மாயமானது குறித்து போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து மாயமான மாணவியை தேடி வந்தனர்.

    அவர் எங்கு இருக்கிறார்? என்பதை கண்டறிய அவரது செல்போன் சிக்னலை போலீசார் கண்காணித்தனர். அப்போது அந்த மாணவி, குட்டியாடி அருகே தொட்டில்பாலம் குண்டுதோடு பகுதியில் இருப்பது போன்று காண்பித்தது. இதையடுத்து செல்போன் சிக்னலின் அடிப்படையில் அந்த பகுதிக்கு போலீசார் சென்றனர்.

    மாணவி இருப்பதாக காட்டப்பட்ட வீட்டுக்கு சென்றனர். வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. வெகுநேரமாக தட்டியும் கதவை திறக்காததால், கதவை உடைத்து வீட்டுக்குள் போலீசார் சென்றனர். அப்போது அங்கு அந்த மாணவி சுய நினைவின்றி அலங்கோலமான நிலையில் நிர்வாணமாக கிடந்தார்.

    அவரது உடலில் காயங்களும் இருந்தன. சுய நினைவின்றி கிடந்த மாணவியை போலீசார் அங்கிருந்து மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு மாணவிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    மாணவி மீட்கப்பட்ட வீட்டில் சில போதை மருந்துகளை போலீசார் பறிமுதல் செய்திருக்கிறார்கள். அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தியதில் அந்த வீட்டில் வாலிபர் ஒருவர் மட்டும் தங்கியிருந்து தெரிய வந்துள்ளது. அந்த வாலிபர் போதை பழக்கத்துக்கு அடிமையானவராக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

    அந்த வாலிபர் உள்ளிட்ட சிலர் போதையில் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்திருக்கலாம் என்றும், போலீசார் வந்ததும் மாணவியை நிர்வாணமாக போட்டுவிட்டு தப்பிச்சென்றிருக்கலாம் எனவும் போலீசார் கருதுகின்றனர். ஆகவே தப்பிஓடிய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.

    மாயமான கல்லூரி மாணவி, வாலிபரின் வீட்டின் நிர்வாணமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் கோழிக்கோட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் திருக்கனூர் போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து கார்த்திக்கை கைது செய்தனர்.
    • பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.1 லட்சம் நிவாரண உதவி வழங்கவும் உத்தரவிட்டார்.

    புதுச்சேரி:

    புதுவை திருக்கனூரை சேர்ந்த 13 வயது சிறுமி கடந்த 2020-ம் ஆண்டு இயற்கை உபாதை கழிக்க அப்பகுதியில் உள்ள சவுக்கு தோப்புக்கு சென்றார். அப்போது அதே பகுதியை சேர்ந்த பெயிண்டர் கார்த்திக் (வயது 38). என்பவர் சிறுமியை தடுத்து நிறுத்தி சவுக்கு மரத்தில் கட்டி வைத்து பாலியல் பலத்காரம் செய்ய முயன்றார்.

    சிறுமி கூச்சலிட்டதால் கார்த்திக் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இருந்த போதிலும் மரத்தில் கைகள் கட்டப்பட்டதால் இரவு முழுவதும் அந்த சிறுமி சவுக்கு தோப்பிலேயே தவித்துக்கொண்டிருந்தார். காலையில் அங்கு சென்றவர்கள் அந்த சிறுமியை மீட்டனர்.

    இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் திருக்கனூர் போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து கார்த்திக்கை கைது செய்தனர்.

    இந்த வழக்கு போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கினை விசாரித்த நீதிபதி சோபனா தேவி நேற்று தீர்ப்பு அளித்தார்.

    குற்றம் சாட்டப்பட்ட கார்த்திக்கு 2½ ஆண்டு ஜெயில் தண்டனையும் ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.1 லட்சம் நிவாரண உதவி வழங்கவும் உத்தரவிட்டார். 

    • புதர் பகுதியில் சடலமாக முனிரத்தினம்மாவின் உடல் சடலமாக கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
    • உயிரிழந்த பெண் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.

    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே கர்நாடகா மாநிலம் பன்னர்கட்டா அருகேயுள்ள பேட்ராயன தொட்டி கிராமத்தை சேர்ந்தவர் முனிரத்னம்மா (வயது38). இவர் தனது தங்கை மகனை அழைத்து கொண்டு நேற்று முன்தினம் மாலை நடைபயிற்சிக்காக சென்றார்.

    இரவு நேரமாகியும் அவர் வீடு திரும்பாததால், அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் பல இடங்களில் தேடிப் பார்த்தனர்.

    இந்நிலையில், சுமார் இரவு 8 மணியளவில் பூதன ஹள்ளி பகுதியில் உள்ள ஒரு புதரின் அருகில் தலை, கை, கால்களில் பலத்த காயங்களுடன் சிறுவனின் அழுகை குரல் கேட்டதை அடுத்து அவனை மீட்ட குடும்பத்தினர் தொடர்ந்து முனிரத்தினம்மாவை தேடினர்.

    நீண்ட நேரமாக தேடியும் அவர் கிடைக்காததாலும், இருள் சூழ்ந்து விட்டதாலும் அவரை தொடர்ந்து தேட முடியாமல் வீட்டுக்கு திரும்பி விட்டனர்.

    பின்னர், மீண்டும் நேற்று தேடுதல் பணியில் ஈடுபட்டபோது, புதர் பகுதியில் சடலமாக முனிரத்தினம்மாவின் உடல் சடலமாக கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    பின்னர் உடனே இதுகுறித்து பன்னார்கட்டா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து போலீசார் அங்கு சென்று சடலத்தை மீட்டு சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    தொடர்ந்து போலீசாரும், தடயவியல் நிபுணர்களும் மேற்கொண்ட விசாரணையில், உயிரிழந்த பெண் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.

    இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து இதற்கு காரணமானவர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • தாய்மாமா மீது புகார் கூறிய அந்த மாணவி தனது தாயுடன் வாழ்ந்து வந்திருக்கிறார்.
    • மாணவியின் தாய்மாமாவை போலீசார் கைது செய்தனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் காசர்கோடு பகுதியை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவி ஒருவர், தனது தாய்மாமன் மூலமாக ஒன்றாம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை 9 ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக சட்டப்பணிகள் ஆணையத்தை நேரடியாக தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தார்.

    இதையடுத்து அந்த மாணவியிடம் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க சட்டப்பணிகள் ஆணையம் உத்தரவிட்டது. இதையடுத்து மஞ்சேஸ்வர் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் பல திடுக்கிடும் தகவல்களை போலீசாரிடம் சிறுமி தெரிவித்தார்.

    தாய்மாமா மீது புகார் கூறிய அந்த மாணவி தனது தாயுடன் வாழ்ந்து வந்திருக்கிறார். தந்தை பிரிந்து சென்றதால் தாய் பராமரிப்பில் மட்டும் இருந்து வந்த அந்த மாணவியின் வீட்டுக்கு தாய் வழி மாமாவான மஞ்சேஸ்வரத்தை சேர்ந்த 41 வயது மதிக்கத்தக்கவர் வந்து சென்றபடி இருந்துள்ளார்.

    வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த அவர், ஊருக்கு வரும்போது மாணவியின் வீட்டுக்கு மாமா என்ற முறையில் வந்திருக்கிறார். அவ்வாறு வரும்போது மாணவியை பாலியல் பாலாத்காரம் செய்திருக்கிறார். மாணவி ஒன்றாம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு படித்தது வரை பல முறை அவர் பாலியல் பலாத்காரம் செய்ததாக மாணவி தனது வாக்குமூலத்தில் தெரிவித்திருக்கிறார்.

    சிறுமி என்றும் பாராமல், 6 வயது முதல் 13 வயது வரை 9 ஆண்டுகளாக சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட மாணவியின் தாய்மாமன் மீது கற்பழிப்பு, ஆணாதிக்கம், 12 வயதுக்குட்பட்ட குழந்தையை மீண்டும் மீண்டும் பாலியல் வன்கொடுமை செய்தது, போக்சோ உள்ளிட்ட 9 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டது.

    அதன்பேரில் மாணவியின் தாய்மாமாவை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு காசர்கோடு கோர்ட்டில் நடந்து வந்த நிலையில், மாணவியின் தாய்மாமா மீது கூறப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளிலும் குற்றவாளி என்று அறிவித்த நீதிமன்றம், அவருக்கு 97 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.

    மாணவியின் தாய்மாமா மீது சுமத்தப்பட்ட 9 மோசமான பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகளுக்கு 2 முதல் 15 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதித்த காசர்கோடு கூடுதல் செசன்சு கோர்ட்டு நீதிபதி மனோஜ், மாணவியின் தாய்மாமாவுக்கு மொத்தம் 97 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 8.5 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

    தண்டனை காலத்தை ஒரே நேரத்தில் அனுபவிக்க நீதிபதி உத்தரவிட்டது மட்டுமின்றி, அபராத தொகையை, பாதிக்கப்பட்ட சிறுமிக்கு வழங்க நீதிபதி உத்தரவிட்டார்.

    • மாணவி தாராபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
    • தங்கராஜ், பிரகாசை போக்சோ சட்டப்பிரிவில் கைது செய்தனர்.

    தாராபுரம்:

    திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த கவுண்டச்சிபுதூர் ஊராட்சி கொண்டரசம்பாளையம் கிராமம் அண்ணா நகரை சேர்ந்தவர் தங்கராஜ்(வயது 50). கொண்டரசம்பாளையம் கிராமத்தில் ஜெராக்ஸ் மெஷின் சர்வீஸ் சென்டர் வைத்து தாராபுரம் ,திருப்பூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளுக்கு நேரில் சென்று ஜெராக்ஸ் எந்திரங்களை சர்வீஸ் செய்யும் தொழிலை செய்து வருகிறார். மேலும் தாராபுரம் தாலுகா அலுவலகம் அருகே ஜெராக்ஸ் கடையும் நடத்தி வருகிறார்.

    மாற்றுத்திறனாளியான இவரது மனைவிக்கு உடல் நல குறைவு ஏற்பட்டதால் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் 10-ம் வகுப்பு படித்து வந்த தனது தம்பி மகள் முறையான உறவுக்கார சிறுமிக்கு மாதச்சம்பளம் அடிப்படையில் மனைவிக்கு உதவியாக வீட்டு வேலைக்கு சேர்த்து இருந்தார்.

    பள்ளி சென்று வந்த நேரம் போக மீதி நேரம் சிறுமி தங்கராஜ் வீட்டில் தங்கி வேலை செய்து வந்தார். இந்நிலையில் தங்கராஜ் ஆசை வார்த்தை கூறி கடந்த 6 ஆண்டுகளாக சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார்.

    இதனிடையே 12-ம் வகுப்பு முடித்த சிறுமி தாராபுரத்தில் உள்ள ஒரு கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து முடித்தார். இந்நிலையில் கல்லூரி மாணவியின் அண்ணன் முறையான அதே பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் (30) என்பவர், தங்கராஜின் உதவியாளராக அவரது கடையில் வேலைக்கு சேர்ந்தார்.

    அப்போது பெரியப்பா முறையான தங்கராஜுக்கும், அவரது வீட்டில் வேலை செய்து வந்த மகள் முறையான கல்லூரி மாணவிக்கும் தகாத உறவு தொடர்ந்து வருவதை பலமுறை நேரில் பார்த்துவிட்ட பிரகாஷ், இந்த தகாத உறவை வெளியே கூறி விடுவதாக மாணவியை மிரட்டி உள்ளார். மேலும் மாணவியை தனது இச்சைக்கு உட்படுத்திக் கொண்டு, தங்கராஜ் வெளியூர் சென்ற நாட்களில் பாலியல் பலாத்காரம் செய்து வந்தார்.

    பெரியப்பா முறையிலான தனது உறவினரும், அண்ணன் முறையிலான தனது உறவினரும் தொடர்ந்து தன்னை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கி மன உளைச்சலுக்கு உட்படுத்தியதால் கல்லூரி மாணவி தாராபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

    வழக்கை பதிவு செய்து விசாரித்த மகளிர் காவல் நிலைய போலீசார் கல்லூரி மாணவியை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திய பின் தங்கராஜ், பிரகாசை போக்சோ சட்டப்பிரிவில் கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

    கல்லூரி மாணவியை பெரியப்பா முறையிலான நபரும், அண்ணன் முறையிலான நபரும் தொடர்ந்து பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாக்கி கொடுமைப்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • நிவாரண முகாமில் தங்கியிருக்கும் அந்த பெண், தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து போலீசில் புகார் அளித்துள்ளார்.
    • அவமானத்தால் வாழ்வை முடித்துக் கொள்ள விரும்பியதாகவும் பாதிக்கப்பட்ட பெண் கூறியுள்ளார்.

    இம்பால்:

    மணிப்பூர் மாநிலத்தில் நடந்த வன்முறைக்கு 160க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். பாலியல் வன்கொடுமை, வீடுகள் சூறை, தீவைப்பு சம்பவங்களும் தொடர்ந்து நடைபெற்றன. இதனால் ஏராளமானோர் ஊரை காலி செய்து பாதுகாப்பான இடங்களுக்கு சென்றுவிட்டனர். மே 3ம் தேதி தொடங்கி ஜூலை 30ம் தேதி வரை நடந்த வன்முறை தொடர்பாக 6500க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    இந்த வன்முறையின் கோரமுகம் ஒவ்வொன்றாக வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. மே மாத துவக்கத்தில் வன்முறையின்போது 2 பெண்கள் நிர்வாணமாக ஊருக்குள் அழைத்து வந்தது தொடர்பான வீடியோ வெளியானபின்னர் மணிப்பூர் விவகாரம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

    இந்நிலையில், கலவரம் நடந்த அன்று மேலும் ஒரு பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. வன்முறை கும்பலில் இருந்து உயிர்தப்பி நிவாரண முகாமில் தங்கியிருக்கும் அந்த பெண், தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து போலீசில் புகார் அளித்துள்ளார்.

    மே 3ம் தேதி மணிப்பூரின் சுராசந்த்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 37 வயது நிரம்பிய அந்த பெண், தனது வீடு வன்முறையாளர்களால் தீ வைத்து எரிக்கப்பட்டபோது, அந்த வீட்டில் இருந்து தனது இரண்டு மகன்கள், மருமகள் மற்றும் அவரது அண்ணி ஆகியோருடன் தப்பிச் சென்றுள்ளார். அப்போது அவரை வன்முறையாளர்கள் சிலர் பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் மனுவில் கூறி உள்ளார்.

    'என்னையும் எனது குடும்பத்தின் கவுரவத்தையும், கண்ணியத்தையும் காப்பாற்றுவதற்காகவும், சமூகத்தில் புறக்கணிக்கப்படக்கூடாது என்பதற்காகவும் இதுவரை தனக்கு நேர்ந்த கொடுமையை வெளியில் சொல்லாமல் இருந்தேன். அவமானத்தால் என் வாழ்வை நானே முடித்துக் கொள்ள விரும்பினேன். பின்னர் பெண்கள் பலர் தாங்கள் அனுபவித்த கொடுமைகளைப் பற்றி பேசும் செய்திகளைப் பார்த்த பிறகு, போலீசில் புகார் அளிப்பதற்கு எனக்கு தைரியம் வந்தது' என அந்த பெண் கூறியிருக்கிறார்.

    அவரது புகார் தொடர்பாக பிஷ்னுபூர் காவல் நிலையத்தில் ஜீரோ எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில், அவர் கூறியிருப்பதாவது:-

    நான் என் மருமகளை என் முதுகில் தூக்கிக்கொண்டு என் இரண்டு மகன்களையும் கையில் பிடித்துக்கொண்டு என் அண்ணியுடன் அந்த இடத்திலிருந்து ஓட ஆரம்பித்தேன். அண்ணியும் ஒரு குழந்தையை முதுகில் சுமந்து கொண்டு எனக்கு முன்னால் ஓடிக்கொண்டிருந்தார். அப்போது நான் தடுமாறி சாலையில் விழுந்தேன். அப்போது என் அண்ணி என்னை நோக்கி ஓடி வந்து என் மருமகளை என் முதுகில் இருந்து தூக்கிக் கொண்டு என் இரண்டு மகன்களுடன் தப்பி ஓடினார்.

    பின்னர் ஒரு வழியாக நான் எழுந்திருக்கையில், ஐந்தாறு ஆண்கள் என்னைப் பிடித்துவிட்டனர். அவர்கள் என்னை தகாத வார்த்தைகளால் திட்டித் தாக்கியதுடன் பாலியல் வன்கொடுமை செய்தனர்.

    இவ்வாறு அந்த பெண் தனது புகார் மனுவில் கூறியிருக்கிறார்.

    'ஜீரோ எஃப்ஐஆர்' என்பது எந்த காவல் நிலையத்தில் வேண்டுமானாலும் பதிவு செய்யப்படலாம். குற்றம் நடந்த எல்லைக்குட்பட்ட காவல் நிலையத்தில்தான் பதிவு செய்ய வேண்டும் என்ற அவசியமில்லை. வழக்குப் பதிவு செய்யப்பட்ட காவல் நிலையம் அந்த எப்.ஐ.ஆரை சரியான அதிகார வரம்பிற்கு அனுப்ப வேண்டும். பின்னர் அந்த காவல்நிலையம் அதை விசாரிக்கும். இந்த வழக்கைப் பொருத்தவரை சுராசந்த்பூரில் உள்ள காவல் நிலையம் விசாரணை நடத்துகிறது.

    ×