என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
இளம்பெண் பலாத்காரம் செய்து கொலை: தண்ணீர் தொட்டியில் உடல் வீச்சு
- கடந்த 25-ந் தேதி பிளாஸ்டிக் பொருட்களை சேகரிக்க சென்ற இளம்பெண் மீண்டும் வீடு திரும்பவில்லை.
- காணாமல் போன இளம்பெண்ணை அவரது கணவர் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தார்.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலம், நானக் ராம்குடாவை சேர்ந்தவர் 30 வயது இளம்பெண். இவர் தனது குடும்பத்தினருடன் கோவில் தொட்டி என்ற பகுதியில் வசித்து வந்தார்.
இளம்பெண் கட்டுமான வேலை செய்து வந்தார். மேலும் அவ்வப்போது பிளாஸ்டிக் பாட்டில்களை சேகரித்து கடைகளில் விற்று வந்தார்.
இந்த நிலையில் கடந்த 25-ந் தேதி பிளாஸ்டிக் பொருட்களை சேகரிக்க சென்ற இளம்பெண் மீண்டும் வீடு திரும்பவில்லை.
காணாமல் போன இளம்பெண்ணை அவரது கணவர் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தார். மனைவியை கண்டுபிடிக்க முடியாததால் இதுகுறித்து அங்குள்ள போலீசில் புகார் செய்தார்.
போலீசார் வழக்கு பதிவு செய்து இளம்பெண்ணை தேடி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று காலை அதே பகுதியில் கட்டுமான பணி நடந்து வரும் கட்டிடத்தில் இருந்து துர்நாற்றம் வீசியது. அப்பகுதி மக்கள் கட்டிடத்தில் உள்ளே சென்று பார்த்தனர்.
அப்போது கட்டிடத்தில் கீழ் பகுதியில் கட்டப்பட்டுள்ள தண்ணீர் தொட்டியில் மாயமான இளம்பெண் நிர்வாண நிலையில் பிணமாக மிதந்தார்.
இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் போலீசருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் இளம்பெண்ணின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பிளாஸ்டிக் பொருட்களை சேகரிக்க சென்ற இளம்பெண்ணை மர்ம நபர்கள் கடத்தி வந்து பலாத்காரம் செய்து பின்னர் கொலை செய்து குடிநீர் தொட்டியில் வீசி உள்ளனர். குற்றவாளிகளை தேடி வருகிறோம்.
பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு முழு விவரமும் தெரியவரும் என கூறினர்.
இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்