search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கீழ்பவானி"

    • நத்தக்காடையூரில் நாளை மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது.
    • அரசாணை 276-ஐ ரத்து செய்ய வேண்டும்.

    காங்கயம் :

    ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்ட கீழ்பவானி பாசன விவசாயிகளின் வாழ்வாதாரமாக உள்ள ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையில் இருந்து கடைமடை பகுதியான கரூர் மாவட்டம் அஞ்சூர் பகுதி வரை செல்லும் கீழ்பவானி பாசன கால்வாயில் கான்கிரீட் தளம் அமைக்கும் திட்டத்தின் அரசாணை 276-ஐ ரத்து செய்ய கோரியும், மண் அணை மற்றும் மண் கால்வாயாக பராமரிக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் பழைய கட்டுமானங்களை இடிக்க கூடாது என்றும், காவிரி தீர்ப்பின்படி நீர் நிர்வாகம் உரிய முறையில் நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி கான்கிரீட் எதிர்ப்பு இயக்கத்தின் கீழ்பவானி பெயரல்ல - எங்கள் உயிர் என்ற தலைப்பில் மாபெரும் பொதுக்கூட்டம் நத்தக்காடையூர், ஈஸ்வரன் கோவில் மைதானத்தில் நாளை (சனிக்கிழமை) மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது.

    இந்த பொதுக்கூட்டத்தில் நத்தக்காடையூர், பழையகோட்டை, மருதுறை, பரஞ்சேர்வழி ஊராட்சி பகுதிகளை சேர்ந்த கீழ்பவானி பாசன விவசாயிகள், நகர, சுற்றுவட்டார கிராம பொதுமக்கள் பலர் கலந்து கொள்கின்றனர்.

    • அணையின் நீர்மட்டம் 86.46 அடியாக குறைந்து உள்ளது.
    • கீழ்பாவனி வாய்க்காலுக்கு 2000 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர். அணையின் மூலம் ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த 2 லட்சத்து 7 ஆயிரம் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

    105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதி யாக நீலகிரி மலை பகுதி உள்ளது.

    இந்நிலையில் கடந்த சில நாட்களாக பவானிசாகர் அணைக்கு வரும் நீர் வரத்தை காட்டிலும் பாசன த்திற்காக அதிக அளவில் தொடர்ந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 86.46 அடியாக குறைந்து உள்ளது. அணைக்கு வினாடிக்கு 578 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    பவானிசாகர் அணையில் இருந்து நேற்று மீண்டும் கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்காக 5-ம் சுற்று தண்ணீர் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

    நேற்று 500 கன அடி திறந்து விட்ட பட்ட நிலையில், இன்று கீழ்பாவனி வாய்க்கா லுக்கு வினாடிக்கு 2000 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

    காளிங்கராயன் பாச னத்திற்காக 600 கன அடி, குடிநீருக்காக பவானி ஆற்று க்கு 200 கனஅடி என மொத்தம் அணையில் இருந்து 2,800 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகி றது.

    • திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 2 லட்சத்து 7 ஆயிரம் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
    • கீழ்பவானி வாய்க்காலுக்கு வினாடிக்கு 500 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

    ஈரோடு, 

    ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது. பவானிசாகர் அணை. இந்த அணையின் மூலம் ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 2 லட்சத்து 7 ஆயிரம் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

    105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலை பகுதி உள்ளது.

    இந்நிலையில் கடந்த சில நாட்களாக பவானிசாகர் அணைக்கு வரும் நீர் வரத்தை காட்டிலும் பாசனத்திற்காக அதிக அளவில் தொடர்ந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 86.71 அடியாக குறைந்து உள்ளது.

    அணைக்கு வினாடிக்கு 791 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    பவானிசாகர் அணையில் இருந்து இன்று முதல் மீண்டும் கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

    இன்று கீழ்பவானி வாய்க்காலுக்கு வினாடிக்கு 500 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

    காளிங்கராயன் பாசனத்திற்காக 600 கன அடியும், குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 200 கனஅடியும், என மொத்தம் அணையில் இருந்து 1300 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    • பெருந்துறை வாய்க்கால் மேட்டில் கீழ்பவானி வாய்க்காலின் வலது கரையில் திடீரென உடைப்பு ஏற்பட்டு கசிவுநீர் பெருக்கெடுத்தது
    • 600-க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவிலான பயிர்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்

    பெருந்துறை,

    ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் திறந்து விடப்படும் நீரால் ஈரோடு, திருப்பூர், கரூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் 1.3 லட்சம் ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.

    இந்த வாய்க்கால் இருகரைகளும் மண்ணால் அமைக்கப்பட்டுள்ளது.

    வாய்க்காலின் கரைகள் பழமை காரணமாக ஒரு சில இடங்களில் உடைப்பு ஏற்பட்டு வந்தது. இதை தடுக்க வாய்க்காலில் உடைப்பு ஏற்படும் பகுதிகளில் கான்கிரீட் கரைகளாக அமைக்க பொதுப்பணித் துறையினர் திட்டமிட்டு இருந்தனர்.

    இதற்கு ஒரு தரப்பு விவசாயிகள் ஆதரவும், மற்றொரு தரப்பு விவசாயிகள் எதிர்ப்பும் தெரிவித்து வந்தனர். இந்த திட்டம் முழுமையாக நிறைவு பெறவில்லை.

    இந்நிலையில் பெருந்துறை வாய்க்கால் மேட்டில் நேற்று முன்தினம் மாலையில் கீழ்பவானி வாய்க்காலின் வலது கரையில் திடீரென உடைப்பு ஏற்பட்டு கசிவுநீர் பெருக்கெடுத்தது.

    இந்த தண்ணீர் வாய்க்காலுக்கு அடியில் அமைக்கப்பட்டிருந்த கசிவு நீர் ஓடை வழியாக இடது புறக்கரைக்கு சென்றதால் அங்கும் உடைப்பு ஏற்பட்டது.

    வாய்க்காலில் 1300 கன அடி நீர் சென்று கொண்டிருந்ததால் உடைந்த இரு கரைகளில் இருந்தும் வெளியேறிய தண்ணீர் வெள்ளத்தைப் போல விளை நிலங்கள் வழியாக பெருக்கெடுத்து ஓடியது.

    இதனால் பாலப் பாளையம், சின்னியம் பாளையம், கூர பாளையம், மூலக்கரை, நஞ்சனாபுரம், செங்கோடம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் பயிரிடப்பட்டிருந்த நெல், மஞ்சள், வாழை, கரும்பு , தென்னை உள்ளிட்டவை நீரில் மூழ்கின.

    சுமார் 600-க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவிலான பயிர்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை அடைந்தனர். மேலும் இந்த ஊர்களில் செல்லும் தார் சாலைகள் மண்ணரிப்பு ஏற்பட்டு போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டது.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் உடனடியாக பவானிசாகர் அணையில் இருந்து கீழ் பவானி வாய்க்காலுக்கு திறக்கப்படும் தண்ணீர் முற்றிலுமாக நிறுத்தப்பட்டது.

    இந்நிலையில் விலை நிலங்களுக்குள்ளும், ஊருக்குள்ளும் புகுந்த தண்ணீர் நேற்று மதியம் முதல் வடிய தொடங்கி உள்ளது. நேற்று கரை உடைப்பு பகுதியை பார்வையிட்டு ஆய்வு செய்த அமைச்சர் முத்துசாமி இன்னும் 10 நாட்களுக்குள் வாய்க்கால் கரை உடைப்பு சீரமைக்கப்படும் என்றார்.

    இந்நிலையில் இன்று முதல் வாய்க்கால் கரைகள் உடைப்பு ஏற்பட்ட பகுதியில் சீரமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளது. இதற்காக பொதுப்பணி துறையினர் அங்கு முகாமிட்டு சீரமைக்கும் பணியை தொடங்கி உள்ளனர்.

    இதற்காக ஜே.சி.பி. எந்திரங்கள் நேற்று இரவுவே வரவழைக்கப்பட்டு உள்ளன.  

    திருப்பூர்:

    கீழ்பவானி முறை நீர்ப்பாசன விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் இன்று திருப்பூர் மாவட்ட கலெக்டரிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்துள்ளனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

    கீழ்பவானி கால்வாயில் தண்ணீர் கடைமடை பகுதியான மங்கலப்பட்டிக்கும்மங்களப்பட்டியை அடுத்துள்ள மொஞ்சனூர், அஞ்சூர் கிராமங்களுக்கு முற்றாக வராமல் நின்றுபோனது.மங்களப்பட்டி பகுதிக்கு மிகமிகக் குறைவான அளவில் தண்ணீர் வந்துவயல்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

    நெல் நாற்றங்கால் தயாரிக்கநாற்றங்கால்களுக்கு தண்ணீர் விட முடியாமலும் மிகப்பெரிய சிக்கலுக்கு ஆளாகியுள்ளோம். மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து கீழ் பவானிக் கால்வாயில் திருப்பூர்மாவட்டத்தில் உள்ள ஆயக்கட்டு நிலங்களுக்கு போதிய தண்ணீரைப் பெற்று கொடுக்க வேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. 

    • 2 ஆயிரம் கன அடி வரை கால்வாய்களின் இரு கரைகளையும் தொட்டபடி பாய்ந்து சென்று வருகிறது.
    • தண்ணீர் அதிக அளவு செல்வதாலும், உயிருக்கு ஆபத்தான விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

    வெள்ளகோவில்

    திருப்பூர் மாவட்டம் முத்தூர் அருகே வள்ளியரச்சல் பஸ் நிறுத்தம் அருகில் தென்புறம் கீழ்பவானி பாசன கால்வாய் செல்கிறது.அணையில் இருந்து கீழ்பவானி பாசன பிரதான கால்வாயில் வினாடிக்கு 2 ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. இதனால் இப்பகுதியை கடந்து செல்லும் தண்ணீர் தற்போது வினாடிக்கு சுமார் 2 ஆயிரம் கன அடி வரை கால்வாய்களின் இரு கரைகளையும் தொட்டபடி பாய்ந்து சென்று வருகிறது.

    இந்த நிலையில் வள்ளியரச்சல் பஸ் நிறுத்தம் அருகில் செல்லும் கீழ்பவானி பாசன கால்வாய் பாலத்தின் இருபுறமும் இப்பகுதியை சேர்ந்த கிராம பொதுமக்கள் மற்றும் அருகில் உள்ள நகர, கிராம பகுதிகளை சேர்ந்த அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரி மாணவ - மாணவிகள், தனியார் நிறுவன ஊழியர்கள், வடமாநில தொழிலாளர்கள் உள்பட அனைத்து தரப்பினரும் நேரில் வந்து கால்வாயின் உள்ளே படிக்கட்டுகளில் இறங்கி நீரில் குளிப்பதற்கு போலீசார் தடை விதித்து உள்ளனர்.

    இதுபற்றி போலீசார் வெளியிட்டுள்ள எச்சரிக்கை அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- வள்ளியரச்சல் கீழ்பவானி பாசன கால்வாய் பாலத்தின் இருபுறமும் அகலமாகவும், உள் பகுதி மிகவும் ஆழமான பகுதியாக இருப்பதாலும், கால்வாயில் தற்போது தண்ணீர் அதிக அளவு செல்வதாலும், உயிருக்கு ஆபத்தான விபத்து ஏற்படும் அபாயம் உள்ள பகுதி என்றும், இங்கு தண்ணீரில் இறங்கி குளிப்பவர்கள் எதிர்பாராதவிதமாக உள்ளே தவறி விழுந்து நீரில் வேகமாக அடித்து செல்ல வாய்ப்பு உள்ளது என்றும், இதனால் உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது என கருதி குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள். மேலும் இப்பகுதியில் கீழ்பவானி பாசன கால்வாயில் குளிப்பதற்கு தடை என போலீசார் எச்சரிக்கை அறிவிப்பு பலகை வைத்து உள்ளனர்.மேலும் இந்த கீழ்பவானி பாசன கால்வாய் பகுதியில் மேல்புற பகுதிகளில் பாலத்தின் மேலே அமர்ந்து இரவு நேரங்களில் மது அருந்தவும், போதை நிலையில் தண்ணீரில் இறங்கி குளிப்பதற்கு தடை விதிக்கப்படுவதாகவும், இதை மீறுபவர்கள் மீது உரிய சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று போலீசார் மற்றும் ஊராட்சி நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.

    • கீழ்பவானி அணை நீர்ப்பாசன சபையின் கூட்டம் ரங்கம்பாளைத்தில் தலைவர் பாபு தலைமையில் நடைபெற்றது.

    ஈரோடு:

    கீழ்பவானி அணை நீர்ப்பாசன சபையின் கூட்டம் ரங்கம்பாளைத்தில் தலைவர் பாபு தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் சபையின் 2021 -2022-ம் ஆண்டிற்கான தணிக்கை செய்யப்பட்ட வரவு செலவுகள் நிதிஅறிக்கை ஏற்றுக்கொள்ள பட்டுள்ளது.

    கீழ்பவானி சீரமைப்பு பணிகள் தொடங்கப்பட்டது ஆனால் தொடர்ந்து நடைபெற வில்லை. இதனால் கீழ்பவானி ஊஞ்சலூர் பகிர்மான கால்வாயில் பாசனம் பெறும் எம் 8 ஏ பாசன சபையிலுள்ள ஆயக்கட்டு நிலங்களுக்கு போதுமான தண்ணீர் கிடைப்பதில்லை.

    எனவே சீரமைப்பு வேலைகளை தொடர்ந்து செய்ய வேண்டும். கீழ்பவானி ஆயக்கட்டு விவசாயிகளின் பாசன உரிமையையே பாதுகாக்கும் வகையில் வருகிற ஜூலை மாதம் 10-ந் தேதி சிவகிரியில் கீழ்பவானி ஆயக்கட்டு உரிமை பாதுகாப்பு நடைபெறும் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • 2012ம் வருடம் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கான்கிரீட் போடுவதற்கு ஒரு முயற்சியை எடுத்தார்.
    • 95 சதவீத ஆயக்கட்டு விவசாயிகள் இந்த திட்டத்தை எதிர்க்கிறார்கள்.

    காங்கயம் :

    கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் போடும் திட்டத்தில் குழந்தையையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டி விடுவது போல் உள்ளது பா.ஜ.க. நிலைபாடு என தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலைக்கு தி.மு.க. சுற்று சூழல் அணி பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

    இது குறித்து தி.மு.க. சுற்று சூழல் அணி மாநில செயலாளர் கார்த்திகேயசிவசேனாபதி, பா.ஜ.க. தலைவர் அண்ணாமலைக்கு விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:- தமிழகத்தின் மேற்கு மண்டலமான கொங்குப் பகுதியானது முழுக்க முழுக்க மேற்குத் தொடர்ச்சி மலையின் மலை மறைவுப் பிரதேசம் என்பதை நீங்கள் அறிவீர்கள் என்று நம்புகிறேன்.

    பவானி, நொய்யல், அமராவதி, காவிரி போன்ற ஆறுகள் மேற்குத் தொடர்ச்சி மலையிலிருந்து வந்து இந்த கொங்குப் பகுதியை பசுமையாக்கி வாழ்வாதாரத்தை உயர்த்தி 2600 வருடங்களுக்கு முன்பே கொடுமணல் நாகரிகத்தையும் உருவாக்கி இருக்கிறது என்பதை உங்களுக்குச் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

    அப்படி இருந்த மழை மறைவு பிரதேசத்திலே 1940 முதல் 1950களில் ஈரோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் முயற்சியாலும், அப்போதைய தமிழக முதலமைச்சர் முயற்சியாலும் பவானி சாகர் திட்டத்தை அன்றைய காங்கிரஸ் அரசு அமல் படுத்தியது. அந்தத் திட்டத்தின் கீழ் இன்றைய ஈரோடு, திருப்பூர்,கரூர் ஆகிய மாவட்டங்களில் மொத்தமாக 2,07,000 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெற்று வருகிறது.

    இந்த திட்டத்தை 2012ம் வருடம் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கான்கிரீட் போடுவதற்கு ஒரு முயற்சியை எடுத்தார். அப்போதைய பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த ராமலிங்கம் முயற்சி எடுத்த பொழுது மிகப்பெரிய மக்கள் போராட்டமாக மாறி, ஜெயலலிதா மக்களுக்கு எதிரான இந்தத் திட்டத்தை ரத்து செய்தார். பின்னர் உங்கள் கூட்டணிக் கட்சியான அ.இ.அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி மறுபடியும் இந்த திட்டத்தை 2020ம் ஆண்டு அரசாணை வழங்கி துவக்கி வைத்தார்.

    பிரதமர் நரேந்திரமோடி கோவையில் கீழ் பவானி திட்டத்தை துவக்கி விட்டு, இந்த திட்டம் மிகவும் அருமையான திட்டமென்றும், இந்த திட்டம் மேற்கு மண்டலத்திற்கும் தமிழ் நாட்டிற்கும் பலவித நன்மைகளைக் கொண்டு வருமென்று கூறி விட்டு சென்று விட்டார். இந்த திட்டத்தைத் தொடர்ந்து எதிர்த்து வரும் விவசாயிகள், இந்த திட்டத்தை எந்தக்கட்சி கொண்டு வந்தாலும் வாழ்வாதாரத்தையும் சுற்றுச்சூழலையும் பாதிக்கும் என்று எதிர்த்து வந்தனர்.

    மேலும் குறிப்பாக கீழ் பவானி ஆயக்காட்டை சேர்ந்த விவசாயிகள் இதை எதிர்த்து வருகிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியப்படுத்துவதில் நான் கடமைப் பட்டிருக்கிறேன். 2021ம் வருடம் தேர்தலுக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு எங்கள் தலைவர், அன்றைய எதிர்க் கட்சித் தலைவர், இன்றைய முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் வாகனத்தில் தாராபுரத்திலிருந்து திருப்பூர் செல்லும் போது இந்தத்திட்டத்தைப் பற்றி எடுத்துக் கூறி இதைக் கைவிட வேண்டும். இது விவசாயிகளுக்கு எதிரான திட்டம் என்று விவசாயிகள் நிலையை பகிர்ந்தேன்.

    இந்தத் தவறை அ.தி.மு.க. அரசு செய்துள்ளது. நாம் இந்த திட்டத்தைக் கை விட வேண்டும் என்று பேசும் பொழுது, தலைவர் நாம் ஆட்சிக்கு வந்த பிறகு நிச்சயமாக விவசாயிகளிடம் கருத்துக்களைக் கேட்டு அமல் படுத்துவோம் என்று உறுதியளித்தார். இந்த உறுதி மொழியினை தாராபுரத்திலும், மடத்துக்குளத்திலும் பேசிய காணொளியை நீங்கள் கண்டிருப்பீர்கள். இந்த சூழலில் நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் அமைச்சர் முத்துசாமி, ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், விவசாயிகளை அழைத்து கருத்துக்கணிப்பு நடத்தும் பொழுது தெளிவாக புரிந்து கொண்டார்கள்.

    95 சதவீத ஆயக்கட்டு விவசாயிகள் இந்த திட்டத்தை எதிர்க்கிறார்கள்.அதற்குக் காரணம் ஒன்று வாழ்வாதாரம். மற்றொன்று சுற்றுச்சூழல் பாதிப்பு. பல லட்சம் மரங்கள் வெட்ட வேண்டும் என்ற ஐயம் விவசாயிகளிடம் இருந்தது. அதற்கான சரியான தரவுகளுடன் எத்தனை லட்சம் மரங்கள் வெட்ட வேண்டும் என்பதற்கான அறிக்கையை நீர்வளத்துறை அதிகாரிகள் இன்று வரை கொடுக்கவில்லை. இந்த சூழலிலே பல முறை அமைச்சர் முத்துச்சாமி விவசாயிகளை அழைத்து அவர்களின் கருத்துக்களைக் கேட்டு அந்தக் கருத்தினை அரசிற்கு எடுத்துச் சென்று பல்வேறு விஷயங்களைக் கலந்துரையாடலில் விவசாயிகளுக்காக நடத்திக் கொண்டிருந்தார்கள்.

    மேலும் கீழ் பவானி பாசன பாதுகாப்பு என்ற விவசாய அமைப்பு பெருந்துறையில் விவசாயிகள் மற்றும் பொதுமக்களுடன் ஒரு மிகப்பெரிய மாநாட்டை நடத்தியது. இந்தச் சூழலில் திடீரென்று உங்கள் கட்சியினைச் சார்ந்தவர்கள் அறிக்கை விடுகிறார்கள். ஏதோ திராவிட முன்னேற்றக் கழகம் இந்த திட்டத்தைக் கொண்டு வந்ததாகவும், இந்த திட்டத்தினால் விவசாயிகளுக்கு மிகப் பெரிய பாதிப்பு ஏற்படும் என்றும் முதலைக் கண்ணீர் வடித்துக் கொண்டும் இருக்கிறீர்கள். இந்தத் திட்டத்தை அமல்படுத்தியது நீங்கள் கூட்டணியிலிருந்த அ.தி.மு.க. ஆட்சிதான்.

    இந்தத் திட்டத்தைத் துவக்கி வைத்தது பிரதமர். இந்தச் சூழலில் இந்தத் திட்டத்தை நீங்கள் எதிர்க்கிறதை விட ஒரு மிகப் பெரிய வேடிக்கை எதுவுமே கிடையாது. அப்படி எதிர்க்க வேண்டும் என்றால் உடனடியாக நீங்கள் செய்ய வேண்டியது. ஆம் நாங்கள் தெரியாமல் தவறு செய்து விட்டோம் எங்கள் பிரதமர் இந்தத் திட்டத்தைத் துவக்கி வைத்தது மிகப்பெரிய தவறு தான் எங்களை மன்னித்து விடுங்கள் தமிழ்நாட்டு மக்களே. குறிப்பாக ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்ட மக்களே என்று கேட்டுக் கொள்ளுங்கள். நீங்கள் கொண்டு வந்த இந்தத் திட்டத்தை நீங்களே எதிர்ப்பது கோமாளித்தனமாக உள்ளது.

    எங்கள் ஊரில் சொலவடை ஒன்று சொல்வார்கள். குழந்தையையும் கிள்ளி விட்டு, தொட்டிலையும் ஆட்டி விடுவது என்று. அது போலத் தான் இருக்கிறது நீங்களும் உங்கள் கட்சியினரும் செய்யும் விஷயங்கள். இனியாவது இதை எல்லாம் செய்வதை விட்டு விட்டு சாமானிய மக்களுக்கான அரசியலைக் கையில் எடுங்கள் என கேட்டுக் கொள்கின்றேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

    ×