search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வீட்டு வேலைக்கு வந்த கல்லூரி மாணவியை 6 ஆண்டுகளாக மிரட்டி பாலியல் பலாத்காரம்: பெரியப்பா-அண்ணன் கைது
    X

    வீட்டு வேலைக்கு வந்த கல்லூரி மாணவியை 6 ஆண்டுகளாக மிரட்டி பாலியல் பலாத்காரம்: பெரியப்பா-அண்ணன் கைது

    • மாணவி தாராபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
    • தங்கராஜ், பிரகாசை போக்சோ சட்டப்பிரிவில் கைது செய்தனர்.

    தாராபுரம்:

    திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த கவுண்டச்சிபுதூர் ஊராட்சி கொண்டரசம்பாளையம் கிராமம் அண்ணா நகரை சேர்ந்தவர் தங்கராஜ்(வயது 50). கொண்டரசம்பாளையம் கிராமத்தில் ஜெராக்ஸ் மெஷின் சர்வீஸ் சென்டர் வைத்து தாராபுரம் ,திருப்பூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளுக்கு நேரில் சென்று ஜெராக்ஸ் எந்திரங்களை சர்வீஸ் செய்யும் தொழிலை செய்து வருகிறார். மேலும் தாராபுரம் தாலுகா அலுவலகம் அருகே ஜெராக்ஸ் கடையும் நடத்தி வருகிறார்.

    மாற்றுத்திறனாளியான இவரது மனைவிக்கு உடல் நல குறைவு ஏற்பட்டதால் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் 10-ம் வகுப்பு படித்து வந்த தனது தம்பி மகள் முறையான உறவுக்கார சிறுமிக்கு மாதச்சம்பளம் அடிப்படையில் மனைவிக்கு உதவியாக வீட்டு வேலைக்கு சேர்த்து இருந்தார்.

    பள்ளி சென்று வந்த நேரம் போக மீதி நேரம் சிறுமி தங்கராஜ் வீட்டில் தங்கி வேலை செய்து வந்தார். இந்நிலையில் தங்கராஜ் ஆசை வார்த்தை கூறி கடந்த 6 ஆண்டுகளாக சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார்.

    இதனிடையே 12-ம் வகுப்பு முடித்த சிறுமி தாராபுரத்தில் உள்ள ஒரு கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து முடித்தார். இந்நிலையில் கல்லூரி மாணவியின் அண்ணன் முறையான அதே பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் (30) என்பவர், தங்கராஜின் உதவியாளராக அவரது கடையில் வேலைக்கு சேர்ந்தார்.

    அப்போது பெரியப்பா முறையான தங்கராஜுக்கும், அவரது வீட்டில் வேலை செய்து வந்த மகள் முறையான கல்லூரி மாணவிக்கும் தகாத உறவு தொடர்ந்து வருவதை பலமுறை நேரில் பார்த்துவிட்ட பிரகாஷ், இந்த தகாத உறவை வெளியே கூறி விடுவதாக மாணவியை மிரட்டி உள்ளார். மேலும் மாணவியை தனது இச்சைக்கு உட்படுத்திக் கொண்டு, தங்கராஜ் வெளியூர் சென்ற நாட்களில் பாலியல் பலாத்காரம் செய்து வந்தார்.

    பெரியப்பா முறையிலான தனது உறவினரும், அண்ணன் முறையிலான தனது உறவினரும் தொடர்ந்து தன்னை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கி மன உளைச்சலுக்கு உட்படுத்தியதால் கல்லூரி மாணவி தாராபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

    வழக்கை பதிவு செய்து விசாரித்த மகளிர் காவல் நிலைய போலீசார் கல்லூரி மாணவியை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திய பின் தங்கராஜ், பிரகாசை போக்சோ சட்டப்பிரிவில் கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

    கல்லூரி மாணவியை பெரியப்பா முறையிலான நபரும், அண்ணன் முறையிலான நபரும் தொடர்ந்து பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாக்கி கொடுமைப்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×