search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாசனம்"

    • 94 ஆயிரத்து 362 ஏக்கர் நிலங்களுக்கு, கடந்தாண்டு டிசம்பர் 28ல் நீர் திறக்கப்பட்டது.
    • நீர் கசிவை தடுக்க ரூ. 72 கோடி செலவில் நடப்பாண்டு பணி மேற்கொள்ளப்படுகிறது.

    உடுமலை :

    பரம்பிக்குளம் - ஆழியாறு 3ம் மண்டல பாசனத்திற்கு ட்பட்ட 94 ஆயிரத்து 362 ஏக்கர் நிலங்களுக்கு, கடந்தா ண்டு டிசம்பர் 28ல் நீர் திறக்கப்பட்டது. 4 சுற்றுக்கள் நீர் வழங்கப்பட்டு வருகிற 22ல் நிறைவு செய்ய ப்படுகிறது. திட்ட தொகுப்பு அணைகளில் இருந்து திருமூர்த்தி அணைக்கு நீர் கொண்டு வரும் காண்டூர் கால்வாயில் நீர் கசிவை தடுக்க ரூ. 72 கோடி செலவில் நடப்பாண்டு பணி மேற்கொள்ள ப்படுகிறது.பாசனம் நிறைவு பெற்றதும் உடனடியாக பணியை துவக்கவும், வருகிற ஆகஸ்டு மாதத்திற்குள் நிறைவு செய்யவும் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

    திருமூர்த்தி அணையை ஆதாரமாகக்கொண்டு, உடுமலை நகராட்சி மற்றும் உடுமலை, மடத்துக்குளம் தாலுகா பயன்பெறும் 5 கூட்டு குடிநீர் திட்டங்கள் செயல்படுகிறது. தினமும் 21 மில்லியன் கன அடி நீர் தேவை உள்ளது.

    தற்போதைய நிலவரப்படி அணையில் மொத்தமுள்ள, 60 அடியில் 28.69 அடி நீரும், மொத்த கொள்ளளவான 1,337 மில்லியன் கனஅடியில் 802.86 மில்லியன் கன அடிநீர் மட்டுமே இருப்பு உள்ளது.நடப்பாண்டு கோடையின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், பராமரிப்பு பணி முடிய 4 மாதமாகும். குடிநீர் மற்றும் அணை உயிரினங்கள், வன விலங்குகளுக்கு தேவையான அளவு நீர் இருப்பு வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இது குறித்து பி.ஏ.பி., தலைமை பொறியாளர் முத்துசாமி கூறுகையில், தொகுப்பு அணைகளில் இருந்து காண்டூர் கால்வாய் வழியாக ஏப்ரல் 30ந் தேதி வரை தண்ணீர் பெறப்படும். இதனால் குடிநீர் தட்டுப்பாடு வர வாய்ப்பில்லை. விவசாயி கள் கோரிக்கை அடிப்ப டையில், பாசன காலம் இரு நாட்கள் நீட்டிக்கப்ப ட்டுள்ளது என்றார்.

    • 1.065 கி.மீ.,க்கு குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன.
    • 800 கி.மீ.,க்கு, கெட்டித்தன்மை உடைய இரும்பு குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன.

    அவினாசி :

    அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தால் கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்ட ங்களில் 24 ஆயிரத்து 500 ஏக்கருக்கு பாசன வசதி கிடைக்கும் என திட்ட இயக்குனர் சிவலிங்கம் தெரிவித்தார்.

    இதுகுறித்து அவர் கூறியதாவது:- அத்திக்கடவு - அவிநாசி திட்டத்துக்கு தண்ணீர் கொண்டு செல்ல, 1.065 கி.மீ.,க்கு குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன.5 இடங்களில் ெரயில்வே பாதையின் குறுக்கேயும், 10 இடங்களில் தேசிய நெடு ஞ்சாலையின் குறுக்கேயும் சுரங்கம் அமைத்து அதில் குழாய்கள் பதிக்கப்ப ட்டுள்ளன.இதில் 800 கி.மீ.,க்கு, கெட்டித்தன்மை உடைய இரும்பு குழாய்கள், 265 கி.மீ.,க்கு கடினமான பிளாஸ்டிக் குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன. தண்ணீரின் அழுத்தத்தால் குழாயில் உடைப்பு ஏற்பட வாய்ப்பு இல்லை. குளம், குட்டைகளுக்கு தண்ணீர் திறந்து விட 1,295 இடங்களில் வால்வுகள் அமைக்கப்பட்டுள்ளன.

    இதன் வாயிலாக கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் 1,045 குளம், குட்டைகளுக்கு நீர் நிரப்பப்பட உள்ளது. இதில் 37 பொதுப்பணித்துறை குளங்கள், 47 ஊராட்சி குளங்கள், 971 கிராம குட்டைகள் அடங்கும். 6 இடங்களில் தானியங்கி நீரேற்று நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    ஓராண்டுக்கு 70 நாட்கள் மட்டுமே இத்திட்டத்தால் தண்ணீர் பம்பிங் செய்ய ப்படும். நாள் ஒன்றுக்கு 250 கன அடி வீதம் மொத்தமாக 1.5 டி.எம்.சி., தண்ணீர் பம்பிங் செய்து குளம், குட்டைகளுக்கு நிரப்பப்ப டும். இதனால் கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய 3 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து கிணறு மற்றும் போர்வெல்களில் நீருற்று வாயிலாக 24 ஆயிரத்து 500 ஏக்கருக்கு பாசன வசதி கிடைக்கும்.திட்டப் பணிகள், 90 சதவீதம் முடிவடைந்துள்ளன. பிப்ரவரி 20-ந்தேதி வெள்ளோட்ட பணிகள் துவங்கின. ஒவ்வொரு பகுதி யாக வெள்ளோட்டம் நடந்து வருகிறது.இவ்வாறு அவர் கூறினார். 

    • அமராவதி அணை வாயிலாக திருப்பூர், கரூர் மாவட்டத்திலுள்ள 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.
    • கிராமங்களுக்கு குடிநீர், நிலத்தடி நீர்மட்ட ஆதாரமாகவும் உள்ளது.

    உடுமலை :

    உடுமலை அருகேயுள்ள அமராவதி அணை வாயிலாக, திருப்பூர், கரூர் மாவட்டத்திலுள்ள 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. ஆற்றின் வழியோரத்திலுள்ள கிராமங்களுக்கு குடிநீர், நிலத்தடி நீர்மட்ட ஆதாரமாகவும் உள்ளது.இரு மாவட்ட பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசன நிலங்களுக்கு நீர் வழங்கப்பட்டு நிறைவு செய்யப்பட்டு ராஜவாய்க்கால் பாசன நிலங்களுக்கு மட்டும் இம்மாத இறுதி வரை நீர் வழங்க வேண்டியுள்ளது.இந்நிலையில் அணை நீர் மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி, அணை நீர் மட்டம் மொத்தமுள்ள 90 அடியில் 51.87 அடியாகவும், மொத்த கொள்ளளவான 4,047 மில்லியன் கன அடியில், 1,269.45 மில்லியன் கன அடி நீர் இருப்பு இருந்தது.அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 170 கன அடியாகவும், அணையிலிருந்து பாசனத்திற்கு 90 கன அடி நீர் திறக்கப்பட்டிருந்தது.

    நடப்பாண்டு நீர் மட்டம் மிகவும் குறைந்துள்ளதால் கோடை காலத்தை சமாளிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.அதிகாரிகள் கூறுகையில், அணையில் குடிநீர் தேவைக்கான நீர் இருப்பு உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இரு நாட்களாக மழை பெய்து நீர் வரத்து காணப்படுகிறது. கோடை காலத்தில் பாதிப்பு ஏற்படாது என்றனர்.

    • நீர் இருப்பு சதவீதம், 67.46 ஆகும்.
    • வாய்க்கால் வாயிலாக ஏழு குளம் மற்றும் வலையபாளையம் குளங்களுக்கு தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.

    உடுமலை :

    உடுமலை திருமூர்த்தி அணையில் இருந்து தளி வாய்க்கால் வாயிலாக ஏழு குளம் மற்றும் வலையபாளையம் குளங்களுக்கு தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.ஏழு குளங்களில் பெரிய குளம் 404 ஏக்கர் பரப்பளவும், 11.55 அடி நீர்மட்ட உயரமும், 70.56 மில்லியன் கனஅடி நீர் கொள்ளளவு உடையதாகும். தற்போதைய நிலவரப்படி இக்குளத்தில் 7.90 அடி நீர்மட்டமும், 47.60 மில்லியன் கனஅடி நீர் இருப்பும் உள்ளது. நீர் இருப்பு சதவீதம், 67.46 ஆகும்.

    செங்குளம் 74.84 ஏக்கர் பரப்பளவில் 10 அடி நீர்மட்ட உயரமும், 12.74 மில்லியன் கனஅடி நீர் கொள்ளளவும் கொண்டதாகும். இதில் 5.10 அடி நீர்மட்டமும், 5.08 மில்லியன் கனஅடி நீர்இருப்பும், நீர் இருப்பு சதவீதம் 39.87 என மிகவும் குறைவாக காணப்பட்டது. ஒட்டுக்குளம் 90 ஏக்கர் பரப்பளவில் 10 அடி நீர்மட்ட உயரம், 14.11 மில்லியன் கனஅடி நீர் கொள்ளளவு உடையதாகும். இங்கு 7.00 அடி நீர்மட்டமும், 8.40 மில்லியன் கனஅடி நீர்இருப்பும், நீர்இருப்பு சதவீதம் 59.53 ஆக உள்ளது.செட்டிகுளம் 67.49 ஏக்கர் பரப்பளவில், 7.5 நீர்மட்ட உயரம், 7.93 மில்லியன் கனஅடி நீர் கொள்ளளவு கொண்டதாகும். இக்குளத்தில் 4.70 அடி நீர் மட்டமும், 4.06 மில்லியன் கனஅடி நீர்இருப்பும் உள்ளது. நீர்இருப்பு சதவீதம், 51.19 ஆகும். தினைக்குளம் 51.19 ஏக்கர் பரப்பளவில் 9.25 அடி நீர்மட்ட உயரம், நீர் கொள்ளளவு 7.23 மில்லியன் கனஅடியாகும். தற்போதைய நிலவரப்படி 8 அடி நீர்மட்டமும், 6.50 மில்லியன் கனஅடி நீர் இருப்பும், நீர்இருப்பு சதவீதம் 89.90 ஆக உள்ளது. கரிசல் குளம் 31.22 ஏக்கர் பரப்பளவு, 7.65 அடி நீர்மட்டம், 2.92 மில்லியன் கனஅடி நீர் இருப்பு கொண்டது. இங்கு 7 அடி நீர்மட்டமும், 2.60 மில்லியன் கனஅடி நீர் இருப்பும் உள்ளது. நீர்இருப்பு சதவீதம் 89.04 ஆகும். அம்மாபட்டி குளம் 31.22 ஏக்கர் பரப்பளவில், 4.50 அடி நீர்மட்டம், 1.76 மில்லியன் கனஅடி நீர் கொள்ளளவு உடையதாகும். 3.30 அடி நீர்மட்டமும், 1.56 மில்லியன் கனஅடி நீர் இருப்பும் உள்ளது. சதவீதம் 88.63 ஆகும். வலையபாளையம் குளம் 52.80 ஏக்கர் பரப்பளவில், 4.20 அடி நீர்மட்டமும், நீர் கொள்ளளவு 7.79 மில்லியன் கனஅடி உடையதாகும். இங்கு 4.20 அடி நீர்மட்டமும், 3.17 மில்லியன் கனஅடி நீர் இருப்பும் உள்ளது. நீர்இருப்பு சதவீதம் 40.69 ஆகும்.இக்குளங்களில் 75 சதவீதத்திற்கும் மேல் 3 குளங்களிலும் 50 சதவீதத்திற்கும் மேல் 3 குளங்களிலும் பாதிக்கும் குறைவாக 2 குளங்களிலும் நீர் இருப்பு உள்ளது.

    கோடை காலம் முன்னதாகவே துவங்கியுள்ள நிலையில் உடுமலை பகுதியிலுள்ள குளங்களில் நீர் இருப்பு வேகமாக குறைந்து வருகிறது. குளங்கள் வழியாக 2,756 ஏக்கர் நிலங்களிலும், நிலத்தடி நீர் மட்ட ஆதாரமாகக்கொண்டு பல ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பயன்பெற்று வருகின்றன.இப்பகுதிகளில் கரும்பு, தென்னை, வாழை, காய்கறி பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வரும் நிலையில் கோடை காலத்தை சமாளிக்கும் வகையில் தேவையான நீர் இருப்பை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

    இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், குளங்களுக்கு திருமூர்த்தி அணையிலிருந்து நீர் எடுக்கப்பட்டு வருகிறது. ஏப்ரல் மாதம் வரை நீர் கொண்டு வரப்படும். விவசாயிகள் கோரிக்கை அடிப்படையில் பாசனத்திற்கு நீர் திறக்கப்படும். நடப்பு கோடை காலத்தில் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பில்லை என்றனர்.

    உடுமலை பெரிய குளத்தில் பழங்காலத்தில் நீர் அளவீடு, நீர் தேங்கும் பரப்பிலுள்ள மகுளி எனப்படும் மண் சேருவதை தடுக்கும் வகையிலும் பல நூறு ஆண்டுகளுக்கு முன் நீர் நிர்வாகத்துக்காக குளத்தில், தூம்பு அமைக்கப்பட்டுள்ளது.இந்த தூம்பின் கீழ் மட்ட வழிந்தோடி வழியாக தண்ணீர் திறக்கும் போது மகுளி மண் தேங்காது.நூற்றாண்டுகள் பழமையான இந்த தூம்பு இப்பகுதி நீர் மேலாண்மையில் சிறப்பு பெற்றிருந்தது என்பதற்கான சாட்சியாக உள்ளது.நீர் இருப்பு இருக்கும் போது வெளியில் தெரியாது. தற்போது குளத்தில் நீர் இருப்பு குறைந்துள்ளதால் இது வெளியில் தெரிகிறது. கடந்த சில ஆண்டுகளாக தூம்பு வெளியில் தெரியாத அளவுக்கு கோடை காலத்திலும் நீர்மட்டம் இருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

    • வலங்கைமான் தாலுகாவில் 1936 ஹெக்டர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
    • இதனால் விவசாய நிலங்கள் சரியான பாசனவசதி பெற முடியவில்லை.

    மெலட்டூர்:

    தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுகாவின் முக்கிய பாசன வாய்க்கால் மற்றும் வடிகால் வாய்க்கால்களில் ஒன்றாக சுள்ளான் ஆறு உள்ளது. சுள்ளான் ஆறு மூலம் பாபநாசம்` மற்றும் வலங்கைமான் தாலுகாவில் 1936 ஹெக்டர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

    பாபநாசம் தாலுக்காவில் மட்டும் வேம்பகுடி, புரசக்குடி, செருமாக்கநல்லூர், அகரமாங்குடி, சோலைபூஞ்சேரி, கிடங்காநத்தம், கோடுகிளி, பொன்மான் மேய்ந்தநல்லூர், கோவிலாம்பூண்டி, கருப்பூர் மட்டையாண்திடல், மேலசெம்மங்குடி உள்பட பல கிராமங்களில் உள்ள பலநூறு ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி மற்றும் வடிகால் வசதி பெறுகின்றன.

    தற்போது சுள்ளான் ஆற்றில் பாலூர், புரசக்குடியில் இருந்து வேம்பகுடி, அகரமாங்குடி வரையில் ஆற்றின் முழு பரப்பையும் வெங்காய தாமரை செடிகள் ஆக்கிரமித்து வாய்க்கால் முழுவதும் படர்ந்துள்ளது தண்ணீர் வரத்து உள்ள காலங்களில் பாசன வாய்க்கால்களுக்கு தண்ணீர் செல்ல வெங்காயதாமரை செடிகள் பெருந்தடையாக இருந்து வருகிறது. அதனால் விவசாய நிலங்கள் சரியான பாசனவசதி பெற முடியவில்லை.

    அதுபோல கடைமடை பகுதிகளுக்கும் தண்ணீர் செல்லமுடியாத நிலை இருந்து வருகிறது.விவசாயிகளின் சிரமத்தை அரசு உணர்ந்து மேட்டூர் அணையில் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பதற்கு முன்பே சுள்ளான் ஆற்றில் பாலூர் முதல் அகரமாங்குடி வரையிலான வடிகால் பகுதிகளில் தண்ணீர் செல்ல தடையாக உள்ள வெங்காய தாமரை செடிகள் மற்றும் வெங்காய தாமரை பூண்டுகளை முழுமையாக அழித்து நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • நீரோட்டம் முழுவதுமாக தடைபட்டு காணப்படுகிறது.
    • பாசனத்திற்கு தடை ஏற்படும் ஆகாயத்தாமரை செடிகளை அகற்ற வேண்டும்.

    பூதலூர்:

    காவிரி டெல்டா பாசனபகுதி களில் வேளாண் பணிகளுக்காக மேட்டூர் அணை மே மாதத்தில் திறக்கப்பட்டது.

    இதனால் டெல்டா மாவட்டங்களில் வழக்கத்தை விட அதிக பரப்பளவில் குறுவை சாகுபடி நடைபெற்று, மகசூலும் அதிக அளவில் கிடைக்கப்பெற்றது.

    பூதலூர் ஒன்றிய பகுதியில் புதிய கட்டளை மேட்டு கால்வாய் மற்றும் உய்யக் கொண்டான்நீட்டிப்பு கால்வாய் மூலம் ஏரிகளில் நீர் நிரப்பி அதன் மூலம் ஒருபோக சாகுபடி நடைபெறும்.

    நடப்பாண்டு உய்யக் கொண்டான் நீட்டிப்பு கால்வாயின் தண்ணீர் 16க்கும் மேற்பட்ட ஏரிகள் நிரம்பி அதன் மூலம் 3500 ஏக்கர் பரப்பில் நெல் சாகுபடி நடைபெற்றது.

    உய்யக் கொண்டான் நீட்டிப்புக் கால்வாயில் தலைப்பு உள்ள பகுதியில் வாழவந்தான் கோட்டை ஏரியிலிருந்து நீர் ஆகஸ்ட் மாதத்தில் திறக்கப்பட்டாலும், அப்போது தொடர்ந்து பெய்த பெருமழை காரணமாக இந்த நீட்டிப்பு கால்வாய் பாசன பகுதியில் உள்ள ஏரிகள் அனைத்தும் நிரம்பி சாகுபடி நடைபெற்று உள்ளது.

    இதற்கிடையில் உய்யக்கொண்டாயின் நீட்டிப்பு கால்வாய் தண்ணீர் செல்லும் கீழ்பாலத்தில் உடைப்பு ஏற்பட்டது, அதிலிருந்து தண்ணீர் அதன் மேலே உள்ள காட்டு வாரி மூலம் வெளியேறிய கொண்டுள்ளது.

    இதனால் நீரோட்டம் முழுவது மாக தடைபட்டு போய் காணப்படு கிறதுகீழ்ப்பால உடைப்பை தற்போதுசீரமைக்க இயலாது என்று பொதுப்ப ணித்துறை வட்டாரங்கள் தெரிவித்து, மாற்று ஏற்பாடாக கட்டளை மேட்டு கால்வாய் மூலம் உய்யக் கொண்டான்கால்வாய் பாசன ஏரிகளுக்கு தண்ணீர் தருவதாக உறுதி அளித்துள்ளது.

    தலைப்பில் இருந்து 10 கிலோமீட்டர் தொலை விற்கு பாசன நீரோட்டத்திற்கு தடை ஏற்படும் ஆகாயத்தாமரை மற்றும் வள்ளி செடிகளை அகற்றி தலைப்பின் அருகில் கீழ்ப்பாலத்தில் ஏற்பட்ட உடைப்பை சீரமைத்து அந்த இடத்தில் ஒரு மாற்று ஏற்பாடாக தண்ணீரை குழாய் மூலம் சிறு தொலைவுக்கு கொண்டு வந்து பூதலூர் ஒன்றிய பகுதியில் உள்ள ஏரிகளுக்கு தொடர்ந்து தண்ணீர் கொண்டு வந்து நிரப்ப உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்த பகுதி விவசாயிகள் கூறுகின்றனர்.

    ஒருபோக நெல் சாகுபடி செய்துள்ள இந்த பகுதி விவசாயிகள் இன்னும் மூன்று மாதங்களுக்கு ஏரிகளில் நீர் நிரம்பி இருக்க வேண்டும் என்ற நிலையில், அதற்கு ஏற்ற வகையில் பொதுப்பணித்துறை விரைந்து செயல்பட்டு கால்வாயில் படர்ந்துள்ள செடிகளை அகற்றி விவசாயம் செய்துள்ள பயிர்களையும் காப்பாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றனர்.

    • நிலங்களை கரும்பு சாகுபடிக்கு ஏற்றவாறு சீர் செய்தல்.
    • அதிக மகசூல் தரும் ரகங்களை தேர்வு செய்தல் வேண்டும்.

    தரங்கம்பாடி:

    தமிழக அரசு, கலை ஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட சேத்தூர் கிராமத்தில் அட்மா திட்டதின் கீழ் 40 விவசாயிகளுக்கு நீடித்த நிலையான கரும்பு சாகுபடி குறித்த ஒரு நாள் பயிற்சி மயிலாடுதுறை வேளாண்மை உதவி இயக்குநர் சுப்பையன் தலைமையில் நடைப்பெ ற்றது. இப்பயிற்சியில் உதவி தொழில்நுட்ப மேலாளர் வீழும் அனைவரையும் வரவேற்றார்.

    வேளாண்மை உதவி இயக்குர் கூறுகையில் நீடித்த நிலையான கரும்பு சாகுபடியில் உள்ள குழி தட்டு நாற்றாங்கால் போதிய இடைவெளி குறைந்த ஆள் செலவு, அதிக மகசூல் போன்றவை கரும்பு விவசாயிகளை ஊக்கப்படுத்தும் வகையில் இருக்கும் அதனை பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

    பயிற்சியில் தொடர்ந்து கரும்பு உதவி அலுவலர் குளஞ்சியப்பன் கூறுகையில், நிலங்களை கரும்பு சாகுபடிக்கு ஏற்றவாறு சீர் செய்வது, இயந்திரங்களை பயன்படுத்தும் வகையில் போதிய இடைவெளி உடன் பார்கள் அமைத்தல் அதிக மகசூல் தரும் ரகங்களை தேர்வு செய்தல் விதை அரும்புகளை பூஞ்சான கொல்லி மருந்தில் விதை நேர்த்தி செய்தல் பற்றி கூறினார்.

    அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் திருமுருகன் கூறுகையில், குழிதட்டு முறையில் நாற்றுகளை உற்பத்தி செய்து அதனை நடவுக்கு முன்பு வரை நிழல்குடிலில் எப்படி அதை பாதுகாப்பது நடவுக்கு பின் நீர் மேலான்மையில் சொட்டு நீர் பாசனைத்தை பயன்படுத்துவது சொட்டு நீர் அமைப்புடன் உரம் மற்றும் மருந்து கரைசல்களை சேர்த்து எவ்வாறு கரும்புகளுக்கு கொடுப்பது.

    களை மேலாண்மை, இயந்திர அறுவடை போன்றவைகளை பற்றி விளக்கமாக எடுத்துக் கூறினார்.

    முன்னதாக குழிதட்டில் நாற்று வளர்ப்பது பற்றி செயல்விளக்கம் காண்பித்தார்.

    இப்பயிற்சியில் முன்னோடி விவசாயிகள் கரும்பு முருகன் பன்னிப்பள்ளம் சேகர், செந்தில் அட்மா குழு உறுப்பினர் ஞானசேகரன் உள்ளிட்ட 40-க்கும் மேற்ப்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    இப்பயிற்சியை அட்மா திட்ட உதவி தொழில்நுட்ப மேலாளர் மதுமனா மற்றும் அட்மா திட்ட உழவர் நண்பர் ஜெயச்சந்திரன் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர். நிகழ்ச்சியின் முடிவாக உதவி வேளாண்மை அலுவலர் செந்தில்குமார் நன்றி கூறினார்.

    • மழையின் காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்து 1135 கன அடியாக உள்ளது.
    • 3 மாதத்திற்கும் மேலாக அணையிலிருந்து உபரி நீர் ஆறு மற்றும் பிரதான கால்வாயில் திறக்கப்பட்டது.

    உடுமலை :

    திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலையில் சின்னாறு, தேனாறு, பாம்பாறு மற்றும் துணை ஆறுகளை நீராதாரங்களாக கொண்டு அமராவதி அணை கட்டப் பட்டுள்ளது. இந்த அணை மூலம் திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில், பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசனம் மூலம் 55 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. இந்த நிலையில் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்து 1135 கன அடியாக உள்ளது.

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள அமராவதி அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை பெய்து நீர் வரத்து அதிகரித்துள்ளதால் ஆற்றின் வழியோர கிராமங்களுக்கு முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை கடந்த ஞாயிற்றுக்கிழமை விடப்பட்டது. ஆற்றின் வழியோர கிராமங்களுக்கு குடிநீர் மற்றும் நிலத்தடி நீர் ஆதாரமாகவும் உள்ளது.

    நடப்பு ஆண்டில் தென் மேற்கு பருவ மழை காலத்தில் ஜூலை 15-ந்தேதி அமராவதி அணை நிரம்பியது. தொடர்ந்து 3 மாதத்திற்கும் மேலாக அணையிலிருந்து உபரி நீர் ஆறு மற்றும் பிரதான கால்வாயில் திறக்கப்பட்டது. அமராவதி அணையிலிருந்து பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசன நிலங்களுக்கு நீர் திறக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வட கிழக்கு பருவ மழை துவங்கி அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளான மேற்கு தொடர்ச்சி மலையில் தலையாறு, மூணாறு, மறையூர், கொடைக்கானல் மலையின் மேற்கு பகுதி மற்றும் வால்பாறை மலைத்தொடரின் கிழக்குப்பகுதிகளில் மழை பெய்து வருகிறது அணைக்கு நீர்வரத்து ஆறுகளான, பாம்பாறு, தேனாறு, சின்னாறு மற்றும் பிற ஓடைகளின் மூலம் அணைக்கு நீர்வரத்து தற்போது அதிகரித்துள்ளது . இதனால் கடந்த 7 நாட்களில் அணை நீர்மட்டம் 8 அடி வரை உயர்ந்தது.

    தற்போதைய நிலவரப்படி அணை நீர்மட்டம் மொத்தமுள்ள 90 அடியில் 88 அடியாகவும், மொத்த கொள்ளளவான 4.04 டிஎம்சி யில் 3.80 டிஎம்சியாக நீர் இருப்பு உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1135 கனஅடி நீர்வரத்தும் உள்ளது.

    பருவ மழை காலங்களில் அணையின் மொத்த நீர்மட்டத்தில் 85 அடியை எட்டியதும் வழியோர கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை வழங்கப்படும். அதன் அடிப்படையில் கடந்த ஞாயிறு அன்று மாலை அணை நீர்மட்டம் 85 அடியாக உயர்ந்ததும் முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது .தற்போது அணையின் நீர்மட்டம் 88 அடியை எட்டியுள்ளது. இதனை அடுத்து அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும் என்பதால், அணையின் பாதுகாப்பு கருதி பாசனத்திற்காக வாய்க்காலில் கூடுதலாக உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது.

    • சுடுகாட்டுக்கு செல்லும் வழியில் மூன்று பாசனவாய்க்கால் செல்கிறது.
    • பாசன வாய்க்கால்களில் பாலம் அமைத்து சாலையை சீரமைக்க வேண்டும்.

    மன்னார்குடி:

    மன்னார்குடி அருகே கோட்டூர் ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த மேலபனையூர் தெற்கு தெரு கிராமத்தில் 80-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறார்கள்.

    இவர்களுக்கு இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் சுடுகாடு அமைந்துள்ளது.

    இந்த சுடுகாட்டுக்கு செல்லும் வழியில் மூன்று பாசனவாய்க்கால் செல்கிறது.

    இந்த மூன்று வாய்க்காலிலும் பாலம் இல்லை. வாய்க்காலில் தண்ணீர் அதிக அளவில் செல்கிறது.

    இதனால் தெற்கு தெருவில் இறந்தவரின் உடலை சேறு- சகதியும் நிறைந்த வயல் வழியாக சுடுகாட்டிற்கு தகனம் செய்ய எடுத்து செல்லும் அவலநிலை உள்ளது.

    இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

    எனவே சுடுகாட்டிற்கு செல்லும்.வழியில் உள்ள பாசன வாய்க்கால்களில் பாலம் அமைத்து சாலையை தார் சாலையாக சீரமைக்க வேண்டும். சுடுகாட்டில் தெருவிளக்கு வசதிகள் செய்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • வத்திராயிருப்பு அருகே பிளவக்கல் பெரியாறு, கோவிலாறு அணைகளில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது.
    • இதனை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் திறந்து வைத்தார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு வட்டத்தி லுள்ள பிளவக்கல் பெரியாறு மற்றும் கோவிலாறு, அணைகளில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடும் நிகழ்ச்சி நடந்தது.

    கலெக்டர் மேகநாத ரெட்டி தலைமை தாங்கினார். சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் அசோகன் முன்னிலை வகித்தார். இதில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பங்கேற்று பாசனத்திற்காக தண்ணீரை மலர் தூவி திறந்து வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

    பாசனத்திற்காக பிளவக்கல் பெரியாறு அணையின் மூலம் நேற்று முதல் 9 நாட்களுக்கு வினாடிக்கு 150 கனஅடி வீதமும், நேரடி கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 3 கனஅடி வீதம் 28.2.2023 வரையிலும் தண்ணீர் திறந்து விடப்பட உள்ளது.

    பிளவக்கல் பெரியாறு அணை மற்றும் கோவிலாறு அணைகளிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் திறப்பினால் மீதமுள்ள கண்மா ய்களுக்கு அணையின் நீர் இருப்பு மற்றும் நீர் வரத்தைப் பொறுத்து பாசனத்திற்காகவும், பெரியாறு பிரதான கால்வாய் மூலம் நேரடி பாசனத்திற்காகவும் தண்ணீர் வழங்கப்பட உள்ளது.

    இந்த தண்ணீர் திறப்பினால் பிளவக்கல் திட்டத்தின் கீழ் உள்ள 40 கண்மாய்களின் 7219 ஏக்கர் விவசாய நிலங்களும், பெரியாறு பிரதான கால்வாய் நேரடி பாசனத்தின் மூலம் 960 ஏக்கர் விவசாய நிலங்களும் பயனடைய உள்ளன. இதன் மூலம் கொடிக்குளம், கான்சாபுரம், மகாராஜபுரம், வ.புதுப்பட்டி, வத்திரா யிருப்பு, கூமாபட்டி, சுந்தர பாண்டியம், நத்தம்பட்டி, மூவரைவென்றான், மங்கலம், செம்மாண்டி கரிசல்குளம், பாட்டக்குளம் சல்லிபட்டி, விழுப்பனூர், தச்சகுடி, கிருஷ்ணபேரி, நெடுங்குளம், குன்னூர் ஆகிய 17 வருவாய் கிராமங்கள் பயன்பெறும்.

    இதேபோல் அணை நீர் இருப்பினை கருத்தில் கொண்டு பாசன பருவ காலம் வரை தேவைக்கேற்ப தண்ணீர் வழங்கப்படும். விவசாய பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • விவசாய நிலங்கள் மழை காலங்களில் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு வந்தது.
    • தண்ணீர் செல்ல தடையாக இருந்த செடி, கொடிகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை.

    மெலட்டூர்:

    தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுக்கா அன்னப்பன்பேட்டை பகுதியில் உள்ள ஜெம்பு காவேரி வாய்க்காலில் ஏராளமாக செடிகள் மற்றும் ஆகாய தாமரை செடிகள் மண்டியிருந்தது. அதனால் பாசனத்திற்கு தண்ணீர் செல்ல பெருந்தடையாக இருந்து வந்தது.

    அதனால் ஜெம்புகாவேரி வாய்க்கால் மூலம் வடிகால் மற்றும் பாசன வசதிபெறக்கூடிய நெய்தலூர், குண்டூர், அன்னப்பன்பேட்டை மற்றும் பொந்தையா குளம் மற்றும் அதனை சுற்றியுள்ள பல கிராமங்களில் உள்ள விவசாய நிலங்கள் மழை காலங்களில் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு வந்தது. இது குறித்த செய்தி மாலைமலர் நாளிதழில் வெளியாகி இருந்தது

    இதன் எதிரொலியாக அன்னப்பன்பேட்டை பகுதியில் உள்ள ஜெம்பு காவேரி வாய்க்காலில் தண்ணீர் செல்ல தடையாக இருந்த செடிகள், கொடிகளை உடனடியாக அகற்ற பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுத்தனர்.

    இதையடுத்து தண்ணீர் தற்போது தங்கு தடையின்றி பாசனத்திற்கு விரைந்து செல்கிறது.

    ஜெம்பு காவேரி வாய்க்காலில் தண்ணீர் செல்ல தடையாக இருந்த செடி, கொடிகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுத்த பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் மாலைமலர் நாளிதழுக்கு விவசாயிகள் நன்றி தெரிவித்து பாராட்டினர்.

    • நடவு பணிகளை முடித்து விட விவசாயிகள் கூடுதல் வேகம் காட்டி வருகின்றனர்.
    • விவசாயிகள் ஆர்வமுடன் குறுவை நெல் சாகுபடியை மேற்கொண்டனர்.

    திருவாரூர்:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் நெல் சாகுபடி பணிகளை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    குறுவை சாகுபடி முடிந்து, சம்பா நெல் சாகுபடி விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. மேலும் தாளடி நெல் சாகுபடியினையும் விவசாயிகள் தொடங்கியுள்ளனர்.

    தற்போது பருவ மழை தீவிரமடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதால் அதற்குள் நடவுப் பணிகளை முடித்து விட விவசாயிகள் கூடுதல் வேகம் காட்டி வருகின்றனர்.

    மழை பெய்ய தொடங்கி விட்டால் சாகுபடி பணிகளை மேற்கொள்வதில் சிரமம் ஏற்படும்.

    இதனை கருத்தில் கொண்டு பருவமழை தீவிரமடைவதற்குள் நடவு பணிகளை முடித்து விட வேண்டும் என விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர்.

    இதுவரை பணிகள் நடைபெறாமல் உள்ள சம்பா நெல் வயல்களில் நடவுப் பணிகள் வேகம் எடுத்துள்ளது.

    கூடுதல் பணியாளர்களை பணிக்கு அமர்த்தி நடவுப் பணிகளை விவசாயிகள் செய்து வருகின்றனர்.

    இதுபோல் தாளடி நெல் விவசாயத்திற்கு வயல்களை தயார் செய்யும் பணிகளிலும் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த ஆண்டு வழக்கத்தை விட முன்கூட்டியே மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்கப்பட்டு தொடர்ந்து வயல்வெளிகளில் தண்ணீர் பாசனம் நடைபெற்று வருகிறது.

    இதனால் விவசாயிகள் ஆர்வமுடன் குறுவை நெல் சாகுபடியை மேற்கொண்டனர்.

    அதனைத் தொடர்ந்து சம்பா நெல் சாகுபடியிலும் கூடுதல் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    இந்நிலையில் ஆறுகளில் தண்ணீர் வருவதோடு பருவமழையும் சரிவர பெய்யும் என்பதால் விவசாயிகள் கூடுதல் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    இந்த ஆண்டு நெல் சாகுபடியினை, இயற்கையின் ஒத்துழைப்புடன் மேற்கொள்வதற்கு விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர்.

    இந்த நெல் சாகுபடி பணிகள் தடையின்றி நடைபெற தேவையான உரம், பூச்சி மருந்து உள்ளிட்டவைகளையும் இருப்பில் வைத்து வழங்க வேண்டும் என அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×