search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அத்திக்கடவு -அவிநாசி திட்டம் நிறைவேற வேண்டி  பொதுமக்கள் மழைச்சோறு வாங்கும் சிறப்பு வழிபாடு
    X

    கோப்புபடம். 

    அத்திக்கடவு -அவிநாசி திட்டம் நிறைவேற வேண்டி பொதுமக்கள் மழைச்சோறு வாங்கும் சிறப்பு வழிபாடு

    • இந்த சிறப்பு வழிபாடுகள் மூலம் உடனடியாக மழை வரும் என்பது நம்பிக்கையாக இருந்து வருகிறது.
    • அவிநாசி சுற்றுவட்டடாரத்தில் மழையில்லாமல் வறட்சி ஏற்பட்டுள்ளதால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதுடன், குடிநீருக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

    அவிநாசி:

    அவிநாசி சுற்றுவட்டாரத்தில் நடப்பாண்டு போதிய மழைப்பொழிவு இல்லாததால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அவிநாசியை அடுத்த புதுப்பளையம் விநாயாகா் கோவிலில், மழை வேண்டியும், அத்திக்கடவு- அவிநாசி திட்டம் விரைவில் நிறைவேற வேண்டியும் பொதுமக்கள் மழைச் சோறு வாங்கும் சிறப்பு வழிபாட்டினை மேற்கொண்டனா்.

    இதையடுத்து, கன்னிப் பெண்களுடன் 150 க்கும் மேற்பட்ட பெண்கள் வீடுவீடாகச் சென்று மழைச் சோறு வாங்கி வந்து விநாயகா் கோவிலில் சிறப்பு வழிபாடு செய்தனா்.

    இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

    அவிநாசி சுற்றுவட்டடாரத்தில் மழையில்லாமல் வறட்சி ஏற்பட்டுள்ளதால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதுடன், குடிநீருக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், முன்னோா்கள் நம்பிக்கைப்படி மழை வேண்டி வீடுவீடாகச் சென்று மழைச் சோறு வாங்கி வந்து, விநாயகருக்குப் படையலிட்டு அனைவரும் பிரசாதமாக எடுத்துக்கொள்வோம்.

    இதையடுத்து மழையில்லாத ஊரில் குடியிருக்க மறுத்து விவசாயிகள் பயன்படுத்தும் கூடை, முறம் ஆகியவற்றை ஊா் எல்லையில் எரிந்து விட்டு பெண்கள் ஊரைவிட்டு சென்றுவிடுவா். பின்னா் மழை வந்துவிட்டது என்று அவா்களை அழைத்து வந்து விநாயகருக்கு சிறப்பு வழிபாடு நடத்துவோம்.

    இந்த சிறப்பு வழிபாடுகள் மூலம் உடனடியாக மழை வரும் என்பது நம்பிக்கையாக இருந்து வருகிறது. இதனால் மழைவேண்டி மழைச்சோறு வழிபாடு நடத்தினோம். மேலும் அத்திக்கடவு-அவிநாசி திட்டம் நிறைவேறக் கோரி கூட்டுப்பிரார்த்தனை செய்யவுள்ளோம் என்றனா். :

    Next Story
    ×