search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Athikadavu- Avinasi project"

    • அத்திக்கடவு அவிநாசி திட்டப் பணிகள் கடந்த ஆட்சியில் 90 சதவீதம் முடிக்கப்பட்டது.
    • நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும் என பதில் அளித்தார்.

    சென்னை:

    சட்டப்பேரவையில் வினாக்கள் விடை நேரத்தில் பேசிய அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் செங்கோட்டையன், அத்திக்கடவு அவிநாசி திட்டப் பணிகள் கடந்த ஆட்சியில் 90 சதவீதம் முடிக்கப்பட்டது என்றும், கடந்த இரண்டு ஆண்டுகளில் மீதமுள்ள 10சதவீதம் பணிகள் முடிக்கப்பட்டது என்றார்.

    சோதனை ஓட்டத்தில் ஒரு சில ஏரி, குளங்களுக்கு தண்ணீர் வரவில்லை என கூறிய அவர், விடுபட்டுள்ள ஏரி குளங்களை சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படுமா என கேள்வி எழுப்பினார்.

    இதற்கு பதிலளித்த நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், பெரும்பாலான பணிகள் முடிந்துள்ளதாகவும், ஒரு சில இடங்களில் பைப் இணைப்பு நடந்து வருவதாகவும், விரைவில் அத்திக்கடவு அவிநாசி திட்ட தொடக்க விழா நடைபெறும் எனவும் உறுதி அளித்தார்.

    அதேபோல், சேலம் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டப்பேரவை தொகுதிகளில் 100 ஏரிகளுக்கு நீர் ஏற்றும் திட்டம் கடந்த ஆட்சியில் கொண்டு வரப்பட்டதாகவும், தற்போது இந்த திட்டம் சுணக்கமாக செயல்பட்டு கொண்டிருப்பதால் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பினார்.

    இதற்கு பதிலளித்து பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும் என பதில் அளித்தார்.

    • இந்தியா கூட்டணி ஆட்சி நடக்கும் மாநிலங்களில் தீவிரவாதம் தலை தூக்கி, தேச துரோகிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
    • தமிழக ஆளுநா் மாளிகை முன் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் நடைபெற்றுள்ளது.

    அவிநாசி:

    திருப்பூர் திருமுருகன்பூண்டியில் பாஜக., நகர அலுவலகம் திறப்பு விழா, பிரதமா் மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சி, மாற்றுக் கட்சியினா் இணைப்பு விழா ஆகியவை நடைபெற்றன.

    இதில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    விவசாயிகளின் நீண்ட நாள் கனவுத்திட்டமான அத்திக்கடவு-அவிநாசி திட்டப்பணிகள் நிறைவடைந்து 30 மாதங்கள் ஆகியும், அரசியல் நோக்கத்துக்காக அத்திட்டத்தை திமுக., நிறுத்தி வைத்துள்ளது. இத்திட்டத்தை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.

    இந்தியா கூட்டணி ஆட்சி நடக்கும் மாநிலங்களில் தீவிரவாதம் தலை தூக்கி, தேச துரோகிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. கடந்த சில நாள்களுக்கு முன் கோவையில் பாலஸ்தீன கொடியேற்றி உள்ளனா். சென்னை கிரிக்கெட் மைதானத்தில் பாகிஸ்தான் வாழ்க கோஷம் எழுப்பப்பட்டுள்ளது.

    கேரள மாநிலம் கொச்சி அருகே கிறிஸ்துவ ஜெபக் கூட்டத்தில் குண்டு வெடிப்பு சம்பவம் நடைபெற்றுள்ளது. தமிழக ஆளுநா் மாளிகை முன் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் நடைபெற்றுள்ளது. இதனை என்.ஐ.ஏ. விசாரிக்க வேண்டும். அந்த சம்பவங்களின் பின்னணியில் யாா் உள்ளனா். யாா் உதவி செய்கின்றனா் என்பதை கண்டுபிடிக்க வேண்டும். தோ்தல் கூட்டணி குறித்து தேசிய தலைமை முடிவு செய்யும். பாஜகவை பொறுத்தவரை கட்சியை பலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவா் திருமாவளவன் எந்த நேரத்தில் என்ன பேசுவாா் என்பது அவருக்கே தெரியாது என்றாா்.

    • இந்த சிறப்பு வழிபாடுகள் மூலம் உடனடியாக மழை வரும் என்பது நம்பிக்கையாக இருந்து வருகிறது.
    • அவிநாசி சுற்றுவட்டடாரத்தில் மழையில்லாமல் வறட்சி ஏற்பட்டுள்ளதால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதுடன், குடிநீருக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

    அவிநாசி:

    அவிநாசி சுற்றுவட்டாரத்தில் நடப்பாண்டு போதிய மழைப்பொழிவு இல்லாததால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அவிநாசியை அடுத்த புதுப்பளையம் விநாயாகா் கோவிலில், மழை வேண்டியும், அத்திக்கடவு- அவிநாசி திட்டம் விரைவில் நிறைவேற வேண்டியும் பொதுமக்கள் மழைச் சோறு வாங்கும் சிறப்பு வழிபாட்டினை மேற்கொண்டனா்.

    இதையடுத்து, கன்னிப் பெண்களுடன் 150 க்கும் மேற்பட்ட பெண்கள் வீடுவீடாகச் சென்று மழைச் சோறு வாங்கி வந்து விநாயகா் கோவிலில் சிறப்பு வழிபாடு செய்தனா்.

    இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

    அவிநாசி சுற்றுவட்டடாரத்தில் மழையில்லாமல் வறட்சி ஏற்பட்டுள்ளதால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதுடன், குடிநீருக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், முன்னோா்கள் நம்பிக்கைப்படி மழை வேண்டி வீடுவீடாகச் சென்று மழைச் சோறு வாங்கி வந்து, விநாயகருக்குப் படையலிட்டு அனைவரும் பிரசாதமாக எடுத்துக்கொள்வோம்.

    இதையடுத்து மழையில்லாத ஊரில் குடியிருக்க மறுத்து விவசாயிகள் பயன்படுத்தும் கூடை, முறம் ஆகியவற்றை ஊா் எல்லையில் எரிந்து விட்டு பெண்கள் ஊரைவிட்டு சென்றுவிடுவா். பின்னா் மழை வந்துவிட்டது என்று அவா்களை அழைத்து வந்து விநாயகருக்கு சிறப்பு வழிபாடு நடத்துவோம்.

    இந்த சிறப்பு வழிபாடுகள் மூலம் உடனடியாக மழை வரும் என்பது நம்பிக்கையாக இருந்து வருகிறது. இதனால் மழைவேண்டி மழைச்சோறு வழிபாடு நடத்தினோம். மேலும் அத்திக்கடவு-அவிநாசி திட்டம் நிறைவேறக் கோரி கூட்டுப்பிரார்த்தனை செய்யவுள்ளோம் என்றனா். :

    • கொங்கு மண்டலத்தில் உள்ள 31 ஏரிகள், 40 ஊராட்சி ஒன்றிய குளங்கள், 538 நீர்நிலைகளில் நீர் நிரப்பப்படும்.
    • நிலம் அளித்தவர்களுக்கு அதிகபட்ச நஷ்டஈடு வழங்கப்படும் என்று அரசு அளித்த வாக்குறுதியின் படி வழங்காமல் காலம் தாழ்த்துகிறது.

    சென்னை:

    த.மா.கா. கட்சியில் தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கோவை, திருப்பூர், ஈரோடு மக்களின் 60 ஆண்டுகால கனவுத் திட்டம் அத்திக்கடவு அவினாசி திட்டம். இத்திட்டம் கடந்த ஆட்சிகாலத்தில் ரூபாய் 1,652 கோடி மதிப்பீட்டில் கொண்டு வரப்பட்டது.

    அத்திக்கடவு அவினாசி திட்டம் செயல்படுவதின் மூலம் கொங்கு மண்டலத்தில் உள்ள 31 ஏரிகள், 40 ஊராட்சி ஒன்றிய குளங்கள், 538 நீர்நிலைகளில் நீர் நிரப்பப்படும்.

    இதன் மூலம் அப்பகுதியில் வாழும் 35 லட்சம் மக்கள் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படும். அதோடு 1.30 லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறும்.

    இத்திட்டத்திற்கு நிலம் அளித்தவர்களுக்கு அதிகபட்ச நஷ்டஈடு வழங்கப்படும் என்று அரசு அளித்த வாக்குறுதியின் படி வழங்காமல் காலம் தாழ்த்துகிறது.

    இதனால் விவசாயிகள் மகவும் சிரமத்திற்குள்ளாகி வருகிறார்கள். எனவே தமிழக அரசு அத்திக்கடவு அவினாசி திட்டத்தை தாமதம் இல்லாமல் நிறைவேற்ற உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும். விவசாயிகளுக்கு அளிக்க வேண்டிய நஷ்டஈட்டை உடனடியாக வழங்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மிழக வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் மேற்பார்வையில் பணிகள் முடுக்கி விடப்பட்டன.
    • திட்டத்துக்கான திருத்திய மதிப்பீடாக ரூ.1,756 கோடியே 88 லட்சம் அனுமதிக்கப்பட்டது.

    அவினாசி :

    ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்டங்கள் பயன்பெறும் வகையில் அத்திக்கடவு-அவினாசி திட்டம் என்ற பெயரில் அத்திக்கடவில் இருந்து அவினாசிக்கு வாய்க்கால் வெட்டி, அதன்மூலம் வறண்ட பகுதிகளில் உள்ள குளங்கள், ஏரிகளை நீரால் நிரப்பும் திட்–டம் வகுக்கப்பட்டது. தொடர்ந்து இந்த திட்டம் அறிவிப்பாகவே பல ஆண்டுகளாக இருந்தது. தமிழக முதல்-அமைச்சராக எடப்பாடி பழனிசாமி இருந்தபோது ரூ.1,652 கோடியில் அத்திக்கடவு-அவினாசி திட்டப்பணிகள் தொடங்கி வைக்கப்பட்டன.

    அத்திக்கடவில் இருந்து கால்வாய் வெட்டுவதற்கு பதிலாக, ஈரோடு மாவட்டம் காலிங்கராயன் பாளையம், காலிங்கராயன் அணைக்கட்டை ஒட்டிய பகுதியில் இருந்து பவானி ஆற்றின் உபரி நீர் எடுக்கப்பட்டு ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்டங்களில் உள்ள ஏரி, குட்டை, குளங்களில் நீர் நிரப்பும் வகையில் இந்த பணி தொடங்கியது.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு பொறுப்பு ஏற்றதும், இந்த பணியை விரைந்து முடிக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. தமிழக வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் சு.முத்துசாமி மேற்பார்வையில் பணிகள் முடுக்கி விடப்பட்டன. அதுமட்டுமின்றி திட்டத்துக்கான திருத்திய மதிப்பீடாக ரூ.1,756 கோடியே 88 லட்சம் அனுமதிக்கப்பட்டது.

    அதைத்தொடர்ந்து கோவை 15 ஏரிகள், 243 குட்டைகள் என 258 நீர்நலைகள், திருப்பூரில் 43 ஏரிகள், 385 குட்டைகள் என 428 நீர்நிலைகள், ஈரோடு மாவட்டத்தில் 16 ஏரிகள், 343 குட்டைகள் என்ற 359 நீர்நிலைகள் இந்த திட்டத்தில் எடுக்கப்பட்டன. இதன் படி நீர்வளத்துறை ஏரிகள் 32, ஒன்றிய ஏரிகள் 42, குட்டைகள் 971 என மொத்தம் 1,045 நீர்நிலைகள் மூலம் நிலத்தடி நீர் செறிவு செய்யப்பட உள்ளது. இதன் மூலம் மொத்தம் 24 ஆயிரத்து 487 ஏக்கர் விவசாய நிலம் பயன்பெறும். ஈரோட்டில் மட்டும் 8 ஆயிரத்து 767 ஏக்கர் பயன்பெற உள்ளது.

    ஏரி–கள் குளங்களை இணைக்கும் வகையில் குழாய்கள் அமைக்கப்பட்டு உள்ளன. பவானி ஆற்று உபரி தண்ணீரை நீரேற்றம் செய்ய பவானி காலிங்கராயன்பாளையம், நல்லக்கவுண்டன்பாளையம், திருவாச்சி, போலநாயக்கன்பாளையம், எம்மாம்பூண்டி, அன்னூர் என 6 இடங்களில் தலைமை நீரேற்று நிலையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த நீரேற்று நிலையங்களை இணைக்கும் பிரதான குழாய்கள் 106.8 கிலோ மீட்டர் அளவுக்கும், ஏரிகள், குளங்களை இணைக்கும் கிளை குழாய்கள் 958.5 கிலோ மீட்டர் தொலைவுக்கும் அமைக்கப்பட உள்ளன.

    சுமார் 6 மாத காலமாக திட்டப்பணிகள் எப்போது முடியும் என்ற கேள்வி இருந்த நிலையில் அத்திக்கடவு- அவினாசி திட்ட ஆலோசனை கூட்டம் நடந்தது. இதற்கு வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் அத்திக்கடவு-அவினாசி திட்டப்பணிகள் குறித்து அமைச்சர் அதிகாரிகளிடம் விவரங்கள் கேட்டு அறிந்தார்.

    பின்னர் அமைச்சர் சு.முத்துசாமி கூறியதாவது:- அத்திக்கடவு - அவினாசி திட்டப்பணிகள் 99 சதவீதம் நிறைவு பெற்று விட்டது. முன்னதாகவே இந்த பணிகள் நிறைவடைந்து இருக்க வேண்டும். ஆனால் உபரி நீர் வருகை குறைவாக இருந்ததால் சோதனை ஓட்டம் திட்டமிட்டபடி நடைபெறவில்லை. இன்னும் 5 நாட்களில் தேவையான அளவு உபரி நீர் கிடைக்கும் என்று நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். எனவே சோதனை ஓட்டப்பணிகள் விரைவாக முடிக்கப்படும். இதன் மூலம் அடுத்த மாதம் இறுதிக்குள் பணிகள் முடிவடையும் என்று எதிர்பார்க்கிறோம்.

    சோதனை ஓட்டமானது ஒவ்வொரு தலைமை நீரேற்று நிலையம் வாரியாக நடைபெறுகிறது. அந்தந்த பகுதிகளில் குழாய்களில் தண்ணீர் செலுத்தி, கசிவுகள், உடைப்புகள் சரி செய்யப்பட்டு முழுமை செய்யப்படுகின்றன. தற்போதைய திட்டத்தின் படி 1045 குளம், ஏரிகளில் தண்ணீர் நிரப்பப்பட உள்ளன. இதில் 300-க்கும் மேற்பட்ட குளங்களில் தடையின்றி தண்ணீர் சேர்க்கப்பட்டு சேகரிக்கப்படுகிறது. இன்னும் கூடுதலாக குளங்களை இந்த திட்டததில் சேர்க்க கோரிக்கைகள் வரப்பட்டு இருக்கின்றன. இதற்காக தனியாக திட்ட மதிப்பீடு தயார் செய்து வருங்காலங்களில் நீட்டிப்பு செய்யப்படும். இவ்வாறு அமைச்சர் சு.முத்துசாமி கூறினார்.

    • 1.065 கி.மீ.,க்கு குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன.
    • 800 கி.மீ.,க்கு, கெட்டித்தன்மை உடைய இரும்பு குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன.

    அவினாசி :

    அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தால் கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்ட ங்களில் 24 ஆயிரத்து 500 ஏக்கருக்கு பாசன வசதி கிடைக்கும் என திட்ட இயக்குனர் சிவலிங்கம் தெரிவித்தார்.

    இதுகுறித்து அவர் கூறியதாவது:- அத்திக்கடவு - அவிநாசி திட்டத்துக்கு தண்ணீர் கொண்டு செல்ல, 1.065 கி.மீ.,க்கு குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன.5 இடங்களில் ெரயில்வே பாதையின் குறுக்கேயும், 10 இடங்களில் தேசிய நெடு ஞ்சாலையின் குறுக்கேயும் சுரங்கம் அமைத்து அதில் குழாய்கள் பதிக்கப்ப ட்டுள்ளன.இதில் 800 கி.மீ.,க்கு, கெட்டித்தன்மை உடைய இரும்பு குழாய்கள், 265 கி.மீ.,க்கு கடினமான பிளாஸ்டிக் குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன. தண்ணீரின் அழுத்தத்தால் குழாயில் உடைப்பு ஏற்பட வாய்ப்பு இல்லை. குளம், குட்டைகளுக்கு தண்ணீர் திறந்து விட 1,295 இடங்களில் வால்வுகள் அமைக்கப்பட்டுள்ளன.

    இதன் வாயிலாக கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் 1,045 குளம், குட்டைகளுக்கு நீர் நிரப்பப்பட உள்ளது. இதில் 37 பொதுப்பணித்துறை குளங்கள், 47 ஊராட்சி குளங்கள், 971 கிராம குட்டைகள் அடங்கும். 6 இடங்களில் தானியங்கி நீரேற்று நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    ஓராண்டுக்கு 70 நாட்கள் மட்டுமே இத்திட்டத்தால் தண்ணீர் பம்பிங் செய்ய ப்படும். நாள் ஒன்றுக்கு 250 கன அடி வீதம் மொத்தமாக 1.5 டி.எம்.சி., தண்ணீர் பம்பிங் செய்து குளம், குட்டைகளுக்கு நிரப்பப்ப டும். இதனால் கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய 3 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து கிணறு மற்றும் போர்வெல்களில் நீருற்று வாயிலாக 24 ஆயிரத்து 500 ஏக்கருக்கு பாசன வசதி கிடைக்கும்.திட்டப் பணிகள், 90 சதவீதம் முடிவடைந்துள்ளன. பிப்ரவரி 20-ந்தேதி வெள்ளோட்ட பணிகள் துவங்கின. ஒவ்வொரு பகுதி யாக வெள்ளோட்டம் நடந்து வருகிறது.இவ்வாறு அவர் கூறினார். 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 24 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களும், 50 லட்சம் பொதுமக்களும் இத்திட்டத்தில் பயன் பெறுவார்கள்.
    • ஈரோடு மாவட்டத்தில் உள்ள 5 நீரேற்று நிலையங்களிலும் கடந்த ஒரு மாத காலமாக வெள்ளோட்டம் பார்க்கப்பட்டது.

    அன்னூர்:

    கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் போதிய மழை இல்லாத காரணத்தால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துவிட்டது.

    நீர்மட்டமானது 1,200 அடிக்கும் கீழ் சென்றுவிட்டதால் இங்குள்ள பல ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் அனைத்தும் தரிசாக மாறிவிட்டன.

    விவசாயமும் குறைந்த அளவிலேயே நடந்து வருகிறது. இதனால் விவசாயிகள் மிகவும் கவலை அடைந்தனர்.

    இதற்கு மாற்றாகவும், தீர்வு காணும் வகையிலும் பவானி ஆற்று உபரி நீரை பயன்படுத்தி, கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் உள்ள 1,045 குளங்கள், குட்டைகளை நிரப்ப முடிவு செய்யப்பட்டது.

    இதற்காக ரூ.1,657 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டு அத்திக்கடவு-அவினாசி நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டப்பணி கடந்த 2019-ம் ஆண்டு தொடங்கியது. தற்போது இந்த பணிகள் அனைத்தும் 98 சதவீதம் முடிவடைந்துள்ளது.

    945 கிலோமீட்டர் தூரத்திற்கு பிரதான குழாய்களும், கிளைக்குழாய்களும் பதிக்கப்பட்டுள்ளன. இதில் 1,045 குளம், குட்டைகளுக்கு ஆண்டுக்கு 1.5 டி.எம்.சி. தண்ணீர் நிரப்பப்பட உள்ளது.

    ஈரோடு மாவட்டத்தில் 5 இடங்களிலும், கோவையில் அன்னூர் அருகே குன்னத்தூராம்பாளையத்திலும் நீரேற்று நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    இந்த திட்டம் மூலம் 24 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களும், 50 லட்சம் பொதுமக்களும் பயன் பெறுவார்கள்.

    ஈரோடு மாவட்டத்தில் உள்ள 5 நீரேற்று நிலையங்களிலும் கடந்த ஒரு மாத காலமாக வெள்ளோட்டம் பார்க்கப்பட்டது. ஈரோடு காளிங்கராயன் அணைக்கட்டில் இருந்து நீர் வெள்ளோட்டம் விடும் பணி நடந்து வருகிறது.

    கடந்த வாரம் 5-வது நீரேற்று நிலையமான எம்மாம்பூண்டியில் இருந்து நீர் வெள்ளோட்டம் விடப்பட்டது. இந்த நீர் நேற்று மதியம் 6-வது நீரேற்று நிலையமான அன்னூர் நீரேற்று நிலையத்திற்கு வந்தது.

    அத்திக்கடவு திட்ட உதவி பொறியாளர் கவிதா மற்றும் தொழில்நுட்ப பணியாளர்கள் வெள்ளோட்ட பணியை கண்காணித்தனர்.

    நீரேற்று நிலையத்துக்கு அத்திக்கடவு-அவினாசி நீர் வந்த தகவல் அறிந்ததும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள், அத்திக்கடவு-அவினாசி திட்ட ஆர்வலர்கள், ஒருங்கிணைப்பாளர்கள் என ஏராளமானார் நீரேற்று நிலையத்தில் குவிந்தனர். அவர்கள் பூக்கள் தூவி நீரினை வரவேற்றனர்.

    அத்திக்கடவு-அவினாசி திட்டத்துக்காக 60 ஆண்டுகளாக பலகட்ட போராட்டங்களை நடத்தி உள்ளோம். அந்த போராட்டங்களின் விளைவாக அத்திக்கடவு நீர் எங்கள் பகுதிக்கு வந்துள்ளது. இது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.

    இந்த நீர் வந்ததன் காரணமாக சுற்றுவட்டார பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயரும். விவசாய பரப்பும், கால்நடை வளர்ப்பும் இங்கு அதிகரிக்கும்.

    இதுதவிர குடிநீர் பிரச்சினைக்கும் தீர்வு கிடைக்கும். விரைவில் விடுபட்ட குளங்களுக்கும் அத்திக்கடவு திட்ட நீர் நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    அன்னூர் நீரேற்று நிலையத்திற்கு வந்த நீர், நீரேற்று நிலையம் நிறைந்ததும், அங்கிருந்து அருகே உள்ள குன்னத்தூராம்பாளையம் குளத்திற்கு தண்ணீர் சென்றது. மாலை வரை குளத்துக்கு தண்ணீர் செல்வதை மக்களும், விவசாயிகளும் பார்த்து மகிழ்ச்சி அடைந்தனர்.

    • ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகிற 27-ந்தேதி நடக்கிறது.
    • ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகிற 27-ந்தேதி நடக்கிறது.

    அவிநாசி:

    கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு ஆகிய 3 மாவட்டத்தை உள்ளடக்கி அத்திக்கடவு - அவிநாசி நீர் செறிவூட்டும் திட்டப்பணிகள் நடந்து வருகின்றன. 98 சதவீதம் பணிகள் முடிந்துவிட்ட நிலையில் திட்டத்தை வெள்ளோட்டம் பார்த்து பயன்பாட்டுக்கு கொண்டு வருவதில் தாமதம் ஏற்படுகிறது.இருப்பினும் வருகிற ஏப்ரல் மாதம் திட்டம் வெள்ளோட்டம் பார்க்கப்படும் என நீர்வளத்துறையினர் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகிற 27-ந்தேதி நடக்கிறது.

    60 ஆண்டு கனவு திட்டமான அத்திக்கடவு- அவிநாசி நீர் செறிவூட்டும் திட்டம் அ.தி.மு.க., ஆட்சியில் அதுவும் எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்த போதுதான் நிதி ஒதுக்கப்பட்டு செயல்பாட்டுக்கு வந்தது.எனவே, அக்கட்சியினருக்கு இத்திட்டம் தேர்தல் பிரசாரத்தின் போது துருப்புச் சீட்டாக இருக்கப்போகிறது.

    அ.தி.மு.க., ஆட்சியின் போது திட்டம் கொண்டு வரப்பட்டாலும் திட்டம் எவ்வித தொய்வுமின்றி நடந்து முடிய தி.மு.க., அரசு தான் காரணம் என தி.மு.க.,வினர் பிரசாரம் மேற்கொள்ளவுள்ளனர். பல்வேறு கிராம மக்களின் எதிர்பார்ப்பாக உள்ள விடுபட்ட குளம், குட்டைகளை இணைப்பது தொடர்பான வாக்குறுதி களையும் அவர்கள் அளிக்கக்கூடும்.

    அத்திக்கடவு - அவிநாசி திட்ட போராட்டக் குழுவினர் கூறுகையில், ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை, ஈரோடு கிழக்கு, மேற்கு மாவட்டங்களில் பயன் குறைவு. மாறாக பெருந்துறை, சென்னிமலை, நம்பியூர், கோபி, பவானிசாகர் வட்டாரங்கள் தான் அதிகம் பயன் பெறும்.இருப்பினும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அத்திக்கடவு திட்டம் சார்ந்து அரசியல் கட்சியினர் பிரசாரம் செய்வர் என்பதால் திட்டத்தை விரைந்து முடிப்பதற்கான வாய்ப்பு ஏற்படும் என்றனர்.

    • மாநிலத் தலைவா் ஏ. கே. சண்முகம் தலைமை வகித்தாா்.
    • விவசாயிகள் கொண்டு வரும் கொப்பரையை நிபந்தனையின்றி கொள்முதல் செய்ய வேண்டும்.

    அவினாசி:

    கட்சி சாா்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் மற்றும் ஏா்முனை இளைஞா் அணியின் ஆலோசனைக் கூட்டம் அவிநாசியில் நடைபெற்றது.

    இதில், உழவா் பெருந்தலைவா் நாராயணசாமியின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா மற்றும் அத்திக்கடவு போராளிகள், இலவசம் மின்சாரத்துக்காக உயிா்த் தியாகம் செய்த தியாகிகளின் குடும்பத்தினா் ஆகியோருக்கு பாராட்டு விழா நடைபெற்றது. மாநிலத் தலைவா் ஏ. கே. சண்முகம் தலைமை வகித்தாா்.

    கூட்டத்தில் பாமாயில் இறக்குமதியை மத்திய அரசு உடனே கைவிட வேண்டும். ஏற்கனவே இருந்த தென்னை நல வாரியத்தை அமைக்க வேண்டும். மாநிலத்தின் அனைத்து நியாய விலைக்கடைகளில் தேங்காய், தேங்காய் எண்ணெய், நீரா, பனைவெல்லம் என மதிப்புக்கூட்டப்பட்ட பொருள்கள் அனைத்தையும் விநியோகிக்க வேண்டும்.

    விவசாயிகள் கொண்டு வரும் கொப்பரையை நிபந்தனையின்றி கொள்முதல் செய்ய வேண்டும். புலிப்பாா், தாமரைக்குளம், போத்தம்பாளையம், தத்தனூா் ஆகிய ஊராட்சிகளில் சிப்காட் வளாகம் அமைப்பதற்கு நிலம் எடுப்பதில்லை என்ற உத்தரவாதத்தை தெரியப்படுத்த வேண்டும். அத்திக்கடவு- அவிநாசி திட்டத்தை காலம் தாமதமின்றி நிறைவேற்ற வேண்டும். விடுபட்ட குளம், குட்டைகளை திட்டத்தில் இணைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

    • பொறியாளர்கள், அலுவலர்கள், தொழிலாளர்கள் எனஆயிரம் பேர் பணிபுரிகின்றனர்.
    • தரத்தை மேம்படுத்துவதன் மூலம் நிறுவனத்தின் நன்மதிப்பை உயர்த்துவேன் என உறுதிமொழியேற்றனர்.

    திருப்பூர்:

    ஆண்டுதோறும் நவம்பர் மாதம், தரத்தை உறுதிப்படுத்தும் மாதமாக கடைபிடிக்கப்படுகிறது. இம்மாதத்தில் உற்பத்தி சார்ந்த மத்திய, மாநிலஅரசுத்துறையினர், தனியார் துறையினர் தங்களின் தரம் சார்ந்த விஷயங்களை உறுதிப்படுத்துவர்.

    அதன்படி 1,652 கோடி ரூபாய் மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் அத்திக்கடவு - அவிநாசி நீர் செறிவூட்டும் திட்டப்பணி நடந்து வருகிறது. கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களை உள்ளடக்கி 1,045 குளம், குட்டைகளில் நீர் செறிவூட்டும் வகையில், 1,065 கி.மீ., தூரத்துக்கு குழாய் பதிக்கும் பணி, 6 இடங்களில் நீரேற்ற நிலையங்கள் என பணிகள் நடந்து வருகின்றன.

    இப்பணியை பொதுப்பணித்துறையின் நீர்வள ஆதார அமைப்பின் மேற்பார்வையில், எல் அண்டு டி நிறுவனத்தினர் மேற்கொண்டு வருகின்றனர். பொறியாளர்கள், அலுவலர்கள், தொழிலாளர்கள் எனஆயிரம் பேர் பணிபுரிகின்றனர்.

    இந்நிலையில் தரத்தை உறுதிப்படுத்தும் வகையில், திட்ட கண்காணிப்பு பொறியாளர் சிவலிங்கம் தலைமையில், திட்டப்பணியை கண்காணிக்கும் பொறியாளர்கள், அன்னூரில் உள்ள 6-வது நீரேற்ற நிலையத்தில் நடந்த நிகழ்ச்சியில் உறுதிமொழியேற்றனர்.தரம் மட்டுமே அடிப்படை, தரத்தை வலுப்படுத்துவதற்கான தொழில்நுட்பங்கள், உற்பத்தி திறன் மற்றும் வேலைத் திறனில் கவனம் செலுத்துவோம். தரத்தை மேம்படுத்துவதன் மூலம் நிறுவனத்தின் நன்மதிப்பை உயர்த்துவேன் என உறுதிமொழியேற்றனர்.

    • 2019ம் ஆண்டு இத்திட்டத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டு தற்போது 97 சதவீத பணிகள் முடிந்தும் கடந்த சில மாதங்களாக பணி மந்தநிலையில் உள்ளது.
    • மழைநீர் வீணாகி கடலில் கலக்கிறது.

    அவினாசி :

    திருப்பூர், கோவை, ஈரோடு ஆகிய 3 மாவட்டத்தில் உள்ள 50 லட்சம் மக்களின் 60 ஆண்டுகால கோரிக்கையான அத்திக்கடவு- அவினாசி திட்டத்தை நிறைவேற்றக் கோரி பல ஆண்டுகளாக பல்வேறு போராட்டங்கள் நடந்தது.இறுதியாக நூற்றுக்கும் மேற்பட்டோர் அவினாசி புதிய பஸ் நிலையில் அருகில் தொடர்ந்து உண்ணாவிரதம் மேற்கொண்டதன் பலனாக கடந்த 2019ம்ஆண்டு இத்திட்டத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டு தற்போது 97 சதவீத பணிகள் முடிந்தும் கடந்த சில மாதங்களாக பணி மந்தநிலையில் உள்ளது. எனவே இதுகுறித்து திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கருத்துகளை தெரிவித்துள்ளனர்.

    எம்.வேலுசாமி:

    கடந்த 60 ஆண்டுகளுக்கு முன்பு அவிநாசி திட்டம் என்றும் பின்னர் குந்தா கழிவுநீர் திட்டம் என்றும் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இந்த அத்திக்கடவு அவினாசி திட்டம் 1963 ஆம் ஆண்டு காமராஜர் தமிழக முதல்வராக இருந்தபோது நிறைவேறும் என நம்பிக்கை இருந்தது. அதன்பிறகு பக்தவச்சலம் ஆட்சிக்கு வந்த போது திட்டம் நிறைவேறாத சூழ்நிலை ஏற்பட்டது. அதன் பிறகு வந்த ஆட்சியாளர்களும் இது பற்றி பெரிய அளவில் எந்த தீவிர முயற்சி எடுக்கவில்லை .கண்துடைப்பாகஇருந்து வந்தது.

    2000-மாவது ஆண்டில்ராஜ சேனாதிபதி இத்திட்டத்திற்காக பலமுறை உண்ணாவிரதம் இருந்தார்.மேலும் இத்திட்டத்தை முன்வைத்து 2001 ம் ஆண்டில் விவசாயிகள் சார்பில் வேட்பாளர் நிறுத்தப்பட்டார். அப்போது வெறும் 19000 ஓட்டு வித்தியாசத்தில் அ.தி.மு.க. வெற்றி பெற்றது. அப்போதும் ஆட்சியாளர்கள் இதைப்பற்றி கண்டு கொள்ளவில்லை. அதன் பிறகு 2016 ஆம் ஆண்டு சாகும் வரை உண்ணாவிரதம் இருந்ததால் இத்திட்டம் நிறைவேற வேண்டிய விழிப்புணர்வு ஏற்பட்டது. இதனால் அப்போதைய அரசு ரூ.3.27 கோடி மதிப்பீட்டில் திட்டத்திற்கான அரசாணை வெளியிட்டது . அதன் பிறகு உண்ணாவிரதம் கைவிடப்பட்டது. 97 சதவீதம் முடிவடைந்த இத் திட்டம் ஏனோ காலதாமதமாகிறது .இதனால் மழைநீர் வீணாகி கடலில் கலக்கிறது. நீர் ஆதாரம் பெருகவும், நலிவடைந்துவரும் விவசாயம் மீண்டும் புத்துயிர்பெறவும் அரசு துரித நடவடிக்கை மேற்கொண்டு 50 லட்சம் மக்களின் 50 ஆண்டுகனவை நனவாக்கும் என்று நம்பியுள்ளோம்.

    சுப்பிரமணியம்:

    கொங்கு மண்டல மக்களின் 60 ஆண்டு கால கனவு திட்டமான அத்திக்கடவு அவிநாசி திட்டப்பணியானது தற்பொழுது 96 சதவீதம் நிறைவேற்றப்பட்டு விரைவில் திட்டம் வரக்கூடிய நிலையில் உள்ளது. இதன் மூலம் ஈரோடு, கோவை, திருப்பூர் மாவட்டங்களில் பெருந்துறை முதல் காரமடை சர்க்கார் சாமக்குளம் வரை உள்ள குளம் குட்டைகள் எல்லாம் இத்திட்டத்தின் மூலம் இணைக்கப்படுகிறது . அடிப்படையில் இது ஒரு நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டமாகும்.திட்டத்தால் பயன்படக்கூடிய நீர் நிலைகள் எல்லாம் தூர்வாரி தேக்குவதற்கு தயாராக உள்ளதா என்று கேட்டால் கேள்விக்குறியே.

    இந்த திட்டமானது 1.5 டிஎம்.சி. பவானி ஆற்று நீரை கொண்டு 32 பொதுப்பணித்துறை ஏரிகளும் 42 ஊராட்சி ஒன்றிய குளங்களும் 971 தடுப்பணை மற்றும் குட்டைகளும் செறிவூட்டப்பட உள்ளது.

    எனவே திட்டப் பணிகள் முடிப்பதற்கு முன்பு பொதுப்பணித்துறை ஏரிகளையும் ஊராட்சி ஒன்றிய குளங்களையும் நீர்வளத்துறை மூலம் தூர்வாரி ஆழப்படுத்தி அதில் உள்ள ஆக்கிரமிப்புகளை எல்லாம் வருவாய்த்துறை மூலம் கணக்கீடு செய்து அகற்றி தயார்படுத்தி வைக்க வேண்டும்.

    அவ்வாறு செய்தால் மட்டுமே மழைக்காலங்களில் கிடைக்கக்கூடிய நீரை முழுமையாக நமது குளம் குட்டைகளில் சேமித்து நிலத்தடி நீர் செறிவூட்டம் பெற செய்ய முடியும்.

    எனவே நீர்வளத்துறையானதுபோர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து தூர்வாரி ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டுமாறு அத்திக்கடவு அவிநாசி திட்ட போராட்ட குழு சார்பில் கோரிக்கை வைக்கிறோம். மேலும் மீதமுள்ள நான்கு சதவீதம் திட்டப் பணிகளை போர்க்கால அடிப்படையில் முடித்தால்தான் இந்தப் பருவமழை காலத்தில் கிடைக்கக்கூடிய வெள்ள உபரி நீரைக்கொண்டு குளம் குட்டைகளை நிரப்ப முடியும்.மேலும் இத்திட்டத்தில் விடுபட்ட குளம் குட்டைகளுக்கான ஆய்வுப்பணிகளுக்காக நிதி ஒதுக்கி விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய வேண்டும்.

    சதீஸ்:

    அவினாசி அத்திக்கடவு திட்டம் எங்கெல்லாம் செயல்பாட்டுக்கு வருகின்றதோ அங்கெல்லாம் உயிர் சூழல் உருவாகும். நீர் என்பது மனிதர்களுக்கு மட்டுமின்றி அனைத்து உயிர்களுக்கும் பொதுவானது. குளம் குட்டைகளில் நீர் நிரம்பும் போது 3மாவட்டங்களிலும் பசுமை போர்த்தி சீதோஷ்ண நிலை மாறுதல் ஏற்படும். எனவே இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு தமிழக அரசு விரைவில் திட்டத்தை செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

    சம்பத்:

    அவிநாசி அத்திக்கடவு திட்டத்தில் விடுபட்ட 1000 குளம் குட்டைகளுக்கு ஒரு திட்டம் தயாரித்து நிதி ஒதுக்கி விரைவில் பணிகளை தொடங்க வேண்டும். அனைத்து கிராமங்களில் உள்ள குளம் குட்டைகளின் கரைகளில் அதிகப்படியான பனை விதைகள் மற்றும் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்க வேண்டும் .ஊராட்சி நகராட்சி நிர்வாகம் வீடு தோறும் நெகிழி கழிவுகளை பிரித்து வாங்க வேண்டும் .இதனால் மண்ணை நாம் காக்க முடியும் என்றார். 

    • கடந்த சட்டசபை தேர்தலின் போது இத்திட்டத்தில் விடுபட்ட குளங்கள் குறித்து அதிகாரிகள் கணக்கெடுப்பு நடத்தினர்.
    • திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் நிலத்தடி நீர் ஆதாரம் பெருகும் வகையில் அத்திக்கடவு - அவிநாசி திட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளது

    திருப்பூர்:

    தமிழ்நாடு விவசாயிகள் சங்க வடக்கு ஒன்றிய குழு செயலாளர் அப்புசாமி கலெக்டருக்கு அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் நிலத்தடி நீர் ஆதாரம் பெருகும் வகையில் அத்திக்கடவு - அவிநாசி திட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில் 3 மாவட்டங்களில் பெரும்பாலான குளம், குட்டைகள் இணைக்கப்பட்டு திட்டம் பெருமளவு நிறைவடையும் நிலையில் உள்ளது.கடந்த சட்டசபை தேர்தலின் போது இத்திட்டத்தில் விடுபட்ட குளங்கள் குறித்து அதிகாரிகள் கணக்கெடுப்பு நடத்தினர். ஆனால் மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் இல்லை. தேர்வு செய்யப்பட்ட குளம் குட்டைகள் தவிர விடுபட்ட மற்றவற்றையும் இத்திட்டத்தில் இணைக்கும் வகையில் துணைத் திட்டம் ஏற்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

    ×