என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Erode East Block"

    • ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகிற 27-ந்தேதி நடக்கிறது.
    • ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகிற 27-ந்தேதி நடக்கிறது.

    அவிநாசி:

    கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு ஆகிய 3 மாவட்டத்தை உள்ளடக்கி அத்திக்கடவு - அவிநாசி நீர் செறிவூட்டும் திட்டப்பணிகள் நடந்து வருகின்றன. 98 சதவீதம் பணிகள் முடிந்துவிட்ட நிலையில் திட்டத்தை வெள்ளோட்டம் பார்த்து பயன்பாட்டுக்கு கொண்டு வருவதில் தாமதம் ஏற்படுகிறது.இருப்பினும் வருகிற ஏப்ரல் மாதம் திட்டம் வெள்ளோட்டம் பார்க்கப்படும் என நீர்வளத்துறையினர் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகிற 27-ந்தேதி நடக்கிறது.

    60 ஆண்டு கனவு திட்டமான அத்திக்கடவு- அவிநாசி நீர் செறிவூட்டும் திட்டம் அ.தி.மு.க., ஆட்சியில் அதுவும் எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்த போதுதான் நிதி ஒதுக்கப்பட்டு செயல்பாட்டுக்கு வந்தது.எனவே, அக்கட்சியினருக்கு இத்திட்டம் தேர்தல் பிரசாரத்தின் போது துருப்புச் சீட்டாக இருக்கப்போகிறது.

    அ.தி.மு.க., ஆட்சியின் போது திட்டம் கொண்டு வரப்பட்டாலும் திட்டம் எவ்வித தொய்வுமின்றி நடந்து முடிய தி.மு.க., அரசு தான் காரணம் என தி.மு.க.,வினர் பிரசாரம் மேற்கொள்ளவுள்ளனர். பல்வேறு கிராம மக்களின் எதிர்பார்ப்பாக உள்ள விடுபட்ட குளம், குட்டைகளை இணைப்பது தொடர்பான வாக்குறுதி களையும் அவர்கள் அளிக்கக்கூடும்.

    அத்திக்கடவு - அவிநாசி திட்ட போராட்டக் குழுவினர் கூறுகையில், ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை, ஈரோடு கிழக்கு, மேற்கு மாவட்டங்களில் பயன் குறைவு. மாறாக பெருந்துறை, சென்னிமலை, நம்பியூர், கோபி, பவானிசாகர் வட்டாரங்கள் தான் அதிகம் பயன் பெறும்.இருப்பினும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அத்திக்கடவு திட்டம் சார்ந்து அரசியல் கட்சியினர் பிரசாரம் செய்வர் என்பதால் திட்டத்தை விரைந்து முடிப்பதற்கான வாய்ப்பு ஏற்படும் என்றனர்.

    • இடைத்தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ளதால் நிறுத்திவைப்பு
    • மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    ஈரோடு:

    தமிழக அரசு பொங்கல் பண்டிகையை கொண்டா டும் வகையில் ஒரு முழுக்க ரும்பு, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் இலவச வேட்டி, சேலை ஆகியவை ரேசன் கடைகள் மூலம் குடும்ப அட்டை தாரர்களுக்கு வழங்கப்படும் என அறிவித்தது.

    இதையடுத்து பொங்கல் தொகுப்பிற்கான டோக்கன் விநியோகம் செய்யும் பணி கடந்த 3-ந் தேதி முதல் 8-ந் தேதி வரை நடந்தது.

    இதன் ஒரு பகுதியாக ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, கோபி, பவானிசாகர், அந்தியூர், பவானி, பெருந்துறை, கொடுமுடி என மாவட்ட முழுவதும் உள்ள 172 கூட்டுறவு சங்கத்தின் கீழ் 878 முழு நேர ரேசன் கடைகள், 355 பகுதிநேர கடைகள் என 1,233 ரேசன் கடைகளில் 7 லட்சத்து 44 ஆயிரத்து 463 அரிசி குடும்ப அட்டை தாரர்களுக்கும் மற்றும் இலங்கை வாழ் தமிழர்கள் முகாமில் உள்ள 1,379 குடும்பத்தினருக்கும் என மொத்தம் மாவட்ட முழுவதும் 7 லட்சத்து 45 ஆயிரத்து 842 அட்டை தாரர்களுக்கு பொங்கல் சிறப்பு தொகுப்பு டோக்கன் வழங்கும் பணி நடந்து நேற்றுடன் முடிவடைந்தது.

    இதையடுத்து இன்று முதல் வரும் 13-ந் தேதி வரை அந்தந்த ரேசன் கடைகளில் பொதுமக்கள் பொங்கல் சிறப்பு தொகுப்பை வாங்கிக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    இன்று சென்னையில் நடந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொங்கல் தொகுப்பை வழங்கி தொடங்கி வைத்தார். இதையடுத்து தமிழகம் முழுவதும் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.

    ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு மேற்கு, பெருந்துறை, மொடக்குறிச்சி, பவானி, அந்தியூர், கோபி, பவானி சாகர் ஆகிய 7 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள ரேசன் கடைகளில் இன்று காலை முதல் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.

    ஆனால் ஈரோடு கிழக்கு தொகுதியில் தற்போது இடைத்தேர்தல் அறிவிக்க ப்பட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள 100-க்கும் மேற்பட்ட ரேசன் கடைகளில் பொங்கல் தொகுப்பு வழங்கும் பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக அந்தந்த ரேஷன் கடைகளில் தேர்தல் நடைமுறை அமலில் உள்ளதால் பொங்கல் தொகுப்பு வழங்க அனுமதி கோரி உள்ளோம். அனுமதி கிடைத்தவுடன் பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டிருந்தது.

    இதையடுத்து இன்று காலை பொங்கல் தொகுப்பு வாங்க வந்த ஈரோடு கிழக்கு தொகுதி மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். ஈரோடு கிழக்கு தொகுதியில் மட்டும் மொத்தம் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர்.

    • ஒரு வாக்குக்கு ரூ.3 ஆயிரம் கொடுக்க தி.மு.க முடிவு செய்துள்ளதாக தகவல்.
    • திராவிடம் என்பது கட்டுக்கதை.

    ஈரோடு:

    ஈரோடு, குமலன்குட்டை பகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமியை ஆதரித்து நடந்த பிரசார கூட்டத்தில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசினார். அப்போது சீமான் கூறியதாவது:-

    ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர்களுக்கு ஒரு வாக்குக்கு ரூ.3 ஆயிரம் கொடுக்க தி.மு.க முடிவு செய்துள்ளதாக தகவல் வந்துள்ளது.

    வாக்கினை தி.மு.க.விற்கு செலுத்தி அதனை புகைப்படம் எடுத்து வந்து காட்டினால் தான் பணம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

    தமிழகத்தில் நல்ல ஆட்சி நடக்கிறது என்று மக்கள் சொல்ல வேண்டும். ஆனால் முதலமைச்சர் தனக்குத்தானே நல்லாட்சி நடப்பதாக சான்று கொடுக்கிறார்.

    நல்லாட்சி நடக்கிறது என்றால், ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்கிற்கு எதற்கு பணம் கொடுக்க வேண்டும்? முதலமைச்சர், அமைச்சர்களைப் பார்க்க மக்கள் தானாக வரவில்லை என்றால், அந்த அளவுக்கு ஆட்சியின் தரம் உள்ளது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

    முதலமைச்சர், துணை முதலமைச்சர் கூட்டங்களுக்கு பணம் கொடுத்து கூட்டம் சேர்க்கப்படுகிறது. தி.மு.க.விற்கு வாக்களிக்காவிட்டாலும் பரவாயில்லை, நாம் தமிழருக்கு வாக்களித்து விடாதீர்கள் என்ற பிரசாரம் நடக்கிறது.

    தமிழ்தேசம் பேசுவது பிரிவினை வாதம் என்றால் ஆந்திராவில் என்.டி.ராம ராவ் தெலுங்கு தேசம் ஆரம்பித்தபோது ஏன் மவுனமாக இருந்தீர்கள்? ஒவ்வொரு மாநிலத்தவரும் அந்த மாநிலத்தவராக இருக்கும் போது, தமிழர்கள் மட்டும் திராவிடர்களாக சித்தரிக்கப்படுவது ஏன்? திராவிடம் என்பது கட்டுக்கதை.

    நம்ப வைத்த போலி கோட்பாடு. திராவிட முன்னேற்றம் என்பது திருடர்கள் முன்னேற்றம் தான். தமிழர் அல்லாதவர் வசதியாக வாழவும், ஆளவும் கொண்டு வரப்பட்ட ஏற்பாடுதான் திராவிடம். இதை சகித்துக் கொள்ள முடியாது. இதனை அம்பலப்படுத்துவதே எங்களின் நோக்கம்.

    50 ஆயிரம் ஆண்டுகளுக்கு மூத்த மொழியான தமிழை நாங்கள் தான் செம்மொழி ஆக்கினோம் என்று திராவிடம் கூறுகிறது. உலகின் மூத்த மொழியான தமிழை, அவதூறாகப் பேசியவர் பெரியார். பெரியார் பேசியதை, எழுதியதை நான் எடுத்து பேசுகிறேன். பெரியார் குறித்து நாங்கள் முன் வைக்கும் கேள்விகளுக்கு பதில் இல்லை.

    அதற்கு பதிலாக அவதூறுகளை அள்ளி வீசுகின்றனர். அநீதி எந்த வடிவத்தில் வந்தாலும் தமிழர்கள் எதிர்த்து போராடுவார்கள். இது பரம்பரை குணம். தமிழ்நாடு என நாங்கள் தான் பெயர் சூட்டினோம் என்று திராவிடர்கள் பொய் பரப்புகின்றனர். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மறுக்கும் இவர்களால் எப்படி சமூகநீதியை, இட ஒதுக்கீட்டை பெற்றுத் தர முடியும்?

    இவ்வாறு அவர் பேசினார்.

    • ஈரோடு கிழக்கு தொகுதி புதுமாதிரி தேர்தலை சந்திக்கிறது.
    • நாங்கள் உதிரிகள் அல்ல. உறுதியானவர்கள்.

    ஈரோடு:

    ஈரோடு பெரியார் நகரில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமியை ஆதரி த்து, அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- இதுவரை எத்தனையோ தேர்தல்கள் நடந்து இருந்தாலும், ஈரோடு கிழக்கு தொகுதி புதுமாதிரி தேர்தலை சந்திக்கிறது.

    ஆளுங்கட்சியான தி.மு.க. வும், எதிர்கட்சியான அ.தி.மு.க.வும் நாம் தமிழர் கட்சியை வீழ்த்த ஒன்றி ணைகின்றன. அ.தி.மு.க வாக்காளர்களுக்கு கூடுதல் தொகை கொடுத்து, நீங்கள் தி.மு.க.விற்கு ஓட்டு போடா விட்டாலும் பரவாயில்லை, நாம் தமிழர் கட்சிக்கு வாக்களித்து விடாதீர்கள் என்று கெஞ்சுகின்றனர்.

    எங்களைக் கண்டு இவ்வ ளவு பயப்படுவார்கள் என்று நான் நினைக்க வில்லை. அ.தி.மு.க, பா.ஜ.க. வினர் சில உதிரிகளை வைத்து பெரியாரை விமர்சனம் செய்கின்றனர் என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறுகிறார். நாங்கள் உதிரிகள் அல்ல. உறுதியானவர்கள். நாங்கள் உறுதியாய் தனித்து தேர்தல் களத்தில் நிற்கிறோம்.

    உதிரிகளை கூட்டணி சேர்த்து தி.மு.க நிற்கிறது. நாங்கள் பெரியரை விமர்சிக்கவோ, இழிவாகவோ பேசவில்லை. கடந்த 60 ஆண்டுகளாக பெரியார்தான் எங்கள் மொழியை, இனத்தை இழிவுபடுத்தியுள்ளார்.

    என் கருத்துக்கு எதிர் கருத்து கூறாமல் அவதூறுகளை அள்ளி வீசுகின்றனர். பெரியார் இல்லாமல் ஒன்றுமில்லை என்பது அவர்களின் கருத்து. பெரியாரால் ஒன்றுமில்லை என்பது எங்கள் கருத்து.

    தமிழரான எங்களுக்கு திராவிடன் என பெயர் வைக்க வேண்டாம். எந்த நேரத்தில் எந்த ஆயுதத்தை பயன்படுத்த வேண்டும் என்பதை எதிரிதான் தீர்மானிக்கிறார்.

    அதுபோல நான் இப்போது பெரியாரை விமர்சிக்கிறேன். சனாதனத்தை ஒழிப்பதாக சொன்ன துணை முதலமைச்சர் உதயநிதி, ஆதிதிராவிடர்களோடு அமர்ந்து உணவருந்துவதாக ஒரு விளம்பரம் வருகிறது. இதுதான் உண்மையான சனாதானம் என்பதை உணர்ந்து உங்களுக்கு கோபம் வந்தால் நீங்கள் தமிழர்கள். கோபம் வராவிட்டால் நீங்கள் திராவிடர்கள்.

    தமிழக மீனவர்கள் சுடப்படும்போது, நான் இந்த நாட்டு மீனவர் இல்லையா என்று கேட்டால் அது தமிழ் தேசியம். கச்சதீவை கொடுத்தது தான் என்றால் திராவிடம். கச்சத்தீவை திரும்ப எடுப்போம் என்றால் தமிழ்தேசியம். தமிழை சனியன் என்று இழித்து பேசுவது திராவிடம். தமிழ் எங்களுக்கு உயிர், முகம், முகவரி, மூச்சு, பேச்சு என்று பேசுவது தமிழ்தேசியம்.

    60 ஆண்டுகளாக இலவசங்களைக் கொடுத்து வாக்கை பறித்து மக்களின் அடிப்படை தேவைகளைக் கூட நிறைவேற்றாமல் ஏழையாய் வைத்திருப்பது திராவிடம்.

    தனக்கான தேவைகளை தாங்களே நிறைவேற்றும் தற்சார்பு வாழ்க்கையைத் தருவது தமிழ் தேசியம். மதிப்புமிக்க வாக்குகளை விலைக்கு விற்கும் நாடும், மக்களும் உருப்படமாட்டார்கள்.

    ஈரோடு கிழக்கு தொகு தியில் நடப்பது கடுமையான போர். இந்த போரில், எங்க ளுக்கு கை கொடுப்பது தமிழர்களின் கடமை. ஒரு முறை வாய்ப்பு கொடுங்கள். என் வீட்டைப்போல நாட்டை பார்த்துக் கொள்வோம். என் தாய் மண்ணை என்னை விட எவரும் நேசிக்க முடியாது.

    என் மொழி, இனத்தின் மீது பெரியாருக்கு ஏன் வன்மம்? என் தாய்மொழி தமிழை சனியன் என்று சொன்ன சனியனை ஒழிக்க வேண்டும். வள்ளளார், வைகுந்தரை விட பெரியார் என்ன சீர்திருத்தம் செய்து விட்டார்? எல்லா எலியும் எழுந்து வந்து ஒரு புலிக்கு முன்னாள் ஆடிக்கொண்டு இருக்கிறார்கள்.

    தாய்ப்பால் போல் தாய்மொழிக் கல்வி அவசி யம் என்றார் காந்தி. உன் மொழியை உலகின் மூத்த மொழியை அசிங்கமாக பேசினால் விட முடியுமா? வீட்டுக்கு தகப்பனை, நாட்டுக்கு தலைவனை கடன் வாங்க முடியாது. என் வலி உணராதவன் எனக்கு தலைவனாக இருக்க முடியாது.

    ஏற்றுக் கொண்ட கொள்கைக்கு எதிராக யார் வந்தாலும் எதிரிதான். தமிழை பழித்தவனை தாயே தடுத்தாலும் விட மாட்டேன். பெரியாரால் இந்த நிலத்தில் என்ன நடந்தது? சமூகநீதி, சாதி ஒழிப்பு, பெண்ணிய உரிமை இதெல்லாம் திராவிடத்தில் வெறும் சொல். தமிழ் தேசியத்தில் அது செயல்.

    பிரபாகரனை தீவிரவாதி என்று சொன்னது திராவிடம். இலங்கையில் போரை நிறுத்தவும், பிரபாகரன் உள்ளிட்டவர்களைக் காப்பாற்றவும் அமெரிக்கா விரும்பியது. ஆனால், காங்கிரஸ் குடும்பமும், தமிழக தலைவர்களும் அதனை விரும்பவில்லை.

    இலங்கை போரை விரைந்து முடிக்க அவர்கள் விரும்பினார்கள் என்று முன்னாள் இந்திய வெளியுறவுத்துறை அதிகாரி சிவசங்கர மேனன் எழுதி இருக்கிறார்.

    பிரபாகரன் இருப்பது இவர்களின் எதிர்கால அரசியலுக்கு ஆபத்தாக இருக்கும் என்று கருதினார்கள். 13 கோடி தமிழ் சொந்தம் இருக்கும்போது, இசைப்பிரியா, பாலச்சந்திரனுக்கு கொடிய நிகழ்வு நடந்தது. பிரபாகரன் மகன் ராணுவ கட்டுப்பாட்டில் இருப்பது தமிழக, இந்திய தலைவர்களுக்கு சொல்லப்பட்டது.

    ஆனால், பிரபாகரன் குடும்பத்தில் ஒருவர் கூட இருக்கக்கூடாது என்று தகவல் சொல்லப்பட்டுள்ளது. அதனால் பாலச்சந்திரனைக் கொன்றார்கள். இதை மறந்து, கடந்து போக முடியுமா? இதற்கு காரணமானவர்களை வஞ்சம் வைத்து கருவருக்காமல் விடமாட்டேன்.

    பேரரசுகள் சாம்ராஜ்யங்களே வீழ்ந்துள்ள போது உங்களை வீழ்த்துவது எம்மாத்திரம்? வீழ்ந்து விட்டதால் தான் இப்போது காசு கொடுத்து ஓட்டு கேட்கின்றனர். சாதி பார்க்காமல் நாம் தமிழர் கட்சியில் இணைந்துள்ளோம். ஈரோடு கிழக்கு மக்களுக்கு நான் யாருக்காக பேசுகிறேன் என்று தெரியும்.

    உதட்டில் இருந்து அல்ல, உள்ளத்தில் இருந்து பேசுகிறேன். உண்மையை, உரக்கப் பேசுவோம். உறுதியாக பேசு வோம். சத்தியத்தை சத்தமாக பேசுவோம். என்னை தோற்கடிக்க துடிக்கிறது திராவிடம். நான் வீழ்வது மகிழ்ச்சி என்றால் தி.மு.க. விற்கு வாக்களியுங்கள்.

    வீழ்ந்த தமிழினம் எழ வேண்டுமானால், தன்மானத்தோடு மக்கள் வாழ வேண்டுமானால் எங்களுக்கு வாக்களியுங்கள். கட்சிகளை, தலைவர்களை நம்பியது போதும். ஒருமுறை எங்களை நம்புங்கள். எங்களின் வெற்றி தமிழ் பேரினத்தின் வெற்றி. மக்களின் வெற்றி. அரசியல் புரட்சிக்கான வெற்றி.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ×