search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆகாயதாமரை செடிகளை அகற்ற விவசாயிகள் வலியுறுத்தல்
    X

    உய்யக்கொண்டான் வாய்க்காலில் படர்ந்துள்ள ஆகாயதாமரை செடிகள்.

    ஆகாயதாமரை செடிகளை அகற்ற விவசாயிகள் வலியுறுத்தல்

    • நீரோட்டம் முழுவதுமாக தடைபட்டு காணப்படுகிறது.
    • பாசனத்திற்கு தடை ஏற்படும் ஆகாயத்தாமரை செடிகளை அகற்ற வேண்டும்.

    பூதலூர்:

    காவிரி டெல்டா பாசனபகுதி களில் வேளாண் பணிகளுக்காக மேட்டூர் அணை மே மாதத்தில் திறக்கப்பட்டது.

    இதனால் டெல்டா மாவட்டங்களில் வழக்கத்தை விட அதிக பரப்பளவில் குறுவை சாகுபடி நடைபெற்று, மகசூலும் அதிக அளவில் கிடைக்கப்பெற்றது.

    பூதலூர் ஒன்றிய பகுதியில் புதிய கட்டளை மேட்டு கால்வாய் மற்றும் உய்யக் கொண்டான்நீட்டிப்பு கால்வாய் மூலம் ஏரிகளில் நீர் நிரப்பி அதன் மூலம் ஒருபோக சாகுபடி நடைபெறும்.

    நடப்பாண்டு உய்யக் கொண்டான் நீட்டிப்பு கால்வாயின் தண்ணீர் 16க்கும் மேற்பட்ட ஏரிகள் நிரம்பி அதன் மூலம் 3500 ஏக்கர் பரப்பில் நெல் சாகுபடி நடைபெற்றது.

    உய்யக் கொண்டான் நீட்டிப்புக் கால்வாயில் தலைப்பு உள்ள பகுதியில் வாழவந்தான் கோட்டை ஏரியிலிருந்து நீர் ஆகஸ்ட் மாதத்தில் திறக்கப்பட்டாலும், அப்போது தொடர்ந்து பெய்த பெருமழை காரணமாக இந்த நீட்டிப்பு கால்வாய் பாசன பகுதியில் உள்ள ஏரிகள் அனைத்தும் நிரம்பி சாகுபடி நடைபெற்று உள்ளது.

    இதற்கிடையில் உய்யக்கொண்டாயின் நீட்டிப்பு கால்வாய் தண்ணீர் செல்லும் கீழ்பாலத்தில் உடைப்பு ஏற்பட்டது, அதிலிருந்து தண்ணீர் அதன் மேலே உள்ள காட்டு வாரி மூலம் வெளியேறிய கொண்டுள்ளது.

    இதனால் நீரோட்டம் முழுவது மாக தடைபட்டு போய் காணப்படு கிறதுகீழ்ப்பால உடைப்பை தற்போதுசீரமைக்க இயலாது என்று பொதுப்ப ணித்துறை வட்டாரங்கள் தெரிவித்து, மாற்று ஏற்பாடாக கட்டளை மேட்டு கால்வாய் மூலம் உய்யக் கொண்டான்கால்வாய் பாசன ஏரிகளுக்கு தண்ணீர் தருவதாக உறுதி அளித்துள்ளது.

    தலைப்பில் இருந்து 10 கிலோமீட்டர் தொலை விற்கு பாசன நீரோட்டத்திற்கு தடை ஏற்படும் ஆகாயத்தாமரை மற்றும் வள்ளி செடிகளை அகற்றி தலைப்பின் அருகில் கீழ்ப்பாலத்தில் ஏற்பட்ட உடைப்பை சீரமைத்து அந்த இடத்தில் ஒரு மாற்று ஏற்பாடாக தண்ணீரை குழாய் மூலம் சிறு தொலைவுக்கு கொண்டு வந்து பூதலூர் ஒன்றிய பகுதியில் உள்ள ஏரிகளுக்கு தொடர்ந்து தண்ணீர் கொண்டு வந்து நிரப்ப உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்த பகுதி விவசாயிகள் கூறுகின்றனர்.

    ஒருபோக நெல் சாகுபடி செய்துள்ள இந்த பகுதி விவசாயிகள் இன்னும் மூன்று மாதங்களுக்கு ஏரிகளில் நீர் நிரம்பி இருக்க வேண்டும் என்ற நிலையில், அதற்கு ஏற்ற வகையில் பொதுப்பணித்துறை விரைந்து செயல்பட்டு கால்வாயில் படர்ந்துள்ள செடிகளை அகற்றி விவசாயம் செய்துள்ள பயிர்களையும் காப்பாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றனர்.

    Next Story
    ×