search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாசனம்"

    • நுண்ணீர் பாசனத்தினால் ஏற்படும் நன்மைகள் மற்றும் பயன்பாடுகள் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார்.
    • சம்பா பயிர் காப்பீடு செய்வதன் முக்கியத்துவம் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் இடையாத்தாங்குடி கிராமத்தில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் நுண்ணீர் பாசன அலகுகளில் செயல்பாடு மற்றும் பராமரிப்பு பற்றிய பயிற்சி நடைப்பெற்றது.

    இந்நிகழ்ச்சிக்கு திருமருகல் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் (பொ) கலைச்செல்வன் தலைமை தாங்கினார்.

    அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் மகேஸ்வரி வரவேற்றார்.

    நுண்ணீர் பாசன கம்பெனியின் மண்டல மேலாளர் பிரகாஷ் கலந்து கொண்டு நுண்ணீர் பாசனத்தினால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் அதன் பயன்பாடுகள் பற்றியும் விவசாயிகளுக்கு விரிவாக எடுத்துரைத்தார்.

    வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் (பொ) கலைச்செல்வன் வட்டாரத்தில் நடைமுறை படுத்தப்படும் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்ந்த திட்டங்கள் குறித்தும் சம்பா பயிர் காப்பீடு செய்வதன் முக்கி யத்துவம் பற்றியும் விவசாயி களுக்கு எடுத்து ரைத்தார்.

    துணை வேளாண்மை அலுவலர் தெய்வகுமார் நடப்பு சம்பா சாகுபடியில் பயிர் பாதுகாப்பு நடவடிக்கை கள் மேற்கொள்வது பற்றி எடுத்து ரைத்தார்.

    பயிற்சிக்கான ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர் சிந்து மற்றும் உதவி தொழில்நுட்ப மேலாளர் பிரபு ஆகியோர் செய்தி ருந்தனர்.

    • அணையின் நீர்மட்டத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறார்கள்.
    • மாவட்டம் முழுவதும் உள்ள பாசன குளங்களிலும் போதுமான அளவு தண்ணீர் இருப்பு உள்ளது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக விட்டு விட்டு பெய்து வந்த சாரல் மழையின் காரணமாக பேச்சிபாறை, பெருஞ்சாணி அணைகளின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிகிறது.

    அணையின் நீர்மட்டத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறார்கள். பேச்சிபாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைகளில் இருந்து 1014 கன அடி தண்ணீர் பாசனத்திற்காக திறந்து விடப்பட்டு உள்ளது. இந்த தண்ணீர் தோவாளை சானல், அனந்த னார் சானல் உள்பட அனைத்து சானல்களிலும் ஷிப்டு முறையில் வெளி யேற்றப் பட்டு வருகிறது.

    48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிபாறை அணை நீர்மட்டம் இன்று காலை 43.95 அடியாக உள்ளது. அணைக்கு 632 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 439 கனஅடி தண்ணீர் வெளி யேற்றப்படுகிறது.

    77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 72.11 அடியாக உள்ளது. அணைக்கு 304 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணை யில் இருந்து 425 கன அடி தண்ணீர் வெளியேற்றப் படுகிறது.

    சிற்றாறு-1 அணை நீர்மட்டம் 11.02 அடியாக உள்ளது. அணைக்கு 80 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணை யில் இருந்து 150 கனஅடி தண்ணீர் வெளியேற்றப் படுகிறது.

    சிற்றார்-2 அணை நீர்மட்டம் 11.12 அடியாகவும், பொய்கை அணை நீர்மட்டம் 16.70 அடியாகவும், மாம்ப ழத்துறையாறு அணை நீர்மட்டம் 38.55 அடியாகவும் உள்ளது.

    நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும் முக்கடல் அணையின் நீர்மட்டம் 13.70 அடியாக உள்ளது. அணையில் இருந்து பொதுமக்களுக்கு தங்குதடை இன்றி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    மாவட்டம் முழுவதும் உள்ள பாசன குளங்களிலும் போதுமான அளவு தண்ணீர் இருப்பு உள்ளது.

    • அணை கட்டினால் காவிரியில் கிடைக்கும் தண்ணீரை தேக்கி பயன்படுத்த வாய்ப்பாக இருக்கும்.
    • கொள்ளிடம் ஆற்றில் கடல் நீர் உள்ளே புகாதவாறு போர்க்கால அடிப்படையில் கதவணை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள நாதல்படுகை, முதலைமேடுதிட்டு, வெள்ளமணல் ஆகிய தண்ணீரால் சூழப்பட்டுள்ள திட்டு கிராமங்களை தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பிஆர் பாண்டியன் பார்வையிட்டார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், இந்த ஆண்டு ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதுவரை 500 டிஎம்சி தண்ணீர் கடலில் கலந்துள்ளது. 64 டிஎம்சி தண்ணீரை தேக்கி பயன்படுத்தும் அளவுக்கு ராசிமணலில் அணை கட்டினால் விவசாயத்திற்கு பயன்படும்.

    எனவே மத்திய அரசு கர்நாடக அரசின் உதவியை பெற்று அதற்கான பணியை தொடங்கிட வேண்டும். காவிரியில் 93 டிஎம்சி தண்ணீர் மட்டுமே பாசனத்திற்கு தேக்கி வைக்கும் அளவிற்கு மேட்டூர் அணை உள்ளது. அதற்கு மேல் வரும் தண்ணீர் அனைத்தும் கடலுக்குத் தான் செல்ல வேண்டும். அணை கட்டினால் காவிரியில் கிடைக்கும் தண்ணீரை தேக்கி பயன்படுத்த வாய்ப்பாக இருக்கும். கரூர் முதல் பஞ்சம்பட்டி உள்ளிட்ட பல்வேறு ஏரிகளில் எத்தனை ஏரிகள் கொள்ளிடம் கரைப்பகுதியில் இருக்கின்றதோ, அத்தனை ஏரிகளிலும் தண்ணீரை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கொள்ளிடம் ஆற்றின் பாலத்திலிருந்து ஆறு கடலில் கலக்கும் கடல் முகத்துவாரம் வரை இரு கரைகளிலும் கான்கிரீட் சுவர் அமைக்க வேண்டும். இந்த முறை ஒரு லட்சத்து 80 ஆயிரம் கனஅடி தண்ணீர் தான் வெளியேற்றப்படுகிறது.ஆனால் கடல் மட்டம் உயர்ந்துள்ளதால் 5 லட்சம் கன அடி தண்ணீர் செல்லும் ஆற்றில் தத்தளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    கொள்ளிடம் அருகே நாதல்படுகை, முதலை மேட்டுதிட்டு, வெள்ளமணல் ஆகிய கிராமங்களில் ஆயிரம் வீடுகளை தண்ணீர் சூழ்ந்துள்ளதால் குடிசை வீடுகளும், ஓட்டு வீடுகளும் முற்றிலும் அழிந்து இருக்கிறது. குடிசை வீட்டிற்கு ரூ25 ஆயிரம், ஓட்டு வீட்டிற்கு ரூ50,000 வீதம் நிவாரணம் வழங்கி மறு சீரமைப்பு பணிகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தொடர்ந்து மேடான பகுதிகளில் மனைபட்டா வழங்கி ஆற்றின் கரையோர கிராமங்களில் உள்ளவர்களை குடிமாற்றம் செய்து வீடு கட்டி கொடுக்க வேண்டும். அடுத்த ஆண்டிற்குள் அதனை செய்ய வேண்டும். கொள்ளிடம் பகுதியில் 3வது முறையாக தோட்டப்பயிர்கள் பருத்தி, கரும்பு, வாழை உள்ளிட்ட பல்வேறு பணப்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

    எனவே விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு நிவாரணமாக 50 ஆயிரம் உற்பத்தி செலவை கணக்கிட்டு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். நெல் சாகுபடி விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் வீதம் நிவாரணம் வழங்க வேண்டும். அதற்கு முதல் அமைச்சர் முழு முயற்சி செய்து விவசாயிகளுக்கு பெற்று தர வேண்டும்.

    வெள்ளமணல் கிராமம் அருகே கொள்ளிடம் ஆற்றில் கடல் நீர் உள்ளே புகாதவாறு போர்க்கால அடிப்படையில் கதவணை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். மாவட்ட விவசாய சங்க கூட்டமைப்பு தலைவர் விஸ்வநாதன், ஆச்சாள்புரம் விவசாய சங்கத் தலைவர் அருண், நிர்வாகிகள் சீனிவாசன் ரவிச்சந்திரன் மற்றும் விவசாயிகள் உடன் இருந்தனர்.

    • 2 ஆயிரம் கன அடி வரை கால்வாய்களின் இரு கரைகளையும் தொட்டபடி பாய்ந்து சென்று வருகிறது.
    • தண்ணீர் அதிக அளவு செல்வதாலும், உயிருக்கு ஆபத்தான விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

    வெள்ளகோவில்

    திருப்பூர் மாவட்டம் முத்தூர் அருகே வள்ளியரச்சல் பஸ் நிறுத்தம் அருகில் தென்புறம் கீழ்பவானி பாசன கால்வாய் செல்கிறது.அணையில் இருந்து கீழ்பவானி பாசன பிரதான கால்வாயில் வினாடிக்கு 2 ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. இதனால் இப்பகுதியை கடந்து செல்லும் தண்ணீர் தற்போது வினாடிக்கு சுமார் 2 ஆயிரம் கன அடி வரை கால்வாய்களின் இரு கரைகளையும் தொட்டபடி பாய்ந்து சென்று வருகிறது.

    இந்த நிலையில் வள்ளியரச்சல் பஸ் நிறுத்தம் அருகில் செல்லும் கீழ்பவானி பாசன கால்வாய் பாலத்தின் இருபுறமும் இப்பகுதியை சேர்ந்த கிராம பொதுமக்கள் மற்றும் அருகில் உள்ள நகர, கிராம பகுதிகளை சேர்ந்த அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரி மாணவ - மாணவிகள், தனியார் நிறுவன ஊழியர்கள், வடமாநில தொழிலாளர்கள் உள்பட அனைத்து தரப்பினரும் நேரில் வந்து கால்வாயின் உள்ளே படிக்கட்டுகளில் இறங்கி நீரில் குளிப்பதற்கு போலீசார் தடை விதித்து உள்ளனர்.

    இதுபற்றி போலீசார் வெளியிட்டுள்ள எச்சரிக்கை அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- வள்ளியரச்சல் கீழ்பவானி பாசன கால்வாய் பாலத்தின் இருபுறமும் அகலமாகவும், உள் பகுதி மிகவும் ஆழமான பகுதியாக இருப்பதாலும், கால்வாயில் தற்போது தண்ணீர் அதிக அளவு செல்வதாலும், உயிருக்கு ஆபத்தான விபத்து ஏற்படும் அபாயம் உள்ள பகுதி என்றும், இங்கு தண்ணீரில் இறங்கி குளிப்பவர்கள் எதிர்பாராதவிதமாக உள்ளே தவறி விழுந்து நீரில் வேகமாக அடித்து செல்ல வாய்ப்பு உள்ளது என்றும், இதனால் உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது என கருதி குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள். மேலும் இப்பகுதியில் கீழ்பவானி பாசன கால்வாயில் குளிப்பதற்கு தடை என போலீசார் எச்சரிக்கை அறிவிப்பு பலகை வைத்து உள்ளனர்.மேலும் இந்த கீழ்பவானி பாசன கால்வாய் பகுதியில் மேல்புற பகுதிகளில் பாலத்தின் மேலே அமர்ந்து இரவு நேரங்களில் மது அருந்தவும், போதை நிலையில் தண்ணீரில் இறங்கி குளிப்பதற்கு தடை விதிக்கப்படுவதாகவும், இதை மீறுபவர்கள் மீது உரிய சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று போலீசார் மற்றும் ஊராட்சி நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.

    • 3 லட்சத்து 76 ஆயிரத்து 152 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.
    • அணைக்கு நாள் ஒன்றுக்கு 2 அடி விகிதம் படிப்படியாக உயர்ந்து 42 அடியை கடந்து உள்ளது.

    உடுமலை :

    உடுமலை மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் திருமூர்த்தி அணை கட்டப்பட்டுள்ளது. இங்குள்ள நீரை ஆதாரமாக கொண்டு கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் 3 லட்சத்து 76 ஆயிரத்து 152 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. பாசன வசதிக்கு ஏதுவாக நிலங்கள் 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு ஆண்டுக்கு இரண்டு மண்டலங்கள் வீதம் சுழற்சி முறையில் தண்ணீர் வினியோகம் நடைபெற்று வருகிறது.மேலும் சுற்றுப்புற கிராமங்கள் பயன்பெறும் வகையில் உடுமலை, மடத்துக்குளம் பூலாங்கிணறு, குடிமங்கலம், கணக்கம்பாளையம் உள்ளிட்ட குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    காண்டூர் கால்வாயில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டதால் திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் வரவில்லை. அதன் பின்னர் பணிகள் முடிந்த நிலையில் கடந்த வாரம் கால்வாயில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதன் காரணமாக அணைக்கு நாள் ஒன்றுக்கு 2 அடி விகிதம் படிப்படியாக உயர்ந்து 42 அடியை கடந்து உள்ளது. இதைத்தொடர்ந்து விவசாயிகள் கொடுத்த கோரிக்கையின் பேரில் இரண்டாம் மண்டல பாசனத்திற்கு தண்ணீர் திறப்பதற்கு அதிகாரிகள் கருத்துரு தயாரித்து அரசுக்கு அனுப்பி வைத்துள்ளனர். அரசிடமிருந்து உத்தரவு வந்த பின்பு தண்ணீர் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.

    அணையின் நீர் இருப்பு வேகமாக உயர்ந்து வருவதாலும் இந்த மாத இறுதிக்குள் பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளதாலும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் நிலத்தை உழுது சாகுபடி பணிகளுக்கு தயாராகி வருகின்றனர். 60 அடி உயரம் கொண்ட அணையில் தற்போதைய நிலவரப்படி 42.06 அடி உயரத்திற்கு தண்ணீர் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 893 அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 26 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    • பருவமழையால் அணைகளில் போதிய அளவு தண்ணீர் இருப்பு உள்ளது.
    • காங்கயம் பகுதிகளில் வறட்சி நீடிப்பதால் கூடுதலாக தண்ணீர் வழங்க வேண்டும்.

    உடுமலை :

    உடுமலை திருமூர்த்தி அணையில் இருந்து இரண்டாம் மண்டல பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு குறித்து ஆலோசனை கூட்டம் பொள்ளாச்சி பி.ஏ.பி., அலுவலகத்தில் நடந்தது.

    இதில் பாசன சபை தலைவர்கள் பேசுகையில், பருவமழையால் அணைகளில் போதிய அளவு தண்ணீர் இருப்பு உள்ளது. வரும் 26ந் தேதி முதல் இரண்டாம் மண்டல பாசனத்துக்கு நீர் வழங்க வேண்டும்.வெள்ளக்கோவில், காங்கயம் பகுதிகளில் வறட்சி நீடிப்பதால் கூடுதலாக தண்ணீர் வழங்க வேண்டும். சுற்று எண்ணிக்கையை குறைத்தால் நாட்கள் எண்ணிக்கையை அதிகரித்து கூடுதல் தண்ணீர் வழங்க சாத்தியம் உள்ளதா என ஆலோசிக்க வேண்டும்.இரண்டாம் மண்டல பாசனத்துக்கு சுற்று எண்ணிக்கை குறைக்க காண்டூர் கால்வாய் பணிகள் தான் காரணமா அல்லது உபரியாக நீர் வீணாக சென்றதால் குறைத்து வழங்கப்படுகிறதா என விளக்கமளிக்க வேண்டும்.கடந்தாண்டை போன்று எத்தனை சுற்று தண்ணீர் வழங்கலாம். இவ்வளவு எடுக்கிறோம், எத்தனை நாட்களுக்கு தண்ணீர் வழங்கப்படும் உள்ளிட்ட விபரங்கள் முறையாக தெரிவிக்க வேண்டும். சமமான நீர் பங்கீடு வழங்க வேண்டும். நீர் வழங்குவது குறித்து அட்டவணை அனைவருக்கும் வழங்க வேண்டும்.

    கண்காணிப்பு பொறியாளர் தேவராஜன் கூறுகையில்,காண்டூர் கால்வாய் பணிகள் மேற்கொள்ள வேண்டியுள்ளதால் 5 சுற்றுக்கு பதிலாக 4 சுற்று தண்ணீர் வழங்கலாம். அதன் பின் உரிய இடைவெளி கிடைப்பதால் பணிகள் தாமதமின்றி மேற்கொள்ள முடியும்.திருமூர்த்தி அணையில் இருந்து விவசாயிகள் கோரிக்கையின் படி, வரும் 26ந் தேதி தண்ணீர் திறப்பது குறித்து அரசுக்கு கருத்துரு அனுப்பப்படும்.காண்டூர் கால்வாய் பணிகள் தாமதமின்றி முடிக்க வேண்டும் என்பதற்காகத்தான் சுற்று எண்ணிக்கை குறைக்க கேட்டோம். வாட்டர் பட்ஜெட் போட்டதும் எவ்வளவு மில்லியன் கனஅடி நீர் வழங்கப்படும் என்பன உள்ளிட்ட விபரங்கள் தெரிவிக்கப்படும்.

    திருமூர்த்தி நீர்தேக்க திட்டக்குழு முன்னாள் தலைவர் பரமசிவம் கூறுகையில், வரும் 26ந் தேதி தண்ணீர் திறக்க பாசன சபை தலைவர்கள் ஒப்புதல் தெரிவித்தனர். இரண்டாம் மற்றும் மூன்றாம் மண்டல பாசனங்களுக்கு ஒரு சுற்று குறைத்து தலா 4 சுற்று வீதம் தண்ணீர் வழங்க கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

    அதிகாரிகள் பேசுகையில், மொத்தம் 72 கோடி ரூபாய் செலவில் காண்டூர் கால்வாய் பணிகளை முடிக்க, 2 ஆண்டுகள் கால அவகாசம் கொடுத்தால் பயனுள்ளதாக இருக்கும் என தெரிவித்தனர்.அதற்கு பாசன சபை தலைவர்கள், நல்லாறு பகுதியில் மேற்கொண்ட பணிகள் முடிவடைந்த நிலையில், மீதம் உள்ள பணிகளை, ஒரு ஆண்டுக்குள் முடிக்க திட்டமிட்டால் பாசனம் பாதிக்காது. இது குறித்து அதிகாரிகள் பரிசீலனை செய்ய வேண்டும் என்றனர்.

    • 6 மாதங்களுக்கு ஒரு மண்டலம் வீதம் பாசன வசதி பெற்று வருகிறது.
    • முதல் மண்டல பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டிருந்தது கடந்த மே மாதம் நிறைவடைந்தது.

    உடுமலை :

    உடுமலையை அடுத்துள்ள திருமூர்த்தி அணையில் இருந்து பரம்பிக்குளம்-ஆழியாறு (பி.ஏ.பி) பாசனத்திட்டத்தில் திருப்பூர், கோவை மாவட்டத்தில் 3 லட்சத்து 77 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இந்த பாசன பகுதிகள் 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு 6 மாதங்களுக்கு ஒரு மண்டலம் வீதம் பாசன வசதி பெற்று வருகிறது. இந்த பாசன பகுதிகளுக்கான தண்ணீர் தொகுப்பு அணைகளில் இருந்து காண்டூர் கால்வாய் மூலம் திருமூர்த்தி அணைக்கு கொண்டுவரப்பட்டு, அங்கிருந்து கால்வாய்கள் மூலமாக பாசனபகுதிகளுக்கு திறந்து விடப்படுகிறது. முதல் மண்டல பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டிருந்தது கடந்த மே மாதம் நிறைவடைந்தது.

    இந்தநிலையில் தற்போது பிரதான கால்வாய்கள் மற்றும் கிளை (பகிர்மான) கால்வாய் கரைகளில் செடிகள் வளர்ந்துள்ளன. கால்வாயின் உள்பகுதியிலும் செடிகள் வளர்ந்துள்ளன. 2-ம் மண்டல பாசனத்திற்கு வருகிற 28-ந்தேதி தண்ணீர் திறந்து விட திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து கால்வாய்களை சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது உடுமலை கால்வாய் பிரிவு1-ல் திருமூர்த்தி அணையில் இருந்து தளி ஜல்லிபட்டி, பள்ளபாளையம், எஸ்.வி.புரம் வழியாக 23 கி.மீ.தூரத்தில் உள்ள தாந்தோணி வரை கால்வாய் கரையின் 2 பக்கங்களிலும் வளர்ந்துள்ள செடிகள் மற்றும் கால்வாயின் உள்புறம் வளர்ந்துள்ள செடிகள் வெட்டி அகற்றப்பட்டு சுத்தம் செய்யும் பணிகள் ஆங்காங்கு நடைபெற்று வருகிறது.

    அத்துடன் உடுமலை கால்வாயில் இருந்து 2-ம் மண்டல பாசன பகுதிகளுக்கு தண்ணீர் செல்லும் கிளை (பகிர்மான கால்வாய்) கால்வாய்கள் மற்றும் கரைப்பகுதிகளில் வளர்ந்துள்ள செடிகள் அகற்றப்பட்டு சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் தற்போது ஜல்லிபட்டியில் உடுமலை (பிரதான) கால்வாய், சின்னவீரன்பட்டி, எஸ்.வி.புரம் ஆகிய பகுதிகளில் கிளை கால்வாய் ஆகிய பகுதிகளில் நடைபெற்று வருகிறது.

    • முக்கிய கால்வாய்கள் பராமரிப்பே பரிதாபமாக உள்ளது.
    • பகிர்மான கால்வாய்களின் நிலை படுமோசமாக உள்ளது.

    உடுமலை :

    பிரதான கிளை மற்றும் பகிர்மான கால்வாய்கள் பராமரிப்பு குறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருப்பதால் திருப்பூர் மாவட்டத்தில் பி.ஏ.பி., இரண்டாம் மண்டல பாசனம் குறித்த நேரத்தில் துவங்குவது கேள்விக்குறியாகியுள்ளது.

    பி.ஏ.பி., முதலாம் மண்டல பாசனத்துக்கு கடந்த ஆண்டு, டிசம்பர் 25-ந்தேதி தண்ணீர் திறக்கப்பட்டு, 5 சுற்றுகளாக 9,500 மில்லியன் கனஅடி நீர், திருமூர்த்தி அணையிலிருந்து வழங்கப்பட்டது.அந்த மண்டல பாசனம், மே மாதத்தில் நிறைவு பெற்ற நிலையில் இரண்டாம் மண்டல பாசனத்துக்கு வரும் ஆகஸ்டு மாதம் தண்ணீர் திறக்கப்பட வேண்டும். இந்த மண்டலத்தில் கோவை, திருப்பூர் மாவட்டத்துக்குட்பட்ட 94,201 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற உள்ளது.

    பி.ஏ.பி., பாசனத்துக்கு தொகுப்பு அணைகளில் இருந்து திருமூர்த்தி அணைக்கு காண்டூர் கால்வாய் வாயிலாக பெறப்படும் தண்ணீரே ஆதாரமாக உள்ளது. இக்கால்வாயில் கி.மீ., 30 முதல் 49 வது கி.மீ., வரை புதுப்பித்தல் பணிக்காக 72 கோடி ரூபாயை அரசு ஒதுக்கீடு செய்தது.

    பணிக்கான நிர்வாக ஒப்புதல், பிப்ரவரி 2021ல், பெறப்பட்டது. இந்நிலையில் இந்த புதுப்பித்தல் பணிகள் இதுவரை நிறைவு பெறவில்லை.தென்மேற்கு பருவமழையால் தொகுப்பு அணைகளான சோலையாறு, பரம்பிக்குளம் உள்ளிட்ட அணைகள் நிரம்பிய போதும், திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் பெற முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. தற்போது திருமூர்த்தி அணையின் நீர்மட்டம், 60 அடிக்கு 28.70 அடி மட்டுமே உள்ளது. ஆகஸ்டில், இரண்டாம் மண்டல பாசனம் குறித்த நேரத்தில் துவங்க, காண்டூர் கால்வாய் பணிகளை துரிதப்படுத்தி தொகுப்பு அணைகளில் இருந்து திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் பெற வேண்டும்.

    திருமூர்த்தி அணையில் இருந்து பி.ஏ.பி., நான்கு மண்டலத்துக்குரிய 3.77 லட்சம் ஏக்கருக்கு பிரதான கால்வாய் வழியாகவே தண்ணீர் திறக்கப்படும். இந்த கால்வாய் பல இடங்களில் கரைகள் சரிந்து மண் கால்வாயாக மாறி விட்டது.தண்ணீர் திருட்டு காரணமாக கடைமடை பகுதிகள் பாதிப்பதாக வெள்ளகோவில் பகுதி விவசாயிகள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் கரையில்லாத பிரதான கால்வாயில், நீரிழப்பு அதிகரிப்பதுடன் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு, பாசனம் பாதிக்கும் நிலை உள்ளது.இரண்டாம் மண்டல பாசனம் துவங்கும் முன் படுமோசமாக உள்ள கால்வாயில், அடிப்படை பராமரிப்பு பணிகளையாவது மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை கண்டுகொள்ளப்படவில்லை.தற்போதே பணிகளை துவக்கினால் மட்டுமே, ஆகஸ்டில் தண்ணீர் திறக்கும் போது பணிகளை முடிக்க முடியும்.

    முக்கிய கால்வாய்கள் பராமரிப்பே பரிதாபமாக உள்ள நிலையில், சுழற்சி முறையில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறையே கிளை கால்வாய்களில், தண்ணீர் திறக்கப்படும்.இதனால் இரண்டாம் மண்டல பாசன கால்வாய்களே தற்போது தேடினால் கிடைக்காது. முறையான பராமரிப்பின்றி, புதர் மண்டி கால்வாயை கண்டுபிடிக்க வேண்டிய நிலை உள்ளது. உடுமலை கால்வாய், புதுப்பாளையம் கிளை கால்வாய் உள்ளிட்ட கால்வாய்களை பாசனத்துக்கு தண்ணீர் திறக்கும் முன்பாவது பொதுப்பணித்துறையினர் தேடிக்கண்டுபிடிக்க வேண்டும் என்பது விவசாயிகள் கோரிக்கையாக உள்ளது.வழக்கமாக அணையில் இருந்து தண்ணீர் திறப்பதற்கு இரண்டு நாட்கள் முன் கரையிலும் கால்வாயிலும் உள்ள புதர்களை அகற்றி விட்டு பாசனத்துக்கு தயாராவது பொதுப்பணித்துறையினர் வழக்கமாக உள்ளது.

    பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டிலுள்ள கால்வாய்கள் நிலை இப்படி இருக்கும் போது, பாசன சபை கட்டுப்பாட்டிலுள்ள பகிர்மான கால்வாய்களின் நிலை படுமோசமாக உள்ளது. சமீபத்தில் பாசன சபைக்கு ஆர்வத்துடன் போட்டியிட்டு தேர்வான பாசன சபை நிர்வாகிகள் பகிர்மான கால்வாய்களை தூர்வார நிதியில்லாததால், திணறி வருகின்றனர்.வேலை உறுதியளிப்பு திட்டத்தில் பகிர்மான கால்வாய்களை தூர்வார மாவட்ட நிர்வாகத்துக்கு, கோரிக்கை மனு அனுப்பி காத்திருக்கின்றனர்.நீர் வளத்தை பாதுகாக்க, பொதுப்பணித்துறையிலிருந்து நீர்வளத்துறையை தனியாக பிரித்த தி.மு.க., அரசு, இரு மாவட்டத்திலும், பல லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் பி.ஏ.பி., பாசனத்திட்ட மேம்பாட்டிலும் அக்கறை காட்ட வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.

    • வெள்ளகோவில் சுற்றுவட்டார பகுதியில் உள்ள 6 ஆயிரத்து 43 ஏக்கர் பாசன பயன்பெறும் வகையில் கட்டப்பட்டுள்ளது.
    • தமிழக செய்தி துறை அமைச்சர் நடவடிக்கையின் பேரில் பரம்பிக்குளம் ஆழியாறு பாசன கிளை வாய்க்காலில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    வெள்ளகோவில் :

    ‌வெள்ளகோவில் அருகே உள்ள உத்தமபாளையத்தில் வட்டமலைக்கரை ஓடை அணை உள்ளது. இந்த அணை 600 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. இந்த அணை வெள்ளகோவில் சுற்றுவட்டார பகுதியில் உள்ள 6 ஆயிரத்து 43 ஏக்கர் பாசன பயன்பெறும் வகையில் கட்டப்பட்டுள்ளது.

    இந்த அணைக்கு கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக நீர் வரத்து இல்லாமல் இருந்தது. 2021 ம் ஆண்டு டிசம்பர் மாதம் தமிழக செய்தி துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் நடவடிக்கையின் பேரில் பரம்பிக்குளம் ஆழியாறு பாசன கிளை வாய்க்காலில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த 2022ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் முறையாக வட்டமலைக்கரை ஓடை அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது. அதன் பிறகு இரண்டாம் முறையாக இந்த ஆண்டு மே மாதம் திறந்து விடப்பட்டது.தற்போது மூன்றாவது முறையாக விவசாய பாசனத்திற்கு மற்றும் குடிநீருக்காக நேற்று தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் வெள்ளகோவில் நகர தி.மு.க. செயலாளர் கே.ஆர்.முத்துகுமார், நகர துணை செயலாளர் சபரி.எஸ்முருகானந்தன், வட்டமலை கரை ஓடை அணை நீரினை பயன்படுத்துவோர் சங்க தலைவர் சி.பாலபூபதி, வட்டமலைக்கரை ஓடை அணையின் இளநிலை பொறியாளர் சிவசாமி மற்றும் பாசன சங்க நிர்வாகிகள் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    • சீர்காழி அடுத்த தேனூர் கிராமத்தில் புது மண்ணியாற்றிலிருந்து பிரிந்து சீர்காழி நகர் வழியாக பல்வேறு கிராமங்களுக்கு செல்கிறது.
    • இதனால் பாசனத்திற்கு தண்ணீர் பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

    சீர்காழி:

    சீர்காழி கழுமலையாற்று தண்ணீர் மூலம் திருத்தோணி புரம், சிவனார்விளாகம், திட்டை, தில்லைவிடங்கன், செம்மங்குடி, கொண்டல், வள்ளுவக்குடி, அகணி உட்பட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 6 ஆயிரம் ஏக்கரில் பாசனவசதி நடைபெற்று வருகிறது. சீர்காழி அடுத்த தேனூர் கிராமத்தில் புது மண்ணியாற்றிலிருந்து பிரிந்து சீர்காழி நகர் வழியாக பல்வேறு கிராமங்களுக்கு செல்கிறது. சீர்காழி நகர் பகுதி மற்றும் அகணி, நந்தியநல்லூர், கொள்ளிட முக்கூட்டு ஆகிய பகுதியில் கழுமலையாற்றில் சுற்றியுள்ள குடியிருப்பு பகுதியிலிருந்து கழிவுநீர் விடப்படுகிறது.

    இதனால் பாசனத்திற்கு தண்ணீர் பயன்ப டுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. அதேபோல் ஊராட்சி மற்றும் நகர் பகுதிகளில் அனைத்து குப்பைகளையும் கழுமலையாற்றில் கொட்டப்படுவதால் பாசனஆறு பாழடைந்து வீணாகிறது. அகணி ஊராட்சி நந்தியநல்லூர் பகுதியில் கழுமலையாற்றில் தினந்தோறும் குப்பைகள் கொட்டப்பட்டும், கழிவுநீர் விடப்பட்டும் மிகவும் மோசமாக சுகாதாரசீர்கேடு ஏற்பட்டுவருகிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி நோய்பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. படித்துறையும் உடைந்து பயன்படுத்திடமுடியாத சூழலில் உள்ளது.ஆகையால் பொதுப்பணித்துறையினர் களஆய்வு செய்து கழுமலையாறில் கழிவுநீர் விடப்படுவதை தடுக்கவும், பிளாஸ்டிக்உள்ளிட்ட குப்பைகள் கொட்டப்ப டுவதை தடுத்திடவும் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    • ஜூலை 11-ந்தேதி வரை 15 நாள்களுக்கு மொத்தம் 571 மில்லியன் கன அடி தண்ணீா் திறக்கப்பட உள்ளது
    • அணைக்கு உள்வரத்தாக 316 கன அடி தண்ணீா் வந்து கொண்டிருக்கிறது.

    திருப்பூர் :

    திருப்பூா் மாவட்டம் உடுமலையை அடுத்துள்ள அமராவதி அணையின் மூலம் திருப்பூா் மற்றும் கரூா் மாவட்டங்களில் உள்ள சுமாா் 55 ஆயிரம் ஏக்கா் பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.மேலும், நூற்றுக்கணக்கான கிராமங்களுக்கு குடிநீா் ஆதாரமாகவும் இந்த அணை விளங்கி வருகிறது.

    இந்நிலையில் பழைய ஆயக்கட்டு பாசனத்துக்குட்பட்ட ராஜவாய்க்கால்களான ராமகுளம், கல்லாபுரம், குமரலிங்கம், சா்க்காா் கண்ணாடிப்புத்தூா், சோழமாதேவி, கணியூா், கடத்தூா், காரத்தொழுவு ஆகிய 8 வாய்க்கால்களுக்கு மே 16-ந்தேதி தண்ணீா் திறக்கப்பட்டது.

    இந்நிலையில் குடிநீா் தேவைகளுக்காகவும், நிலைப்பயிா்களை காப்பாற்றவும் புதிய ஆயக்கட்டு பாசனப்பகுதிகளுக்கு அணையில் இருந்து நேற்று தண்ணீா் திறந்துவிடப்பட்டது.

    இது குறித்து பொதுப்பணித்துறையினா் கூறுகையில், நேற்று முதல் ஜூலை 11-ந்தேதி வரை 15 நாள்களுக்கு மொத்தம் 571 மில்லியன் கன அடி தண்ணீா் திறக்கப்பட உள்ளது என்றனா். தற்போது 90 அடி உயரமுள்ள அணையில் நீா்மட்டம் 67 அடியாக உள்ளது.அணைக்கு உள்வரத்தாக 316 கன அடி தண்ணீா் வந்து கொண்டிருக்கிறது. 4047 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட அணையில் 2,182 மில்லியன் கன அடி நீா் இருப்பு உள்ளது. ஆற்றில் 250 கன அடி, பிரதான கால்வாயில் இருந்து 440 கன அடி என மொத்தம் 690 கன அடி தண்ணீா் வெளியேற்றப்படுகிறது. 

    சிறுநல்லிகோயில் கிராம விவசாயிகளுக்கு நுண்ணீர் பாசனம் குறித்த பயிற்சி நடந்தது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கபிலர்மலை வட்டார வேளாண்மை - உழவர் நலத்துறை அட்மா திட்டம் மூலம் சிறுநல்லிகோயில் கிராம விவசாயிகளுக்கு நுண்ணீர் பாசனம் குறித்த பயிற்சி நடைபெற்றது. வேளாண்மை உதவி இயக்குனர் ராதாமணி பயிற்சியை தொடங்கி வைத்து அரசின் வேளாண் திட்டங்களை எடுத்துக் கூறினார்.

    ரிவுலிஸ் சொட்டுநீர் பாசன நிறுவன உழவியல் நிபுணர் கிருஷ்ணா நுண்ணீர்பாசனத்தின் பயன்கள், நுண்ணீர்ப்பாசன வழி உரமிடுதல், பராமரிப்பு வழிமுறைகள் குறித்து விரிவாக விளக்கிக்கூறி விவசாயிகளின் பல்வேறு சந்தேகங்களுக்கும் விளக்கமளித்தார். பயிற்சிக்கான ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர் சந்திரசேகரன், அட்மா உதவி தொழில்நுட்ப மேலாளர் செல்வகண்ணன், உழவர் ஆர்வலர் குழு நிர்வாகிகள் சரவணன், பாலசுப்ரமணியம், உழவர் நண்பர் விஸ்வநாதன் ஆகியோர் செய்திருந்தனர்.

    ×