search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கரும்பு சாகுபடி குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி
    X

    கரும்பு சாகுபடி குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

    கரும்பு சாகுபடி குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி

    • நிலங்களை கரும்பு சாகுபடிக்கு ஏற்றவாறு சீர் செய்தல்.
    • அதிக மகசூல் தரும் ரகங்களை தேர்வு செய்தல் வேண்டும்.

    தரங்கம்பாடி:

    தமிழக அரசு, கலை ஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட சேத்தூர் கிராமத்தில் அட்மா திட்டதின் கீழ் 40 விவசாயிகளுக்கு நீடித்த நிலையான கரும்பு சாகுபடி குறித்த ஒரு நாள் பயிற்சி மயிலாடுதுறை வேளாண்மை உதவி இயக்குநர் சுப்பையன் தலைமையில் நடைப்பெ ற்றது. இப்பயிற்சியில் உதவி தொழில்நுட்ப மேலாளர் வீழும் அனைவரையும் வரவேற்றார்.

    வேளாண்மை உதவி இயக்குர் கூறுகையில் நீடித்த நிலையான கரும்பு சாகுபடியில் உள்ள குழி தட்டு நாற்றாங்கால் போதிய இடைவெளி குறைந்த ஆள் செலவு, அதிக மகசூல் போன்றவை கரும்பு விவசாயிகளை ஊக்கப்படுத்தும் வகையில் இருக்கும் அதனை பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

    பயிற்சியில் தொடர்ந்து கரும்பு உதவி அலுவலர் குளஞ்சியப்பன் கூறுகையில், நிலங்களை கரும்பு சாகுபடிக்கு ஏற்றவாறு சீர் செய்வது, இயந்திரங்களை பயன்படுத்தும் வகையில் போதிய இடைவெளி உடன் பார்கள் அமைத்தல் அதிக மகசூல் தரும் ரகங்களை தேர்வு செய்தல் விதை அரும்புகளை பூஞ்சான கொல்லி மருந்தில் விதை நேர்த்தி செய்தல் பற்றி கூறினார்.

    அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் திருமுருகன் கூறுகையில், குழிதட்டு முறையில் நாற்றுகளை உற்பத்தி செய்து அதனை நடவுக்கு முன்பு வரை நிழல்குடிலில் எப்படி அதை பாதுகாப்பது நடவுக்கு பின் நீர் மேலான்மையில் சொட்டு நீர் பாசனைத்தை பயன்படுத்துவது சொட்டு நீர் அமைப்புடன் உரம் மற்றும் மருந்து கரைசல்களை சேர்த்து எவ்வாறு கரும்புகளுக்கு கொடுப்பது.

    களை மேலாண்மை, இயந்திர அறுவடை போன்றவைகளை பற்றி விளக்கமாக எடுத்துக் கூறினார்.

    முன்னதாக குழிதட்டில் நாற்று வளர்ப்பது பற்றி செயல்விளக்கம் காண்பித்தார்.

    இப்பயிற்சியில் முன்னோடி விவசாயிகள் கரும்பு முருகன் பன்னிப்பள்ளம் சேகர், செந்தில் அட்மா குழு உறுப்பினர் ஞானசேகரன் உள்ளிட்ட 40-க்கும் மேற்ப்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    இப்பயிற்சியை அட்மா திட்ட உதவி தொழில்நுட்ப மேலாளர் மதுமனா மற்றும் அட்மா திட்ட உழவர் நண்பர் ஜெயச்சந்திரன் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர். நிகழ்ச்சியின் முடிவாக உதவி வேளாண்மை அலுவலர் செந்தில்குமார் நன்றி கூறினார்.

    Next Story
    ×