search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விவசாயிகளுக்கு நுண்ணீர் பாசன பயிற்சி
    X

    விவசாயிகளுக்கு நுண்ணீர் பாசனம் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

    விவசாயிகளுக்கு நுண்ணீர் பாசன பயிற்சி

    • நுண்ணீர் பாசனத்தினால் ஏற்படும் நன்மைகள் மற்றும் பயன்பாடுகள் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார்.
    • சம்பா பயிர் காப்பீடு செய்வதன் முக்கியத்துவம் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் இடையாத்தாங்குடி கிராமத்தில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் நுண்ணீர் பாசன அலகுகளில் செயல்பாடு மற்றும் பராமரிப்பு பற்றிய பயிற்சி நடைப்பெற்றது.

    இந்நிகழ்ச்சிக்கு திருமருகல் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் (பொ) கலைச்செல்வன் தலைமை தாங்கினார்.

    அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் மகேஸ்வரி வரவேற்றார்.

    நுண்ணீர் பாசன கம்பெனியின் மண்டல மேலாளர் பிரகாஷ் கலந்து கொண்டு நுண்ணீர் பாசனத்தினால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் அதன் பயன்பாடுகள் பற்றியும் விவசாயிகளுக்கு விரிவாக எடுத்துரைத்தார்.

    வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் (பொ) கலைச்செல்வன் வட்டாரத்தில் நடைமுறை படுத்தப்படும் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்ந்த திட்டங்கள் குறித்தும் சம்பா பயிர் காப்பீடு செய்வதன் முக்கி யத்துவம் பற்றியும் விவசாயி களுக்கு எடுத்து ரைத்தார்.

    துணை வேளாண்மை அலுவலர் தெய்வகுமார் நடப்பு சம்பா சாகுபடியில் பயிர் பாதுகாப்பு நடவடிக்கை கள் மேற்கொள்வது பற்றி எடுத்து ரைத்தார்.

    பயிற்சிக்கான ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர் சிந்து மற்றும் உதவி தொழில்நுட்ப மேலாளர் பிரபு ஆகியோர் செய்தி ருந்தனர்.

    Next Story
    ×